Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series
பதிந்தவர் SnapJudge மேல் மே 1, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கத்தி, நெருப்பு, விஷம் போல் மருந்து!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
என் மனைவிக்கு 56 வயதாகிறது. கடந்த டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. காய்ச்சல் குணமான பிறகு, அவள் கால் பாதங்கள் வீங்கி வலிக்கிறது என்கிறாள். மூன்று மாதங்களாக டாக்டரிடம் காட்டி மருந்து, ஊசி போட்டும் குணமாகவில்லை. நடக்க முடியாமல் வேதனைப்படுகிறாள். அவள் நல்ல உடல் நலம் பெற்று சுகத்தோடு இருக்க ஆலோசனை கூறவும்?
ஆர். வாசன், சிவகாசி.
காய்ச்சலை உடனடியாகக் குறைக்க உங்கள் மனைவி சாப்பிட்ட மருந்துகளின் செயலால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். நோயைத் தீர்ப்பதற்காக உள்ளே செலுத்தப்பட்ட மருந்து நோயாளியின் நோய்க்கு ஒத்ததாயிருந்தாலும், தேக வாகுக்கு ஒவ்வாததாயிருக்கலாம். அதுபோன்ற மருந்தின் சேர்க்கையை எதிர்க்கும் உடலின் சக்தி போதுமானதாக இல்லாதிருந்தால் அம்மருந்தே வேறு ஒரு நோய்க்குக் காரணமாகலாம். தன் வேலை முடிந்ததும் வெளியேறவேண்டிய அம்மருந்து உடலின் உள்ளே தங்கினால் அதன் விளைவாக உள்ளே நிகழும் ரஸôயன பௌதிக மாறுதல்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மருந்து கத்திபோல், நெருப்பு போல், விஷம் போல் அறிந்து உபயோகிக்கப்பெற அமிருதமாக உதவும். அறியாமையால் முறை தவறி உபயோகிக்கப் பெற தீங்குகள் விளையும்.
காய்ச்சல் உள்ள நாட்களில் வயிற்றில் ஏற்படும் மப்பு நிலை, அஜீரண நிலையை உதாசீனப்படுத்தி இன்று பலரும் ப்ரட் டோஸ்ட், இட்லி, சட்னி என்றெல்லாம் சாப்பிடுகின்றனர். மருந்து காய்ச்சலை குறைத்துவிடும். பத்திய நிலை தேவையில்லை என்பது அவர்கள் எண்ணம். இதனால் சீற்றம் பெறும் வாயு கப தோஷங்கள் காலில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
தங்களுடைய மனைவியின் விஷயத்தில் சாப்பிட்ட மருந்தின் கழிவுகளையும் குடல் தூய்மையை மாசுபடுத்திய தவறான உணவின் சேர்க்கையையும் வெளியேற்ற வேண்டிய நிலை தற்சமயம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு வேளைகளைச் செய்வதில் ஆயுர்வேத மருந்தாகிய சிலாஜது எனும் கண்மத பஸ்மமும், திரிபலா சூரணமும் உதவிடக் கூடும். திரிபலா சூரணம் 10 கிராம், 800 மிலி கஷாயத்துடன் 1 கேப்ஸ்யூல் கண்மதம் பஸ்மமும், மாலையில் இதுபோலவே கஷாயமும் கேப்ஸ்யூலும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 1 வாரம் சாப்பிட வீக்கம் வற்றி விட வாய்ப்பிருக்கிறது. இந்நாட்களில் பத்திய உணவாக புழுங்கலரிசியை சிறிது சிவப்பு காணும் வரை லேசாக வறுத்து 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் சேர்த்து, கால் பங்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும். பருக்கை நீக்கி, தெளிவாக சிறிது உப்பு கலந்து காலை, மாலை வெதுவெதுப்பாகக் குடிக்கவேண்டும். 5 கிராம் சுக்கு 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்கப் பயன்படுத்தவேண்டும். அதிகநேரம் நின்று கொண்டு வேலை செய்யாமல், நிறைய ஓய்வு எடுக்கவேண்டும்.
இதுபோன்ற பத்திய உணவினால் நாக்கில் ருசியும், வயிற்றில் பசியும் மேம்படும். மருந்துகள் உடலின் உட்புறக் கழிவுகளை வெளியேற்றும். குடல் பகுதி தூய்மையான பிறகு ஆயுர்வேத மருந்தாகிய தசமூலஹரீதகீ எனும் லேஹ்யத்தை காலை, மாலை வயிற்றில் 10 கிராம் அளவு நக்கிச் சாப்பிட வீக்கம், வலி குறையும். சாப்பிடும் உணவு சூடாகவும், சரியான நேரத்திலும் சாப்பிடவேண்டும். தயிர், புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புனர்நவாஸவம் எனும் மருந்தை 30 மிலி காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். இந்நாட்களில் நெருஞ்சி முள்ளைத் தூளாக்கி, சமம் கொள்ளு வறுத்துப் பொடித்துக் கலந்து துணியில் முடிந்து சட்டியில் சூடாக்கி, கால் வீக்கம் , வலி உள்ள பகுதிகளில் காலை, இரவு உணவிற்கு முன்பாக 1/2 மணி நேரம் ஒத்தடம் கொடுக்கலாம்.
காய்ச்சலின் சீற்றத்தை அடக்க, சாப்பிடப்பட்ட
மருந்துகளால் ஜீவாணுக்கள்,கிருமிகள் போன்ற ஜீவனுள்ள பொருள்களை அழிக்கும் மருந்து உடலில் ஜீவ இயக்கத்திற்காகத் திசுக்களில் தோன்றும் பாதுகாப்பான ஜீவாணுக்களையும் அழித்திருக்கக் கூடும். அதை ஈடுகட்ட புனர்நவாதி மண்டூரம் எனும் மாத்திரையை தங்கள் மனைவி மோர்சாதத்துடன் கலந்து சுமார் 14 முதல் 21 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

gunasekaran gojai சொன்னார்
yanthu guru nathar avarkal neenta naatgalaga ganukall veekathal avathi badukirar athil katti thontri vegu natkalaga udaiyamal erunthu pin udainthu epbothu veenki vali etharku ungal udthavi thavai
வேங்கு சொன்னார்
ஐயா, எனக்கு வயது 43. கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நோயைக் குணப்படுத்த முடியுமா அல்லது கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியுமா. தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.