Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Maya Venkatesan arrested – Six crore scandal: Real estate & Property Violations

பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 26, 2007

தலைமறைவான “மோசடி மன்னன்’ மாயா வெங்கடேசன் கைது: ரூ.50 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல்

சென்னை, ஆக. 26: தலைமறைவாக இருந்த “மோசடி மன்னன்’ மாயா வெங்கடேசனை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மாயவரம் செம்பனார் கோயிலைச் சேர்ந்தவர் மாயா வெங்கடேசன் (34). தூத்துக்குடியில் “நெல்லை சிமென்ட்ஸ்’ என்ற பெயரில் ஆலை தொடங்குவதாகக் கூறி, 24 கட்டட காண்ட்ராக்டர்களிடம் முன்பணமாக ரூ. 5.72 கோடி பணம் பெற்றார். ஆனால், பணம் முழுவதையும் மோசடி செய்து விட்டார்.

இதுதொடர்பாக மாயா வெங்கடேசன் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் மாயா வெங்கடேசன் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸýக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் மாயா வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் 06.04.2007-ல் விடுவிக்கப்பட்டார். ஆனால், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகாமல் தலைமறைவானார். ஜாமீனை ரத்து செய்யும்படி சிபிசிஐடி போலீஸôர் மனு செய்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மாயா வெங்கடேசனை, சிபிசிஐடி போலீஸôர் தேடி வந்தனர். சென்னை செனாய் நகரில் இருந்த மாயா வெங்கடேசனை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 687 ஏக்கர் நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>