Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Rameswaram – Eight fishermen missing

பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 5, 2007

மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் மாயம்

ராமேசுவரம், பிப்.5: ராமேசுவரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவுவரை கரை திரும்பவில்லை.

இதுகுறித்து மீன்துறையினரிடம் படகு உரிமையாளர் புகார் செய்துள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பின.

இந் நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பாண்டித்துரை ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் சென்ற 8 மீனவர்கள் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர்கள் ராமேசுவரம் மீன் துறையினரிடம் புகார் செய்தனர்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>