Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Doctors reluctant to accept service in Rural Areas – Solutions, Analysis

பதிந்தவர் Visitor Blogs மேல் April 25, 2007

எங்கே போகிறார்கள்?

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள்தான் கிராம மக்களுக்கு, குறிப்பாக கிராமப் பெண்களுக்கு, இன்றியமையாத் தேவையாக இருக்கின்றன. மகப்பேறு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்க்கு மருத்துவம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தையே நம்பியிருக்கின்றனர்.

ஆனால், “”டாக்டர்கள் நகரங்களிலேயே பணியாற்ற விரும்புகின்றனர்; கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற விரும்புவதில்லை” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

கிராமங்களில் இந்த நிலைமை என்றால், நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது என்கிறார் சுகாதாரத் துறை செயலர். “”விருப்ப ஓய்வு கேட்கும் மருத்துவர்களையும் இதனால் விடுவிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், விழுப்புரம், தருமபுரி, திருவாரூர் ஆகிய இடங்களில் அரசு தொடங்கவுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு 1000 டாக்டர்கள் தேவை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 29 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெறுகின்றனர். இருப்பினும்கூட, மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அப்படியானால் பட்டம் பெறும் இளம் டாக்டர்கள் எங்கே போகிறார்கள்?

மேற்படிப்பு, வெளிநாட்டில் வேலை, தனியார் மருத்துவமனையில் வேலை, சொந்தமாக மருத்துவமனை நடத்துவது என இவர்கள் சிதறுண்டு போகிறார்கள். இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா மூலம் உருவாகியுள்ள மருத்துவ வணிகத்தை முழுஅளவில் பயன்படுத்திக் கொள்ள பல தனியார் மருத்துவமனைகள் ஆர்வம் காட்டுகின்றன. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இவர்கள் மருத்துவப் பட்டம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல வழிகளிலும் பெரும் பணத்தைச் செலவழிக்கின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகளிடத்தில்தான் இந்த மாணவர்கள் மருத்துவம் கற்கிறார்கள். ஆனால் அந்த மருத்துவத் திறன் ஏழைகளுக்கு கிடைக்காத சேவையாக மாறிவிடுகிறது.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெறும் இளம் டாக்டர்கள், தொழில் உரிமம் பெற வேண்டுமானால் அவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று 2008-09 ஆம் கல்வியாண்டு முதல் நிபந்தனை விதிக்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிபந்தனை அமலுக்கு வரும்போது தமிழகத்தின் 1417 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் ஒரு டாக்டர் கிடைப்பது உறுதியாகிவிடும்.

இதனால் மட்டுமே மருத்துவ சேவை சிறப்பாக மாறும் என்று சொல்லிவிட முடியாது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக “கிளினிக்’ நடத்தக்கூடாது என்பதிலும் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டே தனியாக மருத்துவ ஆலோசனை அளிக்கும் சில மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக் கூடத்தை வாடகைக்குப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் பெற்று சிகிச்சை அளிப்பதாகப் புகார்கள் சொல்லப்படுகின்றன.

அரசு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை அளிக்கும் முறையை அமலுக்குக் கொண்டு வந்தால், அரசு மருத்துவர்கள் தனியாகச் செயல்படும் நிலைமையில் மாற்றம் ஏற்படும்.

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

State of MBBS – Analysis on Medical education

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

It is either MBBS or BE – Decide whether to be a Doctor or Engineer – Ponmudi

Engineering, Medical Professional courses Entrance Exams – Analysis, Options

2 பதில்கள் -க்கு “Doctors reluctant to accept service in Rural Areas – Solutions, Analysis”

  1. bsubra சொன்னார்

    வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: : “வசூல்ராஜாக்களின் கிராம புறக்கணிப்பு”

  2. bsubra சொன்னார்

    ஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலை�

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>