Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Mooligai Corner: Herbs & Naturotherapy - How to avoid Diarrhoea & Dysentery with Naval

பதிந்தவர் bsubra மேல் பெப்ரவரி 4, 2008

மூலிகை மூலை: ‘நாவல்’ இருக்க பயமேன்?

நாவல் மர இலைகள், பட்டைகள் எல்லாம் துவர்ப்புத்தன்மை கொண்டது. உண்ணக் கூடிய கருஞ்சிவப்புக் கனிகளை உடையது. இதுதானாகவே வளரும் பெரு மரவகையைச் சேர்ந்ததாகும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவக் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாக எல்லா மண்

வகையிலும் தானாகவே வளர்கின்றது. இதன் பட்டை, சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும், பழம் சிறுநீர் பெருக்கும், பசியைத் தூண்டும் குணம் உடையது.

வேறுபெயர்கள் :
தூறவம், நம்புலி, நேராடம், ராசசம்பு, மகாபலா, சம்பூகம்.

ட்
Syzygium Jambolanum DC

இனி மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம்.

நாவல் இலைக் கொழுந்துச் சாறு 1 தேக்கரண்டி, ஏலரிசி 2, இலவங்கப்பட்டைத்தூள் மிளகு அளவு எடுத்துக் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர செரியாமை, பேதி, சூட்டு பேதி உடனே நிற்கும்.

நாவல் மரத்தின் பிஞ்சு, மாதுளம்பழத்தின் பிஞ்சு இரண்டையும் ஒரே அளவாக எடுத்து அரைத்து சாறுபிழிந்து ஒரு சங்களவு எடுத்து 1 டம்ளர் பசுவின் மோரில் கலந்து 2 வேளை குடித்துவர சீதபேதி நிற்பதோடு நீரிழிவு நோய் இருந்தாலும் குணமடையும்.

நாவல் இலை, கொழுந்து, மாங்கொழுந்து ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர சீதபேதி, இரத்த பேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி உடனே நிற்கும்.

நாவல் மரத்தின் பட்டையோடு, மகாவில்வ மரத்தின் பட்டை இவற்றைச் சமஅளவாக எடுத்து நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, காலையில் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி பொடியைப் பசுவின் பால் 1 டம்ளரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

நாவல் கொட்டையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 கிராம் எடுத்து நீருடன் 2 வேளை குடித்து வர மதுமேகம், அதி மூத்திரம் குணமாகும்.

வெண்மர நாவல் மரப் பட்டையின் உள்பாகம் எடுத்து கழுநீர் விட்டு இடித்த சாறு 100 மில்லியளவு எடுத்து, தென்னை மரப்பூவின் சாறு 50 மில்லி எடுத்து, உரசிய சந்தனம் 5 கிராம் எடுத்துக் கலந்து காலையில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். அத்துடன் ஆடாதொடைச் சாறை 50 மில்லியளவு சிறிது தேன் கலந்து குடிப்பது இன்னமும் நலமாக இருக்கும். இதனால் பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் தீட்டு அதிகமாக இருக்கும். நாட்களும் அதிகமாகும். வயிற்றுவலி, இடுப்பு வலி, எரிச்சல், இரத்தப்போக்கு, உடல் பலவீனம், நெஞ்சு படபடப்பு, இருதயம் பலவீனம், பசியின்மை, ருசியின்மை, களைப்பு போன்றவை அனைத்தும் தீரூம்.

நாவல் வித்தைக் கைப்பிடியளவு எடுத்து பாலில் அரைத்து நெல்லிக்காயளவு 2 வேளை சாப்பிட்டு வர கிராணி, நீரிழிவு, மூலச்சூடு நீங்கும்.

நாவல் பட்டையைப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் எருமைத் தயிருடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கிராணி குணமாகும்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>