Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Dalit panchayat leaders are getting Murdered – Thirunelveli & Kuruvikulam incidents

பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 25, 2007

நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை, பிப். 25: நெல்லை மாவட்டத்தில் உள்ள மருதன் கிணறு தலித் ஊராட்சி மன்றத் தலைவர் சேர்வாரன் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குருவிகுளம் ஒன்றியம், நக்கலமுத்தன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஜக்கன் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இருவருமே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதன் கிணறு ஊராட்சி மன்றத் தலைவரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு தமிழக அரசு வழங்க வேண்டும்.

தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜனநாயக பணியினை ஆற்றிட உரிய பதுகாப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இப்படுகொலையைக் கண்டிப்பதுடன் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>