Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Chikun Kunya – Death Toll in Kerala & Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

சேர்த்தலையில் சிக்குன் குனியாவுக்கு மேலும் 8 பேர் பலி: ஊரை காலி செய்து மக்கள் ஓட்டம்

கொழிஞ்சாம்பாறை, அக். 5-

தமிழ்நாட்டை உலுக்கி வரும் சிக்குன் குனியா நோய் தற்போது கேரளாவுக்குள் ஊடுருவி விட்டது. இங்கு இந்த நோயின் தாக்கம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

குறிப்பாக சேர்த்தலை பகுதியில் சிக்குன் குனியா நோய்க்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 8 பேர் பலியா னார்கள்.

ஊரை காலி செய்யும் மக்கள்

இதன் மூலம் சிக்குன் குனியா நோய் தாக்கி இறந்த வர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

சிக்குன் குனியா நோய் தாக்குதலால் அச்சம் அடைந்த சேர்த்தலை தாலுகா மக்கள் தங்கள் ஊரை காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஊர்களில் மக்கள் தொகை குறைந்து காணப் படுகிறது.

கோர்ட்டுகளுக்கு விடுமுÛ
சேர்த்தலை தாலுகாவில் 2 கோர்ட்டுகள் உள்ளன. இங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு சிக்குன் குனியா நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்குதல் காரணமாக கேரளாவில் மக்கள் பீதி அடைந்துள்ள னர்.

பின்னூட்டமொன்றை இடுக