Sambaji Ramachandra Salunge – True Hero: Saves many lives during Mumbai Floods
பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 18, 2007
வெள்ளத்தில் சிக்கிய 20 பேரைக் காப்பாற்றிய அதிகாரிக்கு விருது
மும்பை, ஜன. 18: வீரதீரச் செயல்புரிந்து 20 பேரை காப்பாற்றிய மகாராஷ்டிர மாநில உளவுத் துறை அதிகாரிக்கு பிரதமரின் விருது வழங்கப்படுகிறது.
சென்னையில் வியாழக்கிழமை நடக்கும் அகில இந்திய போலீஸ் மாநாட்டில், முதல்வர் கருணாநிதி அவருக்கு இந்த விருதை வழங்குகிறார்.
மகாராஷ்டிரத்தில் துணை புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் சாம்பாஜி ராம்சந்திர சலுங்கே. 2005 ஜூலை 26-ல் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மும்பை நகரமே தத்தளித்தது. அப்போது மும்பை புறநகர் பகுதியான பாந்திராவில் வெள்ளத்தில் சிக்கி வாழ்வா, சாவா என்று 20 பேர் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தமது உயிரை துச்சமாக மதித்து அவர்களைக் காப்பாற்றினார் சலுங்கே.
