Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Mooligai Corner – Vijayarajan: Maasikkai – Herbs & Naturotherapy

பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 3, 2007

மூலிகை மூலை: மாசிக்காய் மகிமை!

விஜயராஜன்

நீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய். இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது. இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வடிகின்ற பால் திரண்டு கட்டிப்படுவதே மாசிக் காயாகும். இது கருமை நீலம் வெண்மை என மூன்று வேறுபாடுகளை உடையது. இதற்குள் இருக்கும் பூச்சிகள் வெளி வருவதற்கு முன்னே எடுப்பது நல்லது. அதிலுள்ள பூச்சிகள் வெளிப்பட்ட பின் கிடைப்பது அவ்வாறு நல்லது கிடையாது? இது நீங்காத உடல் சூடு, குழந்தைகளின் கணச்சூடு, பல வகையான மேகம் போன்றவற்றைப் போக்கும்.

ஆங்கிலத்தில்: Quercus incana, Roxp, Cupaliferac

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.

மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.

மாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.

மாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.

மாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.

மாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>