Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 15th, 2006

Indira K Nooyi becomes CEO of PepsiCo

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

பெப்சி தலைமை அதிகாரியாக இந்திரா நூயி

புதுதில்லி, ஆக. 16: உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த இந்திரா கே நூயி (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 1-ல் அவர் இப்பதவியை ஏற்கிறார். திங்கள்கிழமை கூடிய பெப்சிகோ நிர்வாக்குழு, அவரது 12 ஆண்டுகால உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) தேர்வுசெய்துள்ளது.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள முதல் இந்தியப் பெண்மணி இவர்.

உறுதியும் அனுபவமும் தொலைநோக்கும் மிக்க இந்திராவின் தலைமையின் கீழ் செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என பெப்சிகோ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

கடும் சர்வதேச போட்டிகளை சமாளித்து, மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளையும், உயர் பதவிகளையும் இந்தியர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இந்திரா நூயி-க்கு முன்னரே, அருண் சரின் (வோடஃபோன்), அஜய் பாங்கா (சிட்டி குரூப்), ரஜத் குப்தா (மெக்கின்ஸி), ரானா ஜே தத்தா (யுனைட்டட் ஏர்லைன்ஸ்), வியோமேஷ் ஜோசி (ஹெச்.பி.) போன்றோர் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளனர்.

Posted in CEO, Desi, Dinamani, Indian, Indira K Nooyi, Indira Nooyi, Indra K Nooyi, Indra Nooyi, MNC, Nooyi, PepsiCo, Tamil, US | Leave a Comment »

Free Gas Connection in Tamil Nadu – Mu Karunanidi

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

ஏழைக் குடும்பங்களுக்கு பொங்கல் முதல் இலவச கேஸ் அடுப்பு; கருணாநிதியின் சுதந்திர தின அறிவிப்பு

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழக தலைநகர் சென்னையில், மாநில அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை இந்திய தேசிய மூவண்ணக்கொடியை வைபவ ரீதியாக ஏற்றி வைத்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

கடந்த மேமாதம் நடந்த தமிழக பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்தில், தமது தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றிய முக்கிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட கருணாநிதி, தம் கட்சியின் சார்பில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான வறுமைகோட்டிற்கு கீழே வாழும் ஏழை குடும்பங்களில், சமையல் எரிவாயு அடுப்பு இல்லாத குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பும், இலவச எரிவாயு இணைப்பும் வழங்கும் திட்டம் எதிர்வரும் பொங்கல் திருநாளில் இருந்து துவங்கும் என்று அறிவித்தார். இதற்காக 150 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 இலங்கை விமானப் படையின் வான் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்

 

தமிழ முதல்வர் மு கருணாநிதி

பின்னர், இன்று மாலை கருணாநிதி வெளியிட்டுள்ள ஒர் அறிக்கையில், இலங்கையில் முல்லைத்தீவுப்பகுதியில் இலங்கை விமானப் படையின் வான் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று கண்டித்துள்ளார்.

இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று கூறியிருக்கும் கருணாநிதி, மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்கப்பட முடியாத இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 180க்கும் மேற்பட்ட அகதிகள் ராமேஸ்வரம் வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in BBC, Budget, Chennai, Chief Minister, CM, Cooking Gas, DMK, Election, Free, Gas, Karunanidhi, Manifesto, Mu Karunanidi, South India, Tamil, Tamil Nadu, TamilNadu | Leave a Comment »

Loganathan Cremated

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

சுட்டுக் கொல்லப்பட்ட லோகனாதனின் உடல் தகனம்

கடந்த சனிக்கிழமையிரவு அவரது இல்லதில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை அரச சமாதான செயலகப் பிரதிச் செயலாளர் நாயகம், கேதீஸ்வரன் லோகநாதனின் தகனக் கிரியைகள் இன்று மாலை பொரளை கனத்தை இந்து மயானத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றது.

லோகநாதனின் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
லோகநாதனின் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

கொழும்பு கலா பவனத்தில் நேற்றையதினம் வைக்கப்பட்டிருந்த அன்னாரது பூதவுடலிற்கு அரச அதிகாரிகள், அமைச்சர்கள் சிலர், வெளி நாட்டுத்தூதுவர்கள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள், சமாதான செயலகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் எனப்பலரும் தத்தமது இறுதி மரியாதையினைச் செலுத்தியிருந்தனர்.

லோகநாதனின் பூதவுடல் பொரளையிலுள்ள ஜயரத்ன மலர்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவும் நேரில் சென்று தனது இறுதி மரியாதையினைச் செலுத்தினார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினரான லோகநாதன், திம்புப்பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டிருந்தார் என்பதோடு, பின்னர் பத்திரிகைத்துறையிலும், அதன் பின்னர் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்ற தன்னார்வ அமைப்பின் பணிப்பாளராகவும் இருந்தார் என்பதும், இவ்வருட இறுதியில்தான் இவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அரச சமாதான செயலகப் பிரதிச் செயலாளராக நியமித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Assassination, BBC, dead, Eelam, Eezham, Loganathan, LTTE, Peace, Rajapakse, Sri lanka, Srilanka, Talks, Tamil | Leave a Comment »

Mullai Theevu victims are School Kids – UNICEF

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

முல்லைத்தீவு குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்கள் பள்ளி மாணவிகள் – யுனிசெப்

ஐக்கிய நாடுகளின் சிறார் நல நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியான ஜொன் வாங்கபன் நேற்றைய குண்டுவீச்சில் இறந்துபோன பதின்மவயதுப் பெண்கள் அனைவரும் முல்லைத்தீவு மற்றும் கிளிநோச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வந்த மாணவிகள் என்று தமது விசாரணையின் போது தெரியவருகிறது என்று பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முல்லைத் தீவில் நடந்த தாக்குதல் குறித்து யுனிசெப் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். காயமடைந்த பலரிடமும் அவர்கள் சம்பவம் குறித்துக் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுனிசெப்
கொல்லப்பட்டவர்கள் பள்ளி மாணவிகள் என யுனிசெப் கருத்து

ஆனால் அந்த மாணவிகளுக்கு யார் எதற்காக பயிற்சி ஏற்பாடு செய்துள்ளனர் என்பதை தம்மால் உறுதி செய்யமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ள இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது என்ன நடந்தது என்பதை அறியவும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்ப்பதற்காகவும் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம் கேட்டுள்ளது.

Posted in BBC, Ceylon, Children, Eezham, Kids, LTTE, Sri lanka, Srilanka, Tamil, Terrorism, UN, UNICEF | Leave a Comment »

Unsung Heroes of Indian Independence Struggle

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…?

தி. இராசகோபாலன், விடுதலை வீரர் பாஷ்யம

இயற்கை உரமிட்ட வயல், மனம் விரும்பும் மகசூலைத் தந்தே தீரும்! தாய்ப்பால் ஊட்டி ஆரோக்கியமாக வளர்க்கப் பெற்ற குழந்தை, கொழுகொழு என்று வளர்ந்தே தீரும்! ஆனால், சர்வ பரித்தியாகத்தை உரமாக்கி, கண்ணீரைத் தண்ணீராக வார்த்து வளர்க்கப் பெற்ற சுதந்திரப் பயிர், எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லையே, ஏன்?

கொஞ்சமோ நம்மவர் தியாகம்? 1772இல், ஆர்க்காடு நவாப் கும்பினியின் படைத்துணையோடு சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டான். அரண்மனை அருகே வெடிமருந்து வைக்கோல் போர்போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. கும்பினியாரின் போர்ப்பிரகடனத்தைச் சந்திப்பதற்காக, வேலுநாச்சியார் படை நடத்தி வருகிறார்.

அன்று ஆயுதபூசை – நவராத்திரி விழா. இராஜேசுவரி அம்மனைத் தரிசிக்க ஆலயம் திறந்து விடப்பட்டது. குயிலி என்ற பணிப்பெண் தன்னுடல் முழுவதும் நெய் பூசிக்கொண்டு, நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு, அரண்மனை மேல் மாடத்திலிருந்து வெடிக்கிடங்கில் குதித்து, ஆயுதக் கிடங்கை அழித்துவிட்டாள். ஆயுதபூசை அன்று, உண்மையிலே ஆயுதபூசை செய்த அந்தக் குயிலியின் தியாகத்திற்கு ஈடு ஏது? இணை ஏது?

பணிப்பெண் மட்டுமன்று; பாலகன் ஒருவன் விடுதலை வேள்வியில் செய்த உயிர்த்தியாகத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிலிர்க்கின்றது. மகாராஜா ரஞ்சித் சிங் படையில், சீக்கியர்களில் ஒரு பிரிவான நாமதாரிகள் (கூக்கர்கள்) பணிபுரிந்து வந்தனர். குரு ராம்சிங்கைத் தலைவராகக் கொண்ட கூக்கர்கள், ஆங்கில ஆட்சியை முற்றாக அகற்றுவதில் முனைப்பாக நின்றனர். அவர்களைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தான் கவுன் என்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி. 1872ஆம் ஆண்டு அமிர்தசரசில் நீராடுவதற்காகச் சென்ற கூக்கர்களைத் தாக்கும்படி, கவுன் தன் கைக்கூலியான மலர்கோட்லா என்ற சமஸ்தானத்தை ஆண்ட மன்னனுக்குக் கட்டளையிட்டான். போரை எதிர்பார்க்காத கூக்கர்களில் 59 பேர்களைக் கைது செய்து, அவர்கள் வழிபாடு செய்த கோயில் வாசலிலேயே பீரங்கி வாயில் கட்டிச் சுட்டுத் தள்ளினான். 18 கூக்கர்களைச் சாலையோரத்தில் மரத்தில் கட்டித் தூக்கிலிட்டான்.

மேலும் பீரங்கியால் சுடப்பட இருந்தவர்களில் பதிமூன்று வயது பாலகனும் ஒருவன். இக்கொடுமையைக் காணச் சகியாத துணைக்கமிஷனரின் மனைவி, அந்தப் பாலகனை மட்டும் விட்டுவிடுமாறு கணவனிடம் கெஞ்சினாள். அதற்கிணங்க அந்தக் கொடும்பாதகன் அந்தப் பாலகனைப் பார்த்து, “”அந்த நீசன் ராம்சிங்கின் கூட்டத்தில் இனிச் சேர மாட்டேன் என வாக்களித்தால், விட்டு விடுகிறேன்’ எனச் சொன்னவுடனேயே, அந்தப் பாலகன் துணைக் கமிஷனரின் தாடியைப் பிடித்து உலுக்கி, “”என் குருவை அவமதிக்க உனக்கு என்ன தைரியமடா” என்றான். உடனே அந்தப் பாவி அப் பாலகனின் கைகளைத் தனியாக வெட்டி, அதற்குப் பின், பீரங்கி வாயில் அவனையும் கட்டிச் சுட்டுவிட்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த சோவியத் ஓவியர் “விர்ஷெக்தசின்’ அந்தக் கோரக் கொலையைக் கண்டு, ஓவியமாகவே தீட்டிவிட்டார். ரத்த சாட்சியாக வரையப்பட்ட அந்த ஓவியம், பொற்கோயிலின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருப்பதை இன்றைக்கும் காணலாம்.

பணிப்பெண் – பாலகன் மட்டுமன்றி, விடுதலைப் போராட்டத்தில் ஆதிவாசிகள் ஆற்றிய தியாகமும் அளப்பரியது. பஞ்சாப் படுகொலையால் சினந்தெழுந்த அல்லூரி சீதாராம ராஜு, ஆதிவாசிகளுக்கு மத்தியில் விடுதலைப் பறையை வேகமாகத் தட்டினார். அல்லூரியைக் கண்டுபிடித்து அவர் கதையை முடித்து விட வேண்டுமென்று கணக்குப் போட்ட ஆங்கில அதிகாரிகளுக்கு அவர் கோதாவரி மாவட்டத்தில், மலைப்பகுதியில், ஆதிவாசிகளுக்கிடையில் தலைமறைவாக வாழ்வதாகச் செய்தி கிடைத்தது. அல்லூரியைச் சரணடைய வைப்பதற்காக ஆங்கில அதிகாரிகள், ஆதிவாசிகளைச் சித்திரவதை செய்தனர். மலபார் ஸ்பெஷல் போலீûஸ ஏவி, ஆதிவாசிகளின் குழந்தைகளைத் துப்பாக்கி முனையிலுள்ள குத்தீட்டியால் குத்திக் கொன்றனர்; போராளிகளைக் கொன்று குவித்தனர். இறுதியில் ஆதிவாசிப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முனைகையில், அல்லூரி சீதாராம ராஜு அக் கொடுமையிலிருந்து பெண்களைக் காக்க, தானே சரணடைந்தார். சரணடைந்த இடத்திலேயே அல்லூரி சுட்டுக் கொல்லப்பட்டார். அல்லூரி செய்த தியாகம், அன்னியரை விரட்டியது; ஆனால், நமக்கு அது ஆனந்த சுதந்திரத்தைத் தந்ததா?

இந்திய விடுதலைப் போரில் முன்னணித் தலைவர்கள் ஆற்றிய தொண்டு வெளியில் தெரிகின்றது; ஆனால், முகவரியே தெரியாத பலர் ஆற்றிய தொண்டு இன்னும் இருட்டில்தானே கிடக்கின்றது! மன்னார்குடி சேரன்குளத்தில் பிறந்த ஓர் ஓவியர், 1932 ஜனவரி 25ஆம் தேதி இரவு, ஓவியத்தில்கூட வரைய முடியாத அர்ப்பணிப்பைச் செய்திருக்கிறார். சென்னை ஜார்ஜ் கோட்டையிலுள்ள நீண்டு உயர்ந்த 200 அடிக்கம்பத்தில், தன் கையாலேயே தீட்டிய மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டார். நள்ளிரவில் கலங்கரை விளக்கத்தின் ஒளி வினாடிக்கு வினாடி சுற்றி வரும்போது, கம்பத்தோடு உடலை ஒட்டிக் கொண்டு உச்சியில் ஏறி, அந்த அரும்பெரும் பணியைச் செய்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஆங்கில அதிகாரிகள், கே. பாஷ்யம் ஐயங்கார் என்ற அந்த ஓவியரைப் பெல்லாரி சிறையில் தள்ளினர்.

பெல்லாரி சிறையில் குல்லாய் அணிய மறுத்தமைக்காகத் தேசபக்தர் மகாவீர் சிங்கினுடைய கை – கால்களைக் கட்டி, மற்ற கைதிகள் பாடம் பெற வேண்டி, அனைவரும் பார்க்கும்படியாக 30 கசையடிகள் கொடுக்க ஆணையிட்டான் மேஜர் ஜெனரல் இன்ஸ். மகாவீர் சிங்கிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கண்டு மனங்கொதித்த ஓவியர் பாஷ்யத்திற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. சிறையதிகாரிகளிடம் தனக்குப் பேதி மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கி, அதை வாயிலேயும் போட்டுவிட்டார். ஆனால், அதை விழுங்கிவிடாமல் ஒருபக்கத்தில் வாயிலேயே ஒதுக்கி வைத்து, வெளியில் துப்பிவிட்டார். “அவசரம்’ என்று சொன்னவுடன் கழிப்பிடம் போக, கைவிலங்குகளை அவிழ்த்து விட்டனர். வெளியே வந்த ஓவியர் யாரும் எதிர்பார்க்காத வகையில், பூட்ஸ் காலால் ஜெனரல் இன்ஸ் தலைமேலே ஆத்திரம் தீர ஓங்கி ஓங்கி உதைத்தார். “எங்கள் வீரர் மகாவீர் சிங்கிற்குக் கொடுத்த தண்டனைக்கு இதுதான் பரிசு” என்றார். வெறி கொண்டெழுந்த மேஜர் இன்ஸ், ஓவியர் பாஷ்யத்தைத் தனியறையில் தள்ளி சதைநார்கள் பிய்ந்து ரத்தம் பீறிட்டு அடிக்குமாறு சவுக்கால் அடித்தான். ஒவ்வோர் அடி விழும்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல், “வந்தேமாதரம் ஜெயபேரிகை கொட்டடா’ என முழங்கினார். கசையடி முடிந்ததும் அவர் வாய் “ஜயமுண்டு பயமில்லை மனமே’ எனும் பாரதியின் பாடலை முணுமுணுத்தது. இவ்வாறு பெற்ற சுதந்திரம் எதிர்பார்த்த பலனைத் தந்ததா?

1947ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, அரசியல் நிர்ணய சபையில் பேசிய நேரு பெருமானார், “”உலகம் உறங்குகின்ற நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்தது. வாழ்வும் விடுதலையும் பெறுகின்றது” என்றார். அவர் சொன்னவாறு விடுதலை வந்தது; வாழ்வு வராமல் போனதேன்? இன்றைக்கும் நாட்டில் 30 கோடிப் பேர் ஒருவேளை உணவுக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலைதானே உள்ளது! உழவுத்தொழில் செய்தும், தரித்திரம் தீராததால் தற்கொலை செய்துகொண்ட 22 திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரணம் வழங்கத்தானே வேண்டியிருக்கிறது!

“ஏழ்மை மிக்கவரும் இது தங்கள் நாடு என்றும், இதை உருவாக்குவதில் தங்களுக்கும் பங்கும் பொறுப்பும் உண்டு என்றும் உணர்வு கொள்ளும் வகையில் அமையும் இந்திய நாட்டை உருவாக்கவே நான் பாடுபடுவேன்” என மகாத்மா காந்தியடிகள் பிரகடனம் செய்தாரே, அந்த மகான் கண்ட கனவு நனவாகாமல் போனதேன்?

இந்த மண்ணின் மைந்தர்கள் தங்களுக்கு வாழ்வு விடியாததால்தானே, அன்னிய தூதரகங்களுக்கு முன்னர் விடிவதற்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள்! இவற்றுக்குரிய காரணங்களை எண்ணிப் பார்த்தால், இந்தநாள், இனியநாள் ஆகும்!

Posted in Activist, Award, Biography, Biosketch, Dinamani, Freedom, Heroes, Independence, India, Tamil | 1 Comment »

Srilankan Army Attacks Mullai Theevu Orphanage

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இலங்கைப் படை விமானம் குண்டுமழை: 61 அனாதை சிறுமிகள் பலி

முல்லைத்தீவில் உள்ள அனாதை இல்லம் மீது திங்கள்கிழமை இலங்கை படை விமானம் நடத்திய தாக்குதலில் பலியான சிறுமிகள்.

கொழும்பு, ஆக. 15: இலங்கையில் 24 மணி நேரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் 83 பேர் இறந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். முல்லைத் தீவில்: முல்லைத்தீவு மாவட்டத்தின் அனாதை இல்லத்தின் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 61 மாணவிகள் அங்கேயே உடல் சிதறி இறந்தனர், 60 பேர் காயம் அடைந்தனர். திங்கள்கிழமை காலை இக் கொடூரத் தாக்குதல் நடந்தது.

கொழும்பில்: இச் சம்பவம் நடந்த 5 மணி நேரத்துக்கெல்லாம் தலைநகர் கொழும்பில், அதிபர் ராஜபட்சய இல்லத்துக்கு அருகில் கட்டுக்காவல் மிகுந்த வீதியில், ஆட்டோவில் இருந்த கண்ணிவெடி குண்டு வெடித்தது. அப்போது அந்தப் பக்கமாக காரில் சென்ற பாகிஸ்தான் தூதர் பஷீர் வாலி நூலிழையில் உயிர் தப்பினார். அவருக்குப் பின்னால் வந்த வாகனம் வெடித்துச் சிதறியது. அவருக்குக் காவலாக வந்த 4 கமாண்டோ வீரர்களும், சாலையில் அப்போது சென்றவர்களில் 3 பேரும் அங்கேயே இறந்தனர். இலங்கை ராணுவத்தின் 3 மெய்க்காவலர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கைக்கு ஆயுதம் வழங்குகிறது பாகிஸ்தான். இதனால் ஆத்திரம் அடைந்து பாகிஸ்தான் தூதரை குறிவைத்து புலிகள் இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நடந்த லிபர்ட்டி பிளாசா இடத்துக்கு மிக அருகில் அதிபர் மகிந்த ராஜபட்சயவின் மாளிகை உள்ளது. இதே பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கியுள்ளனர்.

கெயிட்ஸ் தீவில்: யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள கெயிட்ஸ் தீவில் அலப்பிட்டி என்ற இடத்தில் புனித பிலிப் மேரி தேவாலயத்தின் மீது பீரங்கியால் சுட்டனர் இலங்கை தரைப்படையினர். ஞாயிற்றுக்கிழமை நடந்த இத் தாக்குதலில் 15 பேர் இறந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்திரம்: தலைநகர் கொழும்பில் கண்ணிவெடி வெடித்த இடத்துக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருந்ததால் காலையில் விளையாட்டுப் பயிற்சிக்கு அவர்கள் வெளியில் செல்லவில்லை. குண்டு வெடித்தபோது அனைவரும் ஹோட்டல்களில்தான் இருந்தனர். பிற்பகலிலும் மழை தொடர்ந்ததால் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இதை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Ceylon, Dinamani, Eelam, Eezham, Fights, LTTE, Mullai Theevu, News, Pakistan, School, Schools, Sri lanka, Srilanka, Tamil, Terrorism | Leave a Comment »

Ceasefire in Mid-East; UN Agreement on Israel

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேலிய சிப்பாய்கள்

போர் நிறுத்தம் வந்தாலும் ஹெஸ்பொல்லாக்களை தேடுவோம் என்கிறார் எகுட் ஒல்மர்ட்

லெபனானில் கிட்டதட்ட ஐந்து வாரங்களாக நடைபெற்ற மோதல்களை போர் நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து இருந்தாலும், லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா கொரில்லா அமைப்பின் தலைவர்களை தாம் தேடிப்பிடிப்போம் என்று இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக போரிடுவது என்ற முடிவானது, தன்னை பாதுகாக்க இஸ்ரேல் கொண்டு இருக்கும் உறுதிப்பாட்டினை காண்பிக்கிறது என தெரிவித்தார்.

இது போர் என்றும் இஸ்ரேல் தனது பொறுப்புகளில் இருந்து விலகி செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு காரணமான, ஹெஸ்பொல்லாவினால் கடத்தி செல்லப்பட்ட தனது இரண்டு வீரர்களை விடுவிக்க தாங்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஒல்மர்ட் கூறினார்.

போர் நடந்த முறை குறித்து விசாரணை நடத்த போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் பேரட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா ஆயுதகுழுவினர் மீண்டும் ஒன்றிணைய இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.


தெற்கு லெபனானை நோக்கி மக்கள் படையெடுப்பு

வீடுதிரும்பும் அகதிகள்
வீடுதிரும்பும் அகதிகள்

இஸ்ரேலிய படைகளுக்கும், ஹெஸ்பொல்லாவிற்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, முன்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தெற்கு லெபனானை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

தங்களது வீடுகளையும் சொத்துகளையும், பார்ப்பதற்காக புறப்பட்டுள்ள மக்களின் கார்களால் பெய்ரூட் மற்றும் சிடானில் இருக்கும் சாலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

சண்டையின் போது கடுமையான மோதல் இடம்பெற்ற பின்ட் சிபாயில் என்ற கிராமத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு அழிவு தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் தமது கார்களின் கூரைகளில் மூட்டை முடிச்சுகள் காணப்படுகின்றன.

சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பல மணி நேரத்திற்கு பின்னர், இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு ஹெஸ்பொல்லாவினரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.


இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்
காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்

லெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராக்கெட்டுகளை ஏவிய தீவிரவாதிகள் தப்பி விட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக, காசாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதினை தடுத்து நிறுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகின்றது.

அத்தோடு காசா எல்லைக்கு அருகாமையில் பிடித்து செல்லப்பட்ட தனது இராணுவ வீரர் ஒருவரையும் விடுவிக்க முயற்சித்து வருகின்றது.

சண்டை நிறுத்தம் ஒன்றினை முன் வைத்துள்ள பாலஸ்தீன தரப்பு, இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை சிலரை விடுவித்தால், இராணுவ வீரரை விடுவிப்பதாக கூறியுள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

Posted in Attacks, Ban, BBC, Blast, Ceasefire, EU, Hezbollah, Human Rights, Israel, Issue, Jordan, Lebanon, Mid-east, Middle East, News, Ohmert, Tamil, UN | Leave a Comment »

Pakistan Ambassador escapes in Sri Lanksn Attack

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

கொழும்பு குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் தூதர் உயிர் தப்பினார்

தாக்குதலுக்குள்ளான வாகனம்
கொழும்பு குண்டு வெடிப்பில் தாக்குதலுக்குள்ளான வாகனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பின் இதயப் பகுதியான கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று பிற்பகல் சுமார் 1.10 மணியளவில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது.

ஆனால் அவருக்கு பாதுகாப்பாக,அவரது வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த ஜீப் வண்டியொன்று கிளேமோர் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த விசேட கொமாண்டோ படை வீரர்கள் நான்கு பேர் உட்பட, சுமார் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி. தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கப்பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, விடுதலைப்புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் படையினர்
சம்பவம் நடந்த இடத்தில் படையினர்

மேலும், இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது அவர்களை இலக்கு வைத்தே இந்தத்தாக்குதல் நடாத்தப்பட்டது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டினார்.

பாகிஸ்தான் அரசு ஒரு நேசமான அண்டை நாடு என்கிற முறையில் இலங்கையின் பாதுகாப்பிற்காக சில உபகரணங்களை வழங்கியது குறித்து விடுதலைப் புலிகள் விரக்தி அடைந்து இது போன்ற தாக்குதலை நடத்தியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தானிய மற்றும் இந்திய அரசுகள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. பாகிஸ்தானின் சுதந்திரதினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Ambassador, Attacks, BBC, Ceylon, Pakistan, Sri lanka, Srilanka, Tamil, Terrorism | Leave a Comment »

Mullai Theevu Attack – 60 Children Dead

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இலங்கை இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று
இலங்கையில் தொடர்ந்து மோதல்

முல்லைத்தீவு தாக்குதலில் 60 க்கும் அதிகமான சிறார்கள் பலி என்கின்றனர் விடுதலைப் புலிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்த 61 மாணவியர் கொல்லப்பட்டதாகவும் 129 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் சிறுவர்கள் மீது தாங்கள் தாக்குதலை நடத்தவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வவ்லிபுனம் என்னுமிடத்தில் உள்ள ஏதிலியச் சிறுவர்களுக்கான இல்லத்தின் வளவினுள்ளேயே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்த நிவாரணம் தொடர்பான முதலுதவி தொடர்பான வதிவிடப் பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் முகாம் மீது தாக்கினோம் என்கிறது இலங்கை அரசு
விடுதலைப் புலிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினோம் என்கிறது இலங்கை அரசு (ஆவணப் படம்)

தலையில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் போதிய வசதிகள் இல்லாதிருப்பதாகவும், இதனால் அவ்வாறானவர்களை தென்பகுதியில் உள்ள வசதிமிக்க மருத்துவ மனைகளுக்கு அனுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரச படைகள் சிறார்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி தாக்குதல் நடந்த இடம் விடுதலைப்புலிகளின் ஒரு பயிற்சி முகாம் என்று இலங்கை அரசாங்கத்தின் இராணுவ விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வன்னிப்பிரதேசத்தில் உள்ள சர்வதேச அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைக்குழு, போர்நிறுத்த கண்காணிப்பு குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன

Posted in Ban, BBC, Ceylon, Eelam, Eezham, Kids, LTTE, Mullai Theevu, Sri lanka, Srilanka, Tamil, Terrorism | Leave a Comment »

Thanga Vettai – American Students are Idiots

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

Being in a foreign country gives you certain rights. Vadivelu exhibited how a person could project himself in ‘Vetri Kodi Kattu’. Here a desi kid from US of A goes on to say that ‘Teachers call us Idiots’.

I am married to a substitute teacher and have seen how the teachers handle the ‘special’ kids with disabilities. Teachers refer it as the ‘I’ word. The person who utters it will be strongly reprimanded. His parents will be summoned to the vice-principal’s office and had to explain, reassure them, that the kid will not repeat it.

If it is a teacher, then it means the end of career for him/her.

The answers used to be dim-witted in Sun Tv’s Thanga Vettai. Now it also hosts the lies and the lying liars who propagate them for no reason.

Hear the snippet:

this is an audio post - click to play

 

Posted in Audio, Desi, English, Idiot, Idiots, Radaan, Radhika, Ramya krishnan, Sun TV, Tamil, Thanga Vettai, USA | 2 Comments »

What the Lazygeek Loves & Hates

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

Long long ago, I read What the Digg Crowd Loves and Hates in Google Blogoscoped.

I wanted to emulate it to one of the premier English bloggers. No… not Kiruba.com.

It is a guy who is on Sabbatical. So, he will not notice : lazygeek.net – weblog of lazy geek

i hate *” site:lazygeek.net – Google Search

What he Hates:

  • bala
  • Sivaji
  • countdowns and numbering stuff
  • consolidations in the industry
  • woshipping humans
  • Indion Idol
  • Starbucks
  • magazines asking Maniratnam’s son
  • such hyped posts before taking a hiatus
  • word processors
  • sneaky wednesday releases
  • comment Modreation
  • being fake
  • Koundamani-Senthil comedy
  • taste buds
  • Honda/Toyota obsession among desis
  • him when one is all praises for him
  • anything that requires constant recharging
  • Appadi podu
  • hindi films
  • nitpick
  • loose the kid in me
  • censors
  • vijay
  • sunday evenings

and What he Loves:

  • LOVE
  • kamal
  • basundhi
  • Reliance.
  • Aathi idhu vaathu kootam
  • Gandhinagar, Adyar, Madras – 20
  • Vellai Pookal
  • rajani.
  • simbhu.
  • Hindu’s Friday Review
  • Indian movies
  • Madras,
  • Silent Film PUSHPAK
  • eating Milk Bikis
  • journalism.
  • gopurams that have lost their paints
  • LOTR
  • Nissans.
  • RKNarayan.
  • “Janani…Janani” song

Posted in Analysis, Blogoscoped, Digg, English, Fun, Google, Hate, Lazygeek, Love, Original, Scientific, Search, Tamil, Unscientific | Leave a Comment »