Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

India bans wheat exports amid domestic shortage fears

பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 15, 2007

சோளம் இறக்குமதி செய்ய அனுமதி – கோதுமை ஏற்றுமதிக்குத் தடை: பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

புதுதில்லி, பிப். 15: நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, நடப்பு ஆண்டின் இறுதிவரை கோதுமை ஏற்றுமதிக்கு முழுமையாகத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.

அதேசமயம் தங்கு தடையற்ற சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளது.

வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்ககம், அனைத்து ரக கோதுமைக்கும் 2007 இறுதி வரை ஏற்றுமதித் தடை விதித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

நடப்புப் பருவத்தில் 7.25 கோடி டன் கோதுமை அறுவடையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த ஆண்டு 6.95 கோடி டன் கோதுமை அறுவடையானது.

2005-06 நிதியாண்டில் மிகவும் குறைந்த அளவே கோதுமை ஏற்றுமதியானது. இருப்பினும், இந்திய உணவுக் கழகம் போதுமான கோதுமை இருப்பை வைக்க வசதியாக நடப்பு ஆண்டில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய உணவுக் கழகம் 92 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டு செய்த கொள்முதலை (1.48 கோடி டன்) விட குறைவு. இதனால் கடந்த ஆண்டு அரசுக்கு கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறைவான உற்பத்தியினாலும், கோழிப் பண்ணை தொழில்துறையில் தேவை அதிகரித்துள்ளதாலும் சோளத்தின் விலை உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த, சோளத்தை தங்கு தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>