Naxalites target cops on boat; 54 security men feared drowned in Maoist attack in Orissa
பதிந்தவர் SnapJudge மேல் ஜூன் 30, 2008
ஒரிஸ்ஸாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் ஐம்பது பொலிசார் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் மாவோயியவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் ஒரு படகு ஏரியில் கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் ஐம்பது பொலிசார் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கிளர்ச்சிக்காரர்களுடன் மோதுவதற்காக விசேட படையணி ஒன்று படகில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.
மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் ஏரி ஒன்றில் படகு சென்றிருந்த வேளை அருகிலிருந்த மலைக் குன்றுகளிலிருந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.
படகில் இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே நீந்திக் கரையேறியதாகத் தெரிகிறது.
