Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tamil Books – Reviews, Listing from Dinamalar

பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 20, 2007

மேடும் பள்ளமும் : ஆசிரியர் : நாஞ்சில் கி.மனோகரன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 18ரூ )

யுத்தம் வேண்டாம் : ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 25ரூ )

அமெரிக்காவிலே : ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 45ரூ)

லெனினுடன் சில நாட்கள் : ஆசிரியர் : மாக்ஸிம்கார்க்கி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 24ரூ )

அம்பேத்காரும் தலித் மனித உரிமைப் போராட்டமும் : ஆசிரியர் : சி.என்.குமாரசாமி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 122ரூ )

செய்திகளுக்கு அப்பால்…!:நுõலாசிரியர்: சோலை, வெளியீடு: தணல் பதிப்பகம் (பக்கம்:200. விலை:ரூ.60).

அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு தனி இடம் கொண்ட பத்திரிகையாளர் சோலை எழுதிய சுமார் 48 அரசியல் விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம்.ராஜ்ய சபையில் ஒரு குறிஞ்சிப்பூ (மன் மோகன் சிங்), விதவிதமான அரசியல் அம்மணிகள், வாரிசு அரசியலை அகற்ற முடியுமா? ஆணிவேரைத் தோண்டியெடுங்கள், நேபாளத்தில் ஒரு பூபாளம் போன்றவை படிக்கச் சுவை கூட்டுபவை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியரின் பரந்த அரசியல் அனுபவ அறிவு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. அரசியல் மேடைப் பேச்சாளர்களுக்கும் பயன்படக் கூடிய நுõலிது.

நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள் : நுõலாசிரியர்: நாகை எம்.பி.அழகியநாதன். வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் (பக்கம்: 68. விலை: ரூ.20)

சுய முன்னேற்ற வகைப் புத்தகம் இது. மிகச் சிறிய புத்தகம். சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருப்பதால் அலுப்பு தட்டவில்லை.


உழைப்பு

சேற்றில் மனிதர்கள் ( பாரதீய பாஷாபரிஷத், இலக்கிய சிந்தனை பரிசு) : ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 68.00 )

கைத்தொழில் களஞ்சியம்: ஆசிரியர் : சூசை ராஜா, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 18.50)

விற்பனைக்கு எளிய வழிமுறைகள்:ஆங்கிலத்தில்: ஆரிசன் ஸ்வெட் மார்டன். தமிழில்: லயன் எம்.ஸ்ரீனிவாசன். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம் (பக்கம்: 231. விலை: ரூ.90).

பொருளை விற்பவர் பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். பட்டப் படிப்புகள் பட்டயப் படிப்புகள் பல பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றன. படித்து முடித்து விற்பனைத் துறைக்கு வருபவருக்கு எளிய வழிமுறைகளை எடுத்து இயம்புவது இந்நுõல். பேச்சு, விளக்கும் கலை, இனிய அணுகுமுறை, கவர்தல், உடை, நடை போன்ற இன்றியமையாத விஷயங்களைப் பற்றி உளவியல் அடிப்படையில் உதாரணங்களுடன் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் ஆசிரியர் வழங்கி உள்ளார்.தாய்மொழி தவிர்த்த வேற்று நாட்டவர் புத்தகங்களை படிப்பது இல்லை என்ற எண்ணத்தை விரட்ட வேண்டும். ஏனெனில், இந்நுõல் போன்ற மொழி பெயர்ப்பு நுõல்கள் விற்பவர் கையாளும் அணுகுமுறையால் எத்தனை எத்தனை நளினங்களை ஏற்படுத்தலாம்.நல்ல நுõல்! வரவேற்கப்பட வேண்டிய நுõல்.

சில்லறை வணிகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்:ஆசிரியர்: எம்.ஆர்.ரகுநாதன், மணியன் பதிப்பகம் விலை ரூ.7

“ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா’ ஆகிய பன்முகத் தன்மை அழிந்து ஒரு முகத்தன்மையாக பன்னாட்டு நிறுவனங்கள் வந்து கோலோச்சும் என்ற கருத்தைக் கொண்ட நுõல்.

ஒரு தொழிலாளியின் மூன்று தலைமுறைகள்:ஆசிரியர்: சிவப்பிரகாசம் (பக்கம்: 184, விலை ரூ.45)

அவ்வை சண்முகத்துடன் நாடக உலகில் பங்கேற்ற ஆசிரியர் இதில் கதைகளை எழுதியுள்ளார்.


தமிழ்மொழிமொழிபெயர்ப்பியல்:நுõலாசிரியர்: முனைவர் ச.ஈஸ்வரன். வெளியீடு: பாவை பப்ளிகேஷன் (பி) லிட் (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் துõண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நுõல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.தமிழ் மண்ணே வணக்கம் :தொகுப்பு: த.செ.ஞானவேல். வெளியீடு: விகடன் பிரசுரம் (பக்கம்: 255. விலை: ரூ.95).
ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நுõல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது “தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் “ரியல் எஸ்டேட்’களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் துõண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நுõல். நல்ல முயற்சி.
பிரெஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை :நுõலாசிரியர்: செவாலியே பேராசிரியர் க.சச்சிதானந்தம். தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60).
ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார்.”சொல்லதெழுதல்’ என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது’ என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நுõல் ஒரு விருந்து.

என் தமிழ் இயக்கம்7:ஆசிரியர்: முனைவர் இரா.திருமுருகன், ஏழிசைச் சூழல் (பக்கம்:181 விலை: ரூ.60.)

தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப்படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது.”இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?’ போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.

சில சந்திப்புகள்… சில பதிவுகள்…:ஆசிரியர்: நெல்லை சு.முத்து. வெளியீடு: ஐந்திணைப் பதிப்பகம் (பக் கம்:152 விலை: ரூ.70.)

சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நுõல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!

அமுதசுரபி:(அறுபதாம் ஆண்டு தொடக்கச் சிறப்பிதழ்) விலை: ரூ.1000

தமிழறிஞர் ரா.பி. சேதுப் பிள்ளை சூட்டிய பெயர் அமுதசுரபி. இதழ் மட்டுமல்ல, இயக்கம்… என்ற கருத்தை வலுப்படுத்த அடுத்த 11 இதழ்களும் வெளிவரும் என்று ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் உறுதி கூறியிருக்கிறார்.

“இருண்மைக் கவிதைகள்’ பற்றி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கருத்து, “காயத்ரி மந்திரமே கண்’ என்ற ஈற்றடி கொண்ட வெண்பா போட்டியை தேர்வு செய்து கிரேசி மோகன் தன் மரபுக் கவிதை ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா என்று பல சிறப்பான படைப்புகளும் சிறப்பை சேர்க் கின்றன.

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!:நுõலாசிரியர்: முனைவர் உலகநாயகி பழனி. வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பக்கம்: 122. விலை: ரூ.50).

மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநுõல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்.”ழ’ “ல’ “ள’ ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல “மிகை’யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நுõல்!

சொல்லாய்வுக் கட்டுரைகள் : ஆசிரியர்: இரா.மதிவாணன். வெளியீடு: திலகம் பதிப்பகம் (பக்கம்:191. விலை:ரூ.85)

பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.

கலைச் சொல்லியல்:எழுதியவர்: டாக்டர் ராதா செல்லப்பன். வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். (பக்கம்: 188. விலை: ரூ.70).

அறிவியலும் தொழில் நுட்பவியலும் நாளுக்கு நாள் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. செல்வச் செழிப்பு மிக்க வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா முதலிய நாடுகளில் மக்கள் தொழிற்கல்வியைத் தங்கள் தாய்மொழியில் அறிகின்றனர். தாய்மொழி வழிக் கற்பதால் தொழில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவும், ஆழமாகச் சிந்திக்கவும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவும் அவர்களால் முடிகிறது.

இந்நுõலாசிரியர் அறிவியல் தொழிலியல் தமிழாக்க முறைகள், கலைச்சொல் ஒலி பெயர்ப்பியல் தோன்றும் சிக்கல்கள், வாக்கிய அமைப்பு முறைகள், அறிவியல், கலைச்சொல் உட்பட 12 தலைப்புகளில் மிக ஆழமாகவும், விரிவாகவும் இந்நுõலை எழுதியிருக்கிறார். நுõல்கள் அதிகமாக வெளிவராத குறை. அந்தக் குறையை நீக்க இதுபோன்ற நுõல்கள் இன்னும் அதிக அளவில் வரவேண்டும்.

தமிழ்க்கவிதைகளில் சந்த அமைப்பு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு:நுõலாசிரியர்: டாக்டர் ஆலந்துõர் கோ.மோகனரங்கன். வெளியீடு: வசந்தா பதிப்பகம் (பக்கம்: 416. விலை: ரூ.150).

“”தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உண்டெனில், வெகுளியற்றிருப்போன் வெறுந்தமிழனே!” என்றும், “”மதுரத் தமிழை இகழ் தீயோர் மணிநா அறுத்துக் கனலில் இட” என்றும் பாடிய தண்டபாணி அடிகளாரின் பாடுபொருளாய் இறைவன், தமிழ், மனிதர், இயற்கை, புதுமை ஆகிய ஐந்து நிலைகளில் சந்தம் பாடியதை சிறப்புற ஆய்வு செய்துள்ளார் நுõலாசிரியர்.”"சந்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்”, “”தண்டபாணி அடிகளார் காலமும் சூழலும்”,”"அடிகளார் பாடிய சந்தவகைகள்”, “”அடிகளார் பாடுபொருளும் சந்தங்களும்”, “”பாடல்களில் அழகு நலன்”, “”சந்தம் பாடுவோருள் அடிகளார் தனித்தன்மை’ என ஆறு இயல்களில் ஆய்வு செய்துள்ள நுõலாசிரியர் பாம்பன் சுவாமிகள் பாடியருளிய பாடல்களையும் ஒப்பு நோக்கியுள்ளது அருமை.”"பண்ணில் ஓசை படித்தினில் இன்சுவை” என்னும் அப்பர் பாடலில் அறிமுகம் தொடங்கியுள்ளது. திறம்பட ஆய்வு செய்துள்ள ஆலந்துõர் மோகனரங்கத்தின் இத்தமிழ்ப்பணி, ஆய்வுப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு புதிய வழிகாட்டி இந்நுõலாகும்.

தமிழ் இலக்கண நுõல்கள் (மூலம் முழுவதும் குறிப்பு விளக்கங்களுடன்):பதிப்பாசிரியர்: முனைவர் ச.வே.சுப்பிர

மணியன். வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம் 608 001. (பக்கம்: 800. விலை: ரூ.400).

தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை நுõறு இலக்கண நுõல்களுக்கு மேல் தோன்றியுள்ளன. அவற்றில் 50 நுõல்கள் கடல்கோள்களாலும், கவனிப்பார் இல்லாமலும் மறைந்து விட்டன. இப்போது நமக்கு 50 நுõல்களுக்கு மேல் கிடைக்கின்றன. அவற்றைத் தொகுத்துத் தந்தால், தமிழ் மொழி வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நல்ல எண்ணத்தில் நுõலாசிரியர் ச.வே.சு., கடந்த 40 ஆண்டுகளாக மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நுõலைத் தயாரித்து அளித்துள்ளார். இந்நுõல் 49 இலக்கண நுõல்களை உள்ளடக்கியது. தமிழனின் இலக்கணப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் ஏற்றம் மிகக் கொண்ட தொல்காப்பியம் முதல் இருபதாம் நுõற்றாண்டில் வெளிவந்த விருத்தப்பாவியல் உட்பட அனைத்து இலக்கணங்களும் ஒரே தொகுப்பில் ஒரே இடத்தில் காணும் நிலை இத்தகைய தொகுப்பு. இதுவரை தமிழ் இலக்கண உலகில் வந்ததில்லை. இந்நுõல் புது வரவு புத்தம் புது வரவு. செம்மொழியாம் தமிழுக்கு பெருமை சேர்க்கும் பெருமை மிகு நுõல்.இந்நுõலை வெளியிட பதிப்பகத்தாருக்கு உலகத் தமிழர்கள் நன்றி கூற வேண்டும்.

மெய்யப்பன் தமிழ் அகராதி:பதிப்பாசிரியர்: முனைவர் ச.வே.சுப்பிரமணியன். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் (பக்கம்: 1120. விலை: ரூ.225).

இவ்வகராதியில் “அரி’ என்ற சொல்லுக்கு 130 பொருட்கள் தரப் பட்டுள்ளன.பண்பாட்டு அடிப்படையில் இவ்வகராதி அமைக்கப் பெற்றுள்ளது. 63 நாயன்மார்களும், 64 கலைகளின் பெயர்களும் தரப் பெற்றுள்ளன.இந்த அகராதிக்கு பெரும்பான்மையான அடிப்படையாக அமைந்தது மு.சண்முகம் பிள்ளையின் தமிழ் தமிழ் அகர முதலி தற்காலத் தமிழ் அகராதிகள் பலவும் பார்க்கப் பெற்றுள்ளன.தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பும் நுõல்.

தமிழிசை ஆய்வு மாலை:நுõலாசிரியர்: முனைவர் இரா.ஜெகதீசன். முனைவர்: தி. சுரேஷ், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக் கல்வி அறக்கட்டளை, மதுரை. (பக்கம்: 196. விலை: ரூ.100).

தமிழிலக்கிய காலவெளியில் இலக்கிய அறிஞர்கள், ஆய்வாளர்கள் பண்ணிசையில் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த மூன்றாண்டுகளாக மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தார் தொடர்ந்தார் போல் பல்வேறு இலக்கியப் பண்ணிசை ஆய்வாளர்களை வைத்து ஆய்வுக் கருத்தரங்கம் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மூன்றாம் ஆண்டுக் கருத்தரங்கத்தில் வாசித்தளிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுõலே இந்நுõல். இதை முனைவர்கள் முறையே இரா.ஜெகதீசன், தி.சுரேஷ் போன்றோர் பதிப்பித்துள்ளனர். “கலித்தொகையில் உயிரினங்களின் வழி இசைக் குறிப்புகள்’ எனத் துவங்கி “தேவாரத்தில் பண் இசைத்த ஓவியங்கள்’ என 41 தலைப்புகளில் இந்நுõல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. துறை சார்ந்த முனைவர்களாலும், ஆய்வு மாணவர்களாலும் வாசித்தளிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு இன்றைய நுõற்றாண்டின் தேவைக்கு ஏற்ப அமைந்திருப்பது ஒரு சிறப்பு. காப்பியங்களில் இசை, திருமுறைகளில் இசை, சங்கத் தமிழில் இசை எனக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.பண்ணாராய்ச்சி மட்டுமல்லாது இசைக் கருவிகள் இசையின் கால அளவு, நாடகங்களின் இசை எனக் குறிப்பிட்டு பலர் ஆய்வு செய்துள்ளனர். இறுக்கத்தைக் குறைக்கும் இசை (பக்.41), நாட்டுப்புறப் பாடல்களில் மரபிசை ஊடாடி இருக்கிறது (பக்.51), சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இந்துஸ்தானி இசையின் தாக்கம் இருந்தது (பக்.101), கல்வெட்டு சிற்பங்களில் கூட இசை ஒலிக்கிறது என்பதை “எட்டிற்கும் ஏழிற்கும் இவை உரிய’ என்ற குடுமியாமலைக் கல்வெட்டுச் செய்தியை (பக்.180) உறுதி செய்கிற ஆய்வுக் கட்டுரை ஒரு புதிய கோணத்தில் அமைந்துள்ளது. மொத்தத்தில் அனைத்து இசைவாணர்களும் படித்துணர வேண்டிய ஒரு அற்புதமான நுõல். இது ஒரு ஆவணம். எனவே நல்ல தாளில் கட்டமைப்போடு தயாரித்திருக்கலாமே.

தமிழ் ஈழம் ஏன்? (விலை: ரூ. 20) தமிழால் உயர்வோம் ( விலை குறிப்பிடவில்லை)மேற்கண்ட இருநுõல்களும் கிடைக்குமிடம்தாயகம்.

வினைச்சொல் அகராதி ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ்:ஆசிரியர்: குமார், ராம்ஜி பப்ளிகேஷன், 26/ஏ, 4வது குறுக்குத் தெரு, தாகூர் நகர், புதுச்சேரி 8. விலை: ரூ.250. பக்கங்கள்: 204.

ஆங்கிலத்தில் பேசினால் குற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற தாழ்வு மனப்பான்மை பலரை முன்னேற விடாமல் தடுத்து விடுகிறது. அத் தகையவர்களின் அச்சத் தைப் போக்கி ஆங்கிலத்தில் நன்கு எழுத, சரளமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே வினைச்சொல் அகராதி என்ற நுõல்.

அகராதி வரலாற்றில் இந்நுõல் முற்றிலும் புதுமையான முயற்சி.வழக்கமாக அகராதிகள் பெயர்ச் சொற்களுக்குப் பொருள் கூறும் தன்மை கொண்டவை. ஆனால் அவற்றில் இருந்து மாறி வினைச் சொற்களுக்குப் பொருள் கூறும் தனி சிறப்பு பெற்ற அகராதியாக இந்நுõல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அகராதியில் வினைச் சொற்களுக்கு ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் என்ற அமைப்பில் பொருள் தரப்பட்டுள்ளது. இதில் 5076 சொற்களுக்கு பொருள் கூறப்பட்டுள்ளன. வினைச் சொற்கள் இல்லாமல் எந்த ஒரு அர்த்தமுள்ள வாக்கியத்தையும் உருவாக்க முடியாது. மேலும் பெயர்ச்சொல், உரித்தான பெயர்ச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், தொழிற்பெயர் போன்றவை வினைச் சொல்களிலிருந்து தான் உருவாக்கப்படுகிறது.இந்நுõலில் உள்ள வினைச் சொற்களைக் கொண்டு சிறுசிறு வாக்கியங்கள் அமைத்து, நாம் எளிதில் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.ஆங்கிலம் அறிவு பெற நினைக்கும் மாணவர்கள் மற்றும் நுõலகங்களில் அவசியம் இருக்க வேண்டிய நல்ல நுõல்.


வாழ்க்கை வரலாறு1 2மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்:நுõலாசிரியர்: அறந்தை மணியன். வெளியீடு: அநுராகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 64. விலை: ரூ.25).மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதன் நிறுவனர் திரையுலகிற்கு செய்த சேவை மறக்க முடியாத ஒன்று.அறந்தை மணியன் ஒவ்வொரு தகவல்களாக திரட்டி சிறிய புத்தகத்தில் பெரிய சரித்திரத்தை குறையின்றி சொல்லியுள்ளார்.எவ்வளவு பேர் புழங்கிய அந்த இடம் இன்று குடியிருப்புகளாகி உள்ளதை படிக்கையில் மனம் வேதனைப்படுகிறது.அன்னை தெரேசா : ஆசிரியர் : ஞா .யாக்கோபு வெளியீடு : கவிதா பப்ளிகேஷன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் :வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .( விலை :ரூ 150 )
பலரது பார்வையில் கண்ணதாசன் :வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .( விலை :ரூ 60 )
கணிதமேதை சீனிவாச ராமானுஜம் :வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .( விலை :ரூ 70 )
எனது வசந்த காலங்கள் : ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன் , கண்ணதாசன் பதிப்பகம் , .
எனது சுய சரிதம் : ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன் , கண்ணதாசன் பதிப்பகம் , .
நெப்போலியன் ஹில் : வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .
உலகப் பேரழகி நுõர்ஜஹான்!:ஆசிரியர்: சி.நடராசன், வெளியிட்டோர்: நேதாஜி பிரசுரம், 56/92, அகிம்சாபுரம் 7வது தெரு, செல்லுõர், மதுரை2. விலை: ரூ.64, பக். 224.

பழைய வரலாறுகளைப் படிப்பதால், நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதோடு, ஒரு நாட்டின் வரலாற்றை புரட்டிப்போட்ட சம்பவங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று நாயகர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் வாழ்க்கை பாதையில் சந்தித்த இன்னல்களும், அதை அவர்கள் சமாளித்த விதமும், நமக்கு நல்ல பாடமாக அமைந்து, நம் பாதையை செம்மைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.இந்நுõலில், 26 தலைப்புகளில் பாபர், அக்பர், சத்ரபதி சிவாஜி, நுõர்ஜஹான் முதல் நேரு, படேல், ராஜாஜி, காமராஜர் என பல தலைவர்களைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை தொகுத்தளித்துள்ளார் நுõலாசிரியர்.

நெல்சன் மண்டேலா:நுõலாசிரியர்: தா.பாண்டியன். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 256. விலை: ரூ.100).

தென் ஆப்ரிக்க விடுதலைக்குப் போராடிச் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவின் வரலாற்றைத் தெரிவிக்கிறது இந்நுõல். உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த தலைவராக விளங்கும் நெல்சன் மண்டேலாவைப் பின்பற்றத் தக்க பண்புகள் இந்நுõலில் வெளியிடப்பட்டிருக்கின்றன.நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிலாலா என்பது தான். அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் தான் அவருக்கு நெல்சன் மண்டேலா எனப் பெயர் சூட்டியுள்ளார். மண்டேலாவின் தந்தையாரின் மறைவுக்குப் பிறகு அவர் தெம்புப் பகுதியின் அரசப்பிரதிநிதியின் வீட்டில் வளர்ப்பு மகனாக வளர்ந்தது, அவரது கல்லுõரிக் கல்வி, போராட்ட வாழ்க்கை அனைத்தையும் இந்த நுõல் தெரிவிக்கிறது.எளிய நடையில் இந்த நுõல் எழுதப்பட்டிருப்பதால் அனைவரையும் படிக்கத் துõண்டும்.

ஜெயகாந்தன் ஒரு பார்வை: நுõலாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் ; வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், . (விலை: ரூ.150).
முஹம்மத் நபி:நுõலாசிரியர்: டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ. தமிழாக்கம்: மவுல்வி அப்துல் ஹமீத் ஆமிர் உமரீ. வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12. (பக்கம்: 463. விலை: ரூ.150).

முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை 14 அத்தியாயங்களில் இந்த நுõல் விரிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் களஞ்சியமாக இந்நுõல் விளங்குகிறது. முகம்மது நபி தமது 63வது வயதில் காலமானார் என்றும், அவர் காய்ச்சலினால் காலமானார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு மொழிபெயர்ப்பு நுõல் என்னும் எண்ணம் தோன்றாத அளவுக்கு இந்த நுõல் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.

பெருந்தலைவர் 100 பெருகி வந்த பெருமைகள்:தொகுப்பாசிரியர்: சபீதா ஜோசப், வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 128. விலை: ரூ.60).

பண்புயர படிக்க வேண்டிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில், காமராஜர் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்.அவரது இனிய சமூக தேசிய வாழ்வில் இனிமையான 100 தகவல்கள், செய்திகள், நிகழ்ச்சிகள் இந்நுõலில் இடம் பெறுகின்றன. திருமணம் செய்யாதது ஏன்? (பக்.15), மதிப்பு கொடுப்பவர் (பக்.17), ஆகட்டும் பார்க்கலாம் (பக்.19), வாடகை வீட்டில் இருந்தவர் (பக்.49), இலவசக் கல்வி (பக்.98), ஏன் வரி போடுகிறேன் (பக்.108) போன்றவை சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்.வாசகர்கள் ஒருமுறை படித்து நிறுத்த மாட்டார்கள். ஒன்று இரண்டு சம்பவங்களை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளாமலும் இருக்க மாட்டார்கள்.

நெப்போலியன் வாழ்வில்…:நுõலாசிரியர்: செவல்குளம் ஆச்சா. வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40. (பக்கம்: 42. விலை: ரூ.30).

நெப்போலியன் இளமைப் பருவம், ராணுவப் பணி, இல்லற வாழ்வு, அரசியல் சாணக்கியம், நீதி நிர்வாகம், பண்பு நலன்கள், ஆற்றிய பணிகள், தோல்வி ஏன்? கடைசி நாட்கள், அவர் ஒரு சகாப்தம் என சுவையாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஒரு புரட்சியாளர்:ஆசிரியர் முனைவர் ம.போ.குருசாமி, வெளியீடு: காந்திய இலக்கிய சங்கம், காந்தி மியூசிய வளாகம், மதுரை 625020.(பக்கம் 136; விலை ரூ.50 )

கர்ம யோகியாக வாழ்ந்த காந்தி கொள்கைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

உமார் கயாம்:நுõலாசிரியர்: நாரா நாச்சியப்பன். வெளியீடு: பிரேமா பிரசுரம், ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை24. (பக்கம்: 368. விலை: ரூ.78).

“ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும் எனத் தோன்றியவர் உமார் கயாம். தொடர்ந்தவர்கள் கண்ணதாசன், ஹரிவன்ஷ்ராய் பச்சன், கணிதம், ஜோதிடம், வானியல் என்றவற்றில் சிறந்தோங்கியவர் உமார். இவர் வரலாறு நாவலாக தவழ்ந்துள்ளது. ஒரு முறை படிக்கலாம்.

மகாகவி இக்பால்:நுõலாசிரியர்: ஆர்.பி.எம்.கனி. வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி) (பக்கம்: 208. விலை: ரூ.90).

“சாரே ஜகான் சே அச்சா’ எனத் தொடங்கும் இந்திய தேசியப் பாடலை எழுதிய இக்பாலின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறது இந்நுõல். மகாகவி எனப் போற்றப்படும் இக்பாலின் கவிதைகள் பலவற்றை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளது சிறப்பு.இக்பால் கேம்பிரிட்ஜில் படித்தவர் என்பதும் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதும் பலருக்குப் புதிய செய்திகள் ஆகும். எல்லாச் சமயங்களையும் பொதுமைப்படுத்தி இக்பால் பாடிய கவிதை ஒன்று.நான் கோவிலுக்கு மரியாதை செய்கிறேன் கஃபாவின் முன் அடி பணிகிறேன் என் மார்பில் பூணுõல் உண்டுஎன் கையில் ஜெபமாலை மிளிர்கிறதுஎன்று இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மூன்று மத ஒருமையைப் பாடியுள்ளார்.

நான்:நுõலாசிரியர்: இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன். வெளியீடு: வேங்கடம் பதிப்பகம், 12, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், மதுரவாயல், சென்னை600 095. (பக்கம்: 400. விலை: ரூ.90).
கோவி. மணிசேகரன் நாடறிந்த சிறந்த எழுத்தாளர். இசைக் கலையில் வல்லவர். வட மொழியிலும், ஆங்கிலத்திலும், பண்டைத் தமிழ்ப் பண்பாட்டிலும், ஆழ்ந்த பயிற்சி உடையவர். இவர் 800 சிறுகதைகளையும், 100 உரைநடைக் காப்பியங்களையும் எழுதியவர். இத்தனைச் சிறப்புக்களையும் பெற்ற இவர் தான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கிறார், புதுக் கவிதை வடிவில்! மொழி அழகுக்காகவும், கருத்துச் செறிவுக்காகவும் படித்து இன்புற வேண்டிய வரலாற்றுக் கவிதை நுõல்.
சிந்தித்தனர் சாதித்தனர் (101அறிஞர்களின் சாதனை வாழ்க்கைக் குறிப்புகள்): ஆசிரியர் : ஜி.ஜி.ஆர்., வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 65.00)

நோபில் வென்ற இந்தியர்: ஆசிரியர் : ஜா.சுஜாதா, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 30.00)
ஸ்டீபன் ஹாக்கிங் :ஆசிரியர்: ஜி.அழகர் ராமானுஜம், வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்துõர்641 001. போன்: 0422239 9614 / 238 2614. (பக்கம்: 104, விலை: ரூ.30).
நம்பிக்கை உழைப்பு பிறர் மனதைப் புண்படுத்தாத மன வலிமை இவற்றோடு வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு, முன் நிற்கும் ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை மற்றும் அவரது ஆய்வு முடிவுகளை, உரசி பார்க்கும் விஞ்ஞான மெய்ஞான நுõல் இது.உடல் தேடுவது இரை; மனம் தேடுவது இறை (பக்: 20), நொறுங்கிய பின்பும் நிமிர்ந்து நிற்றல் (பக்: 45), கடவுளை நோக்கிதான் தத்துவமும் விஞ்ஞானமும் செல்கிறது (பக்: 51), கட்டிய மனைவி பக்கம் இருப்பின் வெற்றி (பக்: 65), முழுமையைத் தேடுகின்றவருக்கு முரண்பாடான மனைவி (பக்: 80) என்ற பல இடங்கள் சுவாரஸ்யமானவை.

மாபெரும் புரட்சியாளர் மாசேதுங்:நுõலாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன். வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பழைய எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 128. விலை: ரூ.45).
சீனப் புரட்சியின் தந்தையான மாசேதுங், சீனாவின் மாபெரும் தலைவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாறு மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. படித்துப் பயன் பெறலாம்.

சச்சின் நம்பர் 1 : வெளியீடு : ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை. (விலை : 75.00)

வாழும்போதே ஒரு வரலாறானவர்கள் அரிதினும் அரிது. அவ்வவகையில் உலகிலேயே மிக அரியதொரு கிரிக்கெட் வீரராகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் வரலாறு.

மக்கள் நாயகன் அப்துல் கலாமுக்கு சலாம் : வெளியீடு : ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை. (விலை : 65.00)

இந்திய அறிவியல் இளைஞர்களின் லட்சிய கனவு நாயகனாக விளங்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு இந்த மணமிக்க மலர் ஒரு இனிய காணிக்கை.

தலைவர்கள் காட்டிய வழி : ஆசிரியர் : டாக்டர். கே.என். சரஸ்வதி, வெளியீடு : ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை. (விலை : 40.00)

காந்தி, நேரு, காமராஜ், அண்ணா ஆகிய தலைவர்கள் பற்றிய தொகுப்பு

அம்பானி சகோதரர்கள்:ஆசிரியர்; ஆலம் ஸ்ரீனிவாஸ் (ஆங்கிலம்) தமிழில் சுசி.திருஞானம். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை17. (பக்கம்:216. விலை:ரூ.87).

குருநிலப் போர் மண்ணிற்காக, ரிலையன்ஸ் குரூப் போர் சொத்திற்காக திருபாய் அம்பானியின் திருக்குமாரர்கள் முகேஷ், அனில் இடையே மூண்ட சொத்து அதிகார பிரச்னை உலகளவிலே பேசப்பட்ட ஒன்று. ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ச்சியாக செய்தியாளர் ஆலம் ஸ்ரீனிவாஸ் எழுதியவை ஒன்பது தலைப்புகளில் இந்நுõலில் தொகுக்கப்பட்டுள்ளது.நவம்பர் 2004ல் இருந்து ஜூன் 2005 வரை நடந்த ஒரு லட்சம் கோடி ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜிய உரிமைப் போர் எத்தனை எத்தனை கோடி மக்களின் வாழ்க்கைப் பிரச்னைக்கு கேள்விக்குறியானது என்பதை படம் பிடிக்கிறது. படிப்படியாக உண்மையை உடனுக்குடன் கண்டறிந்து தெரிவிக்க ஆசிரியர் பட்ட பாடு உண்மை வெளிப்பாடு. தனிப்பட்ட குடும்ப விஷயம் என விட்டுவிட முடியாமல், அரசியல், தேசிய பொருளாதார நல்லெண்ணம் கொண்டவர்கள் உட்பட பலர் தலையிட்டு சுமுக முடிவு வெளிப்பட்டதை பக்கத்திற்கு பக்கம் சுவைபட எழுதுகிறார் ஆசிரியர். “தி பாலியஸ்டர் ப்ரின்ஸ்’ திருபாய் அம்பானியின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு (பக் 175195) வளரத் துடிக்கும் இளைய சமுதாயத்திற்கு நற்பாடம்! வழிகாட்டி.
வியத்நாமின் வீரப்புதல்வன் ஹோ சி மின் :எழுதியவர்: எம்.ஏ.பழனியப்பன், வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பழைய எண் 24, கிருஷ்ணா தெரு (பக்கம்:டெமி128. விலை:ரூ.45).
பிரெஞ்சு, ஜப்பான், அமெரிக்க ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஒரு சின்னஞ்சிறு நாடான வியட்நாம் போராடி வெற்றி வாகை சூடியதற்குக் காரணம் ஆசியப் புரட்சியின் தலைவர் என்று கருதப்படும் ஹோசி மின். மாபெரும் புரட்சியாளரான இவரது வாழ்க்கை வெளிச்சத்திற்கு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் அப்பெரும் புரட்சியாளரின் புரட்சிகரமான வாழ்க்கையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
எம்.எஸ்., வாழ்வே சங்கீதம்:நுõலாசிரியர்: வீயெஸ்வி. வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, 2வது தளம், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை600 018. (பக்கம்: 144. விலை: ரூ.60).
“பாடுவது என்பது ஒன்று. பாடும்போது தன்னையே மறந்து கடவுளிடம் கரைந்து விடுவது என்பது வேறு. சுப்புலட்சுமி இதில் இரண்டாம் ரகம்’ என்று காந்தியாலும் (49), “இந்த இசை அரசிக்கு முன்னால் நான் ஒரு சாதாரண பிரதம மந்திரி தானே’ என்று நேருவாலும் (பக்.67), “சுப்புலட்சுமி, பிருந்தாவனத்து துளசி மாதிரி’ என்று காஞ்சிப் பெரியவராலும் (89) பரிபூரண ஆசி பெற்ற சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சுவையான சம்பவங்களுடன் சுவராஸ்யமாகப் படைத்துள்ளார் வீயெஸ்வி.தொழு நோயால் சுப்ரமணிய சிவா பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆறு மாத சேவகம் செய்த துணிச்சல் மிக்க தன் கணவர் சதாசிவம் பற்றி, “எனக்கு எதுவுமே தெரியாது. உங்களை மாதிரி நானும் ஒரு குழந்தையாத் தான் இன்னமும் இருக்கேன். நான் எங்கே போகணும், என்ன பண்ணனும்னு என்னுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்துக்கிட்டது மாமா தான். பாடறப்போ லயிச்சுப் பாடணும்னா அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சு பாடணும்னு எனக்குச் சொல்லித் தந்ததும் கூட அவர் தான்…’ (39).”மீரா’ புகழ் நடிகையான இவர் தான் இந்தியாவின் முதல் பத்மபூஷண் பெற்ற பெண்மணி, மியூசிக் அகடமியில் முதல் கச்சேரி செய்த பெண்மணி, ஐ.நா., சபையில் ஒலித்த கவிக்குயில். கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ்ந்த இந்த இசையரசி பற்றிய நுõலின் இறுதியில், “சிம்மம் அடங்கிவிட்டது. அதைத் தொடர்ந்து குயிலும் கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டது’ (131) என்னும் வரிகள் நம்மையும் அறியாமல் நம் கண்களைக் கலங்கச் செய்துவிடும். இசை மீது எம்.எஸ்.,க்கு எவ்வளவு பக்தியோ அந்த அளவு எம்.எஸ்., மீது தமக்கு பக்தி உள்ளது என்பதை வீயெஸ்வி இந்நுõல் வாயிலாக உணர்த்தியுள்ளார். நேர்த்தியான நடை, நிறைவான படைப்பு.
சங்கீத சக்ரவர்த்தி ஜி.ராமநாதன்:நுõலாசிரியர்: கலைமாமணி வாமனன். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை108. (பக்கம்: 304. விலை: ரூ.100).
நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்து அறுபத்து மூன்று ஆண்டு வரை திரையில் கர்நாடக இசையை மக்கள் இசையாக ஆக்கிய சங்கீத மேதையாக சங்கீத முடிசூடா மன்னராக விளங்கியவர் ஜி.ராமநாதன்.ஆர்யமாலா, உத்தமபுத்திரன், சிவகவி, ஹரிதாஸ் படங்கள் முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதலிய நுõற்றுக்கணக்கான படங்களில் நல்ல கருத்துப் பாடல்களுக்கு நாத சுகம் தந்த இசைநாயகர் ஜி.ராமநாதன் குறித்து கலைமாமணி வாமனன் இந்த அற்புத வரலாற்று நுõலை எழுதியுள்ளார். பத்தாண்டுகளுக்கு மேல் தகவல்கள் பல சேகரித்து தரமான வரலாற்று நுõலாக வடித்துள்ளார்.சென்ற தலைமுறையின் மேதைகளை இனம் காட்டும் நல்ல முயற்சியாக இந்நுõல் எழுதியது பெரிதும் பாராட்டுக் குரிய நன் முயற்சி.
நவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர் : வெளியீடு : ஸ்ரீ அன்னை மீனாக்ஷீ பப்ளிகேஷன், சென்னை. (விலை :50.00)
ஸ்ரீ ராமகிருஷ்ணர், வீரத் துறவி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறறில், இதுவரை வெளிச்சத்துக்கு அதிகமாக வராத சில அற்புதங்களின் தொகுப்பு இது. ஒரு பகுத்தறிவு பிளம்பு, ஒரு ஞானப் பழமாக முதிர்ந்தவரின் நெஞ்சுறுக்கும் சில சம்பவங்கள் இதோ!.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்:ஆசிரியர்: மதிஒளி, கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்துõர், சென்னை600016. (பக்கம்: 100. விலை: ரூ.30) தொலைபேசி:22310805
சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு மறைக்கப்பட்டது என்ற கருத்து மேலோங்கி வரும்போது, சிறுவ, சிறுமியர் அறிந்து கொள்ள மதிஒளி சரஸ்வதி இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார். தேசபக்தியும் தெய்வபக்தியும் ஒன்று. ருஷ்யாவிற்கு அவர் தப்பிய விதம் அழகுறச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நல்ல நுõல்.

நபிகள் நாயகம்:ஆசிரியர்: எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம், வெளியீடு: யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2.வடக்கு உஸ்மான் சாலை. முதல்மாடி, தியாகராய நகர், சென்னை600017.
இறைத்துõதர் புகழ் மிகவும் நுணுக்கம் வாய்ந்தது. இஸ்லாமியக் காவியமாக இந்த நுõல் மலர்ந்திருக்கிறது. முன்னுரையில் சிலம்பொலி செல்லப்பன் கூறியது போல “தமிழுள்ள தமிழ்’ படைப்பாக மலர்ந்திருக்கிறது.

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்:நுõலாசிரியர்: எஸ்.வி.ராமகிருஷ்ணன். வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை18. தொலைபேசி எண். 0442499 3448. (பக்கம்: 112. விலை: ரூ.65).
அரசாங்கத்தின் உயர்ந்த பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர், தம் இளம் பிராயத்தில் சந்தித்த, ரசித்த தெளிவுபெற நினைத்த பல விஷயங்களை 29 கட்டுரைகளாக இந்நுõலில் தொகுத்துள்ளார்.மவுன்ட்பேட்டன் சரியாக இரவு 11.58 மணிக்கு 14.08.1947 அன்று வெகு நாட்களாக நிலுவையில் வைத்திருந்த பாலன்பூர் நவாப் குறித்த மனுவை அனுமதித்துக் கையொப்பம் இட்டது (பக்.35) மிகவும் ரசிக்கத் தக்கதாக உள்ளது.அப்பா வக்கீலாக இருந்ததால் கிடைத்த மரியாதை (பக். 23), அக்பர் கங்கா ஜலம் மட்டுமே பருகி வந்தது (பக். 26), குடும்பத் தலைவனின் குறிப்புகள் (பக்.102) ஆகியவை வாசகர்களை வசீகரிக்கும்.
எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம்:ஆசிரியர்: கே.பி.ராமகிருஷ்ணன், எழுத்தாக்கம்: எஸ்.ரஜத், வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2.
“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!’

எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல் வரிகள் இவை. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.எம்.ஜி.ஆர்., பற்றியும், அவரது வள்ளல் தன்மையையும், அவரது திறமைகளைப் பற்றியும் எத்தனையோ பேர், எத்தனையோ புத்தகங்கள் எழுதினாலும், படிக்கப் படிக்க திகட்டாதவை அவை. இதில், லேட்டஸ்ட் வரவான இந்த புத்தகத்தில், இதுவரை கேள்விப்படாத பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதற்கு பக்கபலமாக வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படங்களும், புத்தகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது!கே.பி.ராமகிருஷ்ணன், தன் நினைவு பெட்டகத்திலிருந்து கூறிய விஷயங்களை எளிய நடையில் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்தளித்துள்ளார் எஸ்.ரஜத்.தினமலர் வாரமலர் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுõலான இது, எம்.ஜி.ஆரை பற்றி அறிந்து கொள்ள உதவும் நுõல்களில் முன்னுரிமை பெறும் என்பது நிச்சயம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் *கோபால கிருஷ்ண கோகலே * பண்டித ஜவகர்லால் நேரு *சர்தார் வல்லபாய் படேல் *மூதறிஞர் ராஜாஜி *கவிக்குயில் சரோஜினி தேவியார் *வினோபா பாவே*லால்பகதுõர் சாஸ்திரி( ஒவ்வொரு புத்தகத்தின் விலை ரூ.25)வெளியீடு : சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடெட்)1620, ஜெ., பிளாக் 16 வது மெயின் ரோடு, அண்ணா நகர். சென்னை600040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற தலைப்பில் இந்த நுõல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் சிறப்பாகத் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இராமலிங்க அடிகள் வரலாறு:நுõலாசிரியர்: ஊரன் அடிகள். வெளியீடு: சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், த.பெ.எண்.2, வடலுõர்607 303. கடலுõர் மாவட்டம். (பக்கம்: 720. விலை: ரூ.330).
அருட்பெருஞ்ஜோதியான வள்ளலாரின் வரலாற்றை, சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் எழுதி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கிறார். அடிகளார், தம்மை முழுவதுமாக சன்மார்க்க நெறிக்கும், அதன் அருமை பெருமைகளை உலகிற்கு உணர்த்தவும் ஈடுபடுத்திக் கொண்டவர். வள்ளலார் சுவாமிகளைப் பற்றி இவரைத் தவிர வேறு யாரால் மற்றவர்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொல்ல முடியும்? இந்த நுõல் எழுத முன்மாதிரியாக அவர் எடுத்துக் கொண்ட நுõல் பட்டியலில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வும், யாழ்ப்பாணத்து நல்லுõர் ஆறுமுக நாவலரும் என்று கூறியிருக்கிறார். இந்த இரு பெரும் அறிஞர்கள் தமிழுலகம் நன்கறிந்த மேதைகள்.இராமலிங்க அடிகள் எளிய குடும்பத்தில் பிறந்த உயர்ந்த ஆன்மிகவாதி. தெளிந்த சிந்தனை வழிப் பிறந்த துõய்மையான ஆன்மிகக் கருத்துக்கள், “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்’ என்ற பாரதியின் ஆவேசமும், “இடும்பை கூர் என் வயிறே’ என்ற அவ்வையின் எதிர்மறை ஓலமும் வள்ளல் இராமலிங்க அடிகளாரை எப்படி சிந்திக்க வைத்திருக்கும் என்பதற்கு “அணையாத அடுப்பு’ என்ற இரு சொற்களே போதுமல்லவா?திருவள்ளுவரின் “கொல்லாமை’ அதிகாரமும், சமண மதத்தின் ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற தத்துவமும், வள்ளல் பெருமானிடம் ஜீவகாருண்யமாக மலர்ந்து ஒளிர்வதை, அடிகளார் நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். சன்மார்க்கங்கள் உலகெங்கும் பல உண்டு. ஆனால், சமரச சன்மார்க்கம் என்றால் அந்த வடலுõரில் மட்டும் தான் உள்ளது.வள்ளலார் ஞானியா, யோகியா, சித்தரா, முனிவரா ஆன்மிகம் பேசும் பவுராணிகரா, கவிஞரா, சமூகப் பிரக்ஞை உள்ள ஆன்மிகச் சீர்திருத்தவாதியா எனப் பலவாறாக நம்மை சிந்திக்கத் துõண்டும் இந்த வரலாற்றுப் பதிவுகளை வாசிக்கிறோம். வரலாறு என்றால் தோற்றம் முதல் முக்தி வரை சொல்ல வேண்டுமல்லவா? வள்ளல் பெருமானாரின் “முக்தி’ என்பது ஜோதியுடன் கலந்து கரைந்து போய்விடுவதாக முடிகிறது. இந்தத் தகவலை ஆதாரப்பூர்வமாக, அதிகாரப்பூர்வமாக அடிகளார் இந்த நுõலில் பதிவு செய்திருக்கிறார்.வள்ளல் பெருமானாரின் குடும்பம், ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறத்தை நினைவுபடுத்தும் இல்லற துறவறம், அவர் சென்று வணங்கிய இறைத் தலங்கள், ஆழ்ந்த சிந்தனைகளின் பலனாக அவருள் நிகழும் வியக்கத்தகு தெய்வ நம்பிக்கைகள், ஏற்றுக் கொண்ட பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய அவர் எதிர்கொண்ட சிரமங்கள்… என வரலாறு கங்கை நதியென பொங்கிப் பிரவாகமெடுத்துச் செல்கிறது.இந்த மூன்றாம் பதிப்பு, 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது. அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு இந்த நுõலை அர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகள்.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை ஊரன் அடிகள் செய்து முடித்திருக்கிறார். தமிழுக்கு கிடைத்த அரிய வழிகாட்டி நுõல்.
வ.வே.சு. அய்யர் : ( ஒரு புத்தகத்தின் விலை: ரூ.25)வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடேட்), 1620,ஜெ., பிளாக் 16 வது மெயின்ரோடு, அண்ணாநகர். சென்னை.600 040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற வரிசைத் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இராஜேந்திர பிரசாத் : ( ஒரு புத்தகத்தின் விலை: ரூ.25)வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடேட்), 1620,ஜெ., பிளாக் 16 வது மெயின்ரோடு, அண்ணாநகர். சென்னை.600 040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற வரிசைத் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பூர் குமரன் * திரு.வி.க., * கர்மவீரர் காமராஜர் * பெரியார் ஈ.வெ.ரா.,* பேரறிஞர் அண்ணா * ஏ.பி.ஜே.அப்துல்கலாம்( ஒவ்வொரு புத்தகத்தின் விலை: ரூ.25)வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடேட்), 1620,ஜெ., பிளாக் 16 வது மெயின்ரோடு, அண்ணாநகர். சென்னை.600 040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற வரிசைத் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
கர்மவீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும் : நுõலாசிரியர்: எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன். வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு<, பாண்டி பஜார் (பக்கம்: 144. விலை: ரூ.50).
பெருந்தலைவர் காமராஜ் என்றவுடன் எல்லாருக்கும் இலவசக் கல்வியும் இலவச மதிய உணவும் தான் முதலில் தோன்றும். எல்லாரும் படிக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு ஆதாரமாகத் தான் அவற்றை அவர் செய்தார்.காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களும் காமராஜரை ஏற்றுக் கொண்டனர் என்றால் அது அவரது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி என்பதை நுõலாசிரியர் இந்த நுõலில் தெரிவித்துள்ளார். காமராஜரைப் பற்றி அறிந்து கொள்வதற்குரிய ஒரு கையேடாக இந்த நுõல் அமைந்துள்ளது.
எனது வானின் ஞானச்சுடர்கள்(வாழ்க்கையின் குறிக்கோள் குறித்த உரையாடல்)ஆசிரியர்கள்: ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், அருண் கே.திவாரி. தமிழில்: மு.சிவலிங்கம். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம் (பக்கம்: 216. விலை: ரூ.75).
நமது நாட்டின் முதல் குடிமகன் அப்துல் கலாமும், அருண் கே.திவாரியும், இளைய சமுதாயத்தினர் முன்னேறவும், நல்வாழ்வு நடத்தவும் பல நுõல்கள் எழுதியுள்ளனர். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போல் அமைந்துள்ள இந்நுõல், நமது நாட்டின் ஆன்மிக அடிப்படையில் வாழ்க்கை அணுகுமுறை, தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு வழிகாட்டிகள் மற்றும் இவற்றில் இருந்து அறிந்த சாராம்சம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.இந்நுõலில் உள்ள ஒவ்வொரு வரியும் படித்த உடன் சிந்தித்து, அதிலுள்ள ஆன்மிக ஆழத்தை அறிந்து சுவைக்க வேண்டிய ஒன்று. “முடிவில்லாமல்’ என்ற முதல் பகுதியில், நமது நாட்டின் அடிப்படைக் கலாசாரமான “ஆத்மாவைத் தேடுதல்’ என்பதை வெவ்வேறு பரிமாணங்களிலும், வெவ்வேறு மதக் கோட்பாடுகளிலும் இருந்து விளக்குகிறார். மனித ஜீவன் என்பதற்கு, “ஆன்மா’ என்ற வார்த்தை சிறந்த விளக்கம் தருவதாக அமைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி அதற்கு ஆதாரமாக “அஷ்டவக்ர கீதையில்’ அஷ்டவக்கிரர் கூறுவதை குறிப்பிடுகிறார் (பக். 21).மிகப் பெரிய தொழில்நுட்ப வல்லுனர் என்பதினால் அறிவியல் மூலமும் ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்பதை திவாரி எடுத்துரைப்பதன் மூலம், அறிவியலும், ஆன்மிகக் கருத்துக்களும் மாறுபட்டவை என்ற தவறான கருத்துக்களைத் தகர்க்கிறார். உருவகங்களைப் பற்றிக் கூறும்போது, “மகாபாரதத்தில் பெரிய யுத்த களமாகச் சித்தரிக்கப்பட்டு உள்ள குரு÷க்ஷத்திரம் நமது உடலுக்குள்ளேயே இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறார்.இந்நுõலுக்கு மேலும் மெருகு ஊட்டுவது, ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ள கலாமின் கவிதைகள், ஆழ்ந்து படித்து, சிந்தனை செய்து அனைவரும் சுவைக்க வேண்டிய ஒரு நுõல். இந்நுõலை அடிப்படையாகக் கொண்டு கல்லுõரிகளில் முக்கியமாக தத்துவத் துறையில் கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்தால் அனைவரும் இதிலுள்ள ஆழமான கருத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.
சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்: நுõலாசிரியர்: எம்.கே.ஜமால் முகம்மது. வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ் (பக்கம்: 128. விலை: ரூ.60).
பதினேழாம் நுõற்றாண்டில் முகவை மாவட்டத்தில் முத்தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞானக் கவியாய் திகழ்ந்த பெருமகனார் ஜவாதுப் புலவர். “சரமம் கவிச்சக்கரவர்த்தி ஜவாது’ என எல்லாராலும் போற்றி வணங்கப்பட்ட மகான். தமிழ்க் கவிபாடி வாதில் வெல்லும் வல்லமை பெற்றவர். நபிகள் நாயகப் பெருமானின் பரிபூரண பரிசுத்த நெறியாம் “தீன்’ நெறிக் கொள்கைகளை மையக் கருவாய் அமைத்த பின்ளைத் தமிழ் நுõல் தான் இந்நுõல். மகான் ஜவாது புலவர் அந்தாதி, பிள்ளைத்தமிழ், பஞ்சரத்னமாலை, சீட்டுக்கவிகள், சித்திரக்கவிகள், தனிப்பாடல்கள், கலம்பகம், வண்ணக்கவி எனப் பல பா வகைகளில் பா வலிசுகளில் பாடுவதில் வல்லவர்.ஜவாது புலவரின் வாழ்வியலில் நிகழ்ந்த அற்புதங்கள், புலமை வெளிப்பாடு போன்ற தகவல்களோடு அவரது பிள்ளைத் தமிழையும் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். இவர் மகான் ஜவாதுப் புலவர் பெருமானின் வம்சாவளியில் வந்த பெயரர். இஸ்லாமின் பல நுணுக்கமான செய்திகளை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார்.
முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் : நுõலாசிரியர்: ஏ.ஆர்.பெருமாள். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துக்கிருஷ்ணன் தெரு (பக்கம்: 408. விலை: ரூ.150).
தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் தன் இரு கண்களாகக் கொண்டு, இல்லற வாழ்வை ஏற்காமல், சமூகத் தொண்டிற்காகவே வாழ்ந்து, என்றென்றும் நினைவில் நின்று வழிகாட்டும் தேவரின் இனிய வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் நுõல்.

நேதாஜியின் வீரப்போரில் தேவருக்கு இருந்த ஈடுபாடும், காங்கிரஸ் மேல் கொண்ட அன்பும், வீர சாவர்க்கரின் தீவிர தேசத் தொண்டுக்குத் துணை நின்றதும், தொழிலாளர், விவசாயிகளுக்காக போராடியதும் மிகவும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

எவரையும் ஈர்க்கும் மிடுக்கான தோற்றமும், எதற்கும் அஞ்சாத எடுப்பான பேச்சும், எவருக்கும் நியாயம் தேடித் தரும் எழுத்தாற்றலும் இந்த நுõலில் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன. பாரதம், ராமாயணம் இரண்டையும் மேற்கோள் காட்டி பேசுவதுடன், முருகன் கையில் உள்ள வேல் அணுகுண்டை விட சக்திமிக்கது என்பது போலவும் பேசும் ஆற்றல்களை, இந்நுõலில் பல இடங்களில் காண முடிகிறது.

கொலை வழக்கில் சிக்கி, நிரபராதியாய் வெளிவந்து, டில்லி பார்லிமென்ட், தமிழக சட்டசபை ஆகியவற்றில் துணிவுடன் பேசியதும், தனது 54 வயது வரை பக்தியுடன் அவர் ஆற்றிய தொண்டும் இந்நுõலில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஒரு ஜாதியின் தலைவராக அவரை இன்று சிலர் ஆக்க நினைத்தாலும், தமிழ் ஜாதியின் மாபெரும் தலைவர் தான் அவர் என்றும் என்பதை இந்த நுõல் நின்று நிலைநாட்டும்.

கல்பனா சாவ்லா : ஆசிரியர்: கே.ஜீவபாரதி, வெளியிட்டோர்: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் மொத்த பக்கம்: 173, விலை: ரூ.50.
அமெரிக்க குடியுரிமை பெற்று, அங்கேயே வாழ்ந்து, பெண்களால் இயலாது என்று மற்றவர்கள் எண்ணியதை எல்லாம் இயலும் என்று வாழ்ந்து காட்டிய கல்பனா சாவ்லா பற்றிய வாழ்க்கை குறிப்பு நுõல். கல்பனா சாவ்லா பற்றி தமிழில் வெளியான முதல் நுõலும் இதுவே.

அறிவியல் அறிஞர் : ஆசிரியர்: தி.சு.கலியபெருமாள், வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், “கோனார் மாளிகை’ 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை14. (பக்: 70, விலை: ரூ.20)
மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜேம்ஸ் சிம்சனின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கியுள்ளார் நுõலாசிரியர். டாக்டர் ஜேம்ஸ் சிம்சனின் கண்டுபிடிப்பை பற்றியும், அதற்காக அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பதைப் பற்றியும் அறியும்போது, மருத்துவ உலகிற்கும், மக்களுக்கும் எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

மகப்பேறு மருத்துவத்தில் பயன்படுத்துவதற்காக புதுவகை இடுக்கி ஒன்றையும், காயங்களைக் குணப்படுத்த “அக்குப்ரஷர்’ என்ற புதிய செயல்முறை உருவாவதற்கும் சிம்சன் பாடுபட்டுள்ளார்.

இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாமும் அறிந்து கொள்வதோடு, நம் குழந்தைகளும் அறிந்துகொள்ள செய்யவேண்டியது மிக அவசியம்.

நான் இவர்கள் : ஆங்கில மூலம்: ஆர்.எம்.லாலா. தமிழில்: ராணி மைந்தன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 312. விலை: ரூ.150).
“ஹிம்மத்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்.எம்.லாலா, அவர் சந்தித்த பிரபலமான 26 பேருடைய தரமான வாழ்க்கை பற்றி ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் தந்துள்ளார் ராணி மைந்தன்.
“நான் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் சமூகத்திலிருந்து பெற்றதை சமூகத்திற்கே திருப்பித் தர வேண்டும் என்பது தான் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது’ அஸிம் பிரேம்ஜியின் உணர்வு இது.

“பிரார்த்தனையின் அழகிய விளைவு மவுனம். வாய் மவுனம் மட்டுமின்றி இருதயம், கண்கள், காதுகள், மணம் ஆகியவற்றின் மவுனம் பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதை நான் ஐந்து மவுனங்கள் என்பேன்’ என உபதேசித்தார் அன்னை தெரசா.

“ஏழைகளுக்காக பணியாற்றுவது உள்பலம் தருகிறது. அவர்கள் குப்பையில் இருக்கும் மாணிக்கங்கள்’ என்பார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

“தினமும் காலையில் ஒரு நல்ல நுõலைப் படித்து விட்டு அந்த நாளைத் தொடங்கு’ நானி பல்கிவாலாவின் அறிவுரை இது. இவ்விதமாக உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குறிப்புகளும் சிந்தனைகளும் அழகுற எழுதப்பட்டுள்ளன. இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் நுõல்.

திருப்பூர் செதுக்கிய சிற்பிகள் : ஆசிரியர்: டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியம். வெளியீடு: திருப்பூர் மக்கள் மன்றம், மங்கலம் சாலை, திருப்பூர்641 604. (பக்கம்: 408. விலை: ரூ.100)
திருப்பூர் எழுத்தறிவாலயம் வழியாக டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியனாரால் தொகுப்பட்ட ஒரு அற்புதமான நுõல். தமிழகத்தின் தலை சிறந்த தொழில் வளம் நிறைந்த நகரங்களில் ஒன்று திருப்பூர். திருப்பூர் என்று உச்சரித்தாலே நமக்கெல்லாம் கொடி காத்த குமரன் தான் நமது நினைவலைகளில் நிழலாய் இருப்பார். இருந்தாலும் இந்நுõலைப் படித்துணர்ந்த பிறகு திருப்பூரின் சாதனையாளர்கள் பட்டியல் வாசகனை வியக்க வைக்கும். திருப்பூர் தியாகிகள் (50) விடுதலை வேள்வியில் பங்கு பெற்றோர் (34) இன்றைக்கும் வாழும் வரலாறாக நிற்கின்ற பெருமக்கள் (9) கல்விக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்கள்(6) அரசியல் அரங்கில் பங்கு பெற்று அப்பழுக்கற்ற நேர்மையையும் சத்தியத்தையும் கடைப்பிடித்து மக்கள் தொண்டே மகேஸ்வரன் பணி என பணியாற்றிய அரசியல்வாதிகள் (17) பொதுத் துறையிலே சாதனை செய்து திருப்பூர் நகரை வளம் கொழிக்கச் செய்த நல்லுள்ளங்கள் (4) திருப்பூரை அடுத்த தொழில் ஊரான வெள்ளை கோவிலில் உள்ள சாதனையாளர்கள் (7) என மிக மிக அற்புதமாக சுருக்கமாக மொத்த சாதனையாளர்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர். டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியம் பதினெட்டு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து மானுடத்தை உயர்த்திட நாளெல்லாம் உழைப்பதுடன் பல அறக்கொடைகளுக்குச் சொந்தக்காரர்.
இந்நுõலைப் படிக்கும் போது நம்மை பலரது வாழ்வியல் நிகழ்வுகள் வியக்க வைக்கிறது. குறிப்பாக 94 வயதிலும் தளராது நாட்டு நலம் விரும்பும் கல்வித் தந்தை ஆர்.ஜி.எஸ்., (பக். 83), தியாகி குமரன், (சென்னிமலை தியாகி குமாரசாமி) (பக். 112), தியாகி. சுந்தரம்பாள் (பக் 209). தியாகி பி.ராமசாமி (பக். 225) என பல சாதனையாளர்களது வாழ்வியல் நிகழ்வுகள் நம்மை நெகிழ வைக்கிறது. தனிமனித வரலாறு, சமுதாய வரலாறு, திருப்பூர் நகர் வளர்ச்சியென நுõற்றுக்கணக்கான செய்திகள் அடங்கியது இந்நுõல். திருப்பூர் கலைக்களஞ்சியம் எனப் பெருமையாகப் பேசப்படும் இந்நுõல் என்பது உறுதி. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இது போன்ற ஒரு நுõல் உருவாக வேண்டும். நல்ல கட்டமைப்பு,

வழவழப்பான தாள்கள். விலையோ மலிவு. ஒவ்வொருவரும் வாங்கி படித்துப் பயன்பெற வேண்டிய நுõல்.

ராஜாஜி வாழ்வில் சுவையான சம்பவங்கள் : ஆசிரியர்: கார்த்திகேயன். வெளியீடு:பாலா புக்ஸ், ஜி.4, பாலகிருஷ்ணா அபார்ட்மென்ட்ஸ், 8/97, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை94. (பக்கம்: 40. விலை: ரூ.15)
மலிவு விலை நுõல் வரிசையில் வெளியான இந்நுõலில் ராஜாஜி வாழ்வின் 37 சுவையான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஸ்ரீ குருஜி : தொகுப்பு: டி.வி.லட்சுமி நாராயணன், வெளியீடு: மாதவ முத்ரா, 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை.600 031. தொலைபேசி: 28360874. (பக்கம் 144 விலை ரூ.30)
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜி. சொல்லும் செயலும் இணைந்த தலைவராக வழிகாட்டி அந்த அமைப்பைப் பெரிதாக வளர்த்தவர். அதேபோல இன்றைய பா.ஜ., வின் முன்னோடியான ஜனசங்கம், பாரதிய மஸ்துõர் சங்கம், விஸ்வ இந்து பரிஷத் என்று பல்வேறு இயக்கங்கள் உருவாக்கக் காரணமானவர். இன்று “சங்கபரிவார்’ என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தலைவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் வேறு விஷயம்.
அவரது நுõற்றாண்டு விழாவை ஒட்டி இந்த நுõல் வெளியிடப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அத்தலைவர் தமிழகத்திற்கு வந்த போது நிகழ்ந்த சில செய்திகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜி.டி.நாயுடு ஆகியோருடன் இருந்த அவரது நிழற்படங்களும் இதில் அடக்கம்.

இப்புத்தகத்தில் அவரது எளிமை, மற்றும் கூர்த்த அறிவு பற்றிய சில தகவல்கள் இருப்பதுடன் அவர் தமிழக அன்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் உள்ளன. அதில் , “தமிழ் வளமான மொழி: நமது கலாசார தலைமுறையின் அரும் பொக்கிஷம் அதன் இலக்கியத்தில் இருக்கிறது’ என்ற தகவலைக் (பக்கம் 115 ) காணலாம்.

எளிமை, துõய்மை, அதே நேரத்தில் தேசத்தை நேசித்துச் செயல்பட்டதில் முன்னோடியாக வழிகாட்டிய அவர் மறைந்தபோது பார்லிமென்ட்டில் அஞ்சலி செலுத்தினார் இந்திரா காந்தி என்பது வரலாறு.

ஆனால், இப்புத்தகத்தில் அவரது சிறப்புகள் பற்றிய வரலாற்றுக் கருத்துக்கள் கொண்ட சிறப்புத் தகவல்கள் சேர்க்கப்படக் காணோம். ஒட்டுமொத்தமாக ஸ்வயம் சேவகர்கள் என்ற அடைமொழியுடன் சேகரிக்கப்பட்ட தகவல் இருக்கிறதே தவிர, சமூகத்தில் அவர்களுக்குத் தனிப்பட்ட அந்தஸ்து என்ன என்ற விவரம் சரியாக இல்லாததும் தகவல்களின் திண்மையை ஒளி மங்கச் செய்து விடுகிறது. இதையடுத்த பதிப்பில் மாற்றுவார்கள் என நம்பலாம்.

செந்தமிழ் வளர்த்த திரு.வி.க., (வாழ்க்கைச் சுவடுகள்) : ஆசிரியர்: முனைவர் வே.க.வனசாட்சி, தமிழ்மண் பதிப்பகம், 2,சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர்,சென்னை17. ( தொலைபேசி: 24339030. விலை ரூ.15 )
“தமிழ்த் தென்றல் திரு.வி. க., வின் பெயர்த்தி நுõலாசிரியர். பற்றற்ற தன்மையும் ,குற்றமற்ற உள்ளமும் கொண்ட அறிஞர், பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, நிறைகுணத்தவர் என்ற பல்வேறு நற்குணங்களுக்குச் சான்றாக வாழ்ந்த மாமனிதர் திரு.வி.க.,வின் சிறப்பைக் கூறும் கையேடு.
வள்ளுவமாய் வாழும் வள்ளல்கள் : நுõலாசிரியர்: நல்ல. அறிவழகன். வெளியீடு: வானதி பதிப்பகம் (பக்கம்: 436. விலை: ரூ.200).
நம்மோடு இன்று வாழ்ந்து வரும் ஏழு அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் மிக அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த நுõலில். ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும், ஆற்றலையும், எளிய நிலையிலிருந்து உழைப்பால் மட்டுமே முன்னேறி சமுதாயத்தின் மிகப் பெரிய நிலையை இவர்களால் எப்படி எட்ட முடிந்தது என்பதை ஏராளமான இலக்கிய மேற்கோள்களுடன் சுவையாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த பெருமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பக்க பலமாய் திருக்குறள் மற்றும் பல அற நுõல்களின் கருத்துக்கள் விளங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி குறள் வழி நின்று வாழும் இவர்கள் வள்ளுவமாய் வாழும் வள்ளல்கள் என்று பாராட்டியிருக்கிறார். வாழ்க்கை வரலாற்றோடு ஆசிரியர் எடுத்தாளும் இலக்கிய மேற்கோள்களையும் ஒரு சேரப் படிக்கும்போது இனிய பல இலக்கிய மலர்களையும் நுகரும் இலக்கிய இன்பமும் கிட்டுகிறது.

இலட்சியப் போராளி நெல்சன் மண்டேலா : நுõலாசிரியர்: செவல்குளம் ஆச்சா. வெளியீடு: சுரா புக்ஸ் (பி)லிட்., 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை40. (பக்கம்: 68. விலை: ரூ.30)
அகிம்சையை ஆயுதமாக ஏந்தி விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்தவர் மகாத்மா காந்தி. அதே அறவழியில் தென்னாப்ரிக்காவில் செயல்பட்டவர் தியாகசீலர் நெல்சன் மண்டேலா. அந்த ஒப்பற்ற மனிதரின் போராட்ட வரலாற்றை சுருக்கமாக இந்நுõலில் தந்துள்ளார் ஆசிரியர்.
ஆசிரியரின் நுõறாவது நுõல் என்ற பெருமையும் இந்த நுõலுக்கு உண்டு.

சிந்தனையாளர் மாண்டெயின்: பக்கங்கள் 108; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
மனிதனின் மனதையும் வாழ்வின் இன்பத்தையும் பற்றிச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் கன்பூசியஸ்: பக்கங்கள் 148; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
அறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும் பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் சா அதி: பக்கங்கள் 148; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
நீதிநெறி நெறிகளையும் தத்துவங்களையும் கதைபோல் கூறிச் சிந்தனைக்கு ஒளி அளித்தவர். பக்கங்கள் 148

சிந்தனையாளர் அரிஸ்டாட்டில்: பக்கங்கள் 168; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
சிந்தனை ஏன் எனச் சிந்தித்தவர்
சிந்தனையாளர் ஐன்ஸ்டைன்: பக்கங்கள் 148; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து அற்புதக் கோட்பாடுகள் வகுத்தவர்.
சிந்தனையாளர் எமர்சன்: பக்கங்கள் 128; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.20
உலகமும் மனிதனும் ஏன் எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் ரூஸோ: பக்கங்கள் 112; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
மனிதன் சுதந்திரமாக எந்தவித சமுதாயத்தில் வாழ்வது எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் நியட்ஸே: பக்கங்கள் 208; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.33
மனிதனுக்கு அப்பால் மகாமனிதனின் வருகையையும் நன்மை தீமைகளுக்கு

அப்பால் வலிமையையும் பற்றிச் சிந்தித்தவர்.

சிந்தனையாளர் டார்வின்: பக்கங்கள் 144; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.24
உயிரினத்தில் மனித மூலம் எப்படி உண்டாயிற்று எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் பிளேட்டோ: பக்கங்கள் 108; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
மனிதன் எந்த அரசியலில் எந்த விதமாக எதற்காக வாழ்வது எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் கார்ல்மார்க்ஸ்: பக்கங்கள் 120; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.22
பொருளாதார விடுதலையே மனிதகுலம் மாண்படைய வழி எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் பெஞ்சமின் பிராங்ளின்: பக்கங்கள் 152; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.32
தனிமனிதனின் முன்னேற்றத்தையும் தேசமுன்னேற்றத்தையும் பற்றிச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் இங்கர்சால்: பக்கங்கள் 96; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.20
பகுத்தறிவு ஏன் எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் வால்டேர்: பக்கங்கள் 166; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.35
சிந்தனை சுதந்திரத்தையும் சிந்தனைகள் அனைத்தையும் பற்றிச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் மாக்கியவெல்லி: பக்கங்கள் 160; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
எந்த ஆட்சியும் நிலைபெறக் கூடிய வழி வகைகள் எவை எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் ப்ராய்டு: பக்கங்கள் 160; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.28
கனவுகள், காதலுறவு, உள்ளுணர்வு, மன இயக்க ஆய்வு முதலானவற்றை பற்றிச் சிந்தித்தவர்.
அம்பேத்கர் ஒரு சகாப்தம்! : நுõலாசிரியர்: டாக்டர் வி.எம்.மவுரியா, வெளியீடு: ராஜகிரகம், 49, நாராயண மேஸ்திரி முதல் தெரு, வில்லிவாக்கம், சென்னை49. (பக்கம்: 128. விலை: ரூ.60)
இந்திய அரசமைப்பு சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்கர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு நுõல். அம்பேத்கர், சமுதாய முன்னேற்றத்துக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளார் என்பதை விளக்கமாக எடுத்துரைக்கிறது இந்நுõல். அம்பேத்கர் பற்றி அறியாதவர்களும், மாணவர்களும், மற்றவர்களும் படித்து அறிய வேண்டிய நுõல்.
கலை உலக சக்ரவர்த்திகள் (பாகம்2): நுõலாசிரியர்: கலைமாமணி எஸ்.எம்.உமர். வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 430. விலை: ரூ.200)
கலை உலகச் சக்ரவர்த்திகள் முதல் பாகத்தின் மூலம் நம்மைச் சிலிர்க்க வைத்த உமர், இந்த இரண்டாம் பாகத்தின் மூலமும் நம்மை பரவசப்பட வைத்திருக்கிறார்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ரஞ்சன், கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, கொத்தமங்கலம் சுப்பு, டி.ஆர்.ராஜகுமாரி, நடிகையர் திலகம் சாவித்திரி ஆகிய பதின்மரைச் சித்தரிக்கும் நுõல் இது.

பாகவதர் காலத்தில் இருந்தே, கலை உலகத் தொடர்பு உள்ளவர் உமர். அதனால், தான் நேரில் பார்த்த நிகழ்வுகளையும் இதில் சேர்த்திருக்கிறார். இவர் சொல்லும் பல தகவல்கள் புதுமையானவை.

உதாரணமாக, நிருபர் கேட்கிறார்: உங்க நாடகங்களில் அன்றாட அரசியலைப் பற்றி எல்லாம் அலசி எடுக்கறீங்களே, பத்திரிகை படிக்க உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?

எம்.ஆர்.ராதா பதில் சொல்கிறார்: பத்திரிகையா? நான் பத்திரிகையே படிப்பதில்லை. எனக்கு படிக்கவே தெரியாது. எழுத்துக்களை கம்போஸ் செய்வேன். அதாவது கொட்டை எழுத்துக்களை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். நான் படிச்சதெல்லாம் உலக அனுபவம் என்ற படிப்பு தான் வேறே பள்ளிக்கூடத்துக்கே நான் போனதில்லே!

லிங்கம்: ஆசிரியர்: பா.ராஜநாராயணன்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.85.
சாதாரண கபடி வீரனாக வாழத் துவங்கி பரபரப்பான தாதாவாக உருவெடுத்து கோரமான முடிவைச் சந்தித்த லிங்கத்தின் கதை. இந்த மண்ணில் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுக்கும் எவரும் ஒரு கணம் நிதானித்து நல்வழியில் திரும்ப இந்த கதை உதவும். இதை வாசிக்கும் எவரும் வன்முறையை நேசிக்க முடியாது.
நம்பர் 1: ஆசிரியர்: என்.சொக்கன்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.50.
இந்த உலகம் ஜெயிப்பவர்களுக்கானது. இன்னும் நுணுக்கமாக சொல்வதானால் சாகசங்கள் செய்யத் துணிகிறவர்களுக்கானது. சம காலத்தில் உலக அளவில் அப்படி துணிந்து, சாதித்த நம்பர்1 வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவே இந்த புத்தகம். இந்த சாதனை சரித்திரம் நம்பர் ஒன் ஆக ஆசைப்படும் அத்தனை பேரையும் உற்சாகப்படுத்தும்.
நெருப்பு மலர்கள்: ஆசிரியர்: ஞாநி; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.55.
பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டு கிடந்த பெண் சமுதாயத்திற்கு அடிப்படை உரிமைகளைப் பெருவதற்கு எண்ணற்ற இன்னல்களை சந்தித்த பெண்களின் பெயர்கள் நமது பாட புத்தகங்களில் கூட இல்லை. சரித்திரத்தில் தொலைக்கப்பட்ட அந்த சாதனை பெண்களின் தியாக வரலாறுகளின் தொகுப்பே இந்த நெருப்பு மலர்கள்.
என் கதையும் கீதமும்: ஆசிரியர்: சரசு தாமஸ்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. விலை: ரூ.60.

ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் இயக்கத்தை இழந்து, நாற்பது ஆண்டு காலமாக ஒற்றைப் படுக்கையே உலகமென வாழந்து கொண்டிருக்கும் சரசு தாமசின் இந்த சுய சரிதை மனதை வருடிச் செல்லும் ஓர் இனிய கீதத்தை கேட்ட அனுதாபத்தை உண்டாக்கும். உங்கள் கவனத்திற்கு ஒரு புதிய உலகம்
சிகரம் தொட்ட சச்சின்: ஆசிரியர்: ரமேஷ் வைத்யா/ வள்ளி; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை ரூ. 50

உலக அளவில் பிரபலமான இந்தியர்கள் வரிசையில், மிக இள வயதிலேயே அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து சிகரம் தொட்டவர் சச்சின். அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள், திருப்பு முனையாக அமைந்த ஆட்டங்கள், அவரது சாதனைகள் என எல்லாவற்றின் தொகுப்பு இது. உத்வேகம் ஊட்டும் அவரது வாழ்க்கை புத்தகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
டூரிங் டாக்கீஸ்: ஆசிரியர்: சேரன்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ. 100.

எங்கிருந்தோ வாழ்க்கையைத் தேடி கனவுகளின் வாசலான சென்னைக்கு தினம் தினம் பலர் வந்து கொண்டே இருக்கிறார்கள். சுழன்றடிக்கிற யதார்த்த சூறாவளியில் அடித்துப் பிடித்து நீந்தி எதிர்நீச்சல் போட்டு கரையேறிய ஓர் இயக்குநரின் வாழ்ககையே இந்த டூரிங் டாக்கீஸ். இது நம் எல்லோருக்குமான நம்பிக்கை விதை.
கத்தியின்றி ரத்தமின்றி…!: ஆசிரியர்: லாரா கோப்பா; விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.95.

ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் பலரின் வாழ்வில் ஒளியேற்ற தம் வாழ்வில் பல போராட்டங்களை செய்த சுதந்திர போராளிகளான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தம்பதியினரின் ஈரமும் வீரமும் மின்னும் வீர வரலாறு இது. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக காந்திய வழியில், அகிம்சை முறையில் போராடி வரும் இந்த தம்பதியின் வாழ்க்கை நமக்கான வழிகாட்டியாக இருக்கிறது. அவர்கள் முன்னால் செல்கிறார்கள்; நாம் பின்தொடர்ந்தால் போதும்.
ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு : நுõலாசிரியர்: ஒர்சே மா.கோபாலகிருஷ்ணன். வெளியீடு: நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை20. (பக்கம்: 600. விலை: ரூ. 230)

நுõலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நுõலாசிரியர் குறிப்பட்டுள்ளார். பாரிசில் தேசிய நுõலகத்தில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்துப் பல புதிய தெரி வுகளை இந்நுõலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

கடந்த 1709 முதல் 1761 வரை புதுச்சேரி யில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவப் படத்தையும் இந்நுõலில் வழங்கியுள்ளார். மேலும் பாரிசில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை அப்படியே ஒளிப்படமாக இந்த நுõலில் வெளியிட்டுள்ளதும் சிறப்பு ஆகும்.

24.4.1752 முதல் 08.04.1753 வரை உள்ள ஓராண்டுக்குரிய நாட்குறிப்பு மட்டும் இந்த நுõலில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக நாட்குறிப்பில் இடம் பெறும் பெயர்களைத் தொகுத்து அவற்றின் பக்கங்களையும் குறிப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

1752 முதல் 1753 வரை தமிழகத்திலும் புதுவையிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய நினைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் இந்த நுõல் உதவியாக இருக்கும். நுõலாசிரி யர், பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வரலாற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சிறந்த முறையில் நுõலைப் பதிப்பித்திருக்கிறார்.

நுõலாசிரியர் இந்த நுõலுக்கு வழங்கியுள்ள விரிவான முன்னுரை அவரது உண்மை அறிந்து பதிப்பிக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.

மலரும் நினைவுகள்: நுõலாசிரியர்: இந்திரா காந்தி. தமிழாக்கம்: கி.வேங்கட சுப்ரமணியன். வெளியீடு: பூரம் பதிப்பகம், பு.எண்.2, ப.எண்.59, ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 106. விலை: ரூ.30).

இந்திரா காந்தி மலரும் நினைவுகளாக பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள். மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்வராஜ் பவனின் கதை, குழந்தைப் பருவம், தன் பதினாறாவது வயது, சாந்தி நிகேதனில் வாழ்க்கை, சிறை நினைவுகள், தாயாக இருப்பது பற்றி, பாபுவைப் பற்றிய நினைவுகள், ஜவகர்லால் நேரு என்ற தலைப்புகளில் தன் வரலாறு சுவைபட கூறப்பட்டுள்ளது. சில விளக்கங்களுக்கு விடைகள் மனதை தொடுகிறது. அனைவரும் படித்து மகிழத்தக்க சிறந்த நுõல். இந்திரா காந்தியை நேரில் சந்தித்து பேசிய உணர்வை இந்நுõலைப் படிப்பவர்கள் உணர முடிகிறது

தமிழ்நாட்டு பாரத ரத்தினங்கள்: ஆசிரி யர்: சூர்யா. வெளியீடு: சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், பழைய எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 124. விலை: ரூ.25).

ராஜாஜி, சர்.சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அப்துல் கலாம், எம்.ஜி.ஆர்., ஆகியோரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்கள்! தமிழ்நாட்டில் பாரத ரத்னா விருது பெற்ற பெருமக்களின் சாதனைகளை இந்த நுõலில் சிறப்புற விளக்கியுள்ளார் ஆசிரி யர் சூர்யா. இந்த நுõல் மாணவ, மாணவியருக்குப் பெரி தும் பயன்படும் என்று நம்புகிறோம்!

வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்.,: நுõலாசிரி யர்: பொம்மை சாரதி. வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு தொலைபேசி: 2433 4397. (பக்கம்: 168. விலை: ரூ.60)

எம்.ஜி.ஆரைப் பற்றிய முழுமையான வரலாற்று நுõல் என்று கூற முடியாவிட்டாலும் வள்ளலாக வாழ்ந்த ஒரு பெருமகனின் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தைச் சித்தரி க்கும் நுõல் என்று இதைக் குறிப்பிடலாம். பத்திரிகையாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். பக்கத்திற்கு பக்கம் அபூர்வப் புகைப்படங்கள். எம்.ஜி.ஆர்., அன்பர்களுக்கு இது ஒரு புதிய புத்தக விருந்து.

நின்ற சொல்: ஆசிரியர்: ஞானி அறிவன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

சிற்பியின் விதி: ஆசிரியர்: ஞானி அறிவன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

மரபும் ஆக்கமும்: ஆசிரியர்: ஞானி அறிவன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 100ரூ)

மணிக்கொடி சீனிவாசனின் எழுத்து: ஆசிரியர்: ஜயதேவ் சீனிவாசன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை :120ரூ)

என் வாழ்வே பேரானந்தம்: ஆசிரியர்: கலைமாமணி யோகா, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

அன்பெனும் தோட்டத்திலே: ஆசிரியர்: கலைமாமணி யோகா, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 80ரூ)

ஞானச்சுரங்கம்: ஆசிரியர்: கோ.ஜெயபாலன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 60ரூ)

நீங்களும் மாஜிக் செய்யலாம்: ஆசிரியர்: பாலாஜி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 30ரூ)

1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்: ஆசிரியர்: வசந்தாதேவி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 30ரூ)

பத்திரிகைகளில் எழுதி புகழ்பெறுவது எப்படி? : ஆசிரியர்: ஓ.எ.ஊ.பழனிச்சாமி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 11ரூ)

நீங்களும் நிருபர் ஆகலாம்: ஆசிரியர்: வி.மணிமாறன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 7ரூ)

அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் : ஆசிரியர்: முத்துச்செல்வி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 30ரூ)

பார் புகழும் பாரீஸ் (பயணக்கட்டுரை): ஆசிரியர்: கோ.தனபால், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 25ரூ)

பெயர் பிறந்தது எப்படி?: ஆசிரியர்: பூவை அமுதன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 17ரூ)

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: ஆசிரியர்: அறிஞர் அண்ணா, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017.

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?: ஆசிரியர்: கு.கீ.கோவிந்தராஜன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 40ரூ)

இந்திய விடுதலை போரில் தமிழக மகளிர்: ஆசிரியர்:வி.என்.சாமி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 35ரூ)

விடுதலை போராட்டத்தில் வெளிநாட்டு பெண்கள்: ஆசிரியர்: வி.என்.சாமி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 20ரூ)

இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள்: ஆசிரியர்: மு.செல்வராசன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

நிலைபெற்ற நினைவுகள் (பாகம் 1) : ஆசிரியர் : வல்லிக்கண்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

நிலைபெற்ற நினைவுகள் (பாகம் 2) : ஆசிரியர் : வல்லிக்கண்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 75 ரூ )

தமிழர் தலைவர் : ஆசிரியர் : சாமி சிதம்பரனார் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

லெனின் : ஆசிரியர் : ஆர்.ராமநாதன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

வான்கா : ஆசிரியர் : தமிழில் சுரா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

ஆண்டன் செக்காவ் : ஆசிரியர் : புரசு. பாலகிருஷ்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

கார்க்கி வரலாறு : ஆசிரியர் : அ.சிங்காரவேலு, வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

ஆல்பெர் காம்யு : ஆசிரியர் : வஸந்த் செந்தில் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 125 ரூ )

ரூஸோ வாழ்க்கை வரலாறு: ஆசிரியர் : சாமிநாத சர்மா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 30 ரூ )

என் கதை : ஆசிரியர் : நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 160 ரூ )

கோதம புத்தர் : ஆசிரியர் : ஆனந்த குமாரசாமி , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 75 ரூ )

புராதன இந்தியாயவின் பழைய 56 தேசங்கள் (பாகம் 1 2 ): ஆசிரியர் : பி.வி.ஜகதீச அய்யர் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 125 ரூ )

கிரீஸ் வாழ்ந்த வரலாறு (சரித்திரம்) : வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 165 ரூ )

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன் : ஆசிரியர் :எதிரொலி விசுவநாதன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 80 ரூ )

மகாகவி பாரதியார் : ஆசிரியர் : வ.ரா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

நடிகவேள் எம்.ஆர்.ராதா 100 நயமான தகவல்கள்: ஆசிரியர்: சபீதா ஜோசப், வெளியிட்டோர்: ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. விலை: ரூ.60, பக். 192.

படிக்காத மேதை, நாடகத்திற்கு வசனங்களை ஒருமுறை படித்துக் காட்டினால் போதும், அப்படியே நினைவில் ஏற்றி, ஒப்பிக்கும் திறன் படைத்தவர், பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கூறப்படும் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட 100 சுவையான நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்துள்ளார் நுõலாசிரியர்.

பெருந்தலைவர் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் 110:நுõலாசிரியர்: இளசை சுந்தரம், வெளியீடு: புகழ் பதிப்பகம், நிர்மல், பி.எஸ்.3 அக்ரிணி குடியிருப்பு, ஆண்டாள்புரம், மதுரை 3.(பக்கம்: 244, விலை ரூ.65)

காமராஜரை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்து விட்டன. என்றாலும் இப்புத்தகம் வித்தியாசமான முயற்சி. அவரது வாழ்வில் கொட்டிக் கிடக்கும் நுõற்றுக்கணக்கான சம்பவங்களை குவியலாக தராமல் எல்லாரும் படிக்கும் வகையில் 110 அத்தியாயங்களாக பிரித்து தந்து இருக்கிறார் இளசை. இவர் நல்ல பேச்சாளர் மட்டுமல்ல; இனிய தமிழ், எளிய தமிழ் எழுத்தாளர் என்பதற்கும் இந்த புத்தகம் சான்று. “சிறுவன் காமராஜ்’ முதல் “பெருந்தலைவர் காமராஜர்’ வரை வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் நகைச்சுவை உணர்வு மேலோங்க படிக்கும் ஆர்வத்துடன் எழுதப்பட்டுள்ளது. சில சம்பவங்களை குட்டி கதைகள் கூறியும், சிந்தனையாளர்களின் மேற்கோள்களை சுட்டிகாட்டியும் விளக்கியிருக்கிறார் நுõலாசிரியர். காமராஜரின் குணநலன்கள் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது. உதாரணம்: தலைவர் தன்னை “கிறுக்கா’ என்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. ஏனெனில் தலைவர் தனது இதயபூர்வமான அன்பை அந்தச்சொல் மூலமே வெளிப்படுத்துவார்.

ஈடு இணையற்ற தேசத் தலைவர்கள்:நுõலாசிரியர்: செவல்குளம் “ஆச்சா’ (புலவர் அ.சா.குருசாமி). வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40. (பக்கம்: 152. விலை: ரூ.65).

இன்றைய இளைய தலைமுறையினருக்கு நம் தேசத்தின் முக்கியமான தலைவர்களின் உயரிய வாழ்க்கை வரலாற்றை அறியச் செய்வது பல வகையிலும் பயன் விளைவிக்கக் கூடிய பணியாகும். முன்னேறும் முனைப்பு, அதேசமயம் பழுது படாத பண்பு நலன்கள், ஒழுக்கம், நேர்மை போன்ற அருங்குண நலன்களை அறிந்து கொள்ள இவை உதவும்.அத்தகு உயரிய நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கோபாலகிருஷ்ண கோகலே, காமராஜர், வினோபா பாவே, ஜாகீர்உசேன் போன்ற தலைவர் பெருமக்களின் வாழ்க்கைச் சரிதத்தின் முக்கிய பகுதிகளைச் சுருக்கமாகவும், ஆழமாகவும் எளிய நடையில் எழுதித் தொகுத்துள்ளார் இந்த நுõலின் ஆசிரியர். தலைவர்களின் அழகிய வரைகோட்டு ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் சாதனைகள் :வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

சிவாஜியின் நடிப்பிலக்கணம்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

சகலகலா வல்லவன் கமலஹாசன்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

சிந்தித்தனர் சாதித்தனர் (101அறிஞர்களின் சாதனை வாழ்க்கைக் குறிப்புகள்): ஆசிரியர் : ஜி.ஜி.ஆர்., வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 65.00)
நோபில் வென்ற இந்தியர்: ஆசிரியர் : ஜா.சுஜாதா, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 30.00)

கர்ம வீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும் : எஸ்.எஸ். மாத்ரூபூதேஸ்வரன் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. (விலை: 50.00 )

40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள் : டி. வெங்கட் ராவ் பாலு , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 55.00 )

உலக சரித்திரம் படைத்த சாதனையார்கள் : எஸ். கமலா கந்தசாமி ,நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 75.00 )

சரித்திரம் படைத்த சாதனை பெண்மணிகள் : ப்ரியா பாலு , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 80.00 )

மறக்க முடியாத மனிதர்கள் : பி.எஸ். ஆச்சார்யா , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 35.00 )

கோடீஸ்வரன் பில்கேட் வெற்றி பெற்ற கதை : சி.எஸ்.தேவ்நாத் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 50.00 )

மகத்தான மன உறுதி மனிதர்களம் நிகழ்ச்சிகளும் : டாக்டர். கே.கே. இராமலிங்கம் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 40.00 )

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர் : கமலா கந்தசாமி , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 70.00 )

இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும் : தமிழ்ப்பிரியன் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 225.00 )

தமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியமும் 1767லிருந்து 1980 வரை : மு. அப்பாஸ் மந்திரி , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 120.00 )

வடலூர் இராலிங்க சுவாமிகள் (சுருக்கமான வரலாறு) : திரு. சம்பந்தம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 24.00 )

வள்ளலார் வாழ்க்கையும் தத்துவமும் : சுவாமி சரவணானந்தா , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 45.00 )

ஸ்ரீ இõரமானுஜர் : சாண்டில்யன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 60.00 )

ஒரு புதிய சிவானந்த லஹரி : ரா. கணபதி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

மாவீரன் நெப்போலியன் : பூவை அமுதன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 22.00 )

பாவேந்தரின் பாரதி : வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 27.00 )

பாரதி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் : கங்கா ராமமூர்த்தி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 25.00 )

காந்திஜி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் : கங்கா ராமமூர்த்தி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 35.00 )

மகாத்மா காந்தி : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

வல்லபாய் படேல் : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

காமராஜர் : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

அறிஞர் அண்ணாத்துரை : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

சுபாஷ் சந்திரபோஸ் : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு : அ. மறைமலையான் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 90.00 )

இந்திரா காந்தி (வரலாறு) : அ. வேதாசலம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

இந்திராவை சந்தித்தோம் : மா. வரதராஜன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 7.00 )

வீரபாண்டிய கட்டபொம்மன் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

திருவள்ளுவர் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

திருப்பூர் குமரன் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

சுப்பிரமணிய பாரதியார் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

எட்டயபுரத்து தங்கம் : ஆர். பொன்னம்மாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 9.00 )

இராஜராஜ சோழன் வரலாறு : ஆர். பொன்னம்மாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

ராஜாஜி வாழ்க்கை வரலாறு : கௌசிகன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

டாக்டர். ராதாகிருஷ்ணன் : கௌசிகன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

லால்பகதூர் சாஸ்திரி : சம்பந்தம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

மௌலானா ஆசாத் : நீதிபதி மு.மு. இஸ்மாயில் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

பொன்னியின் புதல்வர் (பேராசிரியர் கல்கியின் வாழ்க்கை வரலாறு) : சுந்தர் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 240.00 )

ஓச்டூடுடி அ டூடிஞூஞு குடுஞுtஞிட : குதணஞீடச் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

கதைச் சக்கரவர்த்தி கல்கி : வி.ர. வசந்தன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 35.00 )

அறவிளக்கு அரசர் முத்தையா : டாக்டர். ஆறு. அழகப்பன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 8.00 )

எனது நாடக வாழ்க்கை : அவ்வை. தி.க. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 60.00 )

சீர்த்திருத்தச் செம்மல் வை.க. சண்முகனார் : கவியரசு முடியரசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

ஜெயப்பிரகாஷ் நாராயணன் : எஸ். நடராஜன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 4.50 )

பேனாவீரர் பிரேம்சந்த் : க.கிருஷ்ணமூர்த்தி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 35.00 )

அன்புப்பணிக்கு ஓர் அன்னை தெரசா : நீலமணி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

நினைவு அலைகள் ஐஐஐ : நெ.து. சுந்தரவடிவேலு , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 95.00 )

நினைவில் நிற்பவர்கள் : நெ.து. சுந்தரவடிவேலு , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 11.00 )

கல்வி நெறிக் காவலர் நெ.து.சு. : அருண. நடராஜன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

எனது வாழ்க்கை அனுபவங்கள் : ஏ.வி.எம். , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 1) : ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 55.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 2) : ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 3) : ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 45.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 4) :ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 70.00 )

உலகச் சுடர்மணிகள் : தே.ப. பெருமாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

மருத்துவ மேதைகள் : ரா. பாலகிருஷ்ணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

தென்னாட்டுப் புரட்சி : பொன். முத்துரமாலிங்கம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 45.00 )

புனித போப் ஜான் பால் ஐஐ : டாக்டர்.பி.எம். ரெக்ஸ், வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 6.00 )

போராட்டங்கள் (சாண்டில்யன் வாழ்க்கை அனுபவங்கள்) : சாண்டில்யன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 32.00 )

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.: வித்வான். வே. லட்சுமணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 70.00 )

பெரியோர் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் : பி.சி. கணேசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

பாட்டுக்கொரு பாரதிதாசன் : பி.சி. கணேசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை போதிப்பது என்ன? : பி.சி கணேசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 11.00 )

செயற்கறிய செய்த சான்றோர்கள் : பாணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டு தொகுதிகள்) : வாண்டுமாமா ,வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 24.00 )

வானதி திருநாவுக்கரசு 60 (152 அறிஞர்களின் கட்டுரைகள்) :வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

சாதனைச் சக÷õதர்கள் : டி. மரியஜோசப் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 25.00 )

இசை நடனக்கலை உலகில் பிறவி மேதைகள் : சு.ரா. , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

இசை வானில் இளைய தலைமுறை : சு.ரா. , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 22.00 )

ஸ்ரீ தியாராஜ அநபவங்கள் : சுவாமிநாத ஆத்ரேயன் ,வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

நாதசுர சக்ரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை : துமிலன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

உலக ஒளி விளக்குகள் : டாக்டர். ம. சேசையா , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 16.00 )

சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு : பா. கமலக் கண்ணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

நினைவு அலைகள் : அரங்க. சீனிவாசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

மனித தெய்வம் காந்தி காதை : அரங்க சீனிவாசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 90.00 )

வெற்றப் படிகள் (தன் வரலாறு) : வானதி திருநாவுக்கரசு , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 75.00 )

ண்tஞுணீண் tணி குதஞிஞிஞுண்ண் (அண ச்தtணிஞடிணிஞ்ணூச்ணீடதூ ணிஞூ ஙச்ணச்tடடி கூடடிணூதணச்திதடுடுச்ணூச்ண்த): அ கூணூச்ணண்ஞிணூஞுச்tடிணிண ஞதூ ஈணூ. கு. எணிணீச்டூடிஞு கட.ஞீ, , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 150.00 )

இசை உலகின் இமயம் எம்.எஸ். : சாரதி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

பெர்னாட்ஷாவின் வாழ்வும் வாக்கும் : நா. எதிராஜ் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

மாமனிதர் மகாலிங்கம் : பி.வி.கிரி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

பத்மா சுப்ரமணியனம் ஒரு சகாப்தம் : சுந்தரி சந்தானம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

உழைப்பும் உயர்வும் (நீல்கிரிஸ் நிறுவனத்தின் வரலாறும், வளர்ச்சியும்) : மு. சன்னியப்பன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 100.00 )

அப்பச்சி (ஏவி.எம். வாழ்க்கை வரலாறு) :ராணி மைந்தன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 100.00 )

வெற்றித் திருமகன் அப்துல் கலாம் : நெல்லை சு. முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 70.00 )

கவிக்குயில் சரோஜினி தேவி : க. லலிதாம்பாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

நானும் இந்த நூற்றாண்டும் : கவிஞர். வாலி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 250.00 )

முதலாளி (டி.ஆர். சுந்தரம் வாழ்க்கை வரலாறு) : ரா. வேங்கடசாமி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 120.00 )

சிரித்து வாழ வேண்டும் (நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள்) : தொகுப்பு@ எஸ். சந்திரமௌலி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை :100.00 )

ஒரு நீதியின் கலைப்பயணம் (நீதியரசர் திரு. கே.எஸ். பக்தவத்சலத்தின் வாழ்க்கை வரலாறு): தொகுப்பு @ கல்யானி ராஜாராமன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 250.00 )

குணங்களால் உயர்ந்த செம்மல் க. முத்துக்கருப்பன் : தொகுப்பு @ தி. கோவிந்தராசு, வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 100.00 )

ஜே.கே. (தனிவழி நடந்த அற்புத ஞானி) : வெ. நாராயணசாமி , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 30.00 )

ஜே.கே. வாழ்வும் வாக்கும் : கமலா பத்மகிரீஸ்வரன் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 60.00 )

நெப்போலியன் வாழ்வில்…:செவல்குளம் “ஆச்சா’ (புலவர் அ.சா.குருசாமி)ஆசிரியர்: புலவர் அ.சா.குருசாமி, வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16 வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை40. (பக்கம்: டெமி 48. விலை:ரூ.30).

“நெப்போலியனின் தோற்றம் நாற்பதாயிரம் போர் வீரர்களுக்குச் சமம்’ என்று, அவரை எதிர்த்துப் போரிட்டு, வாட்டர்லுõ களத்தில் தோற்கடித்த ஆங்கிலேயத் தளபதி வெல்லிங்டனாலேயே புகழப்பட்ட பெருமை மிக்க மாவீரன் நெப்போலியனின் வீர வாழ்வின் முக்கியமான சம்பவங்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரிக்கும் நுõல் இது. பத்து தலைப்புகளில் முத்து முத்தான வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மன உரம் பெற உதவும் நுõல்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். நுõலாசிரியர்: ஏ.கே.சேஷய்யா. வெளியீடு: தமிழ்ச்சோலை பதிப்பகம், பு.எண்.12, பழைய எண்.16, சத்யபுரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 264. விலை: ரூ.80).

பாவேந்தர் பாரதிதாசனார். நுõலாசிரியர்: சுந்தர சண்முகனார். வெளியீடு: பிரபாத் புக் ஹவுஸ், 7, பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 128. விலை: ரூ.40).

பாரதிதாசனின் சிந்தனைக் களஞ்சியம். நுõலாசிரியர்: எஸ்.குலசேகரன். (பக்கம்: 108. விலை: ரூ.35)

பாரதியின் நீதிகள்: நுõலாசிரியர்: எஸ்.குலசேகரன். (பக்கம்: 80. விலை: ரூ.25). இரு நுõல்களையும் வெளியிட்டோர்: மகேஸ்வரி பதிப்பகம், பெரிய காஞ்சிபுரம்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 54. விலை: ரூ.12).

கத்தியின்றி ரத்தமின்றி! கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்நுõலாசிரியர்: லாரா கோப்பா. தமிழில்: மகாதேவன். வெளியீடு: விகடன் பிரசுரம் (விலை: ரூ.95).

இந்நுõலின் முன்னுரையில் பதிப்பாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர், சுதந்திரத்துக்குப் பின்பும், ஏழை மக்களின் நல்வாழ்வுக்கு எப்படி போராடினர் என்பதை ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டு, நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் பலர் சுதந்திரத்துக்குப் பின் உலகமயமாக்கல் கொள்கையால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர் என்பதை உணர்ந்து, அவர்களுக்காகப் போராடி வெற்றி பெற்றவர்களில், குறிப்பிடத்தக்கவர்களில், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர் . இந்நுõலின் சிறப்பு, இத்தம்பதியினர் தங்கள் அனுபவங்களை நேரடியாக ஆசிரியர் மூலம் பகிர்ந்து கொள்வது. ஆசிரியர் லாரா கோப்பா, இத்தம்பதியினருடன் எல்லா இடங்களுக்கும் சென்று கண்டவற்றை, உணர்ந்தவற்றை மட்டுமல்லாது, அவர்களின் வெற்றியையும் விவரித்துள்ளார்.

கிருஷ்ணம்மாள் ஒரு ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்தவர். அவரை சந்தித்த உடனே தன் வாழ்க்கைத் துணைவி இவர் தான் என ஜெகந்நாதன் உறுதி பூண்டதற்கான காரணங்களை, அவரே விவரித்துள்ளார் (பக்கம்:56).பூதான இயக்கம், இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம் முதலியவற்றில் இத்தம்பதியினர் அடைந்த வெற்றி, அகிம்சை வழியில் எதையும் சாதிக்கலாம் என்பதை நிலை நிறுத்துகிறது.வினோபாபாவின் தனித்தன்மை, மக்கள் மனதில் அன்பின் சுனையை ஊற்றெடுக்கச் செய்யும் அழகு. அவருடன் பூதான இயக்கத்தில் இத்தம்பதியினர் அடைந்த அனுபவங்கள், இக்கால இளைய சமுதாயத்தினர் படித்து உணர வேண்டியது, மிக அவசியம். நம் நாட்டின் பழம் பெரும் புராணங்கள் இதிகாசங்கள் முதலியவற்றில் உள்ள இக்காலத்திற்குத் தேவையான உண்மைகள் மிகத் தெளிவாக, மகாத்மா காந்தி, வினோபாபாவே போன்ற தலைவர்கள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளன.கண்மூடித்தனமான உலகமயமாக்கலை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளை இந்நுõல் தோல் உரித்துக் காட்டுகிறது.அனைவரும் தவறாமல் படித்துப் பயன்பட வேண்டிய ஓர் அரிய நுõல் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர்கள். (பக்கம்: 204. விலை: ரூ.80).* இமயத்தைத் தொட்ட இந்தியத் தலைவர்கள் (பக்கம்: 236. விலை: ரூ.90). இரு நுõல்களையும் எழுதியவர்: செவல்குளம் ஆச்சா. வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40.

திருப்பூர் குமரன், திரு.வி.க., வ.உ.சி., ஈ.வெ.ரா., அண்ணாதுரை, வ.வே.சு.அய்யர், ஜீவா ஆகிய தமிழகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், நேதாஜி, நேரு, ராஜாஜி, லால்பகதுõர் சாஸ்திரி, சரோஜினிதேவி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், வல்லபாய் படேல் ஆகிய இந்தியத் தலைவர்கள் வாழ்க்கைச் சரிதங்களும் அருமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டிய நுõல்கள் இவை.

விலங்கொடித்த வீரர்கள்:நுõலாசிரியர்: சுனிதா பூபாலன். வெளியீடு: ஸ்ரீ ஐஸ்வர்யா பப்ளிகேஷன், 40, பெருமாள் செட்டித் தெரு, ஆரணிப்பாளையம், ஆரணி632 301. (பக்கம்: 132. விலை: ரூ.35).

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் பல இன்னல்களை மேற்கொண்ட பத்து தியாகிகளின் வாழ்க்கைச் சுருக்கம். சுபாஷ் சந்திரபோசும், பெருந்தலைவர் காமராஜர் உட்பட உன்னதமான வீர புருஷர்களைப் பற்றி நிறைய தகவல்கள்.

ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு:ஆசிரியர்: ஆர்.வி.பதி. வெளியீடு: சுரா புக்ஸ் பிரைவேட் லிட், சென்னை40 . (பக்கம்: 116 விலை: ரூ.50)

“தமிழுக்கு முதலிடம்’, “மும்மொழித் திட்டம்’, “அரிஜன முன்னேற்றம்’, ஆண்டாள் கோஷ்டி என்று பெண்களுக்கு சிறப்பிடம், ஆலயங்களில் சித்திரான்னங்கள், ஊனமுற்றோரிடம் தனிக்கவனம், ஜாதி ஜன வேறுபாடின்மை என்று பற்பல சமூக சீர்திருத்தங்களை இப்பூதலத்தில் தம் வாழ்நாள் நெடுக நிலை நிறுத்தியவர் ஸ்ரீராமானுஜர்.அப்பெருந்தகையின் புனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எளிய நடையில் சுருக்கமாக 66 தலைப்புகளில் சிறுவர்களுக்கும் புரியும் வண்ணம் இந்நுõல் அமைந்துள்ளது. பிரபந்த காயத்ரி என போற்றப்படும் ராமானுஜ நுõற்றந்தாதியும் இடம் பெற்றுள்ளது.ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் அவர்களின் அபிமானிகளுக்கும் இந்நுõல் ஓர் வரப்பிரசாதம்.

எந்தைபிரான் கம்பன்:ஆசிரியர்: அமரர் சா.கணேசன். தொகுப்பாசிரியர்: வேலுõர் எஸ்.என்.குப்புசாமி முதலியார். வெளியீடு: கம்பன் பதிப்பகம், 2, நான்காவது குறுக்குத் தெரு, கோபாலகிருஷ்ண நகர், வேலுõர்632 006. (பக்கம்: 250. விலை: ரூ.125).

கம்பர் புகழையும், கம்ப ராமாயணத்தின் உயர்வையும் பட்டிதொட்டிகளில் எல்லாம் பலரும் வளர்த்து, நிலைக்கச் செய்த பெரியோர்களில் “கம்பன் அடிப்பொடி’ என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் காரைக்குடி சா.கணேசனும் ஒருவர். அவர் பல சமயங்களில் எழுதிய கவிதைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நுõல் வெளிவந்துள்ளது. இந்நுõலில் காணும் கவிதைகளில் இருந்து கம்பன் அடிப்பொடியின் கம்பர் பற்று தெளிவாகத் தெரிகிறது. கம்பர் பயன்படுத்திய பனையோலை, எழுத்தாணி, ஆடை, குடை எனப் பல பொருட்களாகவும் தான் ஆக வேண்டும் என்று விரும்புவது இதற்கு எடுத்துக்காட்டாகும் (பக்.1417).கம்பன் பாடல்களை பரத நாட்டியத்தின் விளக்கவுரையாக விவரிக்கும் “கம்பன் அருளிய ராமாவதாரம் என்ற கட்டுரை அனைவரும் படித்து மகிழ வேண்டிய ஒன்றாகும் (பக்.174192). பல ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாசிரியரின் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்:நுõலாசிரியர்: கோடீஸ்வரன். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை (பக்கம்: 518. விலை: ரூ.150).

இயற்கையின் ஆட்சியில் மட்டுமின்றி மனித வாழ்விலும் தொடர்புறவுத் தத்துவம் பெரிதும் பயன் தருவது ஆகும். ஒவ்வொருவரும் எல்லாரும் காண்பது ஏதாவது ஒரு வகையில் தொடர்புறவு கொண்ட ஒரே உண்மையின் பல பகுதிகளே ஆகும் (பக்.419) என்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கை வரலாற்றை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் கோடீஸ்வரன்.ஆடம்பரத்தை விரும்பாதவர், அணு ஆயுதத்தை எதிர்த்தவர், காந்தியைப் போற்றியவர். “பிரபஞ்சம் இயங்குவதற்கான தத்துவம் ஒன்று கட்டாயம் இருந்து தான் ஆகவேண்டும்! அதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்’ என்று கூறி “ஒன்றியப் புலக்கொள்கை’ என்னும் தத்துவத்தை தந்த மேதையின் இவ்வரலாற்று நுõலை இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். இத்தகைய நுõல்கள் தமிழில் வர வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் அவசியமாகும்.

சாதனைப் பெருமக்கள் ஐம்பதின்மர் : நுõலாசிரியர்: முனைவர் இளமாறன். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் (பக்கம்: 222. விலை: ரூ.60).

தமிழகத்து அறிஞர் பெருமக்கள் பலரில் சாதனையாளர்கள் சிலரைப் பற்றி உணர்வுப்பூர்வமாக சுருக்கமாக வாழ்க்கைக் குறிப்புடன் சாதனையையும் எடுத்துரைக்கும் நுõல் இது. முகம் மாமணியும், அவருடைய வலது கையாக விளங்கும் இளமாறனும் அரிய சேவையைப் புரிந்துள்ளனர்.

அரவாணி என்று தன்னைக் கூறிக் கொள்வதை வெறுத்து “திருமங்கை’ என்று அழைக்குமாறு வேண்டிய உலகப் புகழ் நர்த்தகி நடராஜ் ஆகியோரின் அரிய செய்திகளை சுவைபடக் கூறுவது இந்நுõல். வாங்கிப் படியுங்கள். நீங்களும் சாதனையாளராகலாம்.

புரட்சி வீரர் எர்னஸ்டோ சேகுவேரா : நுõலாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன். வெளியீடு: செண்பகா பதிப்பகம், ப.எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 152. விலை: ரூ.60).

மிகக் குறுகிய காலத்தில் உலகம் போற்றும் புரட்சிகர சாதனைகளைப் புரிந்த சேகுவேராவின் வாழ்க்கையை இந்நுõல் சுவைபட படம் பிடித்துக் காட்டியுள்ளது. புரட்சியாளர்கள் போற்றும் நுõல்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி : நுõலாசிரியர்: நரேந்திரன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 48. விலை: ரூ.15)

உலக மகாக் கோடீஸ்வரரான மைக்ரோ சாப்ட் பில்கேட்சுக்கு, நம் நாட்டு நாராயணமூர்த்திக்கும் உள்ள சில ஒற்றுமைகள்: இருவருமே பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்த, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடும் உழைப்பு என்ற மூலதனத்தினால் உயர்ந்தவர்கள். செல்வச் செழிப்பை பறைசாற்ற விரும்பாதவர்கள். தகவல் தொழில், கணிப்பொறி நுட்பத்தின் மென்பொருள் துறையில் இருவருமே மகோன்னத சாதனையாளர்கள், சிகரத்தை எட்டியவர்கள்!

இன்றளவும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நாராயணமூர்த்தி, தமது நிறுவனத்திற்கு அவ்வப்போது உருவாகும் சவால்களை தமது புத்திக்கூர்மை, துணிவு, ஆக்க சிந்தனைகளை முன்வைத்து, மற்ற தோழர்களுடன் இணைந்து, எதிர் கொண்டு மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

ஒரு இந்தியர் தொழில் துறையில் புதுமைகளைச் செய்திட இயலுமென்று உலகிற்கு நிரூபித்தவர். தனிப்பெரும் சிறப்புகள் அவரது மனித நேயம், சமூக மேம்பாட்டுக்கென அவர் ஆற்றிவரும் நற்பணிகள், ஊழியர்கள்பால் கொண்ட உண்மையான தோழமை, இவையே நிறுவனத்தின் பங்குகளை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள வைத்ததுடன், அவர்களைப் பகுதிச் சொந்தக்காரர்களாகவும் உயர்த்தியது. இந்தியத் தொழில் துறையில் இத்தகைய மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட பெருமை அவரைச் சார்ந்தது.

கல்லுõரி மாணவர்கள் முதல் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தன்னம்பிக்கையை வளர்த்து, உற்சாகமூட்டும் முன்னேற்ற நுõலாகும். அவரைத் தேடி வந்த சில முக்கிய விருதுகளையும் அடுத்த பதிப்பில் ஆசிரியர் குறிப்பிட வேண்டும்.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் சாதனைகள்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 22.00

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.: வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை : 34.00

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 50.00

சிவாஜியின் நடிப்பிலக்கணம்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 65.00

அகிலம் போற்றும் அறிவியல் அறிஞர்கள் : நுõலாசிரியர்: கவிஞர் முகில்வண்ணன். வெளியீடு: சுப்ரபாத் பப்ளிஷர்ஸ், 104(3), பெரியார் பாதை, சென்னை94. (பக்கம்: 157. விலை: ரூ.35)

மக்களுக்கு மிகவும் தேவையான பயனுள்ள தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, மின்சக்தி, நீராவி இன்ஜின் போன்ற சாதனங்களுடன் அம்மை நோய் தடுப்புஊசி, ரேபீஸ் எனும் கொடிய நோய்க்கான மருந்து வகைகளையும் கண்டுபிடித்த 28 அறிவியல் மாமேதைகளின் வாழ்க்கை வரலாறு மிகச் சுருக்கமாக எளிய நடையில் எழுதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் சர்.சி.வி.ராமன் மற்றும் சர் ஜகதீஷ் சந்திரபோசை பற்றிய குறிப்புகளும் அடங்கும்.

உலகை உருவாக்கிய விஞ்ஞான மேதைகள் 50 பேர் : நுõலாசிரியர்கள்: வெங்கட்ராவ்பாலு, சி.தேவதாஸ் (ஓய்வு பெற்ற வட்டாட்சியர்). வெளியீடு: நற்பவி பிரசுரம், 5713, பசுல்லா சாலை (பக்கம்: 144. விலை: ரூ.50)

அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய பல நாட்டு விஞ்ஞானிகளது வாழ்க்கை சுருக்கமும் அவர்களின் சாதனையையும் விளக்கும் இந்த நுõல் இளைய தலைமுறையினரின் உயர்வுக்கு உறுதுணையாய் இருக்கும். அந்த அறிஞர்களது விரிவான வாழ்க்கை சரிதத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலைக் கிளறிவிடும் இப்புத்தகம்

உலகத் திரைப்பட மேதை சார்லின் சாப்ளின் : நுõலாசிரியர்: பசுமைக் குமார். வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை600 017. (பக்கம்: 112. விலை: ரூ.30)

உலகத்து உயர்ந்த சினிமாப் படங்களைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில், முன்னணியில் இருப்பவர் பசுமைக்குமார். சாப்ளினைப் பற்றியும் அருமையான ஒரு நுõலைத் தந்திருக்கிறார். விலை மலிவான இந்த நுõலில் பல விலை மதிக்க முடியாத செய்திகள் உள்ளன. சார்லின் சாப்ளின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான சம்பவங்களைச் சொல்வதோடு அவரது முக்கியமான படங்களைப் பற்றியும் சிறப்பாகச் சொல்கிறார் பசுமைக் குமார். சினிமாப் பொக்கிஷம்.

உயர்ந்த மனிதன் : நுõலாசிரியர்: பெருதுளசி பழனிவேல். வெளியீடு: பிரஸ் உரிமை வெளியீடு, எண்.200, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை94. (பக்கம்: 100. விலை: ரூ.30).

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வரலாற்றை சுவையாக எழுதி இருக்கிறார் துளசி பழனிவேல். சிவாஜியின் வாழ்க்கைப் பாதை கல்லும், முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை தான்! அதன் சிராய்ப்புகளில் தான் அவர் தனது கலை உலகப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார் என்பதை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு சினிமாப் பொக்கிஷம்.

ஙஐகுஐON க்NஃஐMஐகூஉஈ (ஆங்கில நுõல்) நுõலாசிரியர்: சுஜாய் குப்தா. வெளியீடு: ப்ளூ பென்சில் பதிப்பகம், கோல்கட்டா700 029. (பக்கம்: 321. விலை: குறிப்பிடப்படவில்லை)

கடந்த 1918ல் பிறந்து 2000ல் மறைந்த எம்.ஏ.சிதம்பரத்தின் வாழ்க்கை வரலாறு, 15 அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கும் முறை ஆச்சரியப்படும்படி அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண வாழ்க்கை வரலாறல்ல. ஒரு சிறந்த மனிதர், பன்முக மேதை, தொழிலதிபர் என்று நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் மறைந்து கொண்டிருக்கும் ஒரு மேதை வாழ்ந்த பாதை.

செட்டியார் பாரம்பரியத்தில் ஆரம்பித்து தொழில் மேதையாக, விளையாட்டார்வத்துடன் செயல்பட்டு, செல்வந்தரான போதிலும் எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடித்து, செல்வத்தைப் பெருக்கிக் கொண்டது மட்டுமின்றி, பல உன்னத செயல்களையும் செய்து வாழ்ந்த மனிதரைப் பற்றியது. அவரது தீர்க்க தரித்துவம், உன்னத நோக்கு முதலியவற்றை, குடும்பத்தைச் சாராத, ஏன் தமிழகத்தையே சாராத ஒரு மனிதர் அதிசயத்துடன் பார்க்கும் கண்காட்சி! அழகு என்னவெனில், நம்மையும் ஒரு அதிசயக் கண்ணோட்டத்தில் அவர் பார்க்க வைப்பது தான்! விமான ஓட்டியாகவும் பயிற்சி பெற்றிருந்த சிதம்பரம், அவரது முன்னோடிகளான சில சிறந்த செட்டியார்களைப் போல, கானாடு காத்தானைச் சிறப்பித்துள்ளார்.

பி.எஸ்., ஹைஸ் ஸ்கூலில் படிக்கையிலேயே அவருக்கிருந்த கிரிக்கெட் ஆர்வம், 1933ல் அடையார் கிரிக்கெட் கிளப்பின் தோற்றம், அவரது ஹாக்கி விளையாட்டு, வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரியிடம் கற்றுத் தேர்தல், சவுத் இந்தியா கார்ப்பரேஷனில் சேர்தல், இரண்டாவது உலகப்போரில் அவர்களது வங்கியும், பர்மாவில் அவர்களது இடங்களை இழந்து விட்டாலும், மனந்தளராது முன்னேறுதல் முதலிய விவரங்களை இந்நுõலில் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.

ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் ஆலோசனையுடன் சிதம்பரம் சவுதர்ன் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் ஆரம்பித்த விவரமும், அதில் அவரது முயற்சியும், பின்னர் அவரது வெற்றிகளும் தரப்பட்டுள்ள இந்நுõலின் முக்கிய அம்சம். அதனுள் தரப்பட்டுள்ள பல குறிப்புகள் தாம். தவிரவும் விவேக் தாஸ் என்ற ஒரு சிறந்த புகைப்பட நிபுணர் எடுத்துள்ள புகைப்படங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அவருடன் நாமும் சேர்ந்து “அடையார் ஹவுஸ்’க்கு போய் வந்த அனுபவம் ஏற்படும் வகையில் உள்ளது. சிதம்பரத்தின் குடும்பப் படங்கள் எளிமையும், நிறைவையும் காட்டுவதாக உள்ளன. போற்றப்பட வேண்டியவரைப் பற்றிய போற்றப்பட வேண்டிய முயற்சி!

அMஅகீஅ ஓஅஙஙுஅM (ஆங்கில நுõல்) யோகி ராம்சுரத் குமார் வரலாறு : நுõலாசிரியர்: எஸ்.பார்த்தசாரதி. பிரதிகள் கிடைக்குமிடம்: எஸ்.பார்த்தசாரதி, 246, திருவூடல் தெரு, திருவண்ணாமலை606 601. (பக்கம்: 445. விலை: குறிப்பிடவில்லை)

திருவண்ணாமலை திருத்தலத்திற்கு பல சிறப்புகள் உண்டு. “தொட்டது துலங்கும்’ சேஷாத்ரி சுவாமிகளும், “நான் என்பது என்ன, எது’ என்பதற்கு விளக்கமளித்த ரமண மகரிஷியும் நடமாடிய பூமி. அக்னி திருத்தலம். முக்தி திருத்தலம்.

இத்துணை சிறப்புக்களுக்குப் பிறகு, நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்தில், கையில் ஒரு விசிறியுடன், தன்னை ஒரு “பிச்சைக்காரன்’ என்று கூறியவாறு பல்லாயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்களுக்கு “மன திருப்தி’யை ஏற்படுத்திய, விசிறிச் சாமியார், யோகி ராம்சுரத் குமார் வாழ்ந்து வழிகாட்டிய, முக்தியடைந்த அற்புதம் நிகழ்ந்ததும் இங்கு தான்.

இவரைப் பற்றிய பூர்வாச்ரம தகவல்களைத் தெரிந்து கொள்வதில் அவருடைய அன்பர்களே கூட அதிகம் ஆர்வம் காட்டியதில்லை. யோகியும் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ள விரும்பாதவராக வாழ்ந்து வந்தார்.

இத்தகைய ஒரு அமானுஷ்யமான சுய விளம்பரத்தில் சிறிதும் ஆர்வமில்லாத ஆன்மிக புருஷனைப் பற்றி, அவருடன் நெருங்கியிருந்து, துணைபுரிந்து தொண்டாற்றிய எஸ்.பார்த்தசாரதி இந்த அமர காவியத்தை ஆங்கிலத்தில் உரைநடையாக நமக்கு வழங்கியிருக்கிறார். வணக்கத்திற்குரிய ஒரு யோகியின் வாழ்க்கையை, ஆன்மிக அனுபவத்தை, இத்துணை சிறப்பாக எழுத்தில் வடிக்க முடியுமா என்ற கேள்வி பிறக்கிறது. அற்புதமான வரலாறு.

உலகத் தரத்திற்கு இணையாக புத்தகத் தயாரிப்பு. மிகச் சிறந்த “பயாகிரபி’ வாழ்க்கை (வரலாறு) எழுதுபவர்களுடன் இணைத்துப் பேசத் துõண்டும், சம்பவக் கோர்வைகளின் சங்கிலித் தொடர்பு. யோகி, உ.பி., மாநிலத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியமும் ஆசிரியர் பயிற்சியும் படித்துத் தேறியவர். பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டு மக்களின் மழலை கேட்டு மகிழ்ந்தவர். இருந்தும் அவருக்குள் ஒரு ஆன்மிகப் பொறி உயிர்ப்புடன் இருந்தது. பாரதத்தின் தெற்குப் பகுதிக்கு அவரை வழிகாட்டி அனுப்பி வைக்கிறார், ஒரு குருநாதன். திருக்கோவிலுõர் தபோவனம் சுவாமிகள், ரமண மகரிஷி, மகாயோகி அரவிந்தர் என அவருடைய ஆன்மிக வழிகாட்டிகளுடன் நேரில் சென்று பழகுகிறார். ஆன்மிகப் பக்குவம் கிடைக்கப் பெறுகிறது. அடக்கம் விண் முட்டும் அளவு அவரிடம் அடைக்கலமாகி முடங்கி விடுகிறது. ஒரு விசிறி “பிச்சைக்காரன்’ என்று தன்னைப் பற்றிய ஒரு பிரகடனம். எல்லாம் “என் அப்பன் செயல்’ என்று சதா சர்வ காலமும் அறிவுரை.

இந்த மகத்தான யோகியைப் பற்றி, இவருடைய ஆன்மிகப் பேராற்றலைப் புரிந்து கொண்ட தமிழறிஞர்களான தெ.பொ.மீ., கி.வா.ஜ., விஞ்ஞான வேதாந்தியான ஜே.கே., எனப் பல்துறை அறிஞர்களின் கருத்துக்களை நேர்த்தியாக இணைத்து தொகுக்கப்பட்ட வாடாத, இலக்கிய பூச்சரம் இந்த நுõல்.

எஸ்.பார்த்தசாரதியின் இந்த இமாலயப் பணிக்கு யோகியின் அன்பர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றனர்.


பயண கட்டுரை1 2நான் கண்ட ரஷ்யா : ஆசிரியர் : அகிலன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்
மலேசிய, சிங்கப்பூரில்… : ஆசிரியர் : அகிலன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்
ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்:நுõலாசிரியர்: ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் (பக்கம்: 96. விலை: ரூ.30).
சோமசுந்தரம் தன் குடும்பத்துடன் எட்டு நாட்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்த்து ரசித்தவைகள் நுõல் உருவம் பெற்றுள்ளது. லேனா தமிழ்வாணன் நுõலுக்கு அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். 16 பக்க வண்ணப் புகைப்படங்களும் உள்ளன.
இன்னொரு யுகசந்தி:நுõலாசிரியர்: இயகோகா சுப்ரமணியம். வெளியீடு: விஜயா பதிப்பகம் (பக்கம்: 264. விலை: ரூ.75).சுவைபட எழுதியுள்ள மேனாட்டுப் பயண நுõல்.ஆஸ்திரேலியாவில் தமிழர் நினைவுகள்:நுõலாசிரியர்: கலாநிதி ஆர்.கந்தையா. வெளியீடு: நடனாலயா பப்ளிகேஷன், 17, எட்வர்ட் தெரு ஸ்டிராத் பீல்டு சவுத், ஆஸ்திரேலியா. (பக்கம்: 182.)
“தமிழ் மொழியையும், அதன் பண்பையும், பாராட்டத்தக்க அதன் கலாசாரத்தையும் அதிகம் மதித்து, அதைப் போற்றிப் பாதுகாப்பவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்’ என்னும் கசப்பான உண்மைக்குச் சான்றானவர், இந்த நுõலின் ஆசிரியர்! இலங்கையில் பிறந்து, வளர்ந்து, தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கந்தையா அவர்கள் ஓய்வுக்குப் பின் ஆஸ்திரேலியா சென்று அருந்தமிழில் நுõல்கள் எழுதி வருகிறார்.நான்கு இயல்களில் 49 தலைப்புகளில் அருமையான “ஆஸ்திரேலியா’ நாட்டையே நம் கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். இங்கு 20 இந்துக் கோவில்களும், 31 தமிழ்ப் பள்ளிகளும் 24,067 தமிழர்களும் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் பலவற்றை அள்ளித் தெளித்துள்ளார்.பரதநாட்டியம், கர்நாடக இசைக்கு அவர்கள் தரும் மதிப்பு மிகப் பெரியதாக உள்ளது. இடை இடையே வண்ணமிகு படங்கள், வார்த்தைகளுக்கு உயிர் தருகின்றன. நம்மை அங்கேயே அழைத்துச் சென்று விடுகின்றன. விசா இல்லாமல் காசில்லாமல் ஆஸ்திரேலியாவைக் கண்டு ஆனந்தம் பெற வைக்கும் நுõல்.
ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்:நுõலாசிரியர்: கி.ராகவசாமி. வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் (பக்கம்: 256. விலை: ரூ.65).
தனது அமெரிக்கப் பயணத்தில் கண்டவைகளையும்; கேட்டவைகளையும்; படித்துணர்ந்தவைகளையும் தொகுத்து ஒரு நாவல் வடிவில் தந்துள்ளார் ஆசிரியர். ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்கால் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராக இருந்து பல நல்ல அறச்செயல்களை தொடர்ந்து தொய்வில்லாது சேவை புரிபவர். ரோட்டரி சங்கம் துவங்கிய இடம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ என்ற நகரத்தில் தான். அங்குள்ள அடுக்குமாடி ஒன்றின் 711ம் எண் அறையில் தான் முதன் முதலில் ரோட்டரி சங்கம் துவக்கப்பட்டது. அந்த அறையை ஒரு தெய்வீக திருத்தலமாகவே கருதி, அந்த அறையை காண வேண்டும் என்ற வேட்கையின் விளைவு தான் இந்த அமெரிக்கப் பயணம் என மனம் லயித்துச் சொல்கிறார்.”அமெரிக்கர்கள் யாரையும் எதிலும் நம்பக் கூடிய சுபாவம் கொண்டவர்கள்’ (பக். 222), “முதலாளித்துவம் என்றால் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்’ (பக். 205) என்ற பல செய்திகளைக் காணலாம்.
தாய்லாந்து தேவதைகள் ; இனிக்கும் 21 இரவுகள் : நுõலாசிரியர்: புஷ்பா தங்கதுரை. வெளியீடு: ஆர்.எஸ்.வி., பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜானிகான் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 96. விலை: ரூ.30).
உலகத்துப் பெண்களிலேயே பேரழகிகள் தாய்லாந்து தேசத்து நங்கையர். பொதுவாக கீழை நாடுகளில் இரவுக் களியாட்டங்களில் கிறங்க வைப்பவை. “இனிக்கும் 21 இரவுகள்’ பற்றி தான் கண்ட அனுபவங்களை தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்) : நுõலாசிரியர்: அமரர் கல்கி. வெளியீடு: வானதி பதிப்பகம் (பக்கம்: 220. விலை: ரூ.70)
ஆனந்த விகடன் ஆசிரியராக கல்கி பணியாற்றியபோது இலங்கை பயணத்தை மேற்கொண்டார். உடன் சென்றவர் இப்போது போல் போட்டோகிராபர் அல்ல. பிரபல ஓவியர் மாலி. இலங்கையை பொற்சித்திரமாக கல்கி தீட்டினார் என்றால் ஓவியர் மாலி இலங்கை மக்களின் உருவங்களை ஓவியமாகத் தீட்டித் கொண்டு வந்து விட்டார். கல்கி பிரியர்களுக்கு ஒரு கற்கண்டு. சுவைத்து மகிழலாம். அந்த நாள் நினைவுகளில் மூழ்கலாம்.
நினைத்தாலே இனிக்கும் மலேசியா சிங்கப்பூர் : நுõலாசிரியர்: சா .சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு), வெளியீடு: இராமானுஜம் வேளாண்மை மற்றும் மனித ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம்
குக்கிராமத்தில் பிறந்தவர் ஆசிரியர். மக்களுக்குச் சேவை செய்வதே இவர் தொழில். மலேசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த போது கண்டதைக் கேட்டதை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஊழலில் வலம் வருபவர்களிடையே, எவ்வித பிரதி பிரயோஜனமும் எதிர்பார்க்காமல், சொத்து சேர்க்காமல், பிற்பட்டோரைக் காக்க முயன்றவர் என்று இவரைப் பற்றிய குறிப்பு நுõலின் தரத்தை உயர்த்துகிறது.

இன்னொரு யுகசந்தி :நுõலாசிரியர்: இயகோகா சுப்பிரமணியம், வெளியீடு: விஜயா பதிப்பகம் (பக்கம்: 264. விலை: ரூ.75.)

பாரீஸ், சுவிட்சர்லாந்து, லண்டன், இத்தாலி முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்ததைப் பயண நுõலாக்கியுள்ளார் ஆசிரியர். பயண நுõலைத் தொடங்கும்போது தனது தாயாரைப் பாரீசுக்கு அழைத்துச் சென்ற அனுபவத்துடன் தொடங்கியிருப்பது புதுமையை வழங்குவதால் தொடர்ந்து படிக்கத் தோன்றுகிறது.பயணம் சென்ற ஒவ்வோர் ஊரிலும் உள்ள கலைச் சிறப்புகளையும், தொழில் வளத்தையும் தெரிவித்திருப்பதுடன் அங்கங்கே நடைபெறும் திருட்டு முதலான குற்றங்களைத் தெரிவித்திருப்பதும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. பயண இலக்கிய நுõல்களில் படிக்கப்பட வேண்டிய நுõல் இது என்பது குறிப்பிடத்தக்கது.இயல்பாக அமைந்துள்ள கொங்குத் தமிழ் ஒரு நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை தருவதுடன் ஆர்வத்தைத் துõண்டுகிறது.

தேசாந்திரி:நுõலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன். வெளியீடு: விகடன் பிரசுரம் (பக்கம்: 272. விலை: ரூ.110).

பயணம், எல்லாருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத் தன்மையும், கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும். அப்படிப் பயணத்தை விரும்பி ஊர் சுற்றி பலவற்றைப் பார்த்தும் பிரமித்த ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.மலைகள், ஆறுகள், அருவிகள், பாலைவனம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும் சாரநாத் ஸ்துõபி, சமணப் படுகைகள், ஆர்மீனிய தேவாலயம் போன்ற வரலாற்றுச் சின்னங்களையும் தன் எழுத்தால் ரசிக்க வைக்கிறார்.


அதிசய ஆலயங்கள் 60 (தமிழகத் திருக்கோவில்கள் தல வரலாறு):நுõலாசிரியர்: வே.ராமநாதன். வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம், 34, சாரங்கபாணி தெரு (விலை: ரூ.60).திருத்தல உலா செல்பவர்களுக்காக 71 திருத்தலங்களைப் பற்றி விளக்கமாகவும், வரலாற்று குறிப்புகளுடனும் இந்நுõலில் விரிவாக தந்துள்ளார் ஆசிரியர்.இவர் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிபுரிந்த காலங்களில் பல விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றவர். சமயப் பணியிலும் ஈடுபாடு கொண்டு பலரும் அறிந்ததும் அறியாததுமான பல கோவில்களைப் பற்றிய விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்தளித்துள்ளது சிறப்பாக அமைந்திருக்கிறது.ரோமியோ ஜூலியட் : வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .
வரலாற்றுப் பாதையில்… (கட்டுரைகள் புத்தகம்1):நுõலாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன். வெளியீடு: குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 208. விலை: ரூ.80).கட்டுரை ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இந்நுõலில் உள்ள 100 கட்டுரைகளும், நாட்டுப் பற்று, சமூக உணர்வு, தியாக சிந்தனை, கடின உழைப்பு, தன்னம்பிக் கை, மனித நேயம், உலகப் பார்வை ஆகியவை படிப்போர் நெஞ்சங்களில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளன.சுதந்திரப் போராட்டம், உலகப் போர், அறிவியல் அற்புதங்கள், நாட்டை உலுக்கிய புரட்சிகள் ஆகிய பல தரப்பட்ட விஷயங்கள், அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மனிதர்கள் பற்றி எல்லாம், சுருக்கமாக, அதே நேரத்தில் அவசியமான தகவல்கள் அனைத்தையும், சுவைபட, எளிய தமிழ் நடையில் தொகுத்து வழங்கியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம், கணித மேதை ராமானுஜன், சுவாமி விவேகானந்தர், ஜி.சுப்ரமணிய ஐயர், வ.உ.சி., டார்வின் ஆகியோர் பற்றிய கட்டுரைகளில் பல புதிய தகவல்கள் உள்ளன. பொது உடைமைக் கொள்கையாளரான ஆசிரியர் தனது சொந்தக் கருத்துக்களை புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லியுள்ள நேர்மை பாராட்டுக்குரியது. கட்டுரைகள் மிகச் சிறியதாக இருப்பதால் வாசகர்கள் சிரமப்படாமல் நிறைய தகவல்களைப் படிக்கலாம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும் இலக்கியத் துறையில் 1000 கேள்வியும் பதிலும் (இரு நுõல்கள்) :நுõலாசிரியர்: சா.அனந்தகுமார். வெளியீடு: அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை4. (ஒவ் வொன்றும் பக்கம்: 96. விலை: 30).

இரண்டு நுõல்களுமே பயனுள்ள அரிய தகவல்கள் பலவற்றை அறிய வைக்கும் விதமாய் அமைந்துள்ளன. முதல் நுõலில் அலெக்சாண்டர் காலம் துவங்கி இன்றைய வரையிலான இந்திய வரலாற்றுச் செய்திகள் கேள்வி பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நுõலில் சங்க இலக்கியம் முதல் சமீப கால இலக்கியம் மற்றும் இலக்கியவாதிகள் பற்றிய தகவல்கள் வரை முக்கியமான செய்திகள் உள்ளன. உலகளாவிய செய்திகளும் உண்டு. பொது அறிவுப் போட்டிகளில் பங்கு பெறுவோர் மட்டுமின்றி, மாணவர்களுக்கும் மிகப் பயன் அளிக்கும் நுõல் இது. வரலாறும் இலக்கியமும் அறிந்தால் வாழ்வு சிறக்கும் தானே!

தெலுங்கானா போராட்டம் : ஆசிரியர் : வி.பி.சிந்தன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 30ரூ )
புரட்சி : ஆசிரியர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 12ரூ )
பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும் : ஆசிரியர் : சிவவர்மா , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 85ரூ )
ரஷ்யப் புரட்சியின் வரலாறு : ஆசிரியர் : வி.பி.சிந்தன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 22ரூ )
சமூகம் ஒரு மறுபார்வை : ஆசிரியர் : மைதிலி சிவராமன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 32ரூ )
இந்தியாவும் இந்து மதமும் : ஆசிரியர் : பி.ஆர்.பரமேஸ்வரன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 35ரூ )
தூக்கு மேடைக் குறிப்பு : ஆசிரியர் : ஜூலிஸ் பூசிக் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 45ரூ)
வால்காவிலிருந்து கங்கை வரை : ஆசிரியர் : ராகுல் ஜி, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 75.00)
பொது உடைமைதான் என்ன ? ஆசிரியர் : ராகுல் ஜி, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 30.00)

தந்திரோபதி:ஆசிரியர்: ஆங்கிலத்தில் டாக்டர் ஆர்.பி.உபாத்யாய். தமிழாக்கம்: இரா. சு.முத்து, வெளியீடு: சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. (பக்கம்: 216. விலை: ரூ.90).
பாரத நாடு பழங்காலத் தில் இருந்தே மனித குலத் தின் உடல் நலத்திற்கு, எத்தகைய பயிற்சிகள் தேவை என் பதை கலைகளின் மூலமும், யோகாசனங்கள் மூலமும் விளங்க எடுத்துரைத்துள் ளது. இந்த வரிசையில், சுராவின் “தந்திரோபதி’ ஒரு முக் கியமான மைல்கல் எனலாம்.கையினால் செய்யப்படும் முத்திரைகளையும், ஆசனங்களையும் விளக்கி அவற்றின் பயன்பாட்டையும், பாதிப் பையும் எடுத்துரைக்கிறார். முத்திரைகள் வெளிப்படுத் தும் உணர்ச்சியையும், அவற் றுக்கான ஸ்லோகங்களையும் பக்கம்11ல் தெளிவாக்கிறார். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரே வகையான அணுக்களின் கூட்டிணைவிற்கும், முத்திரைகளுக் கும் உள்ள தொடர்பை கூறி முத்திரைகளின் மூலம் வரும் தெய்வீக சக்தியையும் விளக் குகிறார். படங்கள் மூலம், எளிதாக முத்திரைகளைக் காண்பித்து அவற்றின் செயல் முறை, கால அளவு, பயன் கள் மற்றும் அவற்றை செய் யும்போது பின்பற்ற வேண் டிய எச்சரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைப்பது நுõலின் தனித்தன்மை ஆகும்.அத்தியாயம் 2ல் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த தந்திரமார்க்கமானது, உன்னத மனித நிலைக்கு சிறந்த மார்க் கம் என்பதைக் கூறி யோகிகள் இதைத் தான் பின்பற்றி ஆன்மிக வளத்துடன் இருந்தனர் என்பதையும், ஆன்மிகம் என்பது மதமல்ல, அது கொள்கை மற்றும் கோட் பாடுகளின் அடிப்படையில் அமைந்த, அதே சமயம் அறிவியல் பூர்வமானது என்பதையும் எல்லாரும் புரிந்து கொள் ளும் வண்ணம் விளக்கப் பட்டிருக்கிறது.அறிவியல் அடிப்படையில் நமது கலாசாரத்தின் முக் கியத்துவத்தை விளக்கும் நுõல்.

இரண்டாம் உலகப் போர்:நுõலாசிரியர்: சுப்ரமணியம் சந்திரன். வெளியீடு: சாந்தி பதிப்பகம், சென்னை2. (பக்கம்: 336. விலை: ரூ.150).

உலகப் போர் வரலாற்று ஏடுகளில் நிலையாக இடம் பெறுவதாகும். கி.பி.1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போர், அகில உலகையும் கதி கலங்க வைத்தது. வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உலக நிகழ்வுகள், தலைவர்களின் செயல்கள், ஜனநாயகம், சர்வாதிகாரத்தின் இடையே கிளர்ந்த போர் மோதல், விளைந்த 99 உடன்படிக்கையால் எழுந்த சர்ச்சை என்ற எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி நுõலாக ஆசிரியர் அரும்பாடுபட்டு சமைத்துள்ளார்.போலந்து படை எடுப்பில் தொடங்கி ரஷ்யா பின்லாந்து போர், நார்வே, டென்மார்க், ஹாலந்து படையெடுப்புகள், பிரான்ஸ் அடி பணிதல், மத்திய தரைக்கடல், மாஸ்கோ முற்றுகை, கசபிளாங்கா மாநாடு, பல்ஜ் மோதல், ரைன் ஊடுருவல், ஜெர்மனியின் சரண் அடைவு, அணுகுண்டு வீச்சு, ஜப்பான் சரணடைதல் என்று 36 தலைப்புகளில் நடந்தவற்றை வாசகர் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.போர் நாயகர்கள் என்ற பிற்சேர்க்கையில் ஹிட்லர், சர்ச்சில் ரூஸ்வெல்ட், ஸ்டாலின், முசோலினி, டோஷோ, டிகால், டிட்டோ, சுபாஷ் சந்திரபோஸ் என்று 74 பிரதான புள்ளிகளின் சிறு குறிப்பையும் தந்துள்ளார். உள்நாட்டுத் தளபதி ஸ்டாபன்பெர்க் ஹிட்லரைக் கொல்ல சதி செய்ததும் அதிலிருந்து ஹிட்லர் தப்பியதும் (பக்.206207) அழகாக விளக்கியுள்ளார். உலக வரலாற்றில் உலா காண விரும்புவோர் படிக்க வேண்டிய நுõல்.
தமிழகக் கோட்டைகள்:ஆசிரியர்: விட்டல் ராவ், வெளியீடு: அம்ருதா பதிப் பகம், சென்னை116. ( பக்கம்:198 விலை: ரூ .150)
நல்ல தொரு விமர்சகரும், ஓவியம், சிற்பங்களில் தேர்ந்தவர் என்ற முறையில் சிறப்பாக இந்த நுõல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் அனுமாரின் உச்சந்தலையில் கற்றைக் குடுமி, வேலுõர்க் கோட்டையில் அமைந்த கோவிலில் உள்ள ஜ்வரகண்டேச்வரர் கல்யாண மண்டபம் பற்றிய தகவல்கள், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் வசித்த மண்டபத்தின் எளிமை என்று பல விஷயங்கள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்.
சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்: நுõலாசிரியர்: மயிலை சீனி.வேங்கடசாமி, வெளியீடு: பாவை பிரின்டர்ஸ் (பி) லிட்., 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 156. விலை: ரூ.55).
ஆசிரியர் தமிழ் மொழி ஆர்வலர். 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1) தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், (2)சங்க நுõல்களில் தமிழர் வாழ்க்கை, (3) சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினமும், மதுரை மாநகரமும் என மூன்று தலைப்புக்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் நுõல் வடிவத்தில் வெளிவந்துள்ளது.சர்ச்சைக்குரிய, ஆதாரங்களைச் சேகரிப்பதில் மிகவும் சிக்கலும் சிரமமும் உள்ள கால ஆராய்ச்சியில் தனது அறிவாற்றலையும், சக்தியையும் நேரத்தையும் செலவிட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்தைப் படிக்கத் தமிழனையே பக்குவப்படுத்த வேண்டும் என்று சொல்லத் துõண்டும் நுõல் இது.
இளையான்குடி வரலாறு : ஆசிரியர்: முகம்மது அனீபா, அமீர் அலி, சண்முகம். வெளியீடு: தணல் பதிப்பகம் 39/13, ஷேக் தாவூத் தெரு, சென்னை14. (பக்கம்: 320. விலை:ரூ.120)
பேர் பெற்றவர் தன் வரலாற்றை எழுதுவர். ஆனால் “ஊர்’ வரலாற்றை “ஊரும் பேரும்’ தலைப்பில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோர் பெயர் ஆராய்ச்சியோடு மட்டும் எழுதியுள்ளனர்.
ஊரின் ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, இலக்கியப் பின்னணியுடன் எழுதப்படும் ஊர் வரலாற்று நுõல்களில் “இளையான்குடி வரலாறு’ குறிப்பிடத்தக்கதாகும்.

இளையான்குடி மாற நாயனார் பற்றி சேக்கிழார் எழுதியது ஜவ்வாது புலவரின் சிற்றிலக்கியங்கள், அப்துல் காதிறுப் புலவரின் பாடல்கள், சோழர் காலக் கல்வெட்டுச் செய்திகள், செப்பேட்டுச் செய்திகள்

இந்நுõலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

500 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறிய கதை விளக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக முறைகள், அரசியல் தொடர்பு, விளையாட்டு வளர்ச்சி, மருத்துவமனைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

இன்றைய, “நிக்காஹ்’ ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுவதும், “தலாக்’ சொல்லி விலக்கி வைப்பதும், சுன்னத் முறைகளும், உணவுப் பழக்கங்களும், இரவில் நடக்கும் திருமணமுறைகளும் வீடியோ காட்சிகள் போல படிப்பவர் மனதில் ஓட வைக்கிறது இந்நுõல்! மலேசியா, பர்மா, போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள், மற்றும் வாழும் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான புள்ளி விவரப்பட்டியல் நீண்ட வரிசையில் தரப்பட்டுள்ளன.

ஒரு ஊரையே ஒரு நுõலில் அடக்கி விடலாம் என்பதற்கு “இளையான்குடி வரலாறு’ உதாரணமாகும்.

வேலுõர் புரட்சியில் (1806) வீரமிகு முஸ்லிம்கள் : எழுதியவர்: செ.திவான். வெளியீடு: சுகைனா பதிப்பகம், 106 எப்/4ஏ திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை627 002. (பக்கம்: 224. விலை:ரூ.125)
வர்த்தகம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தங்கள் ஆயுத பலத்தால் இந்தியாவை வளைத்த வெள்ளையர்கள் அந்த ஆயுத பலத்தாலேயே நாட்டைத் தொடர்ந்து ஆளத் தலைப்பட்டனர். அதே ஆயுதங்களின் துணையால் அவர்களை விரட்டிக் காட்ட முடிவு செய்து களமிறங்கிய சுதேசி ராணுவ வீரர்கள் சந்தித்த போர்க்களமே 1806ல் வேலுõரில் சிப்பாய்கள் நடத்திய வீரப்புரட்சி. இந்த வீரப்புரட்சியின் போது தங்கள் வீட்டை மறந்து நாட்டை நினைத்துத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்து வீரசுவர்க்கம் புகுந்த வீரர்களில் ஏராளமான தமிழக முஸ்லிம்களும் உண்டு. துரதிருஷ்டமாக அவர்களது துõய்மையான வீரமும் தியாகமும் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், வரலாற்று ஆய்வாளரான இந்நுõல் ஆசிரியர் அந்த மறைந்து போன, மறக்கடிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை ஆய்ந்து கண்டு சான்றாதாரங்களோடு வேலுõர் புரட்சியில் பங்கேற்ற வீரர்களைப் பற்றியும் குறிப்பாக முஸ்லிம் வீரர்கள் பற்றியும் விளக்கமாக எழுதியிருக்கிறார் இந்த நுõலில். வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது
ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு : நுõலாசிரியர்: ஒர்சே மா.கோபாலகிருஷ்ணன். வெளியீடு: நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை20. (பக்கம்: 600. விலை: ரூ. 230)
நுõலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நுõலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பாரிசில் தேசிய நுõலகத்தில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்துப் பல புரிய தெரிவுகளை இந்நுõலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

கடந்த 1709 முதல் 1761 வரை புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவப் படத்தையும் இந்நுõலில் வழங்கியுள்ளார். மேலும் பாரிசில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை அப்படியே ஒளிப்படமாக இந்த நுõலில் வெளியிட்டுள்ளதும் சிறப்பு ஆகும்.

24.4.1752 முதல் 08.04.1753 வரை உள்ள ஓராண்டுக்குரிய நாட்குறிப்பு மட்டும் இந்த நுõலில் பதிப்பிக்கப்பட்டுள் ளது. பின்னிணைப்பாக நாட்குறிப்பில் இடம் பெறும் பெயர்களைத் தொகுத்து அவற்றின் பக்கங்களையும் குறிப்பிட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

1752 முதல் 1753 வரை தமிழகத்திலும் புதுவையிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய நினைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் இந்த நுõல் உதவியாக இருக்கும். நுõலாசிரியர், பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வரலாற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சிறந்த முறையில் நுõலைப் பதிப்பித்திருக்கிறார்.

நுõலாசிரியர் இந்த நுõலுக்கு வழங்கியுள்ள விரிவான முன்னுரை அவரது உண்மை அறிந்து பதிப்பிக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.

தமிழ் நாட்டு பாரத ரத்தினங்கள்: ஆசிரியர்: சூர்யா. வெளியீடு: சூர்யா என்டர்பிரைசஸ், பழைய எண். 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17. (பக்கம்: 124. விலை: ரூ. 25)
மிழ் நாட்டில் பாரத ரத்னா விருது பெற்ற மூதறிஞர் இராஜாஜி, சர்.சி.வி.ராமன், தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன், கர்மவீரர் காமராஜர், சி.சுப்பிரமணியம், இசைவாணி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜனாதிபதி அப்துல் கலாம் போன்ற பெருமக்களின் வாழ்க்கையும் சாதனைகளையும் இந்நுõலில் சிறப்புற விளக்கியுள்ளார் ஆசிரியர் சூர்யா. இந்நுõல் தமிழ்மக்களுக்கு குறிப்பாக மாணவ, மாணவியருக்கு பெரிதும் பயன்படும்.

ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 60.00

சகலகலா வல்லவன் கமலஹாசன்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 25.00

தமிழ்ப்புலவர் கவி காளமேகம்: பக்கங்கள் 112; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
காளமேகப் புலவரின் வரலாறும், அவர் இயற்றிய தனிப்பாடல்களும்பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. புலமைப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் எனறத் தலைப்புகளில் மொத்தம்180 பாடல்களும் இவற்றின் எளிய விளக்க உரைகள் கவி காளமேகத்தின்தமிழ் புலமையை எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ்ப்புலவர் புகழேந்தி: பக்கங்கள் 112; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
வெண்பாவித்தகர் என புகழப்படும் புகழேந்திப் புலவரின் வரலாறு விரிவாகவும், தெளிவாகவும் தரப்பட்டுள்ளது. இவரின் சிறந்த புலமைக்குச்சான்றாக இருக்கும் நளவெண்பாவும், அவரால் இயற்றப் பெற்ற தனிப்பாடல்களும் தமிழ் அன்னைக்குச் சூட்டிய அணிகலன்களாகப்போற்றக்கூடிய பெருமையுடையனவாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மன்: பக்கங்கள் 448; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.80–
கட்டபொம்மனைப் பற்றி நாட்டு மக்களிடையே கூறப்படுகிற வீரப்பிரதாபங்களும், அந்தக் காலத்திய கவிஞர்களால் உணர்ச்சியோடு, ஓலைச் சுவடிகளில் வடிக்கப்பட்ட கும்மிகளும் கொண்டது. படிக்க ஆர்வமூட்டுவது. சரித்திரப் பின்னணியும் கொண்ட வரலாறு இது.
ராணி மங்கம்மாள்: பக்கங்கள் 288; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.55
ராணி மங்கம்மாள் அரசாண்ட காலம் மதுரையின் பொற்காலம் என்று புகழாரம் சூட்டப்பட்டது. ராணி மங்கம்மாவின் அரசாட்சி, அவரது சரிதம், நாயக்க மன்னர்களின் வரலாறு ஆகியவை சரித்திர குறிப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
சிவாஜியின் நடிப்பிலக்கணம்: நுõலாசிரியர்: நந்திவர்மன் ஜீவன். வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 340. விலை: ரூ.100)
என்ன வேடம் புனைந்தாலும், அந்த கதைப் பாத்திரமாக மாறாது, அவர் அவராகவே இருக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், சிவாஜி நடித்த படங்களில் கணேசன் என்பவர் மறைந்து அப்பாத்திரம் மட்டுமே வெளிப்படும்.

சிவாஜி ஹாலிவுட்டில் பிறந்து இருந்தால், ஹாலிவுட்டின் மாபெரும் நடிகர்கள் வேலை இழந்து போயிருப்பர் என்று மார்லன் பிராண்டோ கூறும் அளவுக்கு நடிப்பின் சிகரங்களைக் கண்டவர் சிவாஜி. அவரைப் பற்றிய சிறந்த ஆய்வு நுõல் இது.

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் இவை சொல்லும் நாடக இலக்கணம் பற்றியும் சிறப்பாகப் பேசுகிறார் ஆசிரியர். ஸ்தானிஸ்லாவங்கி சொன்ன நடிப்பு முறை பற்றியும் அலசுகிறார். அபூர்வமான புகைப்படங்கள், சிவாஜி நடித்த திரைப்படங்களின் பட்டியல், நடிகர் திலகம் பெற்ற பரிசுகளும், பட்டங்களும் என்று புள்ளி விவரங்கள் தரும் இந்த நுõல் ஒரு விரிவான ஆழமான ஆய்வு நுõல்!

மாவீரன் அலெக்சாண்டர் : நுõலாசிரியர்: கோடீஸ்வரன். வெளியீடு: சாந்தி பதிப்பகம், 27, அண்ணா சாலை, சென்னை2. (பக்கம்: 304. விலை: ரூ.125)
உலக வரலாற்றில் மாவீரர்கள் என்று மதிக்கப்படுபவர்களில் தலைசிறந்தவனாக போற்றப்படுபவன் கிரேக்க மன்னனான அலெக்சாண்டர். 20ம் வயதில் மன்னனாகி 33ம் வயதில் காய்ச்சலால் மரணம் அடைந்த அலெக்சாண்டர் கிரேக்க நாகரிகத்தைப் பிற நாடுகளிலும் பரப்ப விரும்பியே பல நாடுகளின் மீது படையெடுப்பு நடத்தினான். பல நாடுகளை வென்று வெற்றி மேல் வெற்றி பெற்றவனாய் இருந்தும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவன். இறக்கும் தருவாயில் “என் கல்லறையில் என்னை வைக்கும்போது என்னுடைய இந்த இரண்டு கைகளை வெளியே தெரியுமாறு புதைக்க வேண்டும். கல்லறையில், “இதோ இந்தக் கல்லறையில் உறங்குகிறவன் உலகத்தையே வென்றவன் தான்! ஆனால், அவன் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது வெறும் கையோடு தான் செல்கிறான்’ என்ற வாசகத்தைப் பொறிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உயிர் நீத்தான்.
உலகின் மிகப் பெரிய பெரும் தத்துவ ஞானிகளில் ஒருவராகக் கருதப்படும் அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கு ஆசிரியராய் வாய்ந்தது அவரது அதிர்ஷ்டங்களில் ஒன்று. எனவே தான் மிகச் சிறந்த வீரனாக மட்டுமின்றி சிறந்த ராஜதந்திரியாகவும் நீதிமானாகவும் திகழ்ந்தான் அலெக்சாண்டர். ஆசிரியரின் அலங்கார நடை புத்தகத்திற்கு மேலும் சுவை கூட்டுகிறது.

கோட்டையும் கோடம்பாக்கமும்: ஆசிரியர்: அரூர்தாஸ்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. விலை: ரூ.60
தமிழ் சினிமா இதுவரை 4 முதல்வர்களை தமிழகத்திற்கு அளித்துள்ளது. இந்த புத்தகம், கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்குள் நுழைந்த நுழைந்து கொண்டிருக்கும் கலைஞர்களைப் பற்றி நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ள உதவும்.
ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு : நுõலாசிரியர்: ஒர்சே மா.கோபாலகிருஷ்ணன். வெளியீடு: நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை20. (பக்கம்: 600. விலை: ரூ. 230)
நுõலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நுõலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பாரிசில் தேசிய நுõலகத்தில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்துப் பல புரிய தெரிவுகளை இந்நுõலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

கடந்த 1709 முதல் 1761 வரை புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவப் படத்தையும் இந்நுõலில் வழங்கியுள்ளார். மேலும் பாரிசில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை அப்படியே ஒளிப்படமாக இந்த நுõலில் வெளியிட்டுள்ளதும் சிறப்பு ஆகும்.

24.4.1752 முதல் 08.04.1753 வரை உள்ள ஓராண்டுக்குரிய நாட்குறிப்பு மட்டும் இந்த நுõலில் பதிப்பிக்கப்பட்டுள் ளது. பின்னிணைப்பாக நாட்குறிப்பில் இடம் பெறும் பெயர்களைத் தொகுத்து அவற்றின் பக்கங்களையும் குறிப்பிட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

1752 முதல் 1753 வரை தமிழகத்திலும் புதுவையிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய நினைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் இந்த நுõல் உதவியாக இருக்கும். நுõலாசிரியர், பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வரலாற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சிறந்த முறையில் நுõலைப் பதிப்பித்திருக்கிறார்.

நுõலாசிரியர் இந்த நுõலுக்கு வழங்கியுள்ள விரிவான முன்னுரை அவரது உண்மை அறிந்து பதிப்பிக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.

தமிழ் மக்கள் வரலாறு (அயல்மொழி, இன, மதத்தார் காலம்) : நுõலாசிரியர்: க.ப.அறவாணன். வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை29. (பக்கம்: 304. விலை: ரூ. 200)
தமிழ் மக்கள் வரலாற்றின் மூன்றாம் தொகுதியான இந்த நுõலில் வட இந்தியாவில் இருந்து வந்து பரவிய வைதிக மதம், சமண, பவுத்த மதங்களால் தமிழர் வாழ்வில் நிகழ்ந்த பாதிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன் விளைவால் தமிழர் தம் வழிபாடு, தம் பண்பாடு, தம் மொழி ஆகியவற்றைப் பேரளவு இழத்தல், வர்ணாசிரம தருமத்தையும் ஜாதி பேதத்தையும் தமிழர் ஏற்க வேண்டிய நிலை, சமண பவுத்த மதங்களின் வீழ்ச்சி, கோவிற்கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் வளர்ச்சி, வட இந்தியாவில் குப்தர்கள் காலத்தில் நடந்த பிராமணியம் தழுவிய மாற்றங்கள் பல்லவர் வழியாகத் தமிழகத்தில் இறக்குமதியான வரலாறு ஆகியவை விரிவாகவும், உறுதியாகவும் நிறுவப்பட்டிருக்கின்றன.

தமிழ்ச் சமுதாயம் காலந்தோறும் மாறி வந்த போக்கிற்கான சூழல்கள் கூடியவரை முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளன. இச்சமுதாய மாறுதல்கள் யாரால் நிகழ்ந்தன என்று விளக்கும்போது ஆசிரியர் நடுநிலையான ஆய்வு முறையை மேற்கொண்டிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.

ஆசிரியர் தலைசிறந்த கல்வியாளர். ஆழ்ந்த புலமையும் ஆராய்ச்சித் திறனும் படைத்தவர். ஆனால், தம் புலமைக்கு ஏற்பப் பண்டித நடையில் வாசகர்களை மிரட்டாமல் அனைவரும் எளிதில் புரிந்து தெளியும் பொருட்டு இந்நுõலை எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. “அறநெறிகள் இக்

காலத் தமிழர்களிடம் பரவாமைக்கு காரணங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை (12ம் அத்தியாயம்) அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய ஒன்று.

தமிழகம் ஊரும் பேரும்: நுõலாசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 420. விலை: ரூ.80).
தமிழகத்தில் பல ஊர்களின் இன்றைய பெயர் அவை ஆதியில் வழங்கப்பட்டபெயர்களில் இல்லை. காலப்போக்கில் சிதைந்தும், திரிந்தும் மருவியும், மாறியும் தத்தம் முதனிலையை இழந்திருக்கின்றன.

<உதாரணம்: பாண்டிநாட்டு கானப்பேர் மிக பழமையான ஊர். அங்கு குடிகொண்டுள்ள ஈசன் மீது சுந்தரர் மிகவும் காதலுற்றுப் பாடிய பத்துப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் “கானப்பேர் உறை காளை’ என்று இறைவனை குறிப்பிட்டார். சுந்தரர் வாக்கின் மேன்மையால் அவ்வூர் இறைவனைக் “காளையார்’ என்று மக்கள் அழைக்கத் தொடங்க அவர் இருந்த கோவில் காளையார்கோவில் ஆயிற்று. கோவிலின் பெயரே நாளடைவில் அந்த ஊர்ப் பெயராகவும் கொள்ளப்பட்டு விட்டது!

“கானப்பேர்’ காளையார்கோவில் ஆனது போல் தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் மாறியிருக்கின்றன. சொல்லின் செல்வர் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் நீண்ட நாள் உழைப்பு, ஆராய்ச்சியின் பயனாய் விளைந்த நுõல் “ஊரும் பேரும்.’

“பிள்ளையவர்கள் நிலம், மலை, காடு, வயல், ஆறு, கடல், நாடு, நகரம், குடி, படை, கோ, தேவு, தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு நிகழ்த்தியுள்ள ஊர் பேர் ஆராய்ச்சியும், தந்துள்ள அடிக்குறிப்புகளும், இலக்கிய மேற்கோள்களும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும்’ என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க., இந்நுõலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிள்ளையின் மிடுக்கான தமிழ்நடை அழகு படித்துப் படித்துச் சுவைக்க வேண்டிய ஒன்று.

ங்கம்: நாணயங்களும் பண்பாட்டு வரலாறும் (முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை வாழ்த்த தொகுக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்), தொகுப்பாசிரியர்: முனைவர் இரா.நாகசாமி, பதிப்பித்தோர்: நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ், தபால் பெட்டி எண்.8780. அடையார், சென்னை600 020. (பக்கம்: 236. விலை: ரூ.700). உட்ச்டிடூ: ணஞுதீஞுணூச்ணீதஞடூடிஞிச்tடிணிண@ணூஞுஞீடிஞூஞூட்ச்டிடூ.ஞிணிட்

சிறந்த நாணய ஆய்வாளரான முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தியை வாழ்த்தும் நோக்கில் இந்நுõல் வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி தம் வாழ்வின் முக்கிய பெரும் பகுதியை நாணயச் சேகரிப்புக்கும் அவற்றை ஆய்வு செய்வதிலுமே செலவிட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நாணயப் புழக்கம் ஆரம்பித்த சங்க காலத்தோடு தொடர்புடைய முத்திரைக் காசுகள், சங்க கால அரசர்கள் வெளியிட்ட காசுகளை நுணுகி ஆய்ந்து புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்தார். அயல் நாட்டுக் காசுகளில், முக்கியமாக சங்க காலத்தோடு தொடர்புடைய மத்திய தரைக்கடல் நாட்டுக் காசுகள் தமிழகத்தில் கிடைப்பது பற்றிய பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிய வைத்தார். பல்லவர் காலக் காசுகளின் சிறப்பியல்புகளைப் பற்றியும் ஒரு முழு நுõல் எழுதியுள்ளார். பத்திரிகை துறையில் ஆழக்கால் பதித்திருந்தும், இவ்வகையான நுணுக்க ஆய்வுகளை மேற்கொண்ட இவரது செயல்கள் அகில உலகப் பாராட்டுகள் பலவற்றைப் பெற்றுத் தந்துள்ளது. இவரது சேவையைப் பாராட்டும் முகத்தான் உலக அறிஞர்கள் பலர் தம் ஆய்வுக் கட்டுரைகளை இந்நுõலில் காணிக்கையாக்கியுள்ளனர்.

இந்நுõலில் 19 ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. அயல்நாட்டு நாணய இயல் அறிஞர் களான பெர்காசு, மக் டொவால், வால் பெர்க், பார்பரா மியர்ஸ் ஆகியோருடன், இலங்கை வரலாற்று ஆசிரியர் பத்மநாதன் ஆகியோரின் படைப்புகளைத் தாங்கியுள்ளது இந்நுõல். முதுபெரும் பேராசிரியர் வ.அய்.சுப்ரமணியன், கல்வெட்டு அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், பத்மநாப சாஸ்திரி ஆகியோர் தம்முடைய ஆய்வுகளை இந்நுõலுக்கு அளித்து பெருமை சேர்த்துள்ளனர். ஏ.வி.நரசிம்ம மூர்த்தி, கே.வி.இராமன், ஷோபனா கோகலே, எஸ்.ஜே.மங்களம் போன்ற பேராசிரியர்களோடு, ராஜா ரெட்டி, எஸ்.ஜி.தோபடே, குல்கர்னி, ஜவகர் பாபு ஆகிய நாணய இயல் வல்லுனர்களும் தம் படைப்புகளால் இந்நுõலை அலங்கரித்துள்ளனர். அறிவியலில் பெரும் புலமை பெற்றுள்ள பலதேவ் ராஜ், வெங்கட ராவ் ஆகியோரின் படைப்புகளும் இந்நுõலுக்கு அணி சேர்க்கின்றன.

திருக்கோயிலுõரில் கண்டெடுக்கப்பட்ட உரோமானிய போலிக் காசுகள், உரோமானிய தங்கம் இந்தியா வை வந்தடைந்ததற்கான காரணிகள் அலசப்பட்டுள் ளன. தக்காணத்தை ஆண்ட சாதவாகனர்களின் தொடக் கம் பற்றிய புதுச் செய்திகள், சாதவாகன மன்னர்களின் உருவம் பொறித்த காசுகளில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்து வடிவங்களின் தன்மை, கோவாவில் கிடைத்த சாதவாகனர் காசுகள், ஜெர்மனி நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ள முத்திரைக் காசுகள், இவற்றோடு ஆந்திர ஜநபதம் வெளியிட்ட காசுகளின் சிறப்பியல்புகள் என பல புதுச் செய்திகள் விவாதிக்கப்பட்டுள்ளது நாணய ஆய்வாளர்கள் பலருக்கும் மகிழ்ச்சி தருவதாகும்.

புதிய காசுகளின் கண்டுபிடிப்புகள் வரிசையில், புதிய வரவான நுளம்பர் காசுகள், தஞ்சாவூர் மாவட் டம், பள்ளி அகரம் கிராமத்தில் புதையலாக கிடைத்த காசுகள், தென் கேரளப் பகுதிகளில் கிடைக்கப் பெறும் 1718 ஆம் நுõற்றாண்டைச் சார்ந்த சிறு காசுகள், என புதுச் செய்திகள் பலவும் விருந்தாக அளிக் கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் புழக்கத்தில் இருந்த காசுகள் பலவற்றைப் பற்றிய இலக்கியத் தரவுகள் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது கூடுதல் செய்தியாகும்.

காசுகளைக் கண்டெடுக்கும் வழிமுறைகள் போன்ற தேவையான தகவல்கள், பழங்காசுகளை அறிவியல் பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது எழுகின்ற பிரச்னைகள், அவற்றை அணுகும் முறைகள், காசுகளின் உலோகத் தன்மையை அறிவியல் பூர்வமாக கண்டு அறியும் முறைகள் என தற்கால ஆய்வாளர்

களுக்கு வேண்டப்படும் செய்திகள் ஒருசேர அளிக்கப்பட்டுள்ளன. தொல்பழங்காலத்தில், ஆதிச்சநல்லுõர் செம்பு, இரும்பு, தங்க கனிமங்களை வெட்டி எடுக்கும் களமாக இருந்தமை போன்ற புதுச் செய்திகள் அனைவருக்கும் பயன் அளிக்கும் விவரங்களாகும்.

சைவ சித்தாந்தத்தின் சேர நாட்டுப் பரிமாணங்கள், பல்லவர், பாண்டியர், சோழ அரசப் புலமையாளர்

களின் விவரங்கள், கீழைச் சாளுக்கிய அரசனான விஜயாதித்யன் செப்பேட்டு விவரங்கள் யாவும் புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இலங்கை பற்றி இந்திய நுõல்களில் காணப்படும் முக்கிய குறிப்புகள், அங்கு நிலவிய இந்திய மற்றும் புத்தமத கட்டடக் கலையின் சிறப்புத் தன்மைகள் ஆயப்பட்டுள்ளது மற்றொரு முக்கிய பண்பாகும்.

நுõலின் இறுதியில் தொகுத்தளிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தியின் புகைப்படங்கள் வரலாற்றுச் செய்திகள் பலவற்றைக் கொண்டு மிளிர்கிறது. கிருஷ்ணமூர்த்தியின் பல்வேறுபட்ட கோணங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த இத்தொகுப்பை ஆக்கி அளித்துள்ள தொகுப்பாளர்களான இரா. நாகசாமி, ஏ.வி.நரசிம்மமூர்த்தி, கே.வி.இராமன், ஐ.கே.சர்மா ஆகியோரை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. நன்கு வடிவமைக்கப்பட்டு, சிறந்த முறையில் அச்சிட்டுள்ள பதிப்பகத்தாரின் இத்தொண்டு பல காலம் தொடர வேண்டும். இந்நுõல் இந்திய நாணயவியல் ஆய்வாளர்

களுக்கு மட்டுமின்றி தொல்லியல், தொல் அறிவியல், வரலாறு, இலங்கை வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வு செய்வோருக்குப் பெரும் துணையாக இருக்கும்.

02. நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும்: நுõலாசிரியர்: ஜெகாதா. வெளியீடு: அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை600 014. (பக்கம்: 320. விலை: ரூ.100)

சமயப் பொறை மிக்க இந்து சமயப் பற்றாளர்க ளான நாயக்க மன்னர்கள் விஜய நகரப் பேரரசர்களின் பிரதிநிதியாகத் தமிழகத்தின் தென் பகுதிக ளை ஆண்டு வரலாற்றின் உன்னதப் பக்கங்களை ஆக்கத் துணை நின்றனர். சுதேச சிந்தனையும், தன்னாட்சி ஆர்வமும் மிக்க சேதுபதி மன்னர்கள் அந்த நாயக்க மன்னர்களுக்குத் துணை நின்றனர். வேற்று முகத் தானை வேரறுக்கும் பண்பு கொண்ட சேது வேந்தர்கள் அதன் பொருட்டே ஆங்கிலேயர்களையும், ஆங்கிலேய அடிவருடிகளையும் அலற அலற எதிர்த்து தாக்கி விடுதலைப் போருக்கு முதல் முழக்கம் இட்டு ஆர்ப்பரித்தனர்.

அவர்களது வீர வரலாற்றைக் கூறும் சுவையான நுõல்! சரித்திரப் பொக்கிஷம்!

அல் காயிதா (பயங்கரத்தின் முகவரி): நுõலாசிரியர்: பா.ராகவன். வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், (சென்னை4. பக்கம்: 134. விலை: ரூ.60).

“அல்காயிதா’ ஒரு பயங்கரவாத அமைப்பு, உலகம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் பிதாமகன், ஒசாமா பின்லாடன். இந்த அமைப்பின் தோற்றம், பரப்பு, செயல், வளர்ச்சி, தளர்ச்சி என அனைத்து விவரங்களையும் அடி முதல் நுனி வரை ஒன்று விடாமல் அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு, வலைத்தளங்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் துணையுடன் பா.ராகவன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் தமிழர்களின் வாசிப்பு தளங்களை விரிவுபடுத்தி, அகலப் பார்வைக்கு வழி நடத்திச் செல்கிறது. ஏற்கனவே 9/11, பாலஸ்தீனம் போன்ற பல சர்வதேச நிகழ்வுகளை புத்தக வடிவில் வழங்கியுள்ள ஆசிரியரின் இந்தப் புத்தகமும் முன்னது போல் சிறப்பாகவே உள்ளது. சுவைபட, கோர்வையாக, வாசகனுக்கு அலுப்புத் தட்டாமல் எழுதப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு.

கடல் வழி வணிகம்!: ஆசிரியர்: நரசய்யா, வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், “கோனார் மாளிகை’ 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை14. போன்: 2813 2863

“மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்ற மகா கவியின் வரியோடு “கடல் வழி வணிகம்’ என்ற இந்த நுõலைத் தொடங்குகிறார் ஆசிரியர் நரசய்யா. இது இரண்டு பாகமாக அமைந்துள்ளது.

முதல் பாகத்தின் முதல் நான்கு அத்தியாயங்கள் தமிழகத்தில் சங்க காலத்திலும், இடைக் காலத்திலும் நிகழ்ந்த கடற் பயணங்கள், கடல் வணிகங்கள் பற்றிச் சிறப்பாகவும், இந்தியத் தீபகற்ப முழுமை நிலையில் அவை பற்றிப் பொதுவாகவும் விளங்குகின்றன. அடுத்துவரும் ஐந்து அத்தியாயங்களும் ஐரோப்பியர் வருகையாலும், ஆட்சியாலும் நம் நாட்டுக் கப்பற் கலை, கடல் வணிக நிலை ஆகியவை அடைந்த பாதிப்புகளைத் தெளிவாகப் பேசுகின்றன.

இரண்டாம் பாகம் நம் நாட்டுத் துறைமுகங்கள் ஒவ்வொன்று பற்றியும் கூறும் விளக்க அறிக்கைகளாகவும் நமது நவீனக் கடற்படையின் விவரணங்களாகவும், 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

மேற்சொன்ன செய்திகளெல்லாம் வரிசையாக, முறையாக தொகுக்கப் பெற்றுள்ளன. இந்நுõலாசிரியர் இந்தியக் கடற்படையில் பல ஆண்டுகள் பணி செய்தவர். கப்பல் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்; வணிகக் கப்பல்களிலும் பணியாற்றியவர்; தன் கப்பல் பயணங்களின் போது உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று அனுபவம் பெற்றவர். இந்தத் தகுதிகளின் அடிப்படையில் இவர் எழுதியது இந்த நுõல்.

இந்த நுõலின் நடை எளிமையாகவும், புரிந்து சுவைக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.

“உலகத்திலுள்ள எல்லாச் சமுத்திரங்களையும் விட, மத்திய தரைக் கடலும் செங்கடலுந்தாம், சரித்திரத்தில் குறிப்பிட்டுப் புகழப்படும் இடங்கள். கடல்வழி வணிகத்தில் ஆரம்பமே இங்கு தான் நிகழ்ந்தது. இக்கடலைச் சுற்றித் தான் உலகின் சிறந்த நாகரிகங்கள் வளர்ந்தன. மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் மேம்பட்ட இவ்விடங்கள் சரித்திர ஆசிரியர்களை மிகவும் ஈர்த்தன. அதற்குப் பிறகு கடல்

வழிச் சரித்திரத்தை எழுதியதே அரபிக் கடலும் இந்து மகா சமுத்திரமுந்தாம்!’ (ப.27)

“முதலில் கரை வழியாக ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலேயே வணிகம் செய்து கொண்டிருந்தவர்களான ரோமர்கள், சிறிது சிறிதாய் முன்னேறிக் கரை வழியாய் இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்து முகத்துவாரம் வரை வந்து, பிறகு தமது வணிகத்தை குஜராத் கடற்கரையிலும் தொடர்ந்தனர்!’ (ப.28)

தனது நுõலின் செய்திகளுக்கு ஆசிரியர் இலக்கியச் சான்றுகளை மிகுதியாகத் திரட்டித் தந்துள்ளார். இவை, ரிக்வேதம், தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, புறநானுõறு, அகநானுõறு, பெருங்கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, வால்மீகி ராமாயணம், கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, கம்பராமாயணம் முதலிய நுõல்களில் உள்ள குறிப்புகளும் செய்திகளும் ஆகும்.

தொல்பொருள் சான்றுகளுக்கும் பல நுõல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 1975ல் தமிழ்நாடு அரசு வெளியீடாக வந்த “தமிழ்நாட்டுத் தொல் பழங்கால வரலாறு’ எச்ணூணஞுt கதஞடூடிஞிச்tடிணிணண் வெளியீடாக வந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பல நுõல்கள் குறிப்பிடத்தக்கன.

இந்நுõலைப் படித்து முடித்த பிறகு, ஆசிரியர் தனது அணுகுமுறையிலும் நோக்கத்திலும் வெற்றி பெற்றுள்ளார் என்ற ஆணித்தரமான கருத்து ஏற்படுகிறது. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் “ஊணிணூஞுடிஞ்ண Nணிtடிஞிஞுண் ணிஞூ குணிதtட ஐணஞீடிச்’ நுõலின் பாணியில் இங்குத் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என்று எண்ணத் தோன்றுகிறது.

இலக்கியப் பெரும்புகழ் பெற்ற 97 வயது “மணிக்கொடி’ச் சிற்பி “சிட்டி’ நுõலுக்கு வழங்கியுள்ள அணிந்துரை பற்றி இங்குக் குறிப்பிடுவது மிக அவசியம்.

இந்த நுõலை ஒரு புதிய முறையிலான வரலாற்றுப் படைப்பு என்று மதிப்பிடும் அவர், “கடல் வழி வணிகம் என்பது இப்புத்தகத்தின் தலைப்பாய் இருந்தாலும், இதில் வரலாற்றின் பல்வேறு துறைகள் சேர்ந்து நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு படிப்படியாய் உயர்த்தின என்பதும் சொல்லப்படுகிறது. நுõலின் ஒவ்வொரு வரியும், பலப்பல செய்திகளைக் கொண்டிருப்பதால் இது கலைக்களஞ்சியம் போல் தோன்றுகிறது.

“ஒரு முழுமையான பொருளியல் பங்களிப்பாக இந்நுõலை ஏற்கலாம்’ என்று நுõலின் உள்ளீட்டுச் சிறப்பை எடுத்துரைக்கிறார். மேலும், “நுõற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற நரசய்யாவின் மொழிநடையும், அவருடைய கப்பற்படை அனுபவமும், வணிகக் கப்பல் வாழ்வு நாட்களின் அனுபவமும் இந்தப் புத்தகத்தை ஒரு வசீகரமான வாசகமாய் தோற்றுவிக்கிறது’ என இவர் கூறியிருப்பது உண்மை.

நுõல் தரமான தாளில் மிக அழகான அச்சமைப்புக் கொண்டுள்ளது. இதன் கடைசி 12 பக்கங்களில் தரப்பட்டுள்ள வண்ண ஒளிப்படங்கள் அருமையாக உள்ளன. இவை நுõலின் செய்திகளுக்குத் தக்க ஆதாரங்களாகச் சந்தேகத்துக்கு இடமின்றி திகழ்கின்றன.

மலரும் நினைவுகள்: நுõலாசிரியர்: இந்திரா காந்தி. தமிழாக்கம்: கி.வேங்கட சுப்ரமணியன். வெளியீடு: பூரம் பதிப்பகம், பு.எண்.2, ப.எண்.59, ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 106. விலை: ரூ.30).

இந்திரா காந்தி மலரும் நினைவுகளாக பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள். மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்வராஜ் பவனின் கதை, குழந்தைப் பருவம், தன் பதினாறாவது வயது, சாந்தி நிகேதனில் வாழ்க்கை, சிறை நினைவுகள், தாயாக இருப்பது பற்றி, பாபுவைப் பற்றிய நினைவுகள், ஜவகர்லால் நேரு என்ற தலைப்புகளில் தன் வரலாறு சுவைபட கூறப்பட்டுள்ளது. சில விளக்கங்களுக்கு விடைகள் மனதை தொடுகிறது. அனைவரும் படித்து மகிழத்தக்க சிறந்த நுõல். இந்திரா காந்தியை நேரில் சந்தித்து பேசிய உணர்வை இந்நுõலைப் படிப்பவர்கள் உணர முடிகிறது.

உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் (பகுதி1 வரலாற்றியல். பகுதி2வாழ்வியல்): தொகுப்பாசிரியர்: முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள். வெளியீடு: வள்ளலார் அன்பு நிலையம், மலேசியா. (பக்கம்: 1150. விலை: ரூ.400).

உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் என்ற இந்நுõல் இரண்டு பாகங்களாக 1150 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நுõல். முதல் பாகம் வரலாற்றியல் என்றும், இரண்டாம் பாகம் வாழ்வியல் என வகுத்துத் தயாரித்துள்ளார் ஆசிரியர். முதற்பதிப்பு 1997ல் வந்துள்ளது. இப்பதிப்பு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பாக தற்போது வந்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழரால் மலாய் மண்ணிலிருந்து இவ்வறிய தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் உதயமாகியிருக்கிறது.

முதற்பகுதி வரலாற்றியல் என பண்பாட்டு முரசுகள் எனத் துவங்கி அதில் ஆறு ஆய்வுக் கட்டுரைகளும், ஒன்று முதல் ஐந்து இயல்களில் 56 கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் 620 பக்கங்களில் பல தமிழ் இலக்கிய ஆய்வாளர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று பதிவு செய்துள்ளார். தமிழர் வரலாறு, பண்பாடு, இலக்கியங்களில் பண்பாடு, நாட்டுப்புறவியல் பண்பாடு, அறக்கோட்பாடுகளில் தமிழர் பண்பாடு, சமய வாழ்வில் தமிழர் பண்பாடு என ஐந்து தலைப்புகளில் 56 கட்டுரைகள் உள்ளன. மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் முதல் தொகுப்பாசிரியர் முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள் வரை வரலாற்று ஆவணங்களின் குறிப்புகளோடு ஆய்வுக் கட்டுரைகள் தந்துள்ளனர் இந்நுõலில்.

இரண்டாவது பகுதி வாழ்வியல். இதில் ஐந்து இயல்கள், ஒப்பன்னக் கலையில் தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாட்டில் மீட்டுருவங்கள், தமிழர் பண்பாட்டில் ஊடாட்டங்களும் பின்னடைவுகளும், இல்லற வாழ்வில் தமிழர் பண்பாடு, தமிழர் வாழ்வில் புதிய பண்பாடு எனப் பொதுத் தலைப்பில் நாற்பத்தைந்து கட்டுரைகள் 513 பக்கங்களில் 45 முனைவர்கள் தந்துள்ளதைப் பதிவு செய்துள்ளார். உண்மையிலேயே தமிழனின் ஒட்டுமொத்தமான வாழ்வியல் ஆவணக் குறிப்பு. இந்நுõல்கள், தமிழகம், புதுவை போன்ற மாநிலப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகின்ற முனைவர்களிடத்திலே பெற்ற கட்டுரைத் தொகுப்பு நுõல். ஏறத்தாழ 17 ஆண்டுகள் உழைத்து திருத்திய செம்பதிப்பாய் இந்நுõலைக் கொண்டு வந்துள்ளார் முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள்.

தமிழில் இதுநாள் வரை இதுபோன்ற ஒரு தொகுப்பு நுõல் வந்ததில்லை. நல்ல உயரிய தாளில் அச்சிட்டு, பிழைகள் இல்லாது தயாரித்துள்ளார். ஒவ்வோர் தமிழர் வீட்டின் நுõலகத்திலும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணம், நாளைய தலைமுறையினருக்கு ஒரு வழி காட்டி நுõல்.

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு…: நுõலாசிரியர்: ஜி.எஸ்.எஸ்., வெளியீடு: கிழக்கு பதிப்பகம். (பக்கம்: 136. விலை: ரூ.60).

மிகப் பழமையான நாடு ஆப்கானிஸ்தான். யுத்தம், சோகம், நாசம் என அதன் சோக வரலாறு மிக நீளமானது. உலகின் மிகப் பெரிய வல்லரசாக முன்னர் இருந்த சோவியத் ரஷ்யாவும், இன்றைய வல்லரசாக உள்ள அமெரிக்காவும் அத்துமீறி நுழைந்து துவம்சம் செய்த பூமி. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான அல் கொய்தா இயக்கம் புகலிடம் தேடி வந்த நாடு. ஒசாமா பின்லாடனுக்கு ஏற்ற மறைவிடங்கள் நிரம்பிய பகுதி. இத்தனை சிறப்புகளுடன் கூடிய ஆப்கானிஸ்தான் பற்றிய பல தகவல்களைத் திரட்டி ஜி.எஸ்.எஸ்., எழுதியுள்ள இந்த புத்தகம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

கிழக்கு பதிப்பகம், பல நாடுகளைப் பற்றி நுõல்கள் எழுதி வெளியிட்டு வருகிறது. இந்த புத்தகங்களில் உலக வரைபடத்துடன் குறிப்பிட்ட அந்த நாட்டின் வரைபடத்தையும் வெளியிட்டால் வாசகர்களுக்கு மேலும் பயன்படும்.

தெய்வத்தமிழ் ஈழத்திலே…!: நுõலாசிரியர்: அமரர் கல்கி. வெளியீடு: வானதி பதிப்பகம் (பக்கம்: 176. விலை: ரூ.50).

ஐம்பதுகளில் அமரர் கல்கி, இலங்கைப் பயணம் மேற்கொண்டார். அந்த பயண அனுபவங்களை, “கல்கி’ வார இதழில் கட்டுரைகளாக எழுதியிருந்தார். இதை, இப்பொழுது புத்தகமாக வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இலங் கை வாழ் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம், அப்பொழுதே துவங்கி விட்டதை, இந்த கட்டுரைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது. அந்த மிகச்சிறிய தீவின் வளமைக்கும், செழிப் புக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் சிந்திய வியர்வையை மிகச் சிறப்பாக அமரர் கல்கி பதிவு செய்திருக்கிறார். சிங்கள இன வெறியர்களின் அடக்கு முறையை, அகிம்சை உணர்வுடனும், அமைதியுடனும் சகித்துக் கொண்ட அந்த நாளைய இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றி, தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் நம் கண் முன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அமரர் கல்கி.

தமிழ்நாட்டு பாரத ரத்தினங்கள்: ஆசிரியர்: சூர்யா. வெளியீடு: சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், பழைய எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 124. விலை: ரூ.25).

ராஜாஜி, சர்.சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அப்துல் கலாம், எம்.ஜி.ஆர்., ஆகியோரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்கள்! தமிழ்நாட்டில் “பாரத ரத்னா’ விருது பெற்ற பெருமக்களின் சாதனைகளை இந்த நுõலில் சிறப்புற விளக்கியுள்ளார் ஆசிரியர் சூர்யா. இந்த நுõல் மாணவ, மாணவியருக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்!

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு: நுõலாசிரியர்: என்.ராமகிருஷ்ணன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்துõர், சென்னை98. (பக்கம்: 184. விலை: ரூ.50).

1927 முதல் 1947 ஆகஸ்ட் வரை நாடு விடுதலை பெற கம்யூனிஸ்டு தோழர்கள் மேற்கொண்ட தலைமறைவு, சிறைத் தண்டனை, நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் இந்நுõலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொண்ட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள இந்த நுõல் பேருதவியாக இருக்கும்.
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்.,: நுõலாசிரியர்: “பொம்மை’ சாரதி. வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு தொலைபேசி: 2433 4397. (பக்கம்: 168. விலை: ரூ.60)

எம்.ஜி.ஆரைப் பற்றிய முழுமையான வரலாற்று நுõல் என்று கூற முடியாவிட்டாலும் வள்ளலாக வாழ்ந்த ஒரு பெருமகனின் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தைச் சித்தரிக்கும் நுõல் என்று இதைக் குறிப்பிடலாம். பத்திரிகையாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். பக்கத்திற்கு பக்கம் அபூர்வப் புகைப்படங்கள். எம்.ஜி.ஆர்., அன்பர்களுக்கு இது ஒரு புதிய புத்தக விருந்து.

சுயசரிதை ஜவஹர்லால் நேரு: தமிழாக்கம்: ஜெயரதன். வெளியீடு: பூரம் பதிப்பகம், 2(59), ராஜு நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 719. விலை: ரூ.300).

பண்டிதர் நேரு பெருமான், இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் (15.8.1947), திடீர் சீனத் தாக்குதல் ஆக்கிரமிப்பின் அதிர்ச்சி காரணமான மனவேதனையில் உயிர் நீத்த வரையிலுமாக (27.5.1964), தொடர்ந்து 17 ஆண்டு காலம், முதன் முதல் பாரதப் பிரதமராக முடிசூடா மன்னராகக் கோலோச்சியவர். நம் நாட்டுப் பிரதமராக இத்தனை நெடிய காலம் எவருமே இருந்ததில்லை.

சமத்துவம், சோஷலிசம், பொதுவுடமை போன்ற புரட்சிகரமான சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டு, நாட்டை வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்ற முன்னோடிச் சிற்பி!

நேருஜி எழுதிய “உலக வரலாற்றின் காட்சிகள்,’ “கண்டுணர்ந்த இந்தியா,’ மற்றும் “ஒரு சுயசரிதை’ ஆகிய மூன்று நுõல்களும் அவரது சம காலத்திய இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயித்ததுடன், அனைத்துலக மக்களையும் எழுச்சியுறச் செய்திருக்கின்றன.

ஒருவரது வாழ்க்கை சரிதமானது அவராகவோ அல்லது பிறர் எழுதுவதின் நோக்கம், அவரது பன்முக ஆற்றல்கள், மகோன்னத சாதனைகளை படித்தறிந்து, மக்கள் அவர் தம் அடியொற்றிப் பயணித்து பயனுற வேண்டும் என்பதே ஆகும். சுய விளம்பரத்தை நாட முற்படாத சுயசரிதை நுõல் இருமுனைக் கூர் வாளையொத்தது. தன்னையும், தன்னைச் சார்ந்தோருக்கும் புகழாரம் சூட்ட மறுப்பதுடன், எதிரணியினரை எள்ளி நகையாடுதலும், இகழ்ச்சியாக உரைப்பதும் தவிர்க்கப்படுவது மரபு. இத்தகைய இலக்கணங்களை நன்கு அறிந்தவர் நேருஜி என்பதற்கு இந்நுõல் கட்டியம் கூறும்.

கடந்த 1940ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு நிகழ்வுகளை நினைவு கூர்ந்து (தமது இல்லத்தில்) எழுதியவற்றையும் இந்நுõலில் பிற்சேர்க்கையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மேலை நாட்டுப் பொருளாதாரம், அறிவியல், சரித்திரம் மற்றும் தத்துவ மேதைகளின் அரிய கருத்துக்கள் இந்நுõலில் நிரம்பி வழிவதை உற்று நோக்கும்போது நேருஜியுடைய விசாலமான, நுட்பமான அறிவுத் திறனும், பன்முக ஆற்றலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்நுõலில் இடம் பெற்றுள்ள சில சுவையான மற்றும் அதிர்ச்சித் தகவல்கள்:

* ஜாலியன்வாலாபாக் படுகொலை அரக்கன் ஜெனரல் டயருடன் சேர்ந்து ரயில் பயணம் (பக்:4546).

* இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியவரும், துப்பாக்கி முனைக்குத் தன் நெஞ்சைத் திறந்து காட்டிய மாவீரருமான ஆரிய சமாஜத்தைச் சார்ந்த சுவாமி ஷ்ரத்தானந்தர் ஒரு இன வெறியனால் படுகொலை செய்யப்பட்டது (பக்:166).

* அன்றாட அத்தியாவசிய வீட்டுச் செலவுகளை முன்னிட்டு, உயர்ந்த வெள்ளி மற்றும் இதர விலை உயர்ந்த வீட்டுப் பொருட்களை விற்க நேரிட்டபோதும், தன் வசம் இருந்த விலை மதிப்பற்ற புத்தகங்களை விற்க முற்படவில்லை. புதிய புத்தகங்களை வாங்குவதையும் நிறுத்தவில்லை! (பக்:525). அத்தனை அறிவுத் தாகம்.

சினிமாக்காரர்களைப் போன்று அரசியல்வாதிகளும் (செயற்கை) “விக்’குகள் வைத்துக் கொண்டு நகர்வலம் வரும்போது, தன்னைப்பற்றி அவரே கூறியிருப்பது:

நான் மிடுக்காகவும், இளமைத் துடிப்புடன் காணப்பட்டாலும் (44 வயதில்) வழுக்கை விழுந்து, தலைமுடி நரைத்துப் போய் விட்டது! முகத்தில் சுருக்கங்கள் தோன்றி, கண்ணைச் சுற்றிக் கருவளையம் உருவாகி விட்டது (பக்.625)

ஏறத்தாழ இரண்டாண்டு காலம் எவரது உதவியும் இன்றி, மூலநுõலின் உயிரோட்டம் சிறிதும் சிதறாத வண்ணம் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ள ஜெயரதனின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதற்குரியது.

அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் நுõலகங்களில் இந்நுõல் தவறாது இடம் பெற வேண்டும். ஏனெனில், உலக அரங்கில் காந்திஜி நேருஜி போன்ற ஒப்பற்ற மாமணிகள், யுகபுருஷர்கள் ஒரே நாட்டில் ஒரே சமயத்தில் தோன்றியதும் இல்லை, இனித் தோன்றுவதென்பதும் மிக மிக அரிது!

குஐNஎஅகOகீஉ குகூOகீஙு ஙிஐகுஈOM குகஉஅஓகு ஃஉஉஓக்அN ஙுஉஙி (ஆங்கில நுõல் பக்கம்: 162. விலை: குறிப்பிடப்படவில்லை)

சிங்கப்பூரின் கதை வாலறிவு பேசுகிறது லீகுவான்யூ: ஆசிரியர்: டாக்டர் கே.சிவம், வெளியீடு: அண்டிச்ண tணூச்ஞீடிணஞ் ஏணிதண்ஞு கதிt ஃtஞீ., 115, Mஞுண்ண்ஞுணஞ்ஞுணூ குtணூஞுஞுt, இணிடூணிட்ஞணி12, குணூடிடூச்ணடுச். (பக்கம்: 200. விலை: குறிப்பிடப்படவில்லை)

ஒளிரும் வைரம் லீகுவான்யூ சிங்கப்பூர் என்று துவங்குகின்ற இப்புத்தகங்கள் உண்மையிலேயே ஒளிரும் வைரங்கள் தான். நல்ல கட்டமைப்பு, அழகான வடிவமைப்பு. உயரிய வழவழப்பான தாள், புத்தகத் தயாரிப்பு என அனைத்திலுமே அற்புதமாய் அழகாய் அறிவுக்கு விருந்தாய் ஆங்கிலத்திலும் தமிழிலும் தந்துள்ளார் டாக்டர் கே.சிவம். உலக அரங்கில் லீகுவான்யூவை அறியாதவர் யாருமிலர். உலக வல்லரசு நாடுகளே இன்றைய சிங்கப்பூரின் வளர்ச்சியைக் கண்டு வியந்து பேசுவதைப் பார்க்க முடிகிறது.

மலாய் நாட்டிலேயிருந்து விடுதலை வாங்கி தனி நாடாகப் பிரிந்து வந்த சிங்கப்பூர், குடிக்கத் தண்ணீர் கூட குழாய் வழியாய் மலாய் நாட்டிலிருந்து பெற்ற நாடு. ஒரு கால் நுõற்றாண்டிற்குள் அந்த நாட்டை ஒரு சொர்க்கலோகமாய் மாற்றி அமைத்த மாமனிதன் லீகுவான்யூ. உழைப்பு, உழைப்பு இது தான் இவனது மூலதனம். கட்டுப்பாடும், நேர்மையும், ஒழுக்கமுமே அவனது வாழ்வியல் வேள்வி. லீகுவான்யூ மனிதனல்ல. ஒரு சகாப்தம். 27 ஆண்டுகள் நிராகரிக்கப்படாத நேசமுடன் மக்களால் தேர்ந்

தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர், செயல்வீரன், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரன், ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பக்கூடிய உத்தமன். அந்த உலகச் சாதனையானது வியக்க வைக்கும் இமாலய சாதனைகளையும், வெற்றிகளையும், பயன்பாடுகளையும் அழகாய் நேர்த்தியான ஆங்கிலத்திலும் அமிழ்தினிய யாழ்ப்பாணத்துத் தமிழிலும் இருவேறு புத்தகங்களாக வடித்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் . ஙிடிண்ஞீணிட் குணீஞுச்டுண் என்ற ஆங்கில சொற்றொடருக்கு “வாலறிவு பேசுகிறது’ என மொழிபெயர்த்துத் தந்துள்ள மொழியாக்கம் ஆசிரியரின் செந்தமிழ்ப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஒரே பொழுதில் படித்து முடித்து வைக்கின்ற புத்தகம் எதுவோ அது தான் ஜீவனுள்ள புத்தகம் என்றான் கோல்ரிட்ஜ். அந்த வகையில் இப்புத்தகத்தைப் படைத்துள்ளார் நுõலாசிரியர்.

இது வாழ்வியல் சரிதை நுõல் அல்ல. தனிமனித ஆளுமை; ஒரு நாட்டையே நிமிர்த்தி நிற்க வைக்க முடியும் என்பதற்குரிய அத்தாட்சியான வரலாற்றுப் பதிவுகள். வைரத்தின் பல முகங்கள் எனத் துவங்கி சமயம், ஆன்மிகம் எனப் பத்தொன்பது அத்தியாயங்களில் 45 உள் தலைப்புகளில் வரலாற்று நாயகன் லீகுவான் யூவின் பேராற்றலையும், பெருமுயற்சியோடு இன்றைய சிங்கப்பூரை உருவாக்கிய ஆளுமையையும் ஒரு வரலாற்றச் சாசனம் போல பதிவு செய்துள்ளார். உலகின் பல மொழிகளில் லீகுவான்யூவைப் பற்றிய செய்திகள் வெளிவந்திருக்கின்றன. உலக அரசியல் அரங்கில் இந்த வரலாற்று சாதனை நாயகனை முன் உதாரணமாய் வைத்து பல நுõல்கள் வந்துள்ளன. ஆனால், இந்நுõல் அவைகளின்று வேறுபட்ட நுõல். ஆசிரியரே குறிப்பிடுவது போல இது ஒரு மீளாய்வு. ஒரு தேடல், ஒரு வரலாற்று ஆவணம்.

நுõலில் லீகுவான்யூவின் குணநலன்களை உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு நிலைகளில் இவரைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களில் 108னைத் தொகுத்துத் தந்திருப்பது ஆசிரியரின் ஆய்வுப் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

“எந்த விடயத்தையும் ஆரம்பிக்கும் முன்னர், அதைச் செய்வதனால் பலன் கிடைக்குமா என்பதை ஆராய்வேன்’ பக்கம்:15.

“அறியாமை, கல்வியறிவின்மை, வறுமை, பொருளாதாரப் பின்னடைவு என்பனவற்றை அழித்த பின்னரே, ஒவ்வொருவரினதும் பொருளாதார உன்னத நிலையையும், அவரது தேவைகளின் பூர்த்தியையும் நிச்சயிக்க முடியும்’ (பக்கம்:23)

“நிறைவேற்றப்படாத, பல பெருந்தன்மைகளைக் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. அதன் சக்தி வளம், உரிய முறையில் உபயோகிக்கப்படாது விரயமாக்கப்பட்டுள்ளது.’ (பக்கம்: 126)

“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் உங்களது உச்சக்கட்ட சக்திக்குப்பட்ட வகையிற் செயலாற்றுங்கள். இதுவே ஜப்பானியர்களின் வெற்றிக்குக் காரணம்’ (பக்கம்: 147).

“அரசுத் தலைவர்கள், உதாரண புருஷர்களாக சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்’ (பக்கம்:161).

என லீகுவான்யூ வாய் பேசிய வைர வரிகளை ஒவ்வொரு பக்கத்திலும் கல்வெட்டுச் செய்தியாகப் பதிவு செய்து அந்த வரலாற்று நாயகனது செயல்திறனை ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஒரு ஓப்பீட்டு இலக்கியம் போல அற்புதமாய் படைத்துள்ளார் முனைவர் சிவம்.

இன்றைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தவறாது படித்துணர வேண்டிய ஒரு பாலபாடம் இந்நுõல்.

கண்டேன் சீனாவை!: ஆசிரியர்: தா.பாண்டியன், வெளியீடு: குமரன் பதிப்பகம், 3 முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 136, விலை: ரூ.50.)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலரான தா.பாண்டியன், இரண்டாம் முறையாக சீனா சென்று வந்த பயண அனுபவங்களை இந்தப் புத்தகத்தின் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். காந்தியவாதியும், சிறந்த பொருளாதார நிபுணருமான ஜே.ஸி.குமரப்பாவின் சீனப் பயணக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவுடைமைக் கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சீனா விலகி, தனியார் துறை மூலம் தொழில்கள் துவங்க முன்வந்துள்ள கால கட்டம் இது. முதலாளித்துவ நாடுகளுடன் வணிகம் செய்து வருகிறது சீனம். சைக்கிள் இருந்த இடத்தில் கார்கள், எல்லாமே அரசு தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, தனி மனிதர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர். இத்தகைய இன்றைய பின்னணியில் இந்தப் புத்தகத்திற்குள் நுழைவது நல்லது.

சீனப் பெருஞ்சுவரையும் அகலமான நீண்ட நெடுஞ்சாலைகளையும், மக்கள் மனதில் காணும் மாற்றங்களையும், பாம்புக்கறி சாப்பிட ஆசைப்பட்டதையும், உப்பு இல்லா உணவு பற்றியும், தரம் பார்த்து அனுபவித்து உணர்ந்து பரவசப்பட்ட அனைத்து விவரங்களையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சீனாவைத் தெரிந்து கொள்ள உதவும் நுõல்.

தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்: தொகுப்பாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 280. விலை: ரூ.120).

பாரதச் சுதந்திரப் பொன் விழாவை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை இளந்தலைமுறையினருக்கு நினைவுபடுத்தவும், உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் “ஜீவா முழக்கம்’ வார ஏடு பொன் விழா மலர் தயாரித்து வெளியிட்டது. மலர் தொடுக்கும் பொறுப்பை நுõலாசிரியர் ஏற்று நாடு முழுவதும் சுற்றி ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகள் பெற்று மிகுந்த அக்கறையோடு மலரை உருவாக்கி அதில் வெளிவந்த கட்டுரைகளை நுõல் வடிவம் தந்திருக்கிறார்.

இதில், 36 கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லாமே தரமாக உள்ளன. குறிப்பாக தியாக சீலர் சுப்பிரமணிய சிவம், ஜீவாவும் இந்திய சுதந்திரப் போராட்டமும், திப்புசுல்தான் விடுதலைப் போரின் முன்னோடி ஆகிய கட்டுரைகள் சிறப்பானவை.

சுதந்திரப் போர்க்களத்தில் டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகங்கள், கட்டுரையில் அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய “பாணபுரத்துவீரர்’ நாடகத்தைக் குறிப்பிடாமல் விட்டார். ஏனோ தெரியவில்லை!

வீரத் தியாகி விஸ்வநாத தாஸ், கட்டுரை உயிர் துடிப்போடு அமைந்து கண்களில் கண்ணீரை குளமாக்குகிறது. வழக்கறிஞராகிய நுõலாசிரியர் சொந்த நலன்களை உதறி விட்டு பொதுத் தொண்டு என்பது எவ்வளவு கடுமையானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து ஈடுபட்டதற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

இம்மாதிரியான நுõல்களே நாட்டுக்குத் தேவை.

கூடஞு கச்டூடூச்திச் இணிடிணண் ஆங்கில நுõல்; ஆசிரியர்: இரா.கிருஷ்ணமூர்த்தி. வெளியிட்டோர்: கார்னே பப்ளிஷர்ஸ், கூ7/1 2, காவேரி சாலை, பெசன்ட் நகர், சென்னை90. (பக்கம்: 196 அ4 அளவு) . விலை: ரூ.800)

தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, கடந்த கால் நுõற்றாண்டுக்கு மேலாக நாணயவியல் பற்றி அனைத்துலகத் தரத்தில் ஆராய்ச்சி நிகழ்த்தி வருபவர். சங்க காலத் தமிழ் அரசர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்ற கருத்தை மாற்றிச் சங்க காலச் சேரர் (மலையமான்) சோழர், பாண்டியர் காலத்தில் வெளியிட்ட நாணயங்களை அரி தில் முயன்று கண்டுபடித்துத் தம் கட்டுரைகள் மூ லமும் நுõல்கள் வழியும் நிலை நாட்டியவர். குறிப்பாகப் பாண்டிய அரசன் பெருவழுதிப் பற்றிய கண்டுபடிப்பு சிறப்பாகச் சுட்டத்தக்கதாகும்.

அண்மையில், பல்லவர் காலத்து வெளியிடப்பட்ட நாணயங்களை ஆராய்ந்து இப்பெரிய நுõலை உருவாக்கியுள்ளார். பல்லவர் கால நாணயங்கள் பற்றி முன்பே சில கட்டுரைகள் அயல்நாட்டு அறிஞர்களாலும் இந்திய அறிஞர்களாலும் வெளியிடப்பட்டிருந்த போதிலும் பல்லவர் நாணயம், பற்றித் தனி முழுமையான ஆங்கில நுõல் முதன் முதலாகத் தற்பொழுது தான் ஆசிரியர் முயற்சியால் வெளிவந்துள்ளது. இவ்வாய்வை நிகழ்த்த இவர் பல காலம் தொகுத்து வந்த நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகத் தென்பெண்ணை, அமராவதி ஆற்றங்கரை ஓரங்களில் கண்டறியப்பட்ட நாணயங்கள் இவர் தம் ஆராய்ச்சிக்கு மிகப் பயன்பட்டுள்ளன. அன்றியும் லண்டன், கொழும்பு, புதுடில்லி, சென்னை அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று தம் ஆய்வை முழுமைப்படுத்தியுள்ளார். இவ்வாராய்ச்சி நுõல் கி.பி.4ம் நுõற்றாண்டு முதல் 9ம் நுõற்றாண்டு வரை பல்லவர்களைப் பற்றிப் பொது அறிமுகத்தை முதலில் நிகழ்த்துகிறது. முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் ஆகியோர் நிரல்பட அறிமுகப்படுத்தப் பெறுகின்றனர். இவ்வறிமுகத்தைத் தொடர்ந்து பல்லவர் நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது. இவ்வாராய்ச்சி பக்கம் 41 முதல் 167 வரை அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மிக அரி ய செய்திகள் அடங்கிய நான்கு பின்னிணைப்புகள் இடம் பெறுகின்றன.பல்லவர் கால நாணயங்களை அறிமுகப்படுத்தும்போது நாணயத்தின் இரு பக்கங்களும் படங்களுடன் தனித்தனியாக அச்சிடப் பெற்றுள்ளன. அதை ஒட்டித் தனியே வரையப் பெற்ற கண் பிரதியும் அச்சிடப் பெற்றுள்ளது. ஆக, ஒவ்வொரு நாணயம் பற்றியும் துல்லியமாக அறியத் தெளிவாக இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நாணயப் படத்திற்கு முன்பும் நாணயம் உருவாக்கப்பட்ட உலோக விவரம், அதன் அளவு, எடை, முன்பக்கமும் பின்பக்கமும் அமைந்துள்ள உருவங்கள் பற்றிய விவரம், நாணயம் கிடைத்த இடம் ஆகியன நிரல்பட வழங்கப் பெற்றுள்ளன. நாணயங்களில் பொறிக்கப் பெற்றுள்ள உருவங்களான காளை, சிங்கம், யானை, குதிரை, பன்றி, மரம், கப்பல், ஸ்வஸ்திகம், சக்கரம், பறை, மீன், சங்கு முதலான சின்னங்கள் பற்றியும், அவற்றை ஒட்டித் தம் ஆராய்ச்சியையும் நிரல்பட நிகழ்த்தியுள்ளார். நாணயங்கள் சிலவற்றுள் பல்லவர் கிரந்த எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ள சொற்களையும் அரிதில் முயன்று, படித்து விளக்கம் நல்கியுள்ளார்.இவர் தம் விளக்கங்களில் குறிப்படத்தக்க சில செய்திகள் நம் கவனத்திற்கு உரி யவை:1. தொடக்கக் காலத்தில் பல்லவர் நாணயங்கள் ஈயத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பத்தளை, செம்பு ஆகியவற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. நில இயலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் என்பதால் பல்லவர் நாணயத்தை அச்சிடப் பயன்படுத்தியுள்ள உலோகங்களை ஆழமாக ஆராய்ந்து அரி ய செய்திகளையும் வழங்கியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது:

1. தொடக்க கால ஈய நாணயங்களில் குரோமியம் இல்லாதிருப்பதும் வெள்ளித்தன்மை உடைய வெண்ணாகம் (ஙச்ணச்ஞீடிதட்), இருப்பதும் இவர் தம் ஆராய்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. பல்லவர்களுக்கு மூலவர்கள், ஆந்திராவை ஆண்டுக் கொண்டிருந்த சாதவாகன அரசர்கள் ஆவர். ரோமானியர்களுக்கும், சாதவாகனர்களுக்கும் தொடர்பிருந்தது. ஸ்பெயின் நாட்டிலிருந்து வெண்ணாகம் உள்ள ஈயத்தை இத்தாலி நாட்டு ரோமானியரிடமிருந்து சாதவாகன அரசர்கள் பெற்றுத் தம் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். கி.பி.54114 ஆண்டுகளில் சாதவாகனர் இந்நாணயங்களைத் தாம் வெற்றி கொண்ட காஞ்சிபுரத்திலும் புழங்கவிட்டிருத்தல் வேண்டும். தொடக்க காலங்களில் சாதவாகன அரசர்களின் பிரதிநிதிகளாக, ஆளுநர் பொறுப்பில் காஞ்சிபுரத்தைப் பல்லவர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.194ல் சாதவாகன அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. கவுதம் புத்திர யஞ்சின சாதகானி இறந்த பின், காஞ்சிபுரத்தை ஆளுநராக இருந்து ஆண்டு வந்த பல்லவர்கள் சுயாதிகாரம் உடையத் தனி அரசர்களாக மாறியிருக்க வேண்டும். சாதவாகனர் ஆட்சியில் புழங்கிய அதே நாணயங்களைப் புதிதாக அடித்துத் தம் சின்னங்களைப் பொறித்து பல்லவ அரச எல்லையில் புழங்க விட்டிருத்தல் வேண்டும். எனவே தான் பல்லவர் நாணயங்களில் வெண்ணாகம் இருக்கிறது. முன்னைய அரசை வீழ்த்திப் புதிய அரசு தோன்றும் போது முன்பு புழங்கிய நாணயங்களைச் செல்லாதவை என்று அறிவித்தது தம் சின்னம் பொறித்த நாணயங்களை வெளியிடுவது அரசர்களின் பொது மரபாகும். ஆக, இச்செய்திப்படி பல்லவர்கள் தமிழகத்தில் தனி ஆட்சி செய்யத் தொடங்கிய காலம் இரண்டாம் நுõற்றாண்டின் இறுதி அல்லது 3ம் நுõற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆசிரியர் வருகிறார். (பக்:174) பல்லவர் வரலாற்றில் இது புதிய செய்தியாகும்.

2. மகேந்திர வர்மன் (கி.பி.580636) மாமல்லபுரத்தை உருவாக்கிய மன்னன் ஆவான். இவன் காலத்து வெளியிடப்பட்ட கல்வெட்டுக்களிலிருந்து இவன் நுõற்று முப்பது விருதுகளைக் கொண்டவனாக இருந்தான் என்பது தெரி கிறது. இவற்றுள் பெரும்பான்மையானவை தெலுங்கு மொழியினவாக இருக்கின்றன. (பக்: 134) இந்தோ சீன நாடுகளை நினைவுப்படுத்தும் விருதுகளான ப்ளபு, வ்ளாசு, ம்லாயு, கடுஃதயு, கடும்தரம்பு ஆகியன பல்லவ அரசு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செல்வாக்கு பெற்றிருந்தமையைக் காட்டுகின்றன. மகேந்திரவர்ம பல்லவன் பெற்றிருந்த பட்டங்களுள் மாமாயன் என்பதும் ஒன்றாகும். இது திருமாலைக் குறிப்பதாகும். ஆண்டாள் தம் திருப்பாவையில் (8) மாயனை மன்னுவடமதுரை மைந்தனை என்று குறிப்பாள். ஆண்டாள் வாழ்ந்த கி.பி.8ம் நுõற்றாண்டிலும் அதற்கு முன்பும் திருமாலுக்குரி ய பெயராக மாயன் என்பது புகழ் பெற்றிருந்தது என்று இதனால் தெரிய வருகிறது. (பக்: 147) ஒரு நாணயத்தில் காளைக்கு வழங்கப் பெறும் ஏறு எனும் சொல் ஆளப் பெற்றிருப்பதாக இவர் யூகிப்பது சிந்தனைக்குரி யதாகும். (பக்: 152, 160).

3. பத்தளை நாணயம் (பக். எண்: 286) ஒன்றின் பின்பக்கம் பொறிக்கப்பட்டிருக்கும் உருவம் துறைமுகத்தைக் குறிப்பதாகலாம் என்பது மிகவும் புதுமையான செய்தியாகும். பல்லவர் காலத்தில் மாமல்லபுரம் சுறுசுறுப்பாக விளங்கிய துறைமுக நகரமாக விளங்கியது. முதல் நரசிம்மவர்மன் தன் கடற்படை கொண்டு இலங்கையை வெற்றி கொண்டான். 1992ல் இப்பகுதி ஆராயப் பெற்று கடலுக்குள் மூழ்கிய கல் கட்டட அமைப்பு தொல்பொருள் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக, பல்லவர் காலத்து மாமல்லபுரம் பெரும் துறைமுகமாக இருந்திருத்தல் வேண்டும். இதைக் காட்டுவதாகவே நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சுற்று வட்டமும் இன்ன பிறவும் அமைந்துள்ளன என்று ஆசிரியர் யூகிப்பது சிந்தனைக்குரி யது (பக்: 166)

4. ஒரு நாணயத்தின் பின்பக்கம் குதிரை உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டி அது பல்லவ அரசர் அசுவமேத யாகம் செய்ததைக் குறிப்பதாக இருத்தல் வேண்டும் என்பது அரி ய செய்தி. நாணயத்தில் இவ்வுருவம் தெளிவாக இல்லாவிடினும் கழுத்திலிருக்கும் மாலை எதிரே இருக்கும் யூபம், ஆசிரியர் தரும் செய்தியை உறுதி செய்வனவாக உள்ளன.

5. தாய்லாந்து நாட்டிலுள்ள த்துவாராவதி நாணயங்களில் பல்லவர் செல்வாக்கு இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்ற குறிப்பும் விளக்கமும், தென்னிந்தியர் தம் தென்கிழக்கு ஆசிரியர் தொடர்பை உறுதிப்படுத்துவதாக (பக். 123126) அமைந்துள்ளன.இந்நுõலின் மிகச் சிறந்த பகுதி நுõலில் இடம் பெற்றுள்ள அடிக்குறிப்புகளாகும். இக்குறிப்புகளை ஆசிரியர் மிக மிகக் கவனமாக வரைந்துள்ளார். இக்குறிப்புகளில் தென்னிந்திய வரலாறு, தமிழிலக்கியச் சான்றுகள் முதலானவை மிகுந்த கருத்தோடு பொறிக்கப் பெற்றுள்ளன. பின்னிணைப்பில் ஆசிரியர் நாணயம் ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ள உலோக அளவைச் சதவீதப்படுத்திக் கொடுத்திருப்பது (பக்: 168, 170) ஆசிரியர் தம் கடும் உழைப்பைக் காட்டும் பகுதியாகும். நாணயவியல் ஆராய்ச்சியிலும், பல்லவ ஆராய்ச்சியிலும் இந்நுõல் ஒரு மைல் கல் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்நுõல் உயர்ந்த தாளில் அழகான அச்சில், நல்ல கட்டமைப்பல் வெளியிடப்பட்டிருப்பது கூடுதலான பாராட்டத்தக்க சிறப்பாகும்.

.
சதாம் மரணத்தின் நிழலில்: ஆசிரியர்: பி.ஜே.ராஜய்யா, வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை14. (பக்கம்: 192, விலை: ரூ.50)

உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லரசான அமெரி க்காவையே கொஞ்ச காலம் நடுநடுங்க வைத்த ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் பற்றி தமிழில் வெளிவந்துள்ள நுõல். அமெரிக்காவை எதிர்த்த பின்தான் சதாம் பற்றி பலர் தெரிய வந்திருந்தாலும், அவரது பிறப்பு வளர்ப்பு, சிறு வயது வாழ்க்கை, இளைஞனான பின்பு தேர்ந்தெடுத்த பாதை, ஆட்சியைக் கைப்பற்றிய முறை, எதிரிகளை கையாண்ட விதம் என அத்தனை பரிமாணங்களையும் தெரிய வைக்கும் புத்தகம் இது. நுõலாசிரி யர் ராஜய்யா ஒரு பத்திரிகையாளர் என்பதால் சதாமின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை ஒவ்வொருவரும் புரிய வைக்கும் நோக்கில் அழகான கதையாக சொல்லி இருக்கும் விதம் அருமை.

நெல்சன் மண்டேலா: நுõலாசிரியர்: இர.செங்கல்வராயன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.0

ஆப்ரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்திய நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையைச் சொல்லும் நுõல் இது. முதலில் வன்முறையில் நம்பிக்கை கொண்டிருந்த மண்டேலா, மகாத்மா காந்தியடிகளின் சாத்வீகப் போராட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு, அறவழிப் போர் முறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டவர். அவருக்கு 27 ஆண்டுச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது, அவரின் வயது 46. நெல்சன் மண்டேலாவைப் பற்றிய பல நுõல்களுடன் அவரே எழுதிய தன் வரலாற்று நுõலையும் படித்து விட்டு, இந்த நுõலை இர.செங்கல்வராயன் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட, விடுதலை பெறப் போராடும் அனைத்து மக்களுக்கும் நெல்சன் மண்டேலா ஒரு வழிகாட்டி

உலகை உலுக்கியவர்கள்: ஆசிரியர்: த.இராமநாதன். வெளியீடு: திருமகள் நிலையம், எண்.16, வெங்கட் நாராயணா சாலை (பக்கம்: 30. விலை: ரூ.120)

ஹிட்லர், ஆப்ரகாம் லிங்கன், அம்பிகாபதி, பகத்சிங், பாரதியார், கிளியோபாட்ரா, கஜினி முகமது, காமராஜர், லைலா மஜ்னு, மேரி கியூரி, மாக்கியவெல்லி, பண்டித ரமாபாய், ரோமியோ ஜூலியட், ரசியா சுல்தான், ரூசோ, சாக்ரடீஸ், தாகூர், வ.உ.சிதம்பரனார் ஆகியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய நன்னுõல்.

பள்ளி மற்றும் கல்லுõரி மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும். இதைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் தன்னைப் பற்றிய ஒரு கேள்வியும், நாமும் ஒரு சிறு சாதனையாவது படைக்க வேண்டும் என்ற எண்ணமும் நிச்சயமாக ஏற்படும்!

சிலம்பின் காலம்: நுõலாசிரியர்: முனைவர் செ.கோவிந்தன். வெளியீடு: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை78. (பக்கம்: 188. விலை: ரூ.80).

சிலப்பதிகாரம் எழுந்த காலம் பற்றி ஆய்வாளர்களுக்கு இடையே இன்றளவும் கருத்து மாறுபாடுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. 22 சுவடிகளை ஒப்பு நோக்கி, கானல் வரி நீங்கலாக ஊழ்சூழ் வரி முடிய 13 காதைகளை 1892ல் தொகுத்து சிலப்பதிகாரம் நுõலை வெளியிட்ட உ.வே.சா., முதல் இ.மு.சு., அவ்வை துரைசாமி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற சுமார் 15 அறிஞர்கள் சிலம்பின் காலம் கி.பி. இரண்டாம் நுõற்றாண்டெனவும், மு.ராகவையங்கார் ஐந்தாம் நுõற்றாண்டெனவும், வையாபுரிப் பிள்ளை எட்டாம் நுõற்றாண்டெனவும் கூறியுள்ள நிலையில், இந்நுõலாசிரியரோ “சோழ அரசர்கள் இல்லாத கி.பி. எட்டாம் நுõற்றாண்டில் அவர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட நுõல் தோன்றியிருக்க முடியாது. எனவே, 11ம் நுõற்றாண்டே சிலம்பின் காலம் என ஆய்வு செய்துள்ளார்.
“இளங்கோவின் உட்கோள் சமண தத்துவங்களைப் பரப்ப வேண்டுமென்பதே’ (பக்:35), “கோவலன் என்ற பெயர் தமிழ்ப் பெயரன்று’ (பக்:50), “இளங்கோவடிகள் காலத்தில் பதிற்றுப்பதிகங்கள் எழுதப்பட்டன’ (பக்:58), உரையாசிரியர் தாம் “கரிகாலன்’ என்னும் பெயரை எடுத்தாண்டுள்ளார் (பக்.103), அரும்பதவுரைகாரர் தாம் இளங்கோவைச் செங்குட்டுவன் தம்பியாக்கி விட்டார் (பக்:112), இளங்கோவடிகள் (மாசறுபொன்னே) தமிழ் வழக்காற்றை மாற்றிப் பிற்கால வழக்காற்றைப் பயன்படுத்தியுள்ளார் (பக்:155) போன்றவை சுவைபட ஆய்வு செய்யப்பட்டுள்ள போதிலும் சிலம்பின் காலத்தைஇந்நுõல் முழுமையாக வரையறுத்துள்ளதாக அறுதியிட்டுக் கூற முடியாது. எனினும், ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய நல்ல இலக்கிய வரலாற்று ஆய்வு நுõல். பெயர் மாற்றம் பெற்று இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.

பாலஸ்தீன வரலாறு (முதல் பாகம்): <நுõலாசிரியர்: எம்.எச்.ஜவாஹிருல்லாஹ். வெளியீடு: புத்தொளி பதிப்பகம், சென்னை600 001. (பக்கம்: 166. விலை: ரூ.50).

இறைத் துõதர்களின் போதனைகளை நிந்தித்த யூத கிறிஸ்தவர்களை விட ஜெருசலம் நகரத்திற்கு முஸ்லிம்களுக்கே உரிமை உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தி 18ம் நுõற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சுவடுகளை, ஆதாரங்களை ஆசிரியர் இந்நுõலில் வரைந்துள்ளார்.

இறைத் துõதுவர்களின் நகரம் ஜெருசலம். ஜெருசலத்தின் உமர் (ரஸி), சிலுவை யுத்தத் தொடக்கம். சிலுவைப் படையினரின் அரசாட்சி, அவ்வாட்சியை எதிர்த்த மாவீரர் இமாதுத்தின் ஜன்கி, நுõருத்தீன் ஜன்கி, ஸலாஹீத்தின் அப்யூபியின் எழுச்சி, அதைக் கைப்பற்றல், மூன்றாம் சிலுவை யுத்த ஆரம்பம், ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படை ஸலாஹீத்தின் மரணத்திற்கு பிறகு பாலஸ்தீனம், மங்கோலியரின் காட்டு மிராண்டித்தனம், மங்கோலிய தர்த்தாரியர்களின் படுதோல்வி என 14 அத்தியாயங்களில் இந்நுõல் உருவாக்கப்பட்டுள்ளது.வரைபடம், பாலஸ்தீன புகைப்படம் இடம் பெற்றுள்ள இந்நுõல் வரலாற்றை கற்க, ஆராய விரும்புபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹிட்லரின் யுத்த களங்கள்: நுõலாசிரியர்: ஜெகாதா. வெளியீடு: அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. ( பக்கம்: 176. விலை: ரூ.60).

ஓவியக் கனவுகளில் திளைத்தபடி வியன்னா நகரில் நுழைந்த 18 வயது இளைஞனுக்கு சேரி வாழ்க்கையும் பிச்சை எடுக்கும் நிலையும் தான் விஞ்சியது. யூதர்களின் செல்வம் கொப்பளிக்கும் சிங்கார வாழ்க்கை அந்த இளைஞனின் இதயத்தை இரும்பு ஆணி கொண்டு அறைந்தது, யுத்தம் ஒன்று தான் நிகழ்காலத் துயரங்களுக்குத் தீர்வு காணும் பாதையை உருவாக்கும் என்று எண்ணி யுத்தம் வருமானால் படையில் சேர்ந்து விட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் தான் பின்னாளில் போலந்து, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சவாலாக விளங்கிய சர்வாதிகாரி ஹிட்லர்.கடந்த 1899ல், ஏப்ரல் 20ம் நாள் பிறந்து, 1945ல் ஏப்ரல் 30ம் நாள் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட, ஹிட்லர், மாவீரன் நெப்போலியனிடம் தீராத மதிப்பு கொண்டிருந்தார் என்பதையும் நுõலாசிரியர் எடுத்தாண்டுள்ளார். ஹிட்லரின் இறுதி நாட்களை இரங்கத் தரும் வகையில் சிறப்பாகப் படைத்துள்ளார்.வரலாற்று நாயகர்களாக சித்தரிக்கும் வகையில், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் வகையில் ஆற்றொழுக்க நடையில் இந்நுõல் எழுதப்பட்டுள்ளது. படித்துச் சுவைக்கலாம்.

நிமிர வைக்கும் நெல்லை: நுõலாசிரியர்: வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். வெளியீடு: பொதிகை பொருநை கரிசல் கட்டளை, திருவான்மியூர், சென்னை41. (பக்கம்: 200. விலை: ரூ.75).

தமிழுணர்வுக்கும், தேசிய உணர்வுக்கும், ஆன்மிக உணர்வுக்கும் ஒட்டு மொத்த புண்ணிய பூமியாக விளங்கும் வளம் நிறைந்த நெல்லை மாவட்டத்தின் அருமை பெருமைகளை இந்நுõலில் சேகரித்துத் தந்துள்ளார் நுõலாசிரியர்.

சங்க இலக்கியங்களில் தொடங்கி, ஆதிச்சநல்லுõர் அகழ்வாராய்ச்சி என்று வரலாற்றுத் தொன்மையும், சைவம், வைணவம், கிறிஸ்தவம், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் என மத நல்லிணக்கத்தில் நெல்லையின் பங்கையும்,

பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தேசியக்கவி பாரதி, இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் கண்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., நாடகத் துறையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், சிறுகதை பிதாமகன் புதுமைபித்தன், தேவநேயப் பாவாணர், தொ.மு.சி.ரகுநாதன் இப்படி ஏராளமான அரசியல், இலக்கியவாதிகளின் பிறப்பிடம் நெல்லை என்று தேசிய அரசியல் போராட்டத்தில் நெல்லையின் பங்கையும்,

பாஞ்சாலங்குறிச்சி போர், கட்டபொம்மு செப்பேடு, ஆஷ் கொலை வழக்கு போன்ற செய்திகள் மூலம் நீதித்துறையில் நெல்லையின் பங்கையும் படைத்துள்ளார். நுõலுக்கு பொருளடக்கம் தந்து, ஒவ்வொரு கட்டுரையையும் சரியாகத் தலைப்பிட்டு ஒவ்வொரு பிற்சேர்க்கைக்கும் உரிய பொருத்தமான குறிப்புகளைத் தந்திருந்தால் இன்னும் நுõல் வடிவம் நிறைவாக இருக்கும்.

தெரிந்த கோவை தெரியாத கதை: ஆசிரியர்: கவியன்பன் கே.ஆர்.பாபு, வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641 001. (பக்கம்: 216, விலை: ரூ.60)

சிறுவாணி மெயில் வார இதழில், ஆசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள், புத்தக வடிவில் தற்சமயம் வெளிவந்திருக்கிறது. கோவை நகர மக்கள் இந்தக் கட்டுரைத் தொகுப்பை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பர் என்பது நிச்சயம்.

ஆனால், கோவை நகரைப் பற்றித் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் அனேகமானவர்களை இந்தப் புத்தகம் நிச்சயம் கவர்ந்து இழுக்கும். கவியன்பன் வரலாற்று பிரக்ஞையுடன் எழுதியுள்ள கட்டுரைகள் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. காடாகவும், கட்டாந்தரையாகவும் இருந்த நிலப்பரப்பு மெல்ல மெல்ல வளர்ந்து, எப்படி தொழில் நகரமாகவும், தொழிலாளர்களின் பிழைப்புக் களமாகவும் உருப்பெற்றது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்த நுõலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் இதுபோன்ற மாவட்டத் தலைநகர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய புத்தகம் வெளிக் கொணர முயற்சி செய்யக் கூடும். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் துõண்டும் கோவை நகர வரலாற்று ஆவணம் இது.

வரலாறாய் வாழ்ந்த தந்தையர்: ஆசிரியர்: சுப்ர. பாலன். வெளியீடு: காமதேனு பப்ளிகேஷன்ஸ், ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 116. விலை: ரூ.40)

அரசியல், நாடகம், ஓவியம், கல்வி, சினிமா போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 18 தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கட்டுரையாளரால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற் போது நுõலாக்கம் பெற்றுள்ளது.

ராஜாஜி, வ.உ.சி., நாமக்கல் கவிஞர், டாக்டர் ராமசாமி ஐயர், கல்கி, மு.வ., அண்ணாமலை செட்டியார், எஸ்.வி.வி., கொத்தமங்கலம் சுப்பு, தமிழ்வாணன் உள்ளிட்ட 18 பேரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை அவர்களின் வழித்தோன்றல்களின் வழியாகக் கேட்டு கட்டுரைகளை உருவாக்கியுள்ளார் நுõலாசிரியர்.

மறைந்த அறிஞர்களின் மறக்க முடியாத சில நிகழ்வுகள் இந்த நுõலின் சிறப்பு.

இஏOஃஅ NஅஙஐஎஅகூஐON கஅஇஓஅஎஉ: அதtடணிணூ: கணூணிஞூ. ஆ.அணூதணச்ஞிடச்டூச்ட். கதஞடூடிண்டஞுணூண்: Mச்ணூடிtடிட்ஞு ஏடிண்tணிணூதூ குணிஞிடிஞுtதூ, Mதட்ஞச்டி400 005. (கச்ஞ்ஞு: 109. கணூடிஞிஞு: கீண்.250)

சோழா நேவிகேஷன் பேக்கேஜ்’ என்ற இந்த ஆங்கில நுõல் மும்பைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் பேராசிரியர் பி.அருணாசலம் என்பவரால் எழுதப்பட்டு, “மாரி டைம் ஹிஸ்டரி சொசைட்டி’ என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மேற்கு கடற்படைக் கமாண்டின் கீழ் செயல்படுகிறது. 1978ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் குறிக்கோள், இந்தியக் கடல் வழி செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து, சிறந்த ஆசிரியர்கள் மூலம் அவற்றைப் பதிப்பிப்பது தான். இந்த சீரிய முயற்சிக்காகவே இந்த நிறுவனம் பாராட்டப்பட வேண்டியதாகும்.அவ்வகையில் எழுதப்பட்ட நுõல்களில் இந்த நுõல் ஆறாவது ஆகும். ஆசிரியர் அருணாசலம். நாற்பது ஆண்டுகள் புவியியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடலைப் பற்றியும், கடற்கரை பற்றியும், கப்பல் செலுத்தும் மாலுமிகளின் திறமை பற்றியும் பல ஆராய்ச்சிகளைச் செய்தவர். ஆகையால் இந்த நுõல் சிறப்பாக அமைந்துள்ளது என்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால், இப்படைப்பின் மூலம் கடல் வழி செல்லுகையில் பயன்படுத்தப்பட்ட சோழர் காலத்தியக் கருவிகளைக் குறித்து, ஆய்வுகள் செய்து அதைச் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளும்படியாக விளக்கியிருப்பது தான் இந்த நுõலின் சிறப்பு அம்சம். அது ஆசிரியரின் திறமையைக் காட்டுகிறது.

எட்டு அத்தியாயங்களில், கருவிகளை பற்றியும், சோழர் காலத்து கப்பலோட்டும் திறமையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். இவற்றில் அக்கால சில விஞ்ஞான முறைகள் கணித, வரைபட மூலமாக விளக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. தமிழகத்துக்குப் பழைய துறைமுகங்கள் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. விரல் கணக்கு என்ற முறையில் கடல் வழி துõரம் அளக்கப்பட்டதை துல்லியமாக விவரித்துள்ளார். கடலில் வழி காணும் முறையில் விண்மீன்கள் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு கயிற்றின் உதவியால் ஒரு முனையைப் பல்லில் கடித்துக் கொண்டு அதன் மற்றொரு முனை ஒரு தகட்டில் சொருகப்பட்டு, (ராப்பலகை) இன்றை செக்ஸ்டண்ட் போல பயன்படுத்தப்பட்டிருப்பது அனேகருக்குத் தெரியாத விஷயம். அதை படத்துடன் விளக்கியுள்ளார்.

இவற்றைத் தவிர அக்காலத்துச் சோழர்களின் கடல் வழி விவேகத்தைப் பல உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார். பல்லவர் காலத்து கடல் வழி வணிகத்தைப் பற்றி ஏழாம் நுõற்றாண்டு சரித்திரத்தை நன்கு ஆராய்ந்துள்ளார். தாய்லாந்தில் படியெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுச் சாசனத்தைப் பற்றியும் விவரித்துள்ளார். இவை பல அறிஞர்களால் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட கருத்துக்களே. ஆயினும் இவர் எழுதியுள்ள முறை சிறப்பாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல விஞ்ஞான முறைகளைப் பரிசீலித்து, “நட்சத்திர சக்கரம்’ முதலானவையோடு ஒப்பிட்டு எழுதியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

இந்த நுõல் கட்டாயமாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழ் சமுதாயத்திற்கு உதவ வேண்டும். இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட அருணாசலமும், பதிப்பித்த மேற்கு நேவல் கமாண்டும் போற்றப்பட வேண்டியவர்கள். இந்நுõல் எல்லா கல்லுõரிகளின் நுõலகங்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டியதாகும்.

முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்: கரைகண்டம் கு.நெடுஞ்செழியன், வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை12. (பக்கம்: 264, விலை: ரூ.80.)

இந்த புத்தகம் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் தலைப்புக்கும், உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஏழரைப் பொருத்தம். முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் வடபுலத்தில் படையெடுத்து, சில குறுநில மன்னர்களைத் தோற்கடித்துச் செல்வங்களைக் கொள்ளையடித்து, ஆளும் காலம் வரை அக்கிரமம் செய்துவிட்டு, சுரண்டிய செல்வங்களுடன் சொந்த நாட்டுக்கு ஓடி போய்விட்ட சம்பவங்கள் புத்தகம் முழுவதும் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் 136வது பக்கத்தில் தைமூர் பதினைந்தே நாட்கள் ஆட்சியில் அமர்ந்து செய்த அட்டூழியங்களைப் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளதைப் படிக்கும்போது, வாசகனின் இதயம் ஆயிரம் மடங்கு வேகத்தில் இயங்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

தைமூர் ஓராண்டு காலம் இந்தியாவில் நடத்திய காட்டுத் தர்பாரில் லட்சக்கணக்கான மக்கள் காரணமின்றி கொல்லப்பட்டனர்.

சுல்தான் பைரோஜ் ஷா துக்ளக் நாற்பது ஆண்டுகால நகர (டில்லி) வளர்ச்சி குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போலவும், மத யானை புகுந்த கரும்புத் தோட்டம் போலவும் ஆயின. இவன் செய்த கொடுமைகளைச் சீர் செய்ய அடுத்து வந்த முஸ்லிம் மன்னர்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. மேலும், முகமது கஜினி கொள்ளையடித்தார்; கோயில்களை இடிக்கவில்லை என்ற தகவலும் உண்டு. அக்பர், ஹுமாயூன், ஜஹாங்கிர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், மிகக் குறைந்த, மிகச்சிறிய அளவு இந்திய மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சில முன்னேற்றங்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இருந்தபோதிலும், புத்தகத்தை படித்து முடித்தவுடன், முஸ்லிம் மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்தியா முன்னேற்றமடைந்ததாகச் சொல்ல இயலாது. அப்படியே ஏதேனும் முன்னேற்றம் என குறிப்பிடலாம் என்றால், அவையனைத்தும் முஸ்லிம் மன்னர்களின் சொந்த நலனும், சுயலாபமும் கலந்ததாக இந்தப் புத்தகத்தில் காணக் கிடக்கிறது.

அதனால்தான் கடந்தகால நிகழ்ச்சிகளின், அனுபவங்களின் தொகுப்பு இந்த நுõல் என்று முன்னுரையில் கூறப்பட்டுள்ளது போலும்!

பாகிஸ்தானிலிருந்து…: ஆசிரியர்: ம.ந.ராமசாமி. வெளியீடு: நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாவது மாடி, புதுõர், 13வது தெரு, அசோக் நகர், சென்னை83. (பக்கம்: 239. விலை: ரூ.60)

நாடு பிரிவினை அடைந்த தருணத்தில் தற் செயலாக அகதியாக மாறிய ஒரு இந்திய முஸ்லிம் பெண்ணை, பாகிஸ் தானிலிருந்து பாதுகாப்பாக மீட்டு வருகிறான் மனிதாபிமானமுள்ள ஒரு சிவிலியன். இதுவே முதலாவதுமாகவும், நுõலின் தலைப்புக் கதையுமாக அமைந் துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் வெவ் வேறு இதழ்களில் வெளியான இருபது கதைகளின் தொகுப் பே இந்நுõல்!

பெரும்பாலான கதைகள் ஒரு குறிப்பிட்ட மரபினரை (அந்தணர்) மையப்படுத்தியது மட்டுமின்றி, மூன்று சி றுகதைகள் கனகதாரை (பக்:164), கெட்டவார்த்தை (பக்:184), ஒரு வேலைக்காக (பக்: 136) பெண் வாசகர்கள் படிக்கக் கூசும் விதமாக, விரசத்தின் எல்லைக் கோட்டையும் தாண்டி விட்டன.
தணிக்கை என்ற ஒரு நியதி இருப்பின் இவையெல்லாம் அச்சேறாது.

“ஆத்தங்கரை ஓரம்’: ஆசிரியர்: வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41.பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்துõர், சென்னை 98 (பக்கம்: 203; விலை: ரூ.55).

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சிந்துõர். நதிக் கரையோரம் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்திற்கு, அணைக்கட்டு வடிவில் வருகிறது ஆபத்து. தவழ்ந்து, வளர்ந்த தாய் மண்ணைப் பிரிய மனமில்லாமல், கோவிந்த் பாயி அவரது மகன் சிமன் தலைமையில் பழங்குடி மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.

சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள் சீரழிந்து போகும் என்பதால், சமுக ஆர்வலர்கள் ராதா, சந்தீப், நிதின், அரசு அதிகாரி சுதிர் அவரது மனைவி யூதிகா ஆகியோர் அணைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.

அரசை எதிர்த்துப் போராடி, அப்பாவி மக்கள் ஜெயிக்கத்தான் முடியுமா…? அழகிய சிந்துõர் கிராமம், கொஞ்ச கொஞ்சமாய் சூறையாடப்படுகிறது.சுயநலவாதிகளால், இயற்கை வளம் எந்தளவுக்கு சீரழிக்கப்படுகிறது என்பதை, பக்கங்கள் ஒவ்வொன்றும் படம் பிடித்துக் காட்டுகின்றன. முதல் பக்கம் துவங்கி… கடைசிப்பக்கம் முடியும் வரை முடிந்து சில நாட்கள் கழிந்தப் பிறகும் நம்மையும் சிந்துõர் கிராமவாசிகளுள் ஒருவராக்குவது நுõலாசிரியரின் எழுத்தாற்றலுக்குச் சான்று.

நாகரிக கசடுகள் எதுவும் அணுகாத அமைதியான பழங்குடி மக்களுக்கு எதிரான சமுக அவலங்கள் ஆணியடித்தது போல, மனதில் இறங்குகிறது… மனதை ரணமாக்குகிறது. கதையில் கை யாளப்பட்டிருக்கும் பாத்திரங்கள்… சம்பவங்கள், இயற்கை வளத்தை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கொஞ் சம் உரக்கவே சொல் கின்றன.

வாசிப்பை நேசிப்பவர்கள், தவற விட(வே) கூடாத நுõல்!

சிகரத்தை எட்டிய சி.ஆர்.ஆர்.,: ஆசிரியர்: கே.அய்யாத்துரை. வெளியீடு: எம்.டி.எஸ்., அகடமி, ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா, மாங்கொல்லை, மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 124. விலை: ரூ.180)

சி.ஆர்.ராமகிருஷ்ணனை சி.ஆர்.ஆர்., என்று குறிப்பிட்டாலே தொழில் மற்றும் வர்த்தகத் துறையினரும், மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மதிப்பும் பிரபலமும் அடைந்துள்ளவர். 1938ம் ஆண்டில் ஒரு சிறு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட லார்சன் அண்டு டியூப்ரோ நிறுவனம் 40 ஆண்டு காலத்தில் ஒரு மாபெரும் நிறுவனமாக உயர்வதற்கும், இந்திய நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் கூட ஒரு மதிக்கத்தக்க நிறுவனமாக பிரபலம் அடைந்ததற்கும் சி.ஆர்.ஆரின் சிறந்த பணிகள் ஒரு முக்கியக் காரணம். ஊழியர் நலம் ஒன்றையே தன் கடமையாகக் கொண்டு, கண்டிப்புடன் நிர்வாகத்தை நடத்திச் சென்ற சிறந்த நிர்வாகியின் வாழ்க்கை நுõல் இது.

முன்னேறத் துடிக்கும் இளைஞர்களே! இதோ உங்கள் கையில் ஒரு முன்னேற்றத்திற்குரிய தத்துவங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்த உழைப்பாளிகளின் வாழ்க்கைச் சரித்திரம் ஒரு கையேடாகத்

திகழட்டும்!

உங்களுடன் ஒரு மாமனிதர்: நுõலாசிரியர்: செ.நல்லசாமி, செந்தமிழ்வாணன், வெளியீடு: உழவு அச்சகம், அரச்சலுõர், ஈரோடு மாவட்டம். (பக்கம்: 392. விலை: ரூ.100)

கொங்கு மண்டலத்தில் “ரா.கி.. “ஐயா’ என அன்புடன் அழைக்கப்பட்டவர் கோவை கணபதி ரா.கிருஷ்ணசாமி கவுண்டர். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், விவசாயப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் பல புதிய உத்திகளை மேற்கொண்டவர். “ஏர் உழவன்’ உட்பட விவசாயப் பத்திரிகைகளை சிறப்பாக நடத்தியவர்.

வேளாண் விளைப் பொருட்கள் மீது விலைக்கேற்ப வண்ணக் கோடுகள் போட்டு விற்கும் “பார் கோடு சிஸ்டம்’ முறையை அக்காலத்திலேயே ரா.கி., அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் இந்த நுõலில் உள்ளது.

கோவை நகரில் “மோரீஸ்’ வாழைப் பழத்தை அறிமுகப்படுத்தியதும், மாட்டு சாணத்தில் இருந்து “மீதேன்’ வாயு எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம் என கண்டு

பிடித்தவரும் இவரே ஆவார்.

கடந்த 1930ல் பஸ் போக்குவரத்து தொழிலில் ரா.கி., ஈடுபட்டபோது “அதிசய மனிதர்’ ஜி.டி.நாயுடுவுடன் ஏற்பட்ட பிணக்கு குறித்தும் பிறகு இவ்விரு துருவங்களும் நட்புணர்வு கொண்டது பற்றியும் நுõலில் சுவையாகவும், ஒளிவுமறைவின்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா.,வுடன் கருத்தளவில் ஒன்றிப் போகாதவர், ஆனால், இருவரும் சந்தித்தது, பேசியது, ஈ.வெ.ரா.,வை மவுனம் ஆகச் செய்த செயல் (பக்:114) ஆகியவை ரா.கி.,யின் துணிச்சலையும் அறிவையும் படம் பிடிக்கும் தகவல்கள்.

தெளிவான நடை, “பளிச்’ அச்சு, நேர்த்தியான வடிவமைப்பு, ஆங்காங்கே குறள், புதுக்கவிதைகள், சினிமா பாடல் வரிகள் பொருத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

பன்முக மனிதராக நெறி தவறாது பண்பாளராக வாழ்ந்து மறைந்த ஒரு வெற்றியாளரின் வாழ்க்கை வரலாறு இது. முயன்று முன்னேற துடிப்பவர்கள் படிக்கலாம்.

பவுத்தநெறி டாக்டர் வி.எம்.மவுரியா வரலாற்றுச் சுவடுகள்: ஆசிரியர்: ரமாபாய் மவுரியா. வெளியீடு: தர்மா பப்ளிகேஷன்ஸ், 42, முதல் குறுக்குத் தெரு, 2வது முதன்மைச் சாலை, தாகூர் நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605 008. (பக்கம்: 98. விலை: ரூ.75)

பவுத்த நெறி உலகின் எல்லாத் தீமைகளையும், அழிப்பதற்கான விதையைத் தன்னில் கொண்டிருக்கிறது என்று கருதுகிற, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தாரின் முன்னேற்றத்தையே தன் முன்னேற்றமாகக் கருதி வாழ்ந்து வருகிற சகாதேவன் என்ற வி.எம்.மவுரியா என்பவரின் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்கிற நுõலாக இது அமைந்திருக்கிறது.

“சமர்பணம்’ என்று தொடங்குகிற முதல் பக்கத்திலிருந்து பக்கத்துக்குப் பக்கம் மலிந்து காணப்படுகிற அச்சுப் பிழைகள் (திருக்குறளைத் திரிக்குறள் என்று அச்சடிக்கிற அளவுக்கு) படிக்கிறவரை சலிப்படையச் செய்கின்றன.

எழுதிச் சென்றிருக்கிற பாங்கும் கோர்வையாக இல்லை. எடுத்துக்காட்டாக சகாதேவன் என்பவர் தாம் வி.எம்.மவுரியா என்பதே தெளிவாகப் பதிவு செய்யப்