Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Abdul Kalam vs Bal Thackeray – Afsal & Hairstyle

பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 31, 2007

அப்துல்கலாம் பற்றி விமர்சித்த பால்தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்

மும்பை, ஜன. 31- மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நடந்து வருகி றது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை தூக்கில் போடாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஜனாதிபதியை விமர்சித்தார்.

`அப்சல் கருணை மனுவை ஜனாதிபதி இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட தலைமுடி கண்ணை மறைக்கிறது. நில வையும், நட்சத்திரத்தையும் மட்டும் பார்க்க முடிகிறது’ என்று அவர் கூறினார்.

சோனியா காந்தி பற்றி கூறும் போது, வெளிநாட்டு காரரால் இந்த நாடு ஆளப்படுகிறது. மன்மோகன் சிங் என்ற பொம்மை பிரத மராக இருக்கிறார்என்று கூறினார்.

பொதுவாக ஜனாதிபதியை அரசியல் தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் பால்தாக்கரே விமர்சித்து இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் வந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபன் கூறியதாவது:-

அரசியல் விவகாரத்தில் ஜனாதிபதியை இழுப்பது தவறானது. மும்பை மாநக ராட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினைக்கு தொடர் பானது. எனவே இங்குள்ள பிரச்சினையை பேச வேண்டும். அப்சÛலை குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அவருடைய கருணை மனு முறைப்படியான நடைமுறை ஆய்வில் உள்ளது. இதை விமர்சிக்க பால்தாக்கரேக்கு உரிமை இல்லை’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, `ஜனாதிபதி பற்றி விமர்சித்தது நாட்டையே அவமானபடுத்துவதற்கு சம மாகும்’ ஜனாதிபதி என்பவர் தனி மனிதர் அல்ல. அது ஒரு அமைப்பு. பால்தாக்கரே கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

பாரதீய ஜனதா தலைவர் வினோத் திவாதே கூறும்போது, `பால் தாக்கரே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பேசவில்லை, நிலவு மற்றும் நட்சத்திரங்களை ஒப்பிட்டு பேசவில்லை பாராளுமன்ற தாக்குதல் விவகாரம் பெரிய சம்பவம் என்பதால் தனது ஆதங்கத்தை தனக்கே உரித்தான பாணியில் சொன்னார்’ என்றார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>