Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

How did Lakshmi Rai’s photo get in the wrong place

பதிந்தவர் Visitor Blogs மேல் மார்ச் 2, 2007

விபசார புரோக்கர் ஆல்பத்தில் நடிகை லட்சுமி ராய் படம் இடம் பெற்றது எப்படி? புதிய தகவல்கள்

சென்னை, பிப். 27-

சென்னையில் விபசாரத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடபழனியில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி நடிகை செல்வி, தெலுங்கு டைரக்ட ரும் விபசார புரோக்கருமான நிரஞ்சன் ஆகியோரை கைது செய்தனர்.

நிரஞ்சன் பங்களாவில் போலீசார் நடத்திய சோதனை யில் நடிகைகளின் கிளு கிளு ஆல்பம் சிக்கியது. அதில் தெலுங்கு கவர்ச்சி நடிகைகள் ரேகாஸ்ரீ, சோனியா தத், பத்மா ஷெட்டி, ஜோதி ஆகியோரின் போட்டோக்களுடன் நடிகை லட்சுமிராயின் போட்டோவும் இடம் பெற்றிருந்தது போலீ சாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்தப் போட்டோவில் நடிகை லட்சுமிராய் மார்டன் உடையில் கையில் பந்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி இருந்தார். `கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் கதாநாய கியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமிராய், தொடர்ந்து இவர் குண்டக்க… மண்டக்க…, தர்மபுரி, நெஞ்சை தொடு, உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாய கியாகவும், 2-வது நாயகியாக வும் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தும் கவர்ச்சி கதாநாய கிகளில் லட்சுமிராயும் ஒருவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் முத்தக் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறினார். அந்த பர பரப்பு அடங்குவதற்கு முன் பாகவே விபசார புரோக்கர் களின் ஆல்பத்தில் லட்சுமி ராய் படம் இடம் பிடித்திருப்பது புரியாத புதிராய் இருந்தது.

இது தொடர்பாக நடிகை லட்சுமிராய் கூறும் போது, எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது என்றும், ஆல்பத் தில் இடம் பெற்றுள்ள படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றும் கூறி கதறினார்.

ஆல்பத்தில் லட்சுமிராய் படம் இடம் பெற்றது தொடர் பாக புரோக்கர் நிரஞ்சன் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் நடிகராகும் ஆசையில், சினிமாவிற்கு வந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமா கம்பெனிகளில் எடு பிடி வேலைகளை செய்து வந் தேன். அப்போது சில டைரக் டர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை உதவி டைரக்டராக வைத்துக் கொண்டனர். அதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. அதனால் துணை நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தினேன்.

அது போல் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிவரும் பெண் களிடம் போட்டோவை பெற் றுக் கொண்டு வாய்ப்பு வரும் போது தகவல் தருவதாக கூறுவேன். அவர்களும் தொடர்பு கொள்ள செல் போன் நம்பர்கள் கொடுப் பார்கள். அந்த போட்டோவை வைத்துக் கொண்டு நடிகைகள் விபசாரத்திற்கு கைவசம் உள்ளதாக சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிடம் பேசி சரி கட்டுவேன்.

பின்னர் அந்த பெண்களிடம் இவர் தயாரிப்பு நிர்வாகி இவரை செக்சில் திருப்தி படுத்தினால் சான்ஸ் தருவார் என கூறி பார்ட்டிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வைப்பேன். இதன் மூலம் எனக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொட்டியது.

இது போல் தான் ஒரு நாள் நடிகை லட்சுமிராய் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு அவரது தாயுடன் வந்தார். தன் மக ளுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தருமாறு கேட்டார். அவரை தொடர்பு கொள்வதற்காக போட்டோவுடன் செல்போன் நம்பரும் கொடுத்தார்.

சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த லட்சுமிராய் அழகி பட்டம் பெற்றவர் என்ப தால் அவரை வைத்து லட்சக் கணக்கில் பணம் சம்பா திக்க திட்டமிட்டேன். அதன்படி வாய்ப்பு தருகிறேன் என கூறி அவரை சிலருக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்தேன்.

இதற்கிடையே அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் என்னுடனான நெருக்கமான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். பெரிய பார்ட்டிகள் என்றால் மட்டும் வந்து செல்வார். இந்த ஆல்பத்தில் உள்ள நடிகைகள் எல்லோரும் அப்படி தொடர் பில் இருப்பவர்கள் தான்.

இவர்கள் `அதற்கு’ வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு முன்பாகவே புக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்து செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

லட்சுமிராய் தெரிவித்த மறுப்புக்கு பதிலடியாக நிரஞ்சனின் வாக்குமூலம் அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>