Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Rumor Mill – Intelligence gathers information on caste based population in each districts

பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 9, 2007

உளவுத்துறை மூலம் எல்லா மாவட்டங்களிலும் சாதிவாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு

சிதம்பரம், நவ. 9: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாதி வாரியாக எவ்வளவு பேர் உள்ளனர் என, தனிப்பிரிவு போலீஸôர் மூலம் உளவுத் துறையினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் உயர் சாதியினரின் வாக்குகளைப் பெற்று மாயாவதி தனித்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அதே முறையில் வரும் தேர்தலில் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க திமுக ஆலோசித்து வருகிறது. தற்போது பாமகவுடன் சுமுக உறவு இல்லாத நிலையில், வரும் தேர்தலில் குறிப்பிட்ட தேசியக் கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

அதன் முதற்கட்டமாக காவல்துறை உளவுப்பிரிவினர் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலை சாதியினர் மற்றும் மீனவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்று ரகசிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சித் தலைவராக இருப்பவர் யார்? அவர் எந்தக் கட்சியை சேர்ந்தவர்? ஊரின் முக்கியப் பிரமுகர்கள் யார்? லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் யார்? அந்த ஊரில் தொண்டு நிறுவனங்கள் உள்ளதா? ஊரில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்கள் உளவுத் துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இதற்கென அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் காவல்துறை தனிப்பிரிவு போலீஸôருக்கு வழங்கப்பட்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதுபோன்று மத்திய அரசு உளவுத் துறையான இண்டலிஜென்ஸ் பீரோவும் ஒவ்வொரு தொகுதியிலும் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இப் புள்ளி விவரங்கள் மத்திய, மாநில அரசுகளால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>