Mumbai Bomb Blasts – Timeline : Chronology
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006
விசாரணை } கடந்துவந்த பாதை
மும்பையில் 1993 மார்ச் 12-ம் தேதி 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் 257 பேர் இறந்தனர். 713 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான விசாரணை தடா கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் தொடக்கம் முதல் இறுதி வரையான விவரம் வருமாறு:
நவ. 4, 1993: நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 189 எதிரிகளுக்கு எதிராக 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.
நவ. 19. 1993: சிபிஐ-க்கு வழக்கு மாற்றம்.
ஏப். 1, 1994: ஆர்த்தர் சாலையில் இருக்கும் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தனி கட்டடத்துக்கு தடா கோர்ட் மாற்றம்
ஏப். 10, 1995: இருபத்தாறு எதிரிகளை விடுவித்தது தடா நீதிமன்றம். மற்ற எதிரிகள் மீது புகார் சாட்டல். இதே வேளையில், டிராவல் ஏஜென்ட் அபு அசிம் ஆஸ்மி (தற்போது சமாஜவாதி கட்சி எம்பி), மற்றும் அம்ஜத் மேஹர் போக்ஸ் ஆகிய இருவரை இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் விடுவிப்பு.
ஏப். 19, 1995: தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடக்கம்
ஏப்ரல்-ஜூன் 1995: எதிரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு
ஜூன் 30, 1995: முகம்மது ஜமீல், உஸ்மான் ஜன்கானன் ஆகிய இருவர் வழக்கில் அப்ரூவராகின்றனர்.
அக். 14, 1995: ஏப்ரல் 19, 1993-ல் கைதான நடிகர் சஞ்சய் தத் (117வது எதிரி), உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிப்பு
மார்ச், 23, 1996: தடா நீதிபதி ஜே.என்.பட்டேல், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு
மார்ச் 29, 1995: சிறப்பு தடா நீதபதியாக பி.டி.கோடே நியமனம்.
அக்டோபர் 2000: 684 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிவு.
மார்ச் 9-ஜூலை 18, 2001: எதிரிகள் தரப்பு வாக்குமூலம் பதிவு
ஆகஸ்ட் 9, 2001: அரசுத் தரப்பில் குறுக்கு விசாரணை ஆரம்பம்
அக்டோபர் 18, 2001: அரசுத் தரப்பு குறுக்கு விசாரணை முடிவு
நவம்பர் 9, 2001: எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை ஆரம்பம்.
ஆகஸ்ட் 22, 2002: எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நிறைவு
பிப். 20, 2003: ரவுடி கும்பல் தலைவன் தாவூதின் கும்பலைச் சேர்ந்த எஜாஸ் பதான் நீதிமன்றத்தில் ஆஜர்.
மார்ச் 20, 2003: முஸ்தபா தோஸô என்பவரை காவலில் வைப்பதற்கான நடவடிக்கை, மற்றும் அந்த வழக்கு தனியாக பிரிப்பு
செப்டம்பர் 2003: வழக்கு விசாரணை முடிவு
ஜூன் 13, 2006: அபு சலீமின் விசாரணை தனியாக பிரிப்பு
ஆகஸ்ட் 10, 2006: தீர்ப்பை எழுதும் பணி தொடக்கம், செப்டம்பர் 12ல் தீர்ப்பு என நீதிபதி பி.டி.கோடே அறிவிப்பு.
மறுமொழியொன்றை இடுங்கள்