French novelist & Explorer of humanity Jean-Marie Gustave Le Clézio wins Nobel literature prize
பதிந்தவர் Visitor Blogs மேல் அக்டோபர் 10, 2008
பிரெஞ்சு எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
![]() |
|
| நோபல் பரிசு பெற்றுள்ள லே க்ளிசோவ் |
இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளரான ழான் மேரி குஸ்டாவ் லெ க்ளீசோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கவிதை புனையும் புது முயற்சிகளில் அவரது படைப்புகள் ஒரு புதிய தளத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பரிசை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமி கூறியுள்ளது.
கிளிசோ அவர்கள் பல்லின ஆளுமை கொண்ட உலகம் சுற்றும் ஒரு நாடோடி என்று அந்த அகாடமியின் செயலர் அழுத்தமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளுடன் நேரங்களை செலவவிட்டுள்ள லெ கிளிசோ அவர்கள் அந்த அனுபவம் தனக்கு உலகளாவிய தனது பார்வைக்கான ஒரு முக்கியமான விடயம் என்று லெ கிளிசோ கூறியுள்ளார்.
ஆரம்ப காலங்களில் அவரது எழுத்துக்கள் பரீட்சார்த ரீதியில் இருந்தாலும் எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து அவரது எழுத்து பாணி மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது.
இந்த இடுகை இடப்பட்ட நாள் அக்டோபர் 10, 2008 இல் 10:15 மு.பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது Tamil. குறிச்சொல்லிடப்பட்டது: Authors, France, Literature, Nobel, Writers. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை. உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....

