Another Sri Lankan Volunteer Shot Dead in Triconamalee
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006
இலங்கையில் மற்றுமொரு தன்னார்வ அமைப்பு ஊழியர் கொலை
![]() |
![]() |
முன்பு கொல்லப்பட்ட ஒரு நிவாரணப் பணியாளரின் இறுதி ஊர்வலம் |
இலங்கையின் கிழக்கே, திருகோணமலையில் மற்றுமொரு சர்வதேச தன்னார்வ அமைப்பின் உள்ளூர்ப் பணியாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரில் இருந்து 9 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள இக்பால் நகரை அண்மித்த பகுதியில் வைத்து இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கும்புறுப்பிட்டி காந்தி நகர் வாசியும், அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் தன்னார்வ அமைப்பு ஒன்றில் பணியாற்றுபவருமான எஸ். ரகுநாதன் என்பவர் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்