Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists
பதிந்தவர் Visitor Blogs மேல் மார்ச் 19, 2009
டிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.
இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
