Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Power plant relocated after LTTE threats in Triconmalee

பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 16, 2007

திருகோணமலையில் அனல் மின் நிலம் அமைக்க மாற்று இடம் தேர்வு

தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையம்
தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கைசாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி திருகோணமலையில் 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காகன இரண்டு மாற்று இடங்களை தேர்வு செய்துள்ளதாக, இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள இந்திய பொதுத் துறை நிறுவனமான, தேசிய அனல் மின் நிறுவனம் கூறியுள்ளது.

திருகோணமலை. சம்பூர் பகுதியில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவிருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு திட்டத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அனல் மின் நிலையத்தை அமைக்க தற்போது இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த இடத்தில் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது என்பது மூன்று வாரங்களில் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய அனல் மின் நிறுவனத்தின் தலைவர் சங்கரலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>