‘The Art Of Living’ Sri Sri Ravi Shankar wants Ramar Temple in Ayodhya’s disputed land
பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 14, 2007
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஜபல்பூர்(ம.பி), பிப். 14: அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும் என “வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்.
இது குறித்து மதத் தலைவர்களிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் அகற்றப்பட வேண்டும்.
உலக மக்களின் மேம்பாட்டுக்காக பல ஆன்மிகத் தலைவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் பகவான் ரஜனீஷ் மற்றும் மகேஷ் யோகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிருஷ்ணன்-ராதை, ராமர்-சீதை ஆகியோரின் கதைகள் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் காலம் காலமாக இடம்பிடித்துள்ளன. நாம் செய்யும் பணிகள் அனைத்தும் நமது நாட்டின் கலாசாரத்தை மீறாத வகையில் இருக்க வேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நோக்கிச் செல்வதைத் தவிர்த்து நம் நாட்டின் கலாசாரத்தை இந்திய மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.
