International Monetary Fund favours China in voting shuffle
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006
சர்வதேச நாணய நிதியம் தேவையான மாற்றத்தினை செய்யவில்லை – இந்திய நிதியமைச்சர்
![]() |
![]() |
இந்தியாவின் பிரதிநிதித்துவத்தின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது-இந்திய நிதியமைச்சர் |
சர்வதேச நாணய நிதியத்தின் வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டதை விமர்சித்துள்ள இந்திய நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அவர்கள், அவர்கள் தேவையான மாற்றம் செய்யபடவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த மறுசீரமைப்பின் முதலாவது படிநிலை, பொருளாதார முன்னேற்றம் காணும் நாடுகளுக்கு அதிக வாய்ப்பை தரும் இலக்கினாலதாகும்.
இதன் மூலம் சீனா, தென்கொரியா, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு வாக்குகள் அதிகரித்தன.
இந்தியாவின் பிரதிநிதித்துவத்தின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக தான் உணர்வதாகவும், அதற்கு அதிக பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூரில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பேசிய சிதம்பரம் கூறினார்.
வாக்கு உரிமையில் பரந்துபட்ட அளவிலான மறுசீரமைப்பு செய்யப்பட்டது. சில வளரும் நாடுகள் வேறு சில வளரும் நாடுகளுக்காக தமது வாக்குகளை விட்டுக்கொடுக்க நேரிட்டது என்றும் அமைச்சர் கூறினார்.
This entry was posted on செப்ரெம்பர் 19, 2006 இல் 5:50 பிப and is filed under China, Currency, Exchange, Finance, IMF, India, Influence, International Monetary Fund, Mexico, Minister, Ministry, P Chidambaram, reforms, South Korea, Tamil, Turkey, world bank. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்