Star Vijay TV’s ‘Neeya? Naana??’: Interview with Moderator Gopinath
பதிந்தவர் Visitor Blogs மேல் பெப்ரவரி 12, 2008
சண்டே சினிமா
எத்தனை மனிதர்கள்… எத்தனை எண்ணங்கள்?
வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மட்டுமல்ல… சமூகப் பிரச்னைகளை முன் வைத்து உருவாக்கப்படும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளாலும் நேயர்களைப் பெரிதளவில் ஈர்க்க முடியும் என உணர்த்தி வரும் சில அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது விஜய் டி.வி.யின் ‘நீயா? நானா? இதில் சமூகப் பிரச்னைகளோடு மக்கள் எதிர்கொள்ளும் தனிநபர் பிரச்னைகளுக்கும் உரியவர்களைக் கொண்டு உளவியல் ரீதியாகத் தீர்வு காணுவது சிறப்பு. ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, மெúஸஜ் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் சரியான அளவில் இடம்பெற்றிருப்பதும் இந்த நிகழ்ச்சியை நேயர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பதற்கு ஒரு காரணம். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகவும் நடுநிலைமையோடும் வழங்கி வரும் கோபிநாத்திடம் அவர் பாணியிலேயே ‘சரி உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…’ என்று தொடங்கினோம்…
பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில். திருச்சியில் படிப்பு. பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. தற்போது சென்னையில் அப்பா, அம்மா, அண்ணனுடன் வசித்து வருகிறேன். அப்பா பிஸினஸ்மேன். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அண்ணன் விளம்பரப் பட ஒளிப்பதிவாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இந்தத் துறைக்கு வந்தது எப்படி?
பி.பி.ஏ. முடித்தவுடனேயே சென்னைக்கு வந்துவிட்டேன். 1996-ல் இருந்து மீடியாவுடன் எனக்குத் தொடர்பு. ‘யு’ டி.வி.யில் ஆரம்பித்து ராஜ் டி.வி., ஜெயா டி.வி., இந்தியா டி.வி., ஸ்டார் விஜய் டி.வி. என என்னுடைய கேரியர் தொடருகிறது. தற்போது ‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மிலும் ரேடியோ ஜாக்கியாக இருக்கிறேன்.
‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குகிறீர்கள்?
ரேடியோ சிட்டி ‘ட்ரைவ் டைம்’-இல் (டி.வி.யில் ப்ரைம் என்றால் ரேடியோவில் ட்ரைவ் டைம்’) ‘ஜாய் ரைடு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இது ஒரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி. இதில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏடிஎம் (வினாடி வினா நிகழ்ச்சி), சிட்டி கிரிக்கெட் (ஓர் இடத்தின் பெயரைச் சொன்னால் அதற்கு மிகப் பொருத்தமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்), பிரமிடு (வார்த்தை கட்டமைப்பு), எஸ் கார்னர் (இதில் நேயர்கள் ‘நோ’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் பதிலளிக்க வேண்டும்) போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளையும் சனிக்கிழமை பிரபலங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் ஞாயிற்றுக்கிழமை ‘சினிமா சினிமா’ என்ற விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன். இவை அனைத்தும் ‘நீயா? நானா?’ போல விறுவிறுப்பாகவே இருக்கும்.
ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் டி.வி.யில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் உள்ள வித்தியாசம்..?
டி.வி.யை ஒப்பிடும்போது ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவது கொஞ்சம் சிரமம்தான். டி.வி.யில் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட சம்பவங்களையோ இடங்களையோ காட்சி வடிவில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் ரேடியோ நேயர்களுடன் நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதைப் பற்றிய காட்சி வடிவம் அவர்களுடைய மனதில் அப்படியே பதியுமாறு பேச வேண்டும். அப்போதுதான் தொகுப்பாளருக்கும் நேயருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்படும். குரலில் ஏற்ற இறக்கமும் அவசியம்.
‘நீயா? நானா?’ நிகழ்ச்சி பற்றி..?
தொலைக்காட்சி நேயர்கள் விரும்பிப் பார்ப்பது விவாத மேடை நிகழ்ச்சி. இதில் இதுவரை சுமார் 70 தலைப்புகளுக்கு மேல் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறோம். விரைவில் 100 வது எபிúஸôடைத் தொடவுள்ளோம்.
நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் உங்களுக்குச் சிரமமாக அமைந்து ‘இதை ஏன்தான் தேர்ந்தெடுத்தோம்?’ என வருத்தப்பட்ட தலைப்பு இருக்கிறதா?
அப்படிக் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. எல்லாத் தலைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. மிகுந்த கவனத்தோடும் அவற்றின் பின்புலத்தை அறிந்தும்தான் தேர்ந்தெடுக்கிறோம். சிரமம் என்று சொன்னால் எல்லாத் தலைப்புகளுமே சிரமத்தை ஏற்படுத்தியவைதான். அதனால்தான் ஒரு நிகழ்ச்சி சூப்பர்; இன்னொன்று சுமார் என்ற பேச்சு வரவில்லை.
இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றது? இழந்தது?
இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கற்றதுதான் அதிகம். எத்தனையோ மனிதர்கள்; எத்தனையோ எண்ணங்கள்; விதவிதமான பிரச்னைகள்; வித்தியாசமான சம்பவங்கள் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடிகிறது. நாம் தவறு என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் சரியாகவும் சரி என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் தவறாகவும் தோன்றுகின்றன. மக்கள் மனதில் இருந்து பிரவாகமாக சில விஷயங்கள் வெளிப்படும்போது அதற்கு உண்டாகும் வலிமையே தனி. பலதரப்பட்ட மக்களுடைய வாழ்க்கையின் பின்புலங்களை என்னோடு விஜய் டி.வி. நேயர்களும் அறிந்துகொள்ள முடிவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் என நீங்கள் நினைப்பது?
மக்களின் குரலை மக்களே பிரதிபலிப்பதுதான்!
உங்களுக்குப் பிடித்த இதர விஷயங்கள்?
புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும். அதிலும் உலக வரலாறு தொடர்பான புத்தகங்கள் என்னுடைய ஃபேவரைட். கவிதைகளில் அதிக ஈடுபாடு உண்டு. சமகாலக் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளையும் விரும்பிப் படித்து வருகிறேன். நான் கூட கவிதைகள் எழுதுவேன். சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் கல்லூரி நாட்களில் நண்பர்களுக்காக நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்.
ரோல் மாடல் என நீங்கள் கருதுவது?
ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. சிறு வயதில் இருந்து என்னைப் பாதித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளையே எனது ரோல் மாடல்களாகக் கருதுகிறேன்.
டி.வி., ரேடியோ, புத்தகமும் எழுதியாகிவிட்டது… அடுத்த இலக்கு?
இப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இயன்றவரை மக்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான். மற்றபடி நாளைய பெரிய திட்டம் என குறிப்பாக எதுவும் இல்லை. இந்த எண்ணம் கூட நாளையே மாறலாம். ஒரு புதிய விஷயத்தைச் செய்துபார்க்கலாம் என்று தோன்றும்போது அதில் முழு கவனத்துடன் ஈடுபடுவேன்.

karthik சொன்னார்
This IS heading Dear
This Is title
rajagopal சொன்னார்
neeya naana a good programme and we do not wish to miss the programme at any cost. we watch the programme with family.well done mr.gopinath
with regards,
rajagopal
cowey சொன்னார்
இதில் பலதுறை சார்ந்த அனுபவம் பெற்றவர்கள் நிறைய கலந்து கொள்ள வேண்டும், மக்களோடு மக்களாக.சில சமயம் சில பகுதிகள் அற்பமாக எனக்கு படுகிறது.
சந்தேகமில்லாமல் நல்ல முயற்சி.
Hannah Montana & Kamal: Father - Daughter photos « Snap Judgment சொன்னார்
[...] தொலைக்காட்சியின் ‘நீயா… நானா‘ போலும் இல்லாமல், சன் [...]
dilkush சொன்னார்
great going buddy!!!
gobi is one of the very few anchors who cud be compared with the best in indian media.
Usha சொன்னார்
Gopinath makes the show more interesting.. Great going..
Krishnan சொன்னார்
Gopinatah has an unique talent of mising with people like a common man which maney hosts fail to do…
muralidharan சொன்னார்
hello enaku moderator gopinath address and phone no needed cn u snd thr mail
yazhini yadav சொன்னார்
hai gopinath ur great man.all the best pa.
yazhini சொன்னார்
hai
maha lekshmi சொன்னார்
hai
Krishna சொன்னார்
Dear Mr. Gopinath,
Happy to watch your Neeya Naana. I have an idea. You please Google out and understand the Legal Terrorism leashed out on men (false cases and arrests of family members and humiliating them) under Section498A and Domestic Violence Act/Bill. This is done in the name of Dowry Prohibition. In reality 99.99999 cases are false and concocted cases.
Because of these acts so many men commit suicide and many families are taken to ransom. The Law in itself is purely one sided and more than that, the corrupt Police, Lawyers and Judges all of them use this law only for money extortion. Passports and seized and the husbands and threatened. You can find a good lead and solution to this problem. Please take this up as a theme.
Kiri Selvaratnam-Toronto சொன்னார்
Dear Gobinath
Neeya Naana superb show in USA and CANADA It’s amaizing programme People who are here
raelly like very much.ur performance are beautifull and wonderfull
I never miss any single show in Toronto Canada
Specialy here in Canada every single episode we can buy a dvd copy but its wonderfull
‘Wish U all the best’ keep up!!
Good luck to U
Thanx
Kiri Selvaratnam
Toronto Canada
k.abirami சொன்னார்
your program is really great. sunday i forget the news .but icanot forget your program.
your answer are well tallent .
prabu r சொன்னார்
hello sir i am prabu, ur programme is going very well., pls i have one request. could u pls DISCUS PHYCOLOGIST DOCTOR WITH PEPOLE WHO AFFECTED BY CONFUSION IN THEM LIFE. THROUGH THIS PROGRAMME
THANKS AND REGARDS
PRABU R