Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Interview with Gautham Menon – Pachaikkili Muthucharam Director

பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 16, 2007

நான்கு படங்கள் எடுத்தும் பணம் சம்பாதிக்கவில்லை: இயக்குனர் கவுதம் சொல்கிறார்

சென்னை, பிப்.16-

மின்னலே, காக்ககாக்க, வேட்டையாடு விளையாடு என்று ஹாட்ரிக் வெற்றி கொடுத்துவிட்டு பச்சைக் கிளி முத்துச்சரத்திடமிருந்து நான்காவது வெற்றியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.

திரைப்படங்களில் தொழில் நுட்பங்களை கையாள்வதில் கில்லாடி என்று பெயர் பெற்றிருக்கும் கவுதம்மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் சிறப்பாக வந்திருக்கும் திருப்தியில் இருக்கிறார் அவர் அளித்த பேட்டி.

மனிதனின், மனித உறவுகளின் மதிப்பை போற்றும் படம் பச்சைக்கிளி முத்துச்சரம். வித்தியாசமான முறையில் எடுத்திருக்கிறோம்.

எனது முந்தைய படங்களிலிருந்து இது மாறு பட்டது. சரத்குமார் நடிக்கும் படம் என்பதால் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்பதை மனதில் வைத்து சண்டை போன்ற சில அம்சங்களை கூடுதலாக சேர்த்திருக்கிறேன். குறிப்பாக படத்தின் முதல் பாதியை பாலுமகேந்திரா எடுத்த ஆங்கில படம் போல் புதுமையான நடையில் சொல்லியிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்தின் போதும் தோன்றும் எதிர் பார்ப்புகளுக்கு நான் கவலை படுவேன்.

மீடியாக்கள் தேவை யில்லாத எதிர்பார்ப்பு களையும் பரபரப்புக்களையும் தூண்டி விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு படத்தின் உருவாக்கத்தின் போதும் மீடியாக்களை கண்டு மறைகிறேன்.

பச்சைக்கிளி முத்துச் சரத்தின் கதை பெரிய வர்களுக்கானது என்பதால் படத்தின் `கரு’ அடிப்படையில் இந்த படத்திற்கு `ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

திருமண பந்தத்தை தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் படம் இது

நான் சினிமாவில் சாதிப் பதற்கு பக்க பலமாக எனது குடும்பத்தினர் உள்ளனர். குறிப்பாக மைக்ரோசாப்ட்டில் வேலை செய்யும் எனது சகோதரி அதிகம் உதவி செய்கிறார்.

இதுவரை நான்குபடங்கள் இயக்கியிருக்கிறேன். இந்த நான்கு படங்களிலிருந்தும் பெரிதாக பணம் எதையும் சம்பாதிக்கவில்லை. சினிமா படைப்பு என்பதற்கு பணம் குவிப்பது என்பது அர்த்தமல்ல எனது மனைவி பிரீத்திக்கு நான் முழுநேரமும் சினிமாவே கதி என்று இருப்பதில் கொஞ்சம் அதிருப்திதான் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறாள்.

எனது அடுத்தப் படமான `வாரணமாயிரத்தில்’ வசனம் கம்மிதான் இருந்தாலும் அதன் காட்சிகள் மூலமாக கதையை அற்புதமாக சொல்வேன். சினிமாவில் நடிக்கும் எண்ணம் எல்லாம் கிடை யாது. ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்கும் அளவிற்கு முகம் தெரிந்த ஆளாக இருக்க விரும்பவில்லை. அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், தனிமையை கெடுக்கும் என்கிறார் கவுதம்மேனன்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>