Coimbatore – In the midst of an Economic Boom?
பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 8, 2007
அசுர வளர்ச்சியில் கோயம்புத்தூர்
![]() |
|
| கோவையில் பெருமளவிலான நூற்பாலைகளில் இருக்கின்றன |
இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.
1991க்கு முன்னரேயே இந்தியாவின் மான்செஸ்டர் எனப் புகழ்பெற்று, பருத்தி நெசவில் மட்டுமல்லாது, பொறியியல் பொருட்கள் தயாரிப்பிலும் முன்னணியில் நின்றது இந்தக் கோயம்புத்தூர். 1998 தொடர் குண்டுவெடிப்புக்கள், தொடர்ந்த இந்திய அளவிலான தேக்கநிலை இவற்றின் காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து அப்பகுதி இப்போது தன்னை ஏறத்தாழ முற்றிலுமாகவே மீட்டுக்கொண்டிருககிறது.
பாரம்பரிய தொழில்கள் மட்டுமல்லாது, கணினி தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் அது பீடு நடைபோடுகிறது. அண்டையிலுள்ள திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மேலும் மேலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மறைந்து, கடுமையான ஆள்பற்றாக்குறை உருவாகி, மற்ற மாவட்டங்களிலிருந்து வருவோர் கூட போதாமல், இன்று கோவை தொழிற்சாலைகளில் பணிபுரிய பீகாரிலிருந்தெல்லாம் பெருமளவிலான ஆண்களும் பெண்களும் தருவிக்கப்படுகின்றனர்.
ஆனால் இந்த ஒளிரும் கோவையின் இருண்ட பகுதியும் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு வசதிகள் போதாது என வருந்தும் தொழிலாளர்கள், சுற்றுச்சூழலால் அவதிப்படும் திருப்பூர் மக்கள், தங்கள் விளைப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் கடுமையாக பாதிககப்படுவதாக கூறும் விவசாயிகள், குண்டுவெடிப்பின் பின்னால் இன்னமும் வங்கிகளால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறும் முஸ்லீம்கள், மற்றும் தொழிலதிபர்கள், வல்லுநர்கள், தொழிலாளர் தலைவர்கள், பொதுமக்கள் போன்ற பலதரப்பினரின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தினை தமிழோசையில் கேட்கலாம்.

