Indian police arrest dozens in anti-POSCO protest – Agriculture vs Industrialization
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2006
ஒரிஸாவில் இரும்பு ஆலை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
![]() |
![]() |
இரும்பு ஆலை |
இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள தென்கொரிய இரும்பு ஆலை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக தங்களுடைய விவசாய நிலங்களை இந்திய அரசாங்கம் எடுத்து கொள்வது தொடர்பாக மாநில முதலமைச்சருடன் பேச வேண்டும் என கோரி தலைநகர் புவனேஷ்வரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் குழுமியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு சில பெண்கள், பாதுகாப்பு வளையத்தினை தாண்டி அமைச்சரின் வீட்டிற்குள் புகுந்ததினை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரும்பு ஆலை திட்டம், இந்தியாவின் மிகப் பெரிய நேரடி அன்னிய முதலீடாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்