Hindu Dalits converted to Buddhism & Christianity
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 14, 2006
இந்தியாவில் தலித்துகள் மதமாற்றம்
இந்தியாவின் நாக்பூர் நகரில் இன்று நூற்றுக்கணக்கான தலித்துகள் இந்து மதத்தில் இருந்து பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்களில் ஒருவரும், தலித் கல்விமானும், தலைவருமான அம்பேத்கார் அவர்கள், பௌத்த மதத்துக்கு மாறிய 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடந்த இந்த மதமாற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான தலித்துகள் கலந்து கொண்டனர்.
ஆயினும் அவர்களில் சில நூறு பேரே மாற்று மதத்தை இன்று தழுவிக்கொண்டனர்.
இந்தியாவில் சுதந்திரம் கிடைத்தது முதல் தீண்டாமை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு இன்னமும் மக்களின் மனதில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று அங்குள்ள பெரும்பாலான தலித்துகள் கூறுகின்றனர்.
தாம் சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பல இந்தியக் கிராமங்களில், உயர் ஜாதி இந்துக்கள் நீரெடுக்கும் கிணறுகளில், குடி நீர் எடுப்பதற்கு இந்த தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.
அத்துடன் பிற சாதியினர் செய்யத் தயங்கும் சாக்கடை அள்ளுதல் போன்ற தொழில்களை தலித்துகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
இந்து தேசியவாதக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில், இத்தகைய மதமாற்றங்களுக்கு, முன்பாகவெ அரசாங்க அனுமதி பெறவேண்டும் என்று இந்த ஆண்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்