Ration Goods and Kerosene sumggled away from Bihar
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006
பிகாருக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெயில் 80% வெளிநாட்டுக்கு கடத்தல்
கிஷன்கஞ்ச், ஆக. 21: மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பிகார் மாநிலத்துக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெய், உப்பு ஆகியவற்றில் 80 சதவீதம் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் முகமது தஸ்லிமுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சார்பில் கிசான்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது தஸ்லிமுதீன்.
அவர் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசின் அன்னபூர்ணா, அந்தியோதயா திட்டங்களின் கீழ், பிகாரைச் சேர்ந்த கிஷன்கஞ்ச், அராரியா, பூர்னியா, கைதார் மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பப்படுகின்றன. ஆனால் அவற்றில் 80 சதவீதம், திட்டமிட்டு உணவு தானியங்களைக் கடத்தும் கும்பலால் நேபாளத்துக்கும், வங்கதேசத்துக்கும் கடத்திச் செல்லப்படுகின்றன.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றுள்ளேன்.
இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து நடந்து வந்தபோதிலும், பிகார் மாநில அரசு நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்றார் தஸ்லிமுதீன்.
மறுமொழியொன்றை இடுங்கள்