17 Volunteers of Action Against Hunger Killed – Responsible Party
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006
போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் அறிக்கை தவறு மற்றும் ஆதாரமற்றது – இலங்கை அரசு
இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.
இந்த விவகாரத்தினை வெளிநாட்டமைச்சும், சமாதான செயலகப் பணியகமும் கையாளவுள்ளது என்றும் ஐ.நா வின் இந்த நிலைப்பாடு குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் கருத்துக்களைப் பற்றிக் அரசின் கருத்தினைத் தெரிவிப்பதற்கு இன்னமும் காலம் தேவைப்படுகிறது. என்று அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, பிரேத பரிசோதனையை நடத்திய அனுராதபுரம் மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இந்த 17 பேரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி பிற்பகலோ அன்றி 4 ஆம் திகதி அதிகாலையோ தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இக்காலப்பகுதியின் போது மூதூர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது என்றும், 5ஆம் திகதி தான் இராணுவம் அப்பகுதிகளை மீளவும் கைப்பற்றியது என்றும் கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்