Male kids in Danger due to Simma Lagnam ascendant for Thai Pongal
பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 18, 2007
சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால் ஆண் வாரிசுக்கு ஆபத்து என்று வீதிகளில் விளக்கேற்றி பரிகாரம்
சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால், ஆண்களுக்கு ஆகாது என்கிற கருத்து பரவியதை அடுத்து சென்னை தாம்பரத்தில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றும் பெண்கள்.
சேலம், ஜன. 19: தை மாதம் சிம்ம லக்னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என வதந்தி பரவியது. இதற்கு பரிகாரமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் வியாழக்கிழமை வீதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன.
வீட்டின் முன்பு வாழை இலையில் அரிசியைப் பரப்பி விளக்கேற்றி வழிபட வேண்டும் என ஜோதிடர்களும் பரிகாரம் செய்வதில் அனுபவம் படைத்தவர்களும் கூறினர்.
இந்த செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவியது. இதை கேட்டு அவரவர் செல் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சில மணி நேரங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் இத் தகவல் பரவியது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சை, வேலூர், கோவை உள்பட மாநிலம் முழுவதும் பெண்கள் வீதிகளிலும் வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியேயும் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்தனர்.
ஆண்களுக்கு ஆபத்து என்று பரபரப்பு: தமிழகத்தை உலுக்கிய தை மாத தோஷம்
சென்னை, ஜன. 19-
தை மாதம் சிம்ம லக்க னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என்று ஜோதிட தகவல் வெளி யானது.
இதற்கு பரிகாரமாக பெண்கள் வீட்டின் முன் வாழை இலையில் அகல்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் ஜோதிடர் கள் தெரிவித்தனர்.குடும்பத் தில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அவர்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு விளக்கு வீதம் ஏற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
செய்யாறு, திருவண்ணா மலை, ஆற்காடு பகுதியில் முதன் முதலில் கிளம்பிய இந்த தகவல் காட்டுத்தீ போல் தமிழ்நாடு முழுவதும் பரவியது. உறவினர்கள் ஒரு வருக்கொருவர் போனில் தகவல் தெரிவித்து வீடுகளில் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தனர்.
நேற்று முன்தினம் இரவே வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
சென்னை
சென்னைக்கு இந்த தகவல் பரவியதும் பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி பரிகாரம் செய் தனர்.
பெரம்பூர், வியாசர்பாடி, ஓட்டேரி, சூளை, டவுட்டன், வடபழனி, திருவொற்றிïர், எண்ணூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் வீடுகள் தோறும் விளக்கு ஏற்றி இருந்ததை காண முடிந்தது.
எதிர் எதிர் வீட்டுக்காரர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் விளக்கு ஏற்றினார்கள். உறவினர்கள் போனில் தக வல் தெரிவித்து விளக்கு ஏற்றுமாறு சொன்னார்கள். இதனால் சென்னையின் பெரும்பாலான தெருக்களில் விளக்குகள் எரிந்தன. கார்த்திகை தீபம் போல் வீடுகளில் விளக்குகள் எரிந்தன. வீடுகள் தோறும் இதே பேச்சாக இருந்தது.
2வது நாளாக
தமிழ்நாடு முழுவதும் இன்று 2வதுநாளாக வீடுகளில் விளக்குகள் ஏற்றபப்பட்டன. பகலிலும் சில வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டு இருந் தது.
தொடர்ந்து 3நாட்கள் வரை விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளதால் நாளையும் பெண்கள் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்கிறார்கள்.

blazingnoon சொன்னார்
Your website looks interesting.