Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tigers’ Category

April 1 – Mannaar, Viduthalai Puligal, Eelam, SriLanka: Elections, Peace (BBC Tamil)

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008 

இலங்கையில் மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் கடும் மோதல்கள்

இலங்கையின் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடந்துவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து எறிகணைகளை வீசி வருவதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1999இல் அங்கு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், அதனை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், மடுமாதா ஆலய வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி கண்ணிவெடிகளை அவர்கள் புதைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த மோதல்கள் காரணமாக மடுமாதா தேவாலயம் மற்றும் அதனைச் சுற்றிவரவுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே வவுனியா கூமங்குளம் பகுதியில் இரண்டு பொதுமக்கள் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மடு தேவாலயம் – பின்னணித் தகவல்கள்

சுமார் முப்பது வருடமாகத் தொடருகின்ற இலங்கையின் இந்த உள்நாட்டு மோதலில், முதல் தடவையாக, அந்த மடு தேவாலயத்தின் முக்கிய திருச்சொரூபமான கன்னி மரியாளின் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆலயத்தில் இருந்து வியாழனன்று அகற்றப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு பொறுப்பான மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் அமைதி வேண்டி வெள்ளிக்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் அறிவித்துள்ளார்.

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற இந்த வழிபாட்டிடத்தை இராணுவத்தினாலோ அல்லது விடுதலைப்புலிகளாலோ பாதுகாக்க முடியாது போயுள்ளது. இந்நிலையில் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூபத்தை அகற்றுவதற்கான ஆயரின் முடிவானது அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும்.

டச்சுக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேவாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. தம்மை அழிவிலிருந்து காப்பாற்றியது இந்த கன்னிமரியாளின் சொரூபம்தான் என்று அவர்கள் நம்பினார்கள்.

மடு தேவாலயத்தின் வரலாறு மற்றும் தற்போது அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்


புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008

மடு மாதா திருவுருவச்சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது

இலங்கையின் வட பகுதியில் தொடருகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக, அங்கு பிரபலமான மடு மாதா தேவாலயத்தின் முக்கிய திருவுருவச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழுகின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களால் வணங்கப்படுகின்ற இந்த மடு மாதா தேவாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டதாகும்.

மடுவை நோக்கி வீசப்படுகின்ற கடுமையான எறிகணை வீச்சுக்கள் காரணமாக மடு மாதா தேவாலயத்தை அண்டியிருந்த மக்கள் எல்லாம் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தேவாலயம்
 

தேவாலய வளாகத்துக்கு அருகில் பல எறிகணைகள் வந்து வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், இந்த நிலையில் அங்கு இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்த பங்கிற்கான மதகுருமார், தற்போது ஆலயத்தின் முக்கிய திருவுருவச் சிலையையும் அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்வதாகவும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரான இராயப்பு ஜோசப்பு தமிழோசைக்குத் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் இருந்து தேடிவரும் மக்களுக்கு அருள்பாலித்து வந்த மாதா சிலையை அங்கிருந்து அகற்ற நேர்ந்தமை தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆயர் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்தது

மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்
மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களில் 37 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புகளில், 1342 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இலங்கை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 19 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில், 11 உறுப்பினர்களுக்கான போட்டியில், 14 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் 2 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில், 14 அரசியல் கட்சிகளும், 26 சுயேச்சைக்குழுக்களும் அங்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. ஆனால், அவற்றில் 11 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மாத்திரமே அங்கு ஏற்கப்பட்டிருந்தன.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா; கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குகின்றனர்

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் புதனன்று தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் தாம் மூவரும் தலைமை வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு அதன் சார்பில் எதிர்வரும் போட்டியிடப்போவதாகத் அறிவித்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கட்சியின் தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட எடுத்த முடிவினாலேயே தான் அரசுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் பேரவா என்றும் இதனை அடைவதற்கு தான் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.

போட்டியிடப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதனிடையே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதனன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த விருப்பமில்லாத இலங்கை அரசு,, பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு கிழக்கில் திணிக்க முயல்வதாகவும், இதன் ஒருபடியாகவே அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரைக் கையாளாக அரசு வைத்திருப்பதாகவும், இவர்கள் மூலம் பலாத்காரமாகவும் வற்புறுத்தியும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுயல்வதாகவும், கூட்டமைப்பு குற்றம்சாட்டி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மன்னாரின் மடுப் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடு தேவாலயத்துக்கு அருகில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் தொடரும் நிலையில், மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி புதன்கிழமையன்று மன்னார் நகரில் அமைதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், மடுப்பகுதியை சமாதான வலயமாக்க இலங்கை ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் ஒன்றை மன்னார் அரச அதிபரிடம் கையளித்தனர்.

இதே கோரிக்கையை அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைத்தனர். புனித பாப்பரசருக்கும் அங்குள்ள நிலைமைகள் குறித்த தகவல்களை தாம் அனுப்பி வைத்தாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் வில்பத்து சரணாலயப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


Posted in BBC, Eelam, Eezham, Elections, LTTE, Mannaar, Mannar, Peace, Polls, SLMC, Sri lanka, Srilanka, Tigers, TNA, Vote, voters | Leave a Comment »

Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2008

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்துப் பேசினாலும் பிர சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்ற மாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்திலும் வெளியி லும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன் றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புக ளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக ஜெயலலிதா விளங்குகிறார். ஜெயலலிதா வால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாள்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒரு வன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகி றேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிர பாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்.

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா தலை மைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். “”விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட் டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்திய வர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபடவில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

(தின மணி 27-4-2002) கூட்டம் நடந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி. அதற்கு 13 நாள் கள் கழித்து ஏப்ரல் 26-ஆம் தேதி இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்ட் முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத் தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்.

பொடா சிறையில் ஓராண்டு காலம் நாங்கள் இருந்த பிறகு எங்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டு மென்று பொடா நீதிமன்றத்தில் மூன்று முறை நாங்கள் தாக்கல் செய்த மனுக்களை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத் தில் பிணை கேட்டு நாங்கள் மேல்முறையீடு செய்தோம்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வை.கோ. மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர் கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரி மைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப் பட்ட 5 மனுக்கள் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன் றம் விசாரித்தது.
இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “”திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசி யதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆத ரித்துப் பேசியதும் பொடா சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி. மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வ ருமாறு அறிவித்தனர். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப் படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்க மான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து 3-1-2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. “”நமது நாட் டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய் மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட் டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள் செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப் படுத்தியது.” நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங் கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப் பில் பின்வருமாறு கூறினார்கள். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட் டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர் களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரை பிணை யில் விடுதலை செய்கிறோம்” என்று அறிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர் கர் முழுமையாகப் படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதி மன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “”பிர பாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார்.
பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்தப் பேட் டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளி யிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்குப் போட் டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை” என்று அர சுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார்.

“”வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடு மாறன் பேச்சைக் கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடு பட்டனர். கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி யைச் சுட்டிக்காட்ட முடியுமா?” என்றும் நீதியரசர் சிர்புர் கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

“”நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கி றார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண் டும். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல் கருத்துகளைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்ப டுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இது போல் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந் தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்” என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன், பிரி வினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற் றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர் நீதிமன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமு டியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய் வுக் குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாக வும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசார ணையை நடத்தினார்கள். 15.4.2005 அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கள்.
“”13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல் ரீதியா னவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய் யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச் சினைகளுக்காகச் ஜனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமி ழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உல கெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள்.

எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ் நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந் திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கரு தமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ ஊஹஸ்ரீண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்ற வையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அர சுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாக வும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசு வது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவு படுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமல் திரும்பத் திரும்ப தவறான வாதங்களையே முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

பொடா சட்டத்தை முன்தேதியிட்டு, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக் கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற் றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியை யும் பறித்ததுபோல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத் தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்துவிட்டது. பொடா சட் டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும்கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.முக. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க. ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய் வுக் குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த
… (Sunday Dinamani)
——————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்க முயல்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன் பதில்

சென்னை, மார்ச் 17: பொடா வழக்குகள் தொடர்பாக, நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னுடைய கட்டுரையில் பொடா சட்டத்தில் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாகக் கூறியிருந்தேன். இறுதியாக, முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், “42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதி 21 பேர் தானா என்பதை அவரது கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் ஆழமாக அலசிப் பார்க்காமல் நுனிப்புல் மேயும் கலை அவருக்கே உரியது.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்று விட முடியாது. வழக்குகளை திரும்பப் பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று முதல்வர் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி, அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்தது.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது. எனவே, திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செய்ய திமுக அரசு முன்வரவில்லை.

முன்தேதியிட்டு, பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். மத்திய அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதற்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொண்டது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதைச் செய்யவில்லை என்பதுதான் என் கேள்வி.

உண்மைகளை தெரிந்து இருந்தும் அவற்றை மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் அல்லது நிர்வாகம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆத்திரப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது.

Posted in Arrest, Bail, BJP, Bonds, Congress, Correctional, Criminal, Eelam, Eezham, expression, Freedom, Gopal, Imprison, Independence, Inquiry, Jail, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Law, Liberation, LTTE, MDMK, Misa, MuKa, Nakkeeran, Nakkiran, Nedumaran, Order, POTA, Prison, Sri lanka, Srilanka, TADA, Tigers, VaiGo, VaiKo, Veerappan | 2 Comments »

LTTE & credit card fraud: Tiger links in India & stolen numbers in London

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

‘விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவிழந்து வருகிறது’

கொழும்பு, பிப். 3: இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவிழந்து வருகிறது.

இலங்கை பத்திரிகை ஒன்றில் இதுபற்றி செய்தி வெளியாகி யுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ள 17,000 பேர் போரில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள்தான், போரில் பழக்கமானவர்கள்.

அவர்களது கடற்படையில் 1500 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களின் வருகையும் குறைந்துவிட்டது.
எனவே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வெடிகுண்டுகளையும் ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் வன்னி பகுதிக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற விடுதலைப் புலிகளின் 7 கப்பல்களை இலங்கை கடற்படை தாக்கி மூழ்கடித்தது. இதில் 80,000 டன் வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் அழிந்தன.

இதனால் புலிகளுக்கு ஆயுதத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை தாக்குதலில் விடுதலைப் புலிக ளுக்குச் சொந்தமான 3 விமானங்கள் அழிந்தன. புலிகள் படையில் 25 தளபதிகள் கொல்லப்பட்டனர். தற்போது விடுத லைப் புலிகள், அரசு ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பத்திரி கையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு விடுதலைப் புலிகள் தங் களது ராணுவ பலத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அந்த இயக்கத்தின் ஆதரவாளர் களில் ஒருவரான கே. பாலகுமாரன், தமிழீழ டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள் ளார்.
——————————————————————————————————————————————

பிரிட்டன் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகள் விவரத்தை புலிகள் திருடினார்களா?

லண்டன், பிப். 3: கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரையும், அவர்களது கூட்டாளிகள் இருவரையும் கடந்த மாதம் 31-ம் தேதி அந்நாட்டு போலீஸôர் கைது செய்தனர்.

கிருபாகரன் செல்வநாயகம் பிள்ளை, சேதுகாவலர் சரவணபவன், பிரதீபன் தம்பு, ஸ்ரீநாதன் ஆகியோரிடமிருந்து ஏராளான பரிசுப் பொருள்கள், கம்ப்யூட்டர் பாகங்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அந்த லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்த்த போது அதில் ஏராளமான கிரெடிட் கார்டுகள் விபரமும், அவை அனைத்தும் பிரிட்டன் வாடிக்கையாளர்களை பற்றியது என்பதும் தெரியவந்தது.

இதனால் தங்களது நிதித் தேவைக்காக அந்த கிரெடிட் கார்டுகளின் விவரத்தை அவர்கள் திருடியிருக்கலாம் என்று கனடா போலீஸôர் சந்தேகித்துள்ளார். அந்த அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Posted in Credit card, credit cards, Eelam, Eezham, Finance, fraud, India, London, LTTE, Scams, Sri lanka, Srilanka, Tigers | Leave a Comment »

Lankan jets bomb LTTE naval headquarters, 20 killed: military; LTTE refutes Air Force claims of air strike on Tiger leadership

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2008

கடற்புலி தலைமை அலுவலக தளம் மீது தாக்குதல் – இலங்கை பாதுகாப்பு அமைச்சு – விடுதலைப் புலிகள் மறுப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கைவேலி என்னுமிடத்திற்கு 800 மீட்டர் தெற்காக அமைந்திருக்கும் கடற்புலித் தலைமை அலுவலகத் தளத்தின் மீது சனிக்கிழமை பிற்பகல் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

தாக்குதல் நடைபெற்ற வேளை, கடற்புலிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றதை உறுதிப்படுத்தியிருக்கும் விடுதலைப் புலிகள் கைவேலி பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும், புதுக்குடியிருப்பில் உள்ள வெண்புறா நிறுவனத்தின் மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் உள்ள கிரிகெட்டுவௌ கிராமத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட 16 சடலங்களும் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரூபவாஹினி ஊடகவியலாளருக்கு கத்திக் குத்து

குத்தப்பட்ட ஊடகவியலாளர்
குத்தப்பட்ட ஊடகவியலாளர்

இலங்கை ரூபவாஹினி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு அடையாளந்தெரியாத நபர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

லால் ஹேமந்த மாவலகே என்ற அப்பத்திரிகையாளர் தான் காரில் சென்று கொண்டிருக்கையில் காரை நிறுத்தி இரண்டு பேர் கத்தியால் குத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி ரூபவாஹினி ஊழியர்கள் அமைச்சர் மர்வின் சில்வாவுக்கு எதிராக நடத்தியப் போராட்டத்தில் மாவலகே முக்கியப் பங்காற்றியிருந்தார் என்று கூறப்படுகிறது .

கத்திக் குத்துக் காயங்களுக்காக இன்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் பிபிசி செய்தியாளரிடம் பேசிய மாவலகே, தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறினார்.

இந்தக் காயங்கள் காரணமாக மாவலகேவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.


Posted in Air Force, Eelam, Eezham, LTTE, Military, Roopavahini, Roopawahini, Rupavahini, Rupawahini, SLAF, Sri lanka, Srilanka, Tiger, Tigers | Leave a Comment »

Batticaloa local polls & Pit of bodies discovered in the government-controlled Anuradhapura district

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

கர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.

இந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.

பிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

போலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

தனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.

கருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.

கருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

எட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

காயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.


கெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை

இலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Posted in Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrests, Batticaloa, Eelam, Eezham, Elections, England, Jail, Karuna, Kilinochi, Law, London, LTTE, murders, Nominations, Order, Passport, Polls, Sri lanka, Srilanka, Tigers, UK, Visa, War | Leave a Comment »

Jan 11 – LTTE, Eezham, Sri Lanka News and Updates from BBC

Posted by Snapjudge மேல் ஜனவரி 12, 2008

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது

முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரிடையே போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது

இலங்கை அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இருதரப்பாலும் பல தடவைகள் மீறப்பட்ட இந்த 2002ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அரசாங்கம் ஏற்கனவே முறையாக அறிவித்துவிட்டது.

விடுதலைப்புலிகளின் இந்த கோரிக்கை ஒன்றுமே இல்லாதது என்றும் மிகவும் காலம் தாழ்த்தியது என்றும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கையின் தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய குண்டு ஒன்று வெடித்ததில், குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.


ஜப்பான் விசேட சமாதானத் தூதுவர் கொழும்பு விரைகிறார்

யாசூஷி அகாஷி
ஜப்பான் விசேட தூதர் அகாஷி

நோர்வே அனுசரணையுடன் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆண்டில் செய்து கொண்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு கடந்த வாரம் வெளியேறியுள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த முயற்சிகளை வலுவாக ஆதரித்து வந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யாசூஷி அகாஷி அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு செல்லவிருக்கிறார்.

இது குறித்து இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை வரவிருக்கும் அகாஷி அவர்கள், சமாதான முயற்சிகள் குறித்த இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும், அதனது எதிர்காலம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

இவரது பயணம் குறித்து டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மசஹிகோ கொமுரோ அவர்கள், போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியிருக்கும் முடிவு, அங்குள்ள மோதலை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்று ஜப்பான் கவலைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

அகாஷி அவர்கள் தமது இலங்கை பயணத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்திக்க இருப்பதாகவும், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.


முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளம் மீது விமானப்படை குண்டுவிச்சு

வவுனியாவிலிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்லத் தயாராகும் படையினர்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளமொன்றினைத் தாம் குண்டுவீசித் தாக்கி அழித்திருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், விமானப்படையின் தரைக்குண்டுவீச்சு விமானங்கள் அலம்பில் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளமொன்றினைக் குண்டுவீசித் தாக்கியதாகவும், விமானிகளின் தகவல்களின்படி இந்தக் கடற்புலிகளின் முகாம் முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இது குறித்து விடுதலைப்புலிகள் எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, மன்னார் உயிலங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கும் முன்னேற முயற்சித்துவரும் அரச படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்த மோதலின் போது அரச படைத்தரப்பினருக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினூடாக புலிகளிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை இந்த மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள புலிகள் ஆதரவு இணைய தளங்கள், மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் மற்றும் பாலமோட்டை போன்ற பகுதிகளினூடாக செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சித்த படையினரை புலிகளின் தாக்குதல் படையணிகள் வழிமறித்துக் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இதனால் படையினர் தமது முயற்சிகளைக் கைவிட்டு பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளிற்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.

அத்துடன் பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களின்போது ஒரு படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலின் போது புலிகள் தரப்பில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் இந்த இணையதளங்கள் தெரிவித்திருக்கின்றன.


Posted in BBC, Colombo, Eelam, Eezham, Japan, LTTE, Manaaar, Manaar, Mannar, Peace, Sri lanka, Tigers, Updates, War | Leave a Comment »

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »

Sri Lanka to ban Tamil Tigers, abrogate CFA, says Gotabhaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.

ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

 


கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து

இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 


மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.

அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Posted in Agreement, Blasts, Bombs, Ceasefire, Ceylon, CFA, Colombo, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezham, EPRLF, EROS, Fight, Gotabaya, Gotabhaya, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Magesvaran, Mageswaran, Mahesvaran, Maheswaran, Murder, Parliamentary Tamil United Liberation Front, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, PLOTE, Rajapaksa, Rajapakse, Sri lanka, Srilanka, Tamil, Tamil Eelam Liberation Organisation, TELO, Temple, Thimpu, Tigers, TULF, War | Leave a Comment »

Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

Maaveerar Day – LTTE: Happy Birthday Prabhakaran & Heroes’ Day

விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி

புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி

கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்
கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.


Posted in Air Force, Airforce, Arms, Attack, Bombs, Communications, dead, Eelam, Eezham, infrastructure, Kilinochi, Kosovo, LTTE, Military, mines, montenegró, Norway, Peace, Prabaharan, Prabakaran, Prabakharan, Radio, Sri lanka, Srilanka, Tigers, Timor, War, Weapons, World | Leave a Comment »

More clashes in Sri Lanka – fighting kills 24 in north

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தின் குறிசுட்டகுளம், தம்பனை, விளாத்திக்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் நாவற்குளம் போன்ற இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற நேரடிச் சண்டை மற்றும் எறிகணை வீச்சு மோதல்களிலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள், சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 43 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 51 பேர் காணாமல் போயிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஐ நா மன்றத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

Posted in Attacks, BBC, dead, Districts, Government, Govt, LTTE, Mannar, Peace, Rebels, Soldiers, Sri lanka, Srilanka, Thamilselvan, Tigers, Vavuniya, Vidudhalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »