Al-Sadr Suspends Militia Activity in Iraq
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 29, 2007
இராக்கிய ஷியாக் குழு தனது இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது
இராக்கின் ஷியாப்பிரிவு அடிப்படைவாத மதத்தலைவரான மொக்ததா அல்சதர் அவர்கள், தமது மஹ்தி ராணுவ ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளை ஆறுமாத காலத்திற்கு இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த அமைப்பை மறுசீரமைப்பதற்காக இந்த நடவடிக்கையை தாம் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
மஹ்தி குழுவினர், இராக்கின் பாதுகாப்பு படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சுயக்கட்டுப்பாட்டை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்பலா நகரில் நடைபெற்ற மிகப்பெரிய ஷியா மதத் திருவிழா கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற மிகக்கடுமையான மோதலில், சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து அல்சத்ரின் இந்த அழைப்பு வந்திருக்கிறது.
இந்த சண்டைகளுக்கு மஹ்தி ராணுவம் காராணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், இந்த ரத்தக்களரிக்கு தமது அமைப்பு காரணமல்ல என்று முக்ததா அல்சத்ர் அவர்கள் தெரிவித்து வருகிறார்.
கர்பலா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
