Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Serials’ Category

Mrs Homemaker & Mugavari – Jeya TV & Makkal Tholaikkatchi: Serials, Programmes

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

மிஸஸ் ஹோம் மேக்கர்

ஜெயா டி.வி.யில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் சுவாரஸ்யமான “மிஸஸ் ஹோம் மேக்கர்’ நிகழ்ச்சி வரும் நவ.23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

இல்லத்தரசிகள் பங்கேற்கும் இந்த சமையல் நிகழ்ச்சியில் கேஸ் அடுப்பு, நவீன சமையல் பாத்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

மாறாக, நம் பாரம்பரிய உடையணிந்து கிராமியச் சூழலில் விறகு அடுப்பு மூட்டி அறுசுவை உணவுகளைத் தயாரிக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த போட்டிகளும் படைப்பாற்றலைப் பரிசோதிக்கும் போட்டிகளும் இடம்பெறுகின்றன.

இல்லத்தரசிகளைக் குதூகலப்படுத்த வரும் இந்நிகழ்ச்சி, நவ.23 முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறு ஒளிபரப்பு சனிக்கிழமை காலை 11 மணி.

————————————————————————————————————————————–
முகவரி

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “முகவரி’ நிகழ்ச்சி நேயர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் சிறு வணிகர்களும் சிறு விளம்பரதாரர்களும் குறு விளம்பரம் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திக்கொள்ள முடிகிறது.

நேயர்களைத் தொலைக்காட்சி வாயிலாகவே கடைவீதிக்கு அழைத்துச் சென்று சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது.

மேலும் இந்நிகழ்ச்சி, பல வணிக நிறுவனங்களின் முகவரிகளையும் பயனுள்ள இலவச இணைப்புகள் பற்றியும் நுகர்வோர் அறிந்துகொள்ள ஒரு பாலமாக இருக்கிறது. திவ்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Posted in Jaya, Jeya, Makkal, Media, Mugavari, Mukavari, Programmes, Serials, Tholaikkatchi, TV | Leave a Comment »

Makkal TV – Advertisement costs, Special Programmes: Info

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

Makkal TV Logo

makkal TV Programming Offerings Telecast

Makkal TV Ad Rates Tariff Product Promotions

Posted in Ads, Advertisement, Advertisements, Advt, Anbumani, Info, Makkal, Media, PMK, Product, Programmes, Promotions, Ramadas, Ramadoss, Rates, Serials, Tariffs, TV, Viewers, Viewrs | Leave a Comment »

The importance of Karunanidhi’s time in Kalainjar TV – Dinamani op-ed

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2007

நியாயமான கவலை

கடந்த ஒரு மாத காலமாக முதல்வரின் கவனமெல்லாம் அவரது குடும்பத்தினர் தொடங்க இருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில்தான் இருக்கிறது என்றும், அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அவருடன் விவாதிக்கப்பட்டுத்தான் முடிவாகின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மக்கள் பிரச்னைகள் மலைபோலக் குவிந்திருக்கும்போது ஒரு மாநில முதல்வர் இதுபோன்ற விஷயங்களில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம்தானா என்றுகூடக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழுக்கும் தமிழனுக்கும் பெரிய அளவில் உதவவில்லை என்பதில் யாருக்குமே இரண்டு கருத்து இருக்க முடியாது. தமிழ் கலந்த ஆங்கிலத்தில் உரையாடும் வழக்கத்துக்கு அச்சாரம் போட்ட பெருமை, தொலைக்காட்சிகளுக்கு நிச்சயமாக உண்டு. அவரது உறவினர்களின் தொலைக்காட்சி நடத்தப்படும் விதத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது, அவர்களது வியாபார விஷயங்களில் தான் தலையிடுவது இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் முதல்வர்.

இப்போது அவரது குடும்பத்தினரே தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்க இருக்கின்றனர். அதுவும் அவரை முன்னிலைப்படுத்திக் கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்குகிறார்கள். இந்தத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ஜுர வேகத்தில் உயர்ந்துகொண்டு வருகிறது. போதாக்குறைக்கு, முதல்வரின உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கலைஞர் தொலைக்காட்சியை வரவேற்று மூலைக்கு மூலை டிஜிட்டல் பேனர்களை வைத்து மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி வருகிறார்கள்.

சங்கத் தமிழையும், தொல்காப்பியத்தையும் சராசரித் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி, அவனது இலக்கிய ரசனையை அதிகப்படுத்தியவர் என்பதால், கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பது இலக்கியவாதிகளின் எதிர்பார்ப்பு. திரையுலகுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதால், திரையுலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகம் இருக்க வேண்டும் என்று அந்தத் துறையினர் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அடிப்படையில் அரசியல்வாதி என்பதாலும், திமுக என்கிற கட்சியின் தலைவர் என்பதாலும், அவரது பெயரில் தொடங்கப்படும் தொலைக்காட்சி, கட்சியின் கொள்கையைப் பரப்பும் விதத்தில் அமைய வேண்டும் என்பதுதான் உடன்பிறப்புகளின் எண்ணமாக இருக்கும்.

அதிமுகவின் ஜெயா தொலைக்காட்சியைப் பின்பற்றி முதல்வர் கருணாநிதியை முன்னிலைப்படுத்தும் கட்சி ரீதியான தொலைக்காட்சியாக கலைஞர் தொலைக்காட்சி இருக்குமா, வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா, இல்லை தமிழுக்கும் தமிழனின் பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்த நிலைமையில், தனது பெயரில் தனது குடும்பத்தினரே தொடங்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி நினைப்பதிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே விவாதித்துத் தேர்ந்தெடுப்பதிலும் தவறு காண முடியாது.

கலைஞர் தொலைக்காட்சி ஒரு தரமான, அதே சமயம் ஜனரஞ்சகமான தொலைக்காட்சி அலைவரிசையாக அமைவது என்பது முதல்வர் கருணாநிதியின் கெüரவப் பிரச்னை. அதனால், அவரது கவலையில் நியாயமிருக்கிறது.

Posted in Actors, Actress, Channels, Cinema, CM, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhayaalu Ammaal, Dhayalu Ammal, Dhayanidhi, Dhinakaran, DMK, Films, Jaya, Jeya, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maran, Media, Movies, MSM, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Murasoli, Murasoli Maran, Party, Politics, Propaganda, Serials, Sun, Tamil, Thayanidhi, Thayanithi, Thayanithy, TV | Leave a Comment »

Makkal Tholaikkatchi in Second Year – ‘No compromise TV’: PMK’s Ramadoss

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 2, 2007

2-ம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள்; இதில் சமரசம் இல்லை: ராமதாஸ்

சென்னை, செப். 2: மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். வர்த்தக காரணங்களுக்காக தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் வரும் 6-ம் தேதி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி ராமதாஸ் கூறியதாவது: தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி என்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் தொலைக்காட்சி.

தமிழ் மொழியையும் தமிழ் சமுதாய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படம் அல்லாத அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன. மக்கள் தொலைக்காட்சி வெற்றிக்கு பாடுபட்டவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள்.

மத்திய அமைச்சர்கள் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

வீரப்பன் தொடர்: இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சந்தனக்காடு என்ற தொடர் ஒளிபரப்பாகும். மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் “வெங்காயம்’ வித்தியாசமான இசை நிகழ்ச்சியாக “ஏலேலங்கடி… ஏலேலோ.’ வணிகர்களுக்கான முகவரி, தமிழ் சமூகத்தின் சமையலை அறிமுகப்படுத்தும் “கைமணம்’ இப்படி 18 புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

திரைப்படங்கள்: தரமான திரைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விளம்பரங்களை ஒளிபரப்புவதில் எங்களுக்கு என்று சில நெறிகளை ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி “கோக்’ “பெப்சி’ போன்ற வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களை கூட ஒளிபரப்ப மாட்டோம்.

தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளோம். இதுபோல் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.

——————————————————————————————
தமிழ் மொழி மூலம் டி.வி. சேனல் வெற்றி பெற முடியும்

சென்னை, செப். 7: ஆங்கிலக் கலப்பின்றி தமிழ் மொழி மூலம் நடத்தப்படும் தொலைக்காட்சியும் வெற்றி பெற முடியும் என்பதை மக் கள் தொலைக்காட்சி நிரூபித்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை காமராஜர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மக் கள் தொலைக்காட்சியின் இரண் டாம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் பேசியது: ஒரு காலத்தில் ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் நாம் இருந் தோம். ஆனால் இன்று ஆங்கில மொழி கலப்பின்றி தமிழ் பேச முடி யுமா என்ற சூழல் எழுந்து, இது ஆங்கிலத்தை எதிர்க்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
இயல்பு தமிழில் பேச்சு மொழி யில் தொலைக்காட்சி நிகழ்ச்சி களை மட்டுமே நடத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கப் பட்டது மக்கள் தொலைக்காட்சி.

இது வணிக ரீதியில் வெற்றி பெறுமா? என்பது ஆதரவாளர்க ளின் ஏக்கம். வெற்றி பெறாது என் பது போட்டியாளர்களின் கருத்து.
ஆனால் இன்று வணிக ரீதியிலும் வெற்றி பெற முடியும் என்பது நிரூ பிக்கப்பட்டுள்ளது.

சினிமாத் தனம் இல்லாமல், மெகா டி.வி. தொடர் நிகழ்ச்சிகள் இல்லாமல் தொலைக்காட்சி நடத்த முடியும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தற்போது உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எவ்வித ஆபாசமும் இன்றி வெளி யாகும் ஒரே சேனல் மக்கள் தொலைக்காட்சி என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. அரைகுறை, ஆபாச விளம்பரங்கள் தவிர்க்கப்படுகின் றன. பன்னாட்டு நிறுவனங்களான கோக், பெப்சி விளம்பரங்களை ஏற் பதில்லை. அதேசமயம் உள்ளூர் பானங்களின் விளம்பரங்களை ஏற் கிறோம்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்தி ரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் இப்போது தமிழ் மொழிக்காக நடத்தப்படும் இந்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்ப தோடு, தங்களது குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். விரைவிலேயே மலே சியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுக ளில் வாழும் தமிழ் மக்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வகை செய்யப்பட்டு வருகி றது.

விளம்பரங்களை வெளியிடுவ தில் நாங்கள் மேற்கொண்ட நடவ டிக்கைகள் இதை நெறிப்படுத்து கின்றன. ஆபாச விளம்பரம் வேண் டாம், மதம், சாதி சார்ந்த பூசல்க ளைத் தூண்டும் நிகழ்ச்சிகள் வேண்டாம், அறிவியல் ரீதியில் நிரூ பிக்கப்படாத மருத்துவ நிகழ்ச்சி களை ஒளிபரப்பக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்து அதன் படி செயலாற்றுகிறோம். இந்த கொள்கைகளிலிருந்து ஒரு போதும் நாங்கள் மாற மாட் டோம், தொடர்ந்து வெற்றி பெறு வோம் என்றார் ராமதாஸ்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்களிடையே பொது அறிவை வளர்க்க, விழிப்பு ணர்வை ஏற்படுத்த உதவும் ஒரு ஊடகமாக டி.வி. விளங்குகிறது.
திமுக அரசு பொறுப்பேற்றதும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி இதுவரை 16,36,853 டி.விக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் மேலும் 30 லட் சம் டிவிக்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள் ளது. கடந்த 20 ஆண்டுகளில் டி.வி.
வியத்தகு வளர்ச்சியைப் பெற்றுள் ளது.
சமுதாயத்துக்கு பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை அளிக்கும், வழிகாட் டும் மக்கள் தொலைக்காட்சியின் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்து கள் என்றார்.

விழாவில் “அழகின் சிரிப்பு’ என்ற குறுந்தகடை மத்திய அமைச்சர் அன்புமணி வெளி யிட அதை விடுதலை சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலர் தொல் திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி யின் மாநிலத் தலைவர் எம்.
கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொலைக்காட்சியின் 2-ம் ஆண்டு விழாவில்
“அழகின் சிரிப்பு’ என்ற சி.டியை மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வெளியிட, அதை
பெறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன். உடன்
(இடமிருந்து) பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி, மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ்,
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய
நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்.

Posted in Anbumani, Makkal, Media, PMK, Ramadas, Ramadoss, Serials, TV | 6 Comments »

Raj TV’s new Serials – Mega Soaps

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ராஜ் டி.வி.யின் புதிய தொடர்கள்

ராஜ் டி.வி.யில் வித்தியாசமான கதையமைப்புடன் கூடிய நான்கு புதிய தொடர்கள் மே 7-ம் தேதி முதல் ஒளிபரப்பாகின்றன. அவற்றின் விவரம்:

மஹாநதி: அபிதா, சந்தோஷி இளவரசன், வசந்த் ஆகியோர் நடித்துள்ள இத்தொடரை சபாபதி தெட்சணாமூர்த்தி இயக்குகிறார். ஒளிபரப்பு நேரம் -இரவு 8 மணி.

மீனாட்சி: தாரிகா, டெல்லிகுமார், மீராகிருஷ்ணன், மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடரை இயக்குபவர் சி.பி.சண்முகம். ஒளிபரப்பு நேரம் -இரவு 8.30 மணி.

ஆறு மனமே ஆறு: சீதா, தீபன் சக்கரவர்த்தி, பிருந்தாதாஸ், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடரை இயக்குபவர் கே.ரஞ்சித்குமார். ஒளிபரப்பு நேரம் -இரவு 9 மணி.

கெüரவம்: வடிவுக்கரசி, கன்யாபாரதி, ராஜ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடரை இயக்குபவர் அர்.வீ.ரமேஷ்ராஜ். ஒளிபரப்பு நேரம் -இரவு 9.30 மணி.

இத்தொடர்களைக் கண்டு மகிழ்வதோடு மட்டுமல்லாமல், சிறந்த முறையில் விமர்சனம் செய்யும் நேயர்களுக்குப் பரிசுகளும் காத்திருக்கின்றன என ராஜ் டி.வி. நிறுவனம் அறிவித்துள்ளது.

Posted in Abitha, Deeban Chakkaravarthy, Deepan, Monica, Programme, Raj TV, Seetha, Serials, Television, Tharika, TV, Vadivukkarasi | 1 Comment »

TV Serial Actress stories – Rumor mill gossips from Kumudam Reporter

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

21.01.07  கவர் ஸ்டோரி

‘‘கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று, கிழக்கு கடற்கரைச் சாலையில் எங்கள் டீம் ரெய்டு நடத்தியது. அப்போது அங்குள்ள காட்டேஜ்களில் அரைகுறை ஆடைகளுடன் மதுக் கோப்பையும் கையுமாக இருந்த பல இளம் பெண்கள் சிக்கினார்கள். அதில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள், சின்னத்திரை நடிகைகளாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றிய எங்கள் டீம், கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த வேன் கமிஷனர் அலுவலகம் வருவதற்குள், மத்திய அமைச்சரின் பி.ஏ. முதல் லோக்கல் மாவட்டச் செயலாளர் வரை பல தரப்பினரும் இந்தச் சின்னத்திரை நடிகைகள் மீது புகார் எதுவும் பதியாமல் விட்டுவிடும்படி போனில் வற்புறுத்தினார்கள். பிடிபட்ட ஒவ்வொரு நடிகைக்கும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் பிரபலம் வக்காலத்து வாங்கிப் பேசியதில், எங்கள் மேலதிகாரிகளே மிரண்டு போய், அந்த நடிகைகளை அனுப்பிவிடச் சொல்லிவிட்டார்கள்! அத்தனை ஏன்? ஒரு நடிகையின் சார்பாக சென்னை நகர இணை கமிஷனர் ஒருவரே பேசினார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார் நம்மிடம் பேசிய விபசாரத் தடுப்புப் பிரிவு அதிகாரியருவர்.

ஆச்சரியத்துடன் அதைக் கேட்டுக் கொண்ட நாம், அதிகாரி சொன்ன தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சின்னத்திரை வட்டாரத்திற்குள் புகுந்து ஒரு ரவுண்ட் அடித்தோம். அங்குள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்ன தகவல்களைக் கேட்டு, நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

சின்னத்திரையில் பல காலமாக ஒளிப்பதிவாளராக இருக்கும் ஒருவர், ‘‘டி.வி.யில் நடிப்பதற்கென்று வரும் பெண்கள் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அதே சமயம், இவர்கள் அடிப்படையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், பணத்தைக் காட்டி அவர்களை ஏமாற்ற முடியாது. என்றாலும், எங்களைப் போன்ற சீஃப் டெக்னீஷியன்களில் சிலர் செய்யும் சில்மிஷங்களை, அவர்களால் தடுக்கவும் முடியாது!’’ என்று பேச ஆரம்பித்தார்.

‘‘புதுமுகப் பெண்களை நாங்கள் மடக்கும் பாணியே அலாதியானது. அந்தப் பெண்ணை எந்தக் கோணத்தில் எடுத்தால் அழகாக இருக்குமோ, அந்தக் கோணத்தில் எடுக்காமல் ஒட்டுமொத்த யூனிட்டையே அப்செட்டில் ஆழ்த்திவிடுவோம். இந்தப் பெண் தேறாது என்ற பேச்சை உருவாக்கி விட்டு பிரேக் விடுவோம். அந்த நேரத்தில் மேக்கப் ரூம் போயிருக்கும் அந்தப் பெண்ணிடம் எங்களின் உதவியாளர் போய், ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டால் அழகாகப் படம் பிடிப்போம்’ என்பார். அந்தப் பெண் அதைப் புரிந்துகொண்டு சம்மதித்து விடுவார். இது பொதுவான யுக்திதான்’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நம்மை அதிரவைத்தார் அவர்.

பிரபலமான சின்னத்திரை இயக்குநர் ஒருவரிடம் பேசிய போது, ‘‘ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் தொழில் ரீதியாக மட்டுமே பேசிவிட்டு, ரிலாக்ஸாக இருக்கும்போது, ‘இன்று ஒரு பார்ட்டி இருக்கிறது. வருகிறாயா?’ என்று கேட்போம். பெரும்பாலான பெண்கள் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு கம்பெனி கொடுப்பது வழக்கம். புரியாமல் முரண்டு பிடிக்கும் பெண்களின் கேரக்டரை தொடரில் மட்டுமின்றி, நிஜத்திலும் டேமேஜ் பண்ணி டம்மி ஆக்கிவிடுவோம்!’’ என்று அலட்டாமல் சொன்னார்.

ராஜ உபசாரம், கை நிறையச் சம்பளம், அபரிமிதமான விளம்பரம் என்று சகல விதத்திலும் போதையூட்டும் ஒரு மீடியா சின்னத்திரை. அதில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் கொஞ்சம் தடம் மாறித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

‘‘ஒரு தொடரில் கண்ணியமான கணவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஒரு நடிகர். அது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதெல்லாம், ஒரு பெண் அவர் மொபைலில் தொடர்ந்து பேசுவார். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் அவரை நேரில் சந்திக்க விரும்பி, தன் வீட்டிற்கு வரச் சொன்னார். அவரும் கொஞ்சம் தயக்கத்துடன் அங்கு போனார். போன இடத்தில் அந்தப் பெண்ணின் பின்னணியைத் தெரிந்து பரிதாபப்பட ஆரம்பித்தார். கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு, கணவரால் சுகம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அவரைக் கட்டிப் பிடித்து அழுத அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். பிறகு, அவரே அந்தப் பெண்ணுக்குக் கள்ளப் புருஷன் ஆகிவிட்டார்!’’ என்றவர், ‘‘அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், மேலும் சிலருக்கும் அவர்தான் இப்போது சுந்தர புருஷன்’’ என்று தனது இயக்கத்தில் நடித்து வரும் ஒரு நடிகரைப் பற்றிய பின்னணியை விளக்கினார் ஓர் இயக்குநர்.

சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘‘இப்போதெல்லாம் டி.வி.க்கு வந்திருப்பவர்கள் நடிக்கத் தெரிந்தவர்களாக மட்டுமல்ல, வாழவும் தெரிந்தவர்களாக _ வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.

‘‘ஒரு டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஜோடி’களின் ஆட்டத் தொடரைப் பார்த்தீர்களா? அதில் ஜோடிகள் இஷ்டத்துக்கு மாறி மாறி ஆடிவிட்டு இஷ்டத்துக்கு முத்தம் கொடுப்பதையும் பார்த்தீர்களா? அந்த ஜோடிகள் ரிகர்சல் என்ற பெயரில் நடத்திய கூத்துக்களையும், சில்மிஷங்களையும் கூட படம் பிடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால் அந்த ஜோடிகளே அவமானத்தில் கூனிக் குறுகிப் போவார்கள். இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டானதால், இதன் தொடர்ச்சியாக வேறொரு பெயரில் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட, அதில் பல காட்சிகள் இடம் பெறப் போவதாகச் சொல்கிறார்கள். இந்த ரிகர்சலில் இன்னும் என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றக் காத்திருக்கிறார்களோ? தாங்கள் செய்வது இன்னதென்றே தெரியாமல் செய்யும் அவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை!’’ என்றார் வேதனையுடன்.

ஆளாளுக்கு இப்படிச் சொன்னாலும் ‘வாய்ப்பு பறிபோனாலும் பரவாயில்லை. உங்கள் இஷ்டத்திற்கு நான் உட்பட மாட்டேன்’ என்று அடம் பிடிக்கும் நடிகைகளும் சின்னத் திரையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பல வெற்றித்தொடர்களை இயக்கிய ஒருவர், தனது தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகையும் தனது இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பாராம். அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண்களுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுப்பாராம். ஃபீல்டில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இவரின் கேரக்டர் தெரியும். இந்த நிலையில், இவருடைய புதிய தொடரில், பெரிய திரையில் அறிமுகமாகிப் பிரபலமான, வாசமுள்ள பெயர் கொண்ட நடிகை அறிமுகமானார். அந்த நடிகையையும் இந்த இயக்குநர் வழக்கம்போல மடக்கிப்போட முயல… நடிகை மறுப்புச் சொன்னதோடு, ‘முடிந்தால் தொடரில் இருந்து என்னைத் தூக்கி விடுங்கள்’ என்றும் கூலாகச் சொல்லிவிட்டார். இதில் இயக்குநருக்கு ஷாக்தான்.

இவரை மாதிரியே இந்தத் துறையில் பலரும் இருப்பதாகத் தெரிவித்த ஒரு நடிகை, ‘‘டி.வி.யில் நடிப்பவளை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்ல, அரசியல் பிரபலங்கள் அழைப்பதும் சகஜம். தமிழக அரசியல் வி.ஐ.பி. ஒருவர் கடந்த சில வருடங்களாக வாரந்தோறும் சின்னத்திரை நடிகைகளுக்கெனவே ஒரு காக்டெயில் பார்ட்டி வைப்பது வாடிக்கை. அவருடைய பொருளாதார உதவியுடன் பல தொடர்கள் இங்கு தயாராகி வருவதால், கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் அவர் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம். பார்ட்டிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

அதுபோல், இன்னொரு அரசியல் வி.ஐ.பி., மாதமொரு முறை டிஸ்கொதே நடத்துவது வழக்கம். அதில் கலந்து கொள்ள பல தொழிலதிபர்கள் வருவதால் நாங்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வோம். அந்த பார்ட்டி முடிந்து திரும்பும்போது ஒவ்வொரு நடிகைக்கும் இரண்டு, மூன்று பவுன் தங்கச்சங்கிலி பரிசாகக் கிடைக்கும்’’ என்று பல விஷயங்களைச் சொல்லிவிட்டு, ‘‘இது போன்ற பெரிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏன் இழக்கவேண்டும்? அது மட்டுமின்றி இப்படி ஃப்ரீயாகப் போய் வருவதன் மூலம் தான் எக்கச்சக்கமான வாய்ப்பும் கிடைக்கிறது. அதை ஏன் இழக்க வேண்டும்’’ என்று யதார்த்த நிலையை விளக்கினார் அந்த நடிகை.

‘‘மாடலிங் பெண்களைப் போல எங்களுக்கும் சில நட்சத்திர ஓட்டல்களில் பீர் மற்றும் சிற்றுண்டிகள் இலவசம்தான். அங்கு இதுபோன்ற சில விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக நாங்கள் எதையும் இலவசமாகக் கொடுப்பதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது வாழ்க்கையை அனுபவிப்பதுடன் அதிகபட்சம் சம்பாதிப்பதும் முக்கியம் இல்லையா?’’ என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்புகிறார் இன்னொரு சின்னத்திரை நடிகை.

ஒரு சீனியர் நடிகைதான் நடிகைகளின் மீடியேட்டராகச் செயல்பட்டு வருகிறார். அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் யாராவது பணக்காரரின் தயவில் ஒரு காக்டெயில் பார்ட்டி ஏற்பாடு செய்து விடுவார். அதில் கலந்து கொண்டாலே கூச்சமெல்லாம் குறைந்து விடும். அந்தளவுக்கு பார்ட்டியில் ஆபாசம் தலைவிரித்தாடுமாம்!

அதுமட்டுமின்றி, ‘இந்த மீடியாவில் பிரபலமான இரண்டு நடிகைகளின் லெஸ்பியன் விளையாட்டும் ஒவ்வொரு பார்ட்டியின்போதும் பகிரங்கமாக நடக்கும்!’ என்றும் சொல்லி நம்மைத் திடுக்கிட வைத்தார், நீண்ட காலம் சின்னத் திரையில் வலம் வரும் நடிகை ஒருவர்.

இதுபோன்று நடக்கும் பல பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘பார்ட்டியில் கலந்துகொள்ள வரும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பழகுகிறார்கள். நான்கெழுத்து மூத்த நடிகையருவர், தான் சந்திக்கும் பிரபலங்களிடம் கேஷ§வலாக, ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கடனாகக் கொடுங்கள் என்று கேட்பார். ஒரே பார்ட்டியில் நாலைந்து ஆட்களிடம் எதையாவது சொல்லி ஒவ்வொருவரிடமும் பத்தாயிரம் ரூபாய் வாங்கி விடுவார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, ‘என்கிட்டே கேட்கறதுக்கு எவ்வளவோ இருக்கும்போது பணத்தைக் கேட்கலாமா?’ என்று சொல்லி அடுத்த கட்டமாக நேரடியாகவே ‘காட்டேஜ் ஏதாவது போய் வரலாமா?’ என்றும் கேட்டு விடுவார்.

உயரமான இரண்டெழுத்து நடிகையருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நம்மிடம் கேஷ§வலாக, ‘உங்களுக்கு வலது தொடையில் மச்சமிருக்கிறதா? எனக்கு அங்கே இருக்கிறது’ என்பார். அதிர்ந்து போய் நாம் பார்க்கும்போது, ‘வாருங்களேன். அதை செக் பண்ணிப் பார்ப்போம்!’ என்பார்.

பெரிய கண்ணழகி நடிகையருவர், நம்மிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கிவிட்டு தாங்க்ஸ் சொல்லி விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குள், பலான வாசகங்களுடன் கூடிய எஸ்.எம்.எஸ். செய்திகளை அடுத்தடுத்து அனுப்புவார்.

ஒட்டுமொத்த ஃபீல்டிலேயே உயரம் குறைந்த அந்த நடிகை, பார்ட்டிக்கு வந்திருப்பவர்கள் போட்டிருக்கும் மைனர் செயினின் கனத்தைப் பொறுத்து ஒவ்வொருவர் அருகிலும் உட்கார்ந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவரது மானரிஸமாம் அது!’’ என்று விலாவாரியாகச் சொன்னதைக் கேட்டு நம்மால் முகத்தைச் சுளிக்கத்தான் முடிந்தது.

இப்படி பலதரப்பினரும் பல்வேறு தகவல்களைக் கூறிய நிலையில், இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள சின்னத்திரையின் பிரபல நடிகையான பிருந்தா தாஸைச் சந்தித்துப் பேசினோம்.

அவர், ‘‘இப்போதைய சூழ்நிலையில் இந்தச் சின்னத்திரை ஆரோக்கியமான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. படித்தவர்கள் பலரும் இப்போது பங்கெடுத்து வருவதால் போட்டியும், பொறாமையும் அதிகமாக இருக்கிறது.

அதே சமயம், சின்னத்திரைக்கு வரும் பெண்கள் நடிக்க மட்டும்தான் வந்திருக்கிறோம் என்பதையும், இஷ்டப்படி வாழ்வதற்கு அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். இதில் நடித்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் மிகவும் குறைவு. அதனால், பணத்திற்காக தவறான பாதையில் போகும் பெண்களும் குறைவு.

மற்ற தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குரிய ஆசாபாசங்கள் எங்களுக்கும் உண்டு. சின்னத்திரை நடிகைகளான நாங்களும் எங்களுக்குள் பிறந்த நாள், திருமண நாள் நிகழ்ச்சிகளென்று பார்ட்டி வைத்துக் கொண்டாடுவோம். எங்கள் ‘ஆனந்தம்’ சீரியல் யூனிட்டிற்கு நான்தான் கோ_ஆர்டினேட்டராகச் செயல்படுகிறேன். இதில் ஒன்றும் தப்பில்லையே!

அதே சமயம், எனக்கும் எங்கள் யூனிட்ச் பெண்களுக்கும் மற்ற ஆண்களுடன் பேசிப் பழகுவதில் நாகரிகத்தையும் ஓர் எல்லையையும் கடைப்பிடிப்போம். அப்படியிருந்தும் எங்களைப் பற்றி தப்புத்தப்பாகச் செய்திகள் வருவது வருத்தத்தையே தருகிறது. எங்கள் சின்னத்திரை வாழ்க்கையும் ஸ்போர்ட்ஸ் மற்றும் மாடலிங் துறையினரின் வாழ்க்கையும் திறந்தவெளி அரங்கில் நடப்பதால், சில சிக்கல்களும் அசௌகரியங்களும் இருக்கின்றன.

இந்தத் துறையிலுள்ளவர்கள் தப்புச் செய்தாலும் தவறிப் போனாலும் ஒட்டுமொத்த மீடியாவுக்கும் தெரிந்து விடும். அப்படியிருக்கும்போது யாரும் பாதை மாறிப் போக மாட்டார்கள் என்பதை நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள் இங்கு சகஜமான விஷயம். அது இங்கே மட்டும் நடக்கிற ஒரு விஷயமில்லையே?’’ என்றார்.

‘‘எங்கள் துறையின் இளைய தலைமுறை இஷ்டத்துக்கு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள் தான். அதைத் தப்பு என்று அவர்களே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது.

சின்னத்திரையின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாதை மாறி பணத்திற்காக எதையும் செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பெண்கள் சின்னத்திரையில் மட்டும்தானா இருக்கிறார்கள்?

ஆனாலும் இவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தி சின்னத்திரையை ஆரோக்கியமாக்கிக் காட்டுவதே எங்கள் லட்சியம்!’’ என்றார் சின்னத்திரை கலைஞர்கள் சங்கத் தலைவரான வசந்த்.

அவர் சொன்னபடி சின்னத்திரை கலாசாரம் நேர்வழியில் பயணப்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும், ஆதங்கமும்!

படங்கள் : நாதன்
 வி. குமார்

Posted in Actress, Gossip, Kumudam Reporter, Life, Magazines, Party, Rumor, Serials, Sex, TV | 1 Comment »