உலகளவில் ஊழல் அதிகரிப்பு
பதிந்தவர் SnapJudge மேல் மே 15, 2008
![]() |
|
| மலிந்துவரும் லஞ்சம் |
உலக அளவில் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை நிலை நிறுத்துவதற்காகவோ அல்லது புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்காகவோ லஞ்சம் வழங்கும்படி கடந்த இரண்டாண்டு காலத்தில் தாங்கள் அணுகப்பட்டதாக தெரிவித்துள்ளன.
எர்ன்ஸ்ட் அண்ட் யங் என்கிற தணிக்கை நிறுவனத்தால் முப்பத்திமூன்று நாடுகளில் இருக்கும் ஆயிரத்தியிருநூறு நிர்வாகிகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐந்தில் ஒரு பங்கு நிறுவனங்கள், லஞ்சம் வழங்கத் தயாராக இருந்த போட்டி நிறுவனத்திடம் தங்களின் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேற்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஊழல் பரவலாக காணப்படுகிறது. சுரங்கத் தொழில்துறை தான் இருப்பதிலேயே ஊழல் மலிந்த துறையாக கணிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில் பாதிப்பேர் தாங்கள் ஊழலுக்கு முகம்கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, வங்கித்துறையிலும், எரிசக்தித் தொழில் துறையிலும் 30 சதவீதம் பேர் தாங்கள் ஊழலுக்கு முகம்கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

