The Kavingar Devamagal literary awards – Tamil Poet Devadevan
பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 23, 2007
தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு
கோவை, பிப். 22: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கவிச்சிறகு விருது: மூத்த கவிஞரைப் பாராட்டும் வகையில் இவ் விருது வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்று வழங்கப்படும்.
தூத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் தேவதேவன் இவ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- குளித்துக் கரையேறாத கோபியர்கள்,
- மின்னற்பொழுதே தூரம்,
- மாற்றப்படாத வீடு உள்பட இவரது 15 கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன.
மேலும் “தேவதேவன் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்பு, “அலிபாபாவும் மோர்ஜியானாவும்’ என்ற நாடகநூல், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரைநூல் ஆகியனவும் வெளிவந்துள்ளன.
இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் பாடமாகவும் உள்ளன. இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
கவித்தூவி விருது: இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 2 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
திருநெல்வேலி பத்தினிப்பாறையைச் சேர்ந்த கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா (நூல்-வலியோடு முறியும் மின்னல்), சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவிஞர் தென்றல் (நூல்-நீல இறகு) ஆகியோர் கவித்தூவி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மார்ச் 10-ம் தேதி கோவை ஆருத்ரா அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
கவிஞர் தேவமகள் அறக்கட்டளை அமைப்பாளர் ஆர்.நித்திலன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Tamil Kavinjar Devadevan wins Vilakku award for 2008 - Thamil Literature faces « Tamil News சொன்னார்
[...] The Kavingar Devamagal literary awards – Tamil Poet Devadevan « Tamil News: “தேவமகள் இலக்கிய விருதுக்கு [...]