Ninth Schedule, Reservation Bill, 69% – Meet & Chat with Dr. Ramadas in Chennai
பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 27, 2007
சென்னையில் நாளை இட ஒதுக்கீட்டு சட்டம் குறித்த கருத்தரங்கம்
சென்னை, ஜன.27: ஒன்பதாவது அட்டவணை குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பும் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது.
வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை இக்கருத்தரங்கை நடத்துகிறது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையில் சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஓய்வு பெற்றத் தலைமை நீதிபதி எம்.என். ராவ், மூத்த வழக்கறிஞர்கள் ஜி. மாசிலாமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர் எஸ். துரைசாமி, திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான ஆர். சண்முகசுந்தரம் ஆகியோரும் பேசுகின்றனர்.
