Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 20th, 2006

Marudhu Paandiyar – Short Film : Kaalaiyaar Kovilpuram

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

விடுதலை வேள்வியில்..: மருதிருவர்

ரவிக்குமார்

பீரங்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டும், கால வெள்ளத்தால் கரைக்கப்பட்டும் சிதிலமடைந்து காட்சியளிக்கும் அரண்மனைகள்… பிரம்மாண்டமான காளையார் கோவில் கோபுரம்… இவற்றின் பின்னணியில் துவங்குகிறது “மருதிருவர்’ ஆவணப்படம். நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட இரண்டு மாவீரர்களை நாம் மறந்ததற்கு அடையாளமாய் அவர்களின் அரண்மனையும், மருது மன்னர்களின் இறைப்பணிக்கு அடையாளமாய் உயர்ந்து நிற்கும் கோபுரங்களும் நம்மை 18-ம் நூற்றாண்டுக்கு கைபிடித்து அழைத்துச் செல்கின்றன.

கதவுகளே இல்லாத அரண்மனை, காவலர்களே இல்லாமல் மக்களை சந்தித்து, மருதிருவர் ஆட்சி செய்த முறை. கோபுரங்களைக் கட்டித் தருவது, மண்டபங்களைக் கட்டித் தருவது என 87 கோயில்களில் மருது பாண்டியர்கள் இறைப்பணி செய்திருக்கும் விவரம், இந்துக் கோயில்களைத் தவிர, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களிலும் நற்பணிகளைச் செய்திருக்கும் விவரம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற சக பாளையத்துக் காரர்களிடமும், திப்பு சுல்தானின் தளபதியாக இருந்த துந்தா ஜீவாக் ஆகியோரிடமும் நட்பு பாராட்டிய விதம், ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் போராளி அணியில் இருந்து வெளியிடப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட அரசியல் பொது அறிக்கையை மருது பாண்டியர்கள் வெளியிட்ட நிகழ்ச்சி குறித்த தகவல்கள் இந்த ஆவணப் படத்தில் உள்ளன.

மருதிருவரைப் பற்றி சரித்திரத்தின் பக்கங்களில் காணமுடியாத பல விஷயங்கள், இந்த ஆவணப் படத்தில் பதிவாகியிருக்கின்றன.

இந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர் தீனதயாள பாண்டியன். இவர், பெரியமருதுவின் எட்டாவது வாரிசு. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் “ஃபர்ஸ்ட் கார்மென்ட்ஸ் மேன்யுஃபாக்சரிங் கம்பெனி’யின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். மருதிருவர் ஆவணப்படத்தின் சி.டி.யை தமிழக ஆளுனரின் கையால் வெளியிட்டிருக்கும் தீனதயாள பாண்டியனிடமும், படத்தின் இயக்குனர் தினகரன் ஜெய்யிடமும் பேசியதிலிருந்து…

மருதிருவரின் வாரிசுகள் அனைவரையும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினர் கொன்று விட்டதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்…நீங்கள் பெரியமருதுவின் எட்டாவது வாரிசு என்கிறீர்களே..?

நீங்கள் கேள்விப்பட்டதும் உண்மைதான். நான் சொல்வதும் உண்மைதான். பெரிய மருது, சின்ன மருதுவோடு சேர்த்து ஏறக்குறைய 500 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினர். அதோடு அவர்களின் கழுத்தை வெட்டிச் சாய்த்த சம்பவமும் நடந்திருக்கிறது. மருதுபாண்டியர்களின் ஆண் வாரிசுகளை நாடு கடத்திவிட்டார்கள். பெண் வாரிசுகளை விட்டுவிட்டார்கள். நான் பெண் வாரிசின் வம்சாவளியில் வந்தவன்தான்.

சுதந்திரப் போராட்டத்தில் மருதுபாண்டியர்களின் பங்களிப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது?

வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் 1857-ல் நடந்த சிப்பாய் கலகம்தான். மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கலகம், சலசலப்புதானே தவிர, போர் இல்லை. அதோடு இந்த கலகத்துக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை விட, மத அடிப்படையான காரணங்களே அதிகம் இருந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால் சிப்பாய் கலகம் நடப்பதற்கு 57 ஆண்டுகளுக்கு முன்பே, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக பல பிரிவுகளில் இருப்பவர்களும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மருதிருவரால் திருச்சி மலைக்கோட்டையிலும், ஸ்ரீரங்கத்திலும் ஒட்டப்பட்ட “ஜம்புத்வீபப் பிரகடனம்’, (ஒஹம்க்ஷன்க்ஜ்ண்ல்ஹம் ஙஹய்ண்ச்ங்ள்ற்ர்) விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சுதந்திரக் கிளர்ச்சிகளில் பங்கேற்கும் உத்வேகத்தைத் தந்தது. 30 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகே சிவகங்கை கோட்டையை ஆங்கிலேயர்களால் பிடிக்கமுடிந்தது.

அப்படியும் ஆங்கிலேயர்களால் மருதிருவரைப் பிடிக்கமுடியவில்லை. 150 வீரர்களுடன் மருதிருவர் நடத்திய கொரில்லா போர்முறையை ஆங்கிலேயர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கொதிப்படைந்த ஆங்கிலேயர்கள் மருதிருவர் கட்டிய காளையார் கோவில் கோபுரத்தை தகர்க்கப் போவதாக செய்தி பரப்புகின்றனர். அதேசமயத்தில், மருதிருவரை உயிரோடோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு 4000 கூலிச்சக்கரம், அவர்களின் சந்ததிகளுக்கு 3000 கூலிச்சக்கரம் பரிசு என்று அறிவிக்கின்றனர்.

ஒரு கூலிச்சக்கரம் என்பது மூன்று ரூபாய்க்குச் சமம். கோபுரத்தை காக்கும் பொருட்டு போரை நிறுத்தி விட்டு, பதுங்கியிருந்த மருதிருவரை பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மண்ணின் மைந்தர்களே காட்டிக் கொடுக்கின்றனர். வீரத்தில் தொடங்கி துரோகத்தால் முடிந்த மருதிருவரின் சரித்திரத்தை ஆவணப்படுத்துவது எங்களின் கடமை என்று நினைத்தோம். செய்து முடித்தோம்.

நீங்கள் மருதிருவரின் வாரிசு என்பதால் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தீர்களா?

அது மட்டுமே காரணம் இல்லை. இந்தப் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, திப்புசுல்தான், அவரின் தளபதி என மருதிருவரின் சமகாலத்தில் வாழ்ந்த போராளிகளைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன. கடவுளின் கருணையால் நேரிடையாகவும், மறைவாகவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பணியை அளிக்கும் நிலையில் இருக்கிறேன். அதனால் இந்த சி.டி.யை விற்பனைக்காக நான் தயாரிக்கவில்லை.

இந்த சி.டி.யை மக்களுக்கு நேரிடையாகக் கொண்டுசெல்லும் வகையில் அறிமுகக் கூட்டங்களை நடத்துகிறோம். வாரிசு என்பதால் மருதிருவர் பற்றிய படத்தை எடுத்திருக்கிறேன் என்கிறீர்கள். அடுத்து நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் படம், ஆங்கிலேயர் காலத்தில் வழக்கத்திலிருந்த “குற்றப்பரம்பரை’ என்ற சட்டத்தைப் பற்றியது. இந்தச் சட்டத்தின்படி படையாச்சி, கள்ளர்கள், மறவர்கள்…போன்று இந்தியா முழுவதும் 231 சாதிப் பிரிவில் இருக்கும் ஆண்கள் தினமும் இரவில் தங்களின் ரேகையை காவல் நிலையத்திலிருக்கும் பதிவுப் புத்தகத்தில் பதித்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டு, காலையில்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது.

“ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நாம் எல்லோருமே குற்றப்பரம்பரையினராகத்தான் இருந்தோம். அப்படியிருக்கும்போதுநமக்குள் இன்றைக்கு ஏன் இவ்வளவு பிரிவினை? என்ற கேள்வியை சற்று உரக்கவே எழுப்பும் “ரேகை’ ஆவணப்படம்.

-என்றார் தீனதயாள பாண்டியன்.

இனி, இயக்குனர் தினகரன் ஜெய், “”வரலாற்று அறிஞர்களின் பார்வையில் ஜம்புத்வீபப் பிரகடனம் என்பது பிரெஞ்சுப் புரட்சியின்போது நிகழ்த்தப்பட்ட பாஸ்டில் சிறைத் தகர்ப்புக்கு இணையானதாக கருதப்படுகின்றது. 15 வயதான சின்ன மருதுவின் மகன் உள்பட 73 புரட்சியாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக குறிப்பு இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 57 வருடங்களுக்குப் பின்தான் மருதிருவரின் அஞ்சல்தலையை அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த வீரர்களின் சிதிலமான கோட்டைகளை, வாழ்விடங்களை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அரசுடமையாக்கிப் பாதுகாக்க வேண்டும். அதுதான் அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் நிஜமான மரியாதையாக இருக்கும்!” என்கிறார் தினகரன் ஜெய்.

Posted in Documentary, East India Company, Freedom, Independence, India, Kattabomman, Kings, Marudhu Paandiyar, Short Film, South India, Tamil, Tamil Nadu, War | 3 Comments »

Jothika – 4 in 1 Saree : RMKV Marriage Silk Pattu

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

வேடிஸ் சாய்ஸ்… 4 இன் 1 சாரிஸ்

முன்பெல்லாம் துணிக்கடைகளுக்குள் நுழைகிறபோது கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்கும் பொம்மைகள். இதே வரவேற்பு இப்போதும் உண்டு. ஆனால் பொம்மைகளாய் மனிதர்கள். ஒருபுறம் ஆண்கள். எதிர்புறம் பெண்கள். வரிசையாய் நின்று சாக்லெட், ரோஜாப்பூக்கள் கொடுக்கிறார்கள். இன்னும் ஒரு சில கடைகளில் மேளதாள வரவேற்பு. வாடிக்கையாளரை எப்படியும் கவர்ந்துவிடவேண்டும் என்பதற்காகவே இத்தகைய உபசரிப்பு.

இந்த வரவேற்பு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது தி.நகர் ஆர்.எம்.கே.வி. துணிக்கடையினர் கொடுக்கும் வரவேற்பு. எல்லோரும் விரும்புகிற வியக்கிற புதியபுதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, அதன் மூலமே வாடிக்கையாளரைக் கவர்கின்றனர். குறிப்பாக சேலையில் அதிக கவனம். இப்போது 4 இன் 1 என்கிற “ரிவர்சிபிள்’ புடவையை அறிமுகம் செய்துள்ளனர். இந்த சேலையின் மீது பெண்களுக்கு அப்படி என்ன நாட்டம்?

ஆர்.எம்.கே.வியின் பங்குதாரர் சிவக்குமாரே சொல்கிறார்:

“”இன்றைக்கு சேலை கட்டுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய இளைஞிகள் சேலை கட்டவே விரும்புவதில்லை. எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் கூட சேலை என்றால் வெறுத்து ஒதுக்குகின்றனர். அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக நாம் அப்படியே விட்டுவிடமுடியுமா? சேலை தமிழர்களின் சின்னமல்லவா?

இளைஞிகளிடையே சேலை கட்டுகிற ஆசையை அதிகரிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற புதிய புதிய சேலைகள் அறிமுகம் செய்கிறோம். முன்பு 714 அடி நீளமுள்ள சேலையை நெய்து சாதனை செய்தோம். அடுத்து 50 ஆயிரம் வண்ணங்களுடைய சேலையை நெய்து சாதனை செய்தோம். இப்போது இந்த 4 இன் 1 “ரிவர்சிபிள்’ பட்டுச் சேலை. இந்தச் சேலையை நெய்தது நெசவுத்தொழிலில் ஒரு புரட்சி என்றுகூட சொல்லலாம். ஒரு சேலையின் இரண்டு பக்கங்களிலும் இருவேறு வண்ணங்கள். 4 பார்டர்கள், 4 முந்திகள்.

இந்த முறையில் நெய்தது இதுவே முதல் முறை. இந்த முறைக்கு “கேவி டெக்னிக்’ என்று பெயரிட்டுள்ளோம். இதற்கான காப்புரிமையையும் வாங்க உள்ளோம்.

ஒரே புடவையில் நான்கு புடவைகள் இருப்பதால் அதிக முறை கட்டுவார்கள். இதனால் சீக்கிரம் வீணாகிப் போய்விடும் என்பதெல்லாம் இல்லை. இப்போது தயாரித்துள்ளது மணப்பெண்ணுக்கான சேலை என்ற கண்ணோட்டத்துடன்தான் தயாரித்து உள்ளோம். அதற்காக மணப்பெண்கள் மட்டும்தான் அணியலாம் என்பதல்ல. எல்லோரும் அணியலாம்.

ஒரு புடவையின் விலை 64 ஆயிரத்து 650 ரூபாய் என்பது அதிகம் என்பதுபோலத்தான் தெரியும். ஆனால் இந்தச் சேலையில் மற்ற எல்லாச் சேலைகளையும்விட ஜரிகை வேலைப்பாடுகள் அதிகம். இப்போது சாதாரணமாக மணப்பெண்களுக்கு சேலை எடுத்தாலே அவற்றின் விலை 25 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. அவற்றோடு இதை ஒப்பிடுகிறபோது இவற்றின் விலை குறைவுதான்.

இவ்வளவு விலை உள்ள சேலைகளை நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களால் வாங்க முடியாது என்பது உண்மைதான். இதற்காக இதே 4 இன் ஒன் 1 “ரிவர்சிபிள்’ சேலை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் வரையிலான விலையில் வருகிற தீபாவளிக்கு அறிமுகப்படுத்த உள்ளோம்.

சேலையில் இப்படி புதியபுதிய கலைநுணுக்கங்களை புகுத்துவதற்கென்றே நுபுணத்துவம் உள்ள ஒரு குழுவை வைத்திருக்கிறோம். அவர்கள் வேலையே சேலைகளில் புதியபுதிய கலை நுணுக்கங்களை அறிமுகப்படுத்துவது பற்றி பரிசோதித்துக்கொண்டே இருப்பதுதான். “இந்தக் குழுவில் பெண்கள் உண்டா?’ என்றால்… “இல்லை’ என்றுதான் சொல்லவேண்டும். இந்தத்துறையில் பெண்கள் படித்துவிட்டு வந்தாலும், அவர்கள் கவனமெல்லாம் சேலைகளைப் பற்றி இல்லை. பேஷன் உடைகளின் மீதுதான் உள்ளது” என்கிறார் சிவக்குமார்.

இந்த 4 இன் 1 சேலை குறித்து கடை வாயிலில் இரு பெண்களின் உரையாடல்:

“”ஏய்.. 4 இன் 1 புடவை வந்திருக்காமே கேள்விப்பட்டீயா?”

“”ம்.. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரின்னு ரஜினி சொல்லுறா மாதிரி 100 இன் 1 வந்தா நல்லா இருக்கும்லே?”

Posted in 4 in 1, Chennai, Jothika, Kanchipuram Silk, Marriage, Pattu, Pudavai, RMKV, Saree, Sari, Tamil | Leave a Comment »

International Woman of the Year – Vasantha Kandasamy

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

விருது: எண்களின் ராணி!

ரவிக்குமார்

கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி சாதனை படைத்ததற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை 1996-ம் வருடம் வழங்கியிருக்கும் “இன்டர்நேஷனல் வுமன் ஆஃப் தி இயர்’ பட்டம், அமெரிக்க புள்ளியியல் துறை வழங்கியிருக்கும் “டிஸ்டிங்க்விஷ் அவார்ட்’…இந்த வரிசையில் வசந்தா கந்தசாமியின் கிரீடத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு ஒளி வைரம் கல்பனா சாவ்லா விருது!

வசந்தா கந்தசாமி

தொலைக்காட்சிப் பெட்டி, டேப்-ரிகார்ட்டர் என்று எந்தவிதமான பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் புத்தகங்களை எப்போதும் (சு)வாசித்துக்கொண்டும் இருக்கிறார், சென்னை, ஐ.ஐ.டியில் கணிதத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் வசந்தா கந்தசாமி. உயர் கல்வித் துறையில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வருவதற்காக, தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்றிருக்கும் “எண்களின் ராணி’ வசந்தா கந்தசாமியுடன் உரையாடியதிலிருந்து…

விருதைப் பெற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?

கணிதத் துறையில் நான் செய்திருக்கும் சாதனைகளுக்காகப் பெற்ற எந்த விருதையும் விட, சமூக நீதிப் பணிகளுக்காகப் பெற்றிருக்கும் தமிழக அரசின் இந்த விருதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த விருதின் மூலம் என்னுடைய பணிகள் இன்னமும் கூர்மையாகும்.

விருது பெற்றபோது…

தங்களின் வழிகாட்டுதலோடு பிஎச்.டி. ஆய்வு முடித்த மாணவர் யாருக்காவது, இந்திய அளவில் சிறப்பு கிடைத்திருக்கிறதா?

கணிதத் துறையில் ஆய்வு (பிஎச்.டி) செய்வதற்காக 1997ம் வருஷம், விருதுநகரிலிருந்து கண்ணன் என்ற தலித் மாணவர் வந்திருந்தார். பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு அந்த தலித் மாணவர் கண்ணன், டில்லியில் நடந்த அறிவியல் மாநாட்டிற்கு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அறிவியல் துறைக்குப் பெரிய நிறுவனமாக உள்ள “இண்டியன் நேஷனல் சயின்ஸ் காங்கிரஸ்’ மாநாடு, அந்த ஆண்டு தலைநகரான தில்லியில்தான் நடந்தது. ஒவ்வோர் அறிவியல் துறை சார்ந்தவர்களிடமும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெற்று, அதை எழுதியவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தனிப்பட்ட குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவார்கள். அந்த ஆண்டு 38 பேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்ததில், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசைப் பெற்றது, தலித் மாணவன் கண்ணனின் கட்டுரைதான். போட்டியில் பங்கேற்ற மற்ற 37 பேருமே பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக இருப்பவர்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்! என்னிடம் பி.எச்.டி. முடித்த 15 மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள், முதல் தலைமுறை படிப்பாளிகள். அவர்களின் பெற்றோர்கள் டீக்கடை வைத்திருப்பவர்கள், சலூன் கடை நடத்துபவர்கள் இப்படித்தான்.

நீங்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்துமே உங்களின் கணிதத் துறையைச் சார்ந்தது மட்டும்தானா?

பெரும்பான்மையானவை கணிதத் துறையைச் சார்ந்தவை. அதிலும் கணிதத் துறையைப் பயன்படுத்தி மற்ற துறையில் இருப்பவர்களுக்கும் பயனளிக்கக் கூடிய புத்தகங்கள். சாட்டிலைட்டை இயக்குவதற்கும் கணிதம் பயன்படும், சமூகத்தில் எயிட்ஸôல் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளைச் சொல்வதற்கும் கணிதம் பயன்படும்.

எயிட்ஸôல் பாதிக்கப்பட்டவர்களுக்காக எழுதியிருக்கும் புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியோடு இரண்டு ஆராய்ச்சிப் புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். பணியின் காரணமாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்பவர்களிடையே எயிட்ஸின் தாக்குதலுக்கு உள்ளானவர்களைப் பற்றிய புத்தகம் கர்ஸ்ங் கண்ச்ங் கன்ள்ற் கர்ள்ள். இந்தப் புத்தகத்தில், பணியின் காரணமாக இடம் பெயர்ந்த எயிட்ஸ் தாக்குதலுக்கு உள்ளான 101 பேரின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னொரு புத்தகம், எயிட்ஸ் தாக்குதலுக்கு ஆளான பெண்களைப் பற்றியது. இதன் பெயர் ரர்ம்ஹய் ரர்ழ்ந் ரர்ழ்ற்ட் ரர்ம்க்ஷ. இதிலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் உணர்ச்சிகள், கணித முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உணர்வுகளை எண்களில் பதிவு செய்ய முடியாது. நோயின் தாக்குதலை முதன்முதலாக அறிந்த தருணத்தில்…அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்…சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் தருணத்தில் அவர்களின் உணர்ச்சிகள் எவ்வாறெல்லாம் இருந்தன என்பதை, விளக்கமாக அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும். எண்ணற்ற கேள்விகளில், தேவையானவற்றை மட்டும் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டு, அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் வெளிப்படுத்தும் மெüனம், கோபம், விரக்தி போன்ற உணர்ச்சிகளைப் பட்டியலிடுவதன் மூலம், எயிட்ஸ் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்கு இது பயன்படும். கணிதத்தின் மூலம் இப்படி கணிக்கப்படும் முறைக்கு “ஃபஸ்ஸி தியரி’ (ஊன்க்ஷ்க்ஷ்ஹ் பட்ங்ர்ழ்ஹ்) என்று பெயர்.

இரண்டு புத்தகத்திற்காக நிறைய கள ஆய்வுகளைச் செய்திருப்பீர்கள். இந்த ஆய்வுகளின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் விஷயங்கள் என்ன?

பணியின் காரணமாக இடம்பெயர்பவர்களில் பெரும்பாலும் ஆண்களே எயிட்ஸின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் வாகன ஓட்டுனர்களாகவும், கடினமான தொழில் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.

நிறைய ஆண்களுக்கு தங்களின் ஆண்மையின் மேல் அளவுக்கதிகமான நம்பிக்கை. நாம் என்ன செய்தாலும், எப்படிப்பட்ட தவறான உறவு வைத்துக் கொண்டாலும் அதனால் நமக்கு ஒன்றுமே ஆகாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எயிட்ஸôல் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பல பேருக்கு இப்படி ஓர் எண்ணம் இருப்பது தெரிந்தது. அதேபோல் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தங்களின் குடும்பத்தில் பெரிதாக அக்கறை இல்லை. சம்பாதிக்கும் “ஆம்பிளை’ என்கிற திமிர். தான் வாழும் உறவு சனங்களிடையே பொறுப்பில்லாமை, கெட்ட சகவாசம் அதன் காரணமாக பழகும் கெட்ட பழக்கவழக்கங்கள், வறுமை இவையே அவர்கள் எயிட்ஸôல் பாதிக்கப்படுவதற்கு பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன. நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் 31-34 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தார்கள். அதாவது முறைகேடான பாலியல் உறவில் அவர்கள் 21-24 வயது இருக்கும்போது ஈடுபட்டதன் விளைவே நோய்த்தாக்குதலுக்குக் காரணம்.

பெண்களைப் பொறுத்தவரை 90 சதவிதத்தினர் தங்களின் கணவரின் மூலமாகவே எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள்.

“ஃபஸ்ஸி தியரி’யை எளிமையாக புரிந்துகொள்வது எப்படி? வேறு எந்தவிதமான ஆராய்ச்சிக்கு இந்த தியரியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

ஃபஸ்ஸி தியரியை, ஒன்பதாவது, பத்தாவது வகுப்பில் நீங்கள் படித்திருக்கும் நிகழ்தகவின் (டழ்ர்க்ஷஹக்ஷண்ப்ண்ற்ஹ்) விரிவான நிலை எனக் கூறலாம். ஒரு நாணயத்தை சுண்டிவிட்டால், “பூ’வாகவோ “தலை’யாகவோதான் விழக்கூடும். ஆனால் மிகவும் அரிதாக நாணயம் இப்படியும் விழாமல், அப்படியும் விழாமல் நடுவில் நின்றால்…அதுதான் “ஃபஸ்ஸி லாஜிக்’. இந்த லாஜிக்கைப் பயன்படுத்தி, சாட்டிலைட்டிலிருந்து தகவல்களைப் பெறும் கோடிங் ஆராய்ச்சிகளைக் கூட, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்காகச் செய்து தந்திருக்கிறேன்.

Posted in Award, Interview, Kandhasamy, Tamil, Vasandha, Vasantha Kandasamy, Woman | Leave a Comment »

Short Films on Disabled

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

புதிய பாதை: நிஜமாகும் கனவுகள்!

மா. பழனியப்பன்

இது குறும்படங்கள், ஆவணப் படங்களின் காலம் போலும். ஜனரஞ்சக சினிமா சீண்டாத விஷயங்களை, மீடியா வெளிச்சம் விழாத பிரதேசங்களை சமூக அரங்குக்குக் கொண்டு வருகின்றன இந்தப் படங்கள். குறும்படங்கள் தயாரிப்பில் ஒரு கூட்டமே தீவிரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் குறும்படங்கள் உருவாக்கத்தோடு நின்று விடாது, அவற்றை அந்த இலக்கு மனிதர்களை நோக்கி எடுத்துச் செல்வதிலும், அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதிலும், அம்மக்களின் கருத்துகளை திரும்பப் பெறுவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் எஸ். அலெக்ஸ் பரிமளம். சென்னை லயோலா கல்லூரி காட்சி ஊடகவியல் துறை விரிவுரையாளர். அவருடன் பேசியதிலிருந்து…

அலெக்ஸ் பரிமளம்

“”தற்போதைய விரிவுரையாளர் பணிக்கு முன் பெங்களூரில் உள்ள “ஆட் இண்டியா’ (அக்க் ஐய்க்ண்ஹ) நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். ஊனமுற்றோரின் நல்வாழ்வுக்குப் பாடுபடுவது இந்த உலகளாவிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வேலை. பின்தங்கிய கிராம மக்கள், ஊனமுற்றோர், குழந்தைத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், மனநலம் குன்றியோர் போன்றோரின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் நிறுவனங்களுடனும் ஆட் இண்டியா இணைந்து செயல்படும். இந்நிறுவனத்தில் எனக்கு மக்கள் தொடர்பாளர், திட்ட அலுவலர் பணி. குறிப்பிட்ட மக்களின் இருப்பிடத்துக்கே சென்று அவர்களோடு கலந்து செய்ய வேண்டிய வேலை. அதனால் அவர்களின் வாழ்க்கையை, அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு. அதை அப்படியே படங்களாக பதிவு செய்திருக்கிறேன்.


படப்பிடிப்பில்…

நான் இதுவரை 20 குறும்படங்கள், ஆவணப் படங்கள் இயக்கி, உருவாக்கியிருக்கிறேன். முதன்முதலாக 1992-ல் ஒரு ஃபரீலான்ஸராக “ஊரான் பிள்ளை…’ என்ற 20 நிமிஷ குறும்படத்தை உருவாக்கினேன். சாலையோரம் ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் பிளாட்பார சிறார்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு. சென்னை சமூக அறிவியல் கல்லூரி நடத்திய திரைப்பட விழாவில் அதற்கு முதல் பரிசான பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது. அதுதான் துவக்கம்.

தொடர்ந்து, 94-ல் ஆண்டிபட்டியில் உள்ள “ஆரோக்கிய அகம்’ என்ற அமைப்புக்காக, “சிதையாத சித்திரங்கள்’ என்ற படத்தை உருவாக்கினேன். காசநோயாளிகளுக்குத் தன்னம்பிக்கையூட்டும், அது குணப்படுத்தக் கூடிய நோய்தான் என விளக்கும் குறும்படம் அது.

அப்புறம், “ஆட் இண்டியா’வில் இணைந்ததும் எனது பணியின் அங்கமாகவே பல படங்களைத் தயாரித்தேன். குறும்படம் என்றாலே, பொருள் தேடும் உலகம் பொருட்படுத்தாத மனிதர்களை காமிராவுக்குள் அள்ளிக்கொண்டு ஓடிவந்து விடுவதல்ல. நான் ஸ்கிரிப்டையே அம்மக்களுடன் சேர்ந்துதான் உருவாக்குவேன். அம்மக்களே நடிப்பார்கள். வழிகாட்டுவார்கள். முடிந்தால் காமிரா பிடிப்பார்கள். முழுக்க முழுக்க மக்கள் பங்கேற்புடனே நடக்கும்.

ஊனமுற்றோர், மனநலம் குன்றியோர் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றுவதும், அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு வழிகாட்டுவதும், விழிப்புணர்ச்சியை விதைப்பதும்தான் இந்தப் படங்களின் அடிப்படை நோக்கங்கள். அதனால் அக்குறிப்பிட்ட மக்கள் பங்கேற்பாளர்களாக இல்லாமல் வெறும் பார்வையாளர்களாக இருந்தால் சரியாயிருக்குமா? எனவேதான் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

மக்கள் பங்கேற்பின் காரணமாக இந்தப் படங்களில் ஒரு தொழில்நுட்ப நேர்த்தித் தன்மை இல்லாமல் போகலாம். ஆனால் உயிருண்டு. காட்சி அழகியலை விட வாழ்வியல் நிதர்சனம் முக்கியமில்லையா?

படம் தயாரானதும் மக்களுக்கும், இத்துறையில் புலமை உள்ளவர்களுக்கும், ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும் திரையிட்டுக் காட்டுவோம். அவர்களின் கருத்துகளை பதிவு செய்வோம்.

இந்தப் படங்கள் அனைத்தும் தென்னிந்திய மொழிகள், குஜராத்தி, இந்தியிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆட் இண்டியாவுடன் இணைந்த பல்வேறு தொண்டு அமைப்புகளால் ஆங்காங்கே காட்டப்பட்டு வருகின்றன.

இன்று நமது ஊடகங்கள் எல்லாமே மக்களுடன் அன்னியப்பட்டு நிற்பவையாகத்தான் உள்ளன. சுதந்திர தினத்தன்றும் நமீதா பேட்டியைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். மக்கள் பிரச்சினைகளை, அவர்களைப் பற்றிய விஷயங்களை பேசுகிற “கம்யூனிட்டி டிவி’ போன்ற அமைப்பு இங்கில்லையே!

சம்பந்தப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி அவ்விஷயத்தில் ஆர்வமுள்ளோருக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்தினருக்கு அதற்கான வாய்ப்பு இல்லாதது வருத்தத்துக்குரிய விஷயம். நிச்சயம் மாணவர்களை இவ்வழியில் வழிநடத்தினால் அவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை ஆற்றுவார்கள். நான் கல்லூரியில் “மேம்பாட்டுக்கான தொடர்பு’ பாடம் நடத்துகிறேன். வகுப்பில் எனது அனுபவ அறிவுடன் கிராம மக்கள், அடித்தட்டு மக்களின் வாழ்நிலை பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். கிராமங்களுக்குச் செல்ல முன்வருகிறார்கள்.

இன்றும் நாம் நம்மருகில் உள்ள மனிதர்களைப் பற்றி அறியாமல்தான் இருக்கிறோம். கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் அவரவர் தங்கள் வீட்டுக்கு முன் மலம் கழிக்க, அதை மாதாரி இனத்தினர் கைகளால் சுத்தம் செய்கின்றனர். அதற்கான கூலி “எடுப்பு சோறு’. அதாவது வீட்டுக்கு வீடு போடும் சோறு. இது இன்றைய தேதி நிலைமை. சுடும் உண்மை.

இதையெல்லாம், இந்த உண்மைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு பளபள பிளாசாக்களையும் பல்லாயிரம் கிலோமீட்டர் நீள நாற்கரச் சாலைகளையும் காட்டி, ஆகா முன்னேற்றம் வந்துடுச்சு என்று ஆரவாரிப்பதில் என்ன இருக்கிறது? அரசாங்கத்தின் கண்ணை யார் திறப்பது?

இளமையில் “கல்’.

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளின் மூலம் எனது படங்கள் பல நூறு கிராமங்களை, பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இவை இலட்சம், கோடி மக்களை அடைய வேண்டும். அதற்கு மாஸ் மீடியாவின் அனுசரணை வேண்டும். அதற்காகத்தான் தற்போது தூர்தர்ஷனில் பேசிக்கொண்டிருக்கிறேன். முன்பு கர்நாடகத்தில் கேபிள் டிவியில் சினிமா படங்கள் போடுவதற்கு முன் இதுபோன்ற படங்களை ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்தோம்.

நாங்கள் உருவாக்கிய படங்கள் எல்லாமே மக்கள் சார்ந்த, அவர்களின் மண் சார்ந்த பிரச்சினைகளை, அவர்கள் மொழியிலேயே பேசுபவை. அதனால் இவை அம்மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. ஆனால் காலம் காலமாக ஊறிவந்த உணர்வுகளை, அவர்களின் முரட்டுத்தனமான மூட நம்பிக்கைகளை உடனே முறியடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். மாற்றம் என்பது மிகவும் மெதுவாக வரலாம். ஆனால் அதற்கான மனமாற்றம் நிச்சயம் ஏற்பட்டு வருகிறது என்பது மட்டும் நிதர்சனம்.”

நம்பிக்கை தெறிக்கும் குரலில் அலெக்ஸ் பரிமளம் முடிக்க, அவர் மனநலம் குன்றியோர் பற்றி 12 மணி நேரத்தில் உருவாக்கிய பட சிடியில் நம் பார்வை படுகிறது – “நிஜமாகும் கனவுகள்’

Posted in Documentaries, Kathir, Short Films, Tamil | Leave a Comment »