Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Hubli clashes between two communities – 40 arrested

பதிந்தவர் SnapJudge மேல் மார்ச் 27, 2007

ஹூப்ளியில் இரு சமூகத்தவர் இடையே மோதல், கல்வீச்சு: 40 பேர் கைது

ஹூப்ளி, மார்ச் 27 ஹுப்ளி அருகே இருவேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதல், கல்வீச்சு தொடர்பாக 40 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

ஹூப்ளி மாவட்டம், காமேரிபேட் காவல் சரகம், டார்வி ஹக்கல் பகுதியில் பண்ணி மகாகாளி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மகோட்சவ திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அந்த இன்னிசை நிகழ்ச்சியில் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார். அதற்கு அங்கிருந்த சில சமூக விரோதிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட நபர் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஆத்திரம் அடைந்த அக்கும்பல், மேடையின் பின்புறத்தில் இருந்து எதிரே இருந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினார்களாம்.

இதையடுத்து இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் சரமாரித் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்களும் கல்வீசித் தாக்கப்பட்டன.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸôர், வன்முறையில் ஈடுபட்டோர் மீது தடியடி நடத்தி அமைதியை ஏற்படுத்தினர்.

இச்சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (கிம்ஸ்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இருசமூகத் தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டு மோதல் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>