Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

LTTE announces unilateral ceasefire during SAARC summit – PM will raise fishermen issue during his visit to Sri Lanka

பதிந்தவர் SnapJudge மேல் ஜூலை 22, 2008

விடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்

பதினைந்தாவது சார்க் மாநாடு இலங்கையில் நடப்பதை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பதாக தாமாகவே முன்வந்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு. திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளுடனும், தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருப்பதாகவும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு யூலை 26 முதல் ஆகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

சார்க் மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு தமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>