Tsunami Corruption charges – Nagapattinam collector takes action against NGO
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 8, 2007
தொண்டு நிறுவனங்களுக்கு தடை :
நாகை கலெக்டர் அதிரடி
நாகப்பட்டினம் : சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டுவதில் முறைப்படி செயல்படாத இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சீர்காழி, கொட்டாய்மேடு கிராமத்தில் சுனாமி பாதித்த 165 குடும்பங்களுக்கு வீடு கட்ட “கேர் பிளான்’ தொண்டு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. நிர்ணயித்த காலத்திற்குள் வீடுகள் கட்டவில்லை. நாகை தெத்தி கிராமத்தில் 190 வீடுகள் கட்ட ” ஜாமியாத் உலமா ஹிந்த்’ என்ற தொண்டு நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது. இதுவும் முறைப்படி பணியை முடிக்கவில்லை. இவற்றின் ஒப்பந்தத்தை ரத்து செய்து கலெக்டர் ஜவகர் உத்தரவிட்டார். இந்த நிறுவனங்கள் மறுவாழ்வு பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
