Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sample Tamil Exam paper – Questions on Thamizh Grammar & Poems

பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 23, 2007

பிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா – பொதுத் தமிழ்

பகுதி-1 – தமிழ் – முதல் தாள்
(செய்யுளும், இலக்கணமும்)

  • காலம்: 3 மணி
  • மதிப்பெண்: 100

குறிப்பு: (1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையில் அமைதல் வேண்டும்.

(2) வினா யஐ-க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்.

1. பின்வரும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு ஐந்து வரிகளில் விடை எழுதுக.

4*2 =8

1. புறநானூற்றால் அறியப்படும் செய்திகள் யாவை?

2. எதனை மறத்தல் எதனினும் நன்று?

3. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை?

4. தேவார மூவர் யாவர்?

5. நாம் தூங்கிக் கிடந்ததால் நடந்ததாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

6. நாடெங்கும் புத்தக சாலை ஏன் வேண்டும்?

2. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்குப் (பத்து வரிகளில்) விடை தருக.

3*4 = 12

7. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தைக் கைக்கொள்ள வேண்டும்?

8. நரிவெரூஉத்தலையார் பயனில்லாத முதுமை உடையாரை விளித்துக் கூறுவன யாவை?

9. பொறையுடைமையின் சிறப்பை திருவள்ளுவர் வழிநின்று விளக்குக.

10. கண்ணகியைக் கண்டு ஊரவர் திகைத்துக் கூறியன யாவை?

11. பாண்டியன் பரிசு பேழைக்குள் இருந்தன யாவை?

3. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்குப் (பத்து வரிகளில்) விடை தருக.

3*4 = 12

12. தென் கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை எழுதுக.

13. உவமைக் கவிஞர் சுரதா எவ்வெவற்றைச் சிக்கனம் எனப் பட்டியலிட்டுள்ளார்?

14. மனித நேயம் பற்றிக் கவிஞர் கூறுவன யாவை?

15. மூலையில் கிடக்கும் வாலிபனிடம் தாராபாரதி கூறும் அறிவுரைகள் யாவை?

16. நாயினேன் மறந்து என்னினைக்கேனே என்று சுந்தரர் உருகுமாற்றினை விளக்குக.

4. பின்வரும் வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு (இருபது வரிகளில்) விடை தருக.

1*8 = 8

17. அறிவுடைமை அதிகாரத்தில் இடம்பெற்ற குறட்பாக்களின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.

18. கோலியாத்து என்ற அரக்கனின் வருகையும், தாவீரன் அவனை வென்ற திறத்தினையும் எழுதுக.

19. பாரதியார் காட்டும் அந்திவான வருணனையைத் தொகுத்து வரைக.

5. பின்வரும் செய்யுளின் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

4*1 = 4

20. யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

(அ) பாடல் இடம் பெற்ற நூல் எது?
(ஆ) இப்பாடலின் ஆசிரியர் யார்?
(இ) “”கள்வன்” யார்?
(ஈ) இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?

(அல்லது)

21. “நீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்
நாயடா வினை நடத்துமோ?’

(அ) இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
(ஆ) இப்பாடலின் ஆசிரியர் யார்?
(இ) யார் யாரிடம் கூறியது?
(ஈ) “கரி’ என்பதன் பொருள் யாது?

6. 22. “கண்டனென்’ எனத் தொடங்கும் கம்பராமாயணச் செய்யுளை அடிபிறழாமல் எழுதி அதன் பாவகையையும் எழுதுக.

(4+2 = 6)

23. காலத்தினால்’ எனத் தொடங்கும் குறளையும், “செயல்’ என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.
(2+2 = 4)

7. 24. எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.
2*2 = 4

(அ) வேண்டேன் (ஆ) களையாத (இ) கேட்டி (ஈ) ஏகுவாய் (உ) பொறுத்தல் (ஊ) சொல்லுமின்

25. கீழ்க்கோடிட்ட தொடர்களுள் எவையேனும் மூன்றனுக்கு இலக்கணக் குறிப்பு எழுதுக.
3*2 = 6

(அ) கயன்முன் (ஆ) திரைகவுள் (இ) கூர்ம்படை (ஈ) படூஉம் (உ) சிறைப்பறவை (ஊ) வல் விரைந்து

26. எவையேனும் இரண்டு தொடர்களுக்குப் புணர்ச்சி விதி தருக.
2*2 = 4

(அ) வினைத்திட்பம் (ஆ) பெருந்தேர் (இ) வீறெய்தி (ஈ) நிறைஉடைமை (உ) இற்பிறப்பு (ஊ) சின்னாள்

27. சான்று தந்து விளக்குக.
1*4 = 4

பொதுவியல் திணை (அல்லது) வினை முற்றிய தலைமகன் தேர்பாகற்குச் சொல்லியது.

28. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

இக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.

(அல்லது)

எடுத்துக்காட்டு உவமையணி அல்லது தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
1*4 = 4

8. பொருத்துக
4*1 = 4

தினை தெய்வம்

29. குறிஞ்சி (அ) வருணன்
30. நெய்தல் (ஆ) துர்க்கை
31. பாலை (இ) திருமால்
32. முல்லை (ஈ) இந்திரன்
(உ) முருகன்

2 பதில்கள் -க்கு “Sample Tamil Exam paper – Questions on Thamizh Grammar & Poems”

  1. camping folding bed சொன்னார்

    camping folding bed

    camping folding bed foundation

  2. dharani சொன்னார்

    hai da machi how are you?

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>