Sirpi Balasubramaniam – Raja Sir Muthiah Chettiyar Virudhu
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006
கவிஞர் சிற்பிக்கு முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு
சென்னை, ஆக. 2 : கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு 2006-ம் ஆண்டுக்கான ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.
ரூ. ஒரு லட்சம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழும் இதில் அடங்கும்.
சென்னை ராணி சீதை மன்றத்தில் திங்கள்கிழமை (ஆக. 5) நடைபெறும் ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழாவில் நிதி அமைச்சர் க. அன்பழகன் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு நினைவுப் பரிசை வழங்குகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தெ. ஞானசுந்தரம் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவு சொற்பொழிவு ஆற்றுகிறார்.
மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை தலைவர் எம்.ஏஎம்.ஆர். முத்தையா, அறக்கட்டளை செயலாளர் ஆறு. ராமசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் இப் பரிசு வழங்கப்படுகிறது.
2 முறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான இவர் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சிறந்த மொழிபெயர்ப்புக்காக 2001-ம் ஆண்டிலும், சிறந்த படைப்பிலக்கியத்துக்காக 2003-ம் ஆண்டிலும் பெற்ற சாகித்ய அகாதமி விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் இவர்.
rachel said
how do you cross the capital with the message?
sirpi balasubramaniam said
my name also siroi balasubramaniam so i like you very much