Mullai Theevu victims are School Kids – UNICEF
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006
முல்லைத்தீவு குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்கள் பள்ளி மாணவிகள் – யுனிசெப்
ஐக்கிய நாடுகளின் சிறார் நல நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியான ஜொன் வாங்கபன் நேற்றைய குண்டுவீச்சில் இறந்துபோன பதின்மவயதுப் பெண்கள் அனைவரும் முல்லைத்தீவு மற்றும் கிளிநோச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வந்த மாணவிகள் என்று தமது விசாரணையின் போது தெரியவருகிறது என்று பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.
முல்லைத் தீவில் நடந்த தாக்குதல் குறித்து யுனிசெப் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். காயமடைந்த பலரிடமும் அவர்கள் சம்பவம் குறித்துக் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![]() |
![]() |
கொல்லப்பட்டவர்கள் பள்ளி மாணவிகள் என யுனிசெப் கருத்து |
ஆனால் அந்த மாணவிகளுக்கு யார் எதற்காக பயிற்சி ஏற்பாடு செய்துள்ளனர் என்பதை தம்மால் உறுதி செய்யமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ள இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது என்ன நடந்தது என்பதை அறியவும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்ப்பதற்காகவும் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம் கேட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்