National Rural Employment Guarantee Act – 23 Districts in TN to receive funds
பதிந்தவர் SnapJudge மேல் மே 8, 2007
முழு கிராம வேலை வாய்ப்புத் திட்டம் தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களுக்கு ரூ. 47.16 கோடி: மத்திய அரசு அனுமதி
புதுதில்லி, மே 8: இந்த நிதியாண்டில் மத்திய அரசின் முழு கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களுக்கு ரூ. 47.16 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது.
2007- 08-ம் ஆண்டுக்கான முதல் தவணையாக 19 மாவட்டங்களுக்கு ரூ. 26.60 கோடி வழங்கப்படும்.
- காஞ்சிபுரம்,
- திருவள்ளூர்,
- வேலூர்,
- சேலம்,
- நாமக்கல்,
- தருமபுரி,
- கிருஷ்ணகிரி,
- ஈரோடு,
- கோவை,
- திருச்சி,
- பெரம்பலூர்,
- புதுக்கோட்டை,
- மதுரை,
- தேனி,
- ராமநாதபுரம்,
- தூத்துக்குடி மற்றும்
- கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 3-வது கூடுதல் தவணையும் அடுத்த ஆண்டுக்கான முதல் தவணையும் வழங்கப்படுகிறது.
- தஞ்சாவூர்,
- திருவாரூர்,
- கரூர் மற்றும்
- திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அடுத்த ஆண்டுக்கான முதல் தவணை பின்னர் வழங்கப்படும்.
