IIT Admissions : SC/ST Seats are unfilled
Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006
ஐஐடிக்களில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்கள் பல காலியாக உள்ளன
புதுதில்லி, ஆக 1: மத்திய அரசின் உயர்திறன் கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு முனைந்துள்ளது. ஆனால் ஐஐடிக்களில், ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் பல காலியாகவே உள்ளன.
இத்தகவலை மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சர் எம்.ஏ.ஏ.ஃபாத்மி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஐஐடி நிறுவனங்களின் முதுநிலைப் படிப்புகளில், 15 சத இடங்கள் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு 7.5 சத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2005-06 கல்வியாண்டில், இவற்றில் முறையே 11.91 சதம் மற்றும் 3.95 சத இடங்கள்தான் நிரப்பப்பட்டிருந்தன. மீதி இடங்கள் காலியாகவே இருந்தன.
கடந்த ஆண்டு மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாகவே இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்குப் பல்வேறு சமுதாய, பொருளாதாரக் காரணங்கள் உள்ளன என்றார் அவர்.
ஐஐடி படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு திருத்தி அமைக்கப்பட்ட பிறகு, முதல் முயற்சியிலேயே தேர்வு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கும் மாணவிகளிடம் 50% சதவீதக் கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. மாணவிகளின் தேர்ச்சி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2005-ம் ஆண்டு, 29 ஆயிரம் மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். 2006-ல் இந்த எண்ணிக்கை 59 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு: அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தொழில் நுட்பக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 42 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள 529 தொழில் நுட்பக் கல்லூரிகளில் 42 ஆயிரத்து 277 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 111 இடங்கள் பொறியியல் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கேற்ப, தொழில்நுட்பக் கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.
jamie said
Just searching on google and found your site. It was ranked fairly high on google to. Anyway just looking around to see why.
thanks
jamie
jambomb said
not sure about that…