Ramzan Month Power Cuts in Bangaladesh upsets the Public
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
பங்களாதேஷ ஆர்ப்பாட்டங்களில் 200 பேர் காயம்
![]() |
![]() |
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது |
பங்களாதேஷில் அடிக்கடி நடக்கும் மின்வெட்டுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்தது 200 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் சுட்டார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மின் விநியோக நிறுவனத்தின் அலுவலகங்கள் மீது தீ வைத்ததுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
பங்களாதேஷ் மின் விநியோகத்தில் தடை ஏற்படுவது குறித்து ஏற்பட்டுள்ள அதிருப்தி அதிகரித்து வருகிறது; மக்கள் குறிப்பாக புனித ரமலான் மாதத்தில், மாலை நேர சிறப்புத் தொழுகையின்போது ஏற்படும் மின் வெட்டுக்களால் கோபமடைந்துள்ளனர்.
பல மின் நிலையங்கள் வேலை செய்யவிலை என்றும், இதற்கு, பல ஆண்டுகளாக அவை கவனிக்காமல் விடப்பட்டதும், ஊழலுமே காரணம் என்று கூறப்படுவதாகவும், டாக்காவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
மறுமொழியொன்றை இடுங்கள்