Sathyagraha’s 100th Anniversary
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006
மகாத்மாவின் சத்தியாக்கிரகத்தின் நூறாவது ஆண்டு
![]() |
![]() |
மகாத்மா காந்தியும் அவரது துணைவியாரும் |
அமெரிக்காவின் உலக வர்த்தக நிலைய கட்டிடத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை நினைவு கூரும் இந்த செப்டம்பர் 11 ஆம் திகதியில், இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றுமொரு விடயமும் நினைவு கூரப்படுகிறது.
மகாத்மா காந்தி அவர்கள், அநீதிக்கு மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த நூறாவது வருடம் இன்று பூர்த்தியாகின்றது.
1906 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க்கில் மகாத்மாவின் இந்த முதலாவது சத்தியாக்கிரகம் ஆரம்பமானது.
இன்றைய நிலையில் இந்தியாவிலும், இலங்கை உட்பட ஏனைய நாடுகளிலும் காந்தியக் கொள்கைகள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயற்படுகின்றன, அவற்றுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பவை குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் காந்திய சிந்தனைகள் மற்றும் ராமலிங்க தத்துவ துறையின் தலைவர் பேராசிரியர் எஸ். ஜெயப்பிரகாஷ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்