Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Marathon trainer is allegedly abusing the ’star’ kid for performance

பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 13, 2007

பயிற்சியாளர் மீது “மாரத்தான் சிறுவன்’ புகார்

புவனேஸ்வரம், ஆக. 13: தன்னைத் துன்புறுத்தியதாக பயிற்சியாளர் மீது “மாரத்தான் சிறுவன்’ பூதிய சிங் புகார் தெரிவித்தார். அதையடுத்து பயிற்சியாளரிடம் இருந்து அவர் பிரிக்கப்பட்டார்.

பூதியா சிங் என்ற 5 வயதுச் சிறுவன், கின்னஸ் சாதனைக்காக 65 கி.மீ. தூரத்தை கடந்த ஆண்டு ஒடிக் கடந்தான். இந்த நிகழ்ச்சி, விளையாட்டு உலகத்தையே புருவத்தை உயர்த்தச் செய்தது. இருந்த போதிலும், சிறுவனைத் துன்புறுத்தும் செயல் இது என சமூக ஆர்வலர்கள் சிலர் அப்போதே எதிர்த்தனர்.

இந்நிலையில், தனது பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், சரியாக உணவு வழங்கவில்லை எனவும் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பூதியா சிங் தெரிவித்தார்.

இதற்குப் பிறகும் பிரஞ்சியுடன் பூதியா இருப்பதை அனுமதிக்கப் போவதில்லை என அவரது தாய் சுகந்தி சிங் கூறினார்.

எனினும், பூதியாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>