Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Chennai: Harassed couple ends life – Loving women: Being lesbian in India

பதிந்தவர் SnapJudge மேல் மே 19, 2008

சென்னையில் ஒன்றாக தீக்குளித்த இரண்டு பெண்கள்

பெண் ஓரினச் சேர்க்கையை குறிக்கும் சின்னம்

மிக நெருங்கிய உறவு கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்கக வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்த, மனம் கசந்து இருவரும் தங்களுக்கு தாங்களே தீயிட்டுக்கொண்டு மரித்திருக்கிறார்கள்.

40 வயதான ருக்மணி மற்றும் 38 வயதான கிறிஸ்டி ஜெயந்தி மலர் ஆகிய இந்த இரு பெண்களுக்கிடையே பாலுறவு இருந்ததாகவும் அதனாலேயே இருதரப்பு உறவினர்களும் கடுமையாக அவர்கள் நட்பிற்கு ஆட்சேபித்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் மணமானவர்கள், அவர்களில் மலருக்கு எட்டு வயது மகன் ஒருவரும் இருக்கிறார். ஆனால் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியே இருக்க முயன்றிருக்கிறார்கள். அடிககடி ருக்மணி தனது குடும்பத்தை விட்டு மலரின் வீட்டுககுச் சென்று அங்கேயே தங்கியிருந்ததாகவும் அதனாலேயே பிரச்சினை ஏற்பட்டதாகவும் காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.

இவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, தற்கொலை என்று மட்டுமே வழக்கு பதிவாகியிருப்பதாகவும், இறந்த பெண்களை சந்திக்கக்கூடாது என்று வற்புறுத்தியதாக உறவினர்கள் மீதெல்லாம் முதல் தகவலறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்றார்.

ஆனால் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்களாக இருந்திருகின்றனர். தத்தம் குடும்பத்தினரின் ஆட்சேபணைகளை மீறி நெருக்கமாக இருந்திருக்கின்றனர் என்று மட்டும் தெரியவந்திருப்பதாகவும், அவ்விருவருககிடையே என்னமாதிரியான உறவிருந்தது என்பது எல்லாம் மேல்விசாரணையிலேயே தெரியவரும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பெண்களிடையிலான ஓரினச் சேர்க்கை தொடர்பாக பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.நாராயண ரெட்டி தமிழோசைக்கு வழங்கிய சில கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>